search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் அரசு பெண் வக்கீலை வெட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில்  சிறையில் அடைப்பு
    X

    கோப்புபடம். 

    திருப்பூரில் அரசு பெண் வக்கீலை வெட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

    • வணிக வளாகத்தில் தனதுஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
    • மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 69 பேர்குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக ஜமீலா பானு பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 18-ந்தேதிமதியம் ஜமீலா பானு மற்றும் அவருடைய மகள் ஆகியோர்திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் தனதுஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது திருப்பூர் பெரியதோட்டத்தை சேர்ந்த ரகுமான்கான்(வயது 26) என்பவர் ஜமீலா பானு மற்றும் அவருடைய மகளைகொலை செய்யும் நோக்கத்தில் வெட்டுக்கத்தியால் இருவரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியதாக தெரிகிறது.

    இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுமான்கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.ரகுமான்கான் மீது சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ்நிலையத்தில் பெண்களை துன்புறுத்துதல் பிரிவில் ஒரு வழக்குஉள்ளது. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதால்அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கமாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து கோவை மத்தியில் சிறையில் உள்ள ரகுமான்கானிடம், ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்சிறையில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 69 பேர்குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×