search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்-குழந்தைகளுக்கு கொலை மிரட்டல்
    X

    இளம்பெண்-குழந்தைகளுக்கு கொலை மிரட்டல்

    • இளம்பெண்-குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.
    • அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கார்த்திகேயன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வெம்பகோட்டை அருகே உள்ள சிவலிங்கா புரத்தை சேர்ந்தவர் விமலா(வயது34). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கடந்த 2012ம் ஆண்டு எனக்கும், தென்காசி மாவட்டம் குறிஞ்சா குளத்தை சேர்ந்த கார்த்தி கேயன்(43) என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது 55 பவுன் நகை, ரூ.1 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது.

    இந்தநிலையில் திடீரெ ன்று கணவர் விவாகரத்து பத்திரத்தில் கையெ ழுத்திடுமாறு வற்புறுத்தி யுள்ளார். இதற்கு மறுக்கவே, கூடுதலாக ரூ.5 லட்சம் ரொக்கம், 50 பவுன் நகை கொண்டு வருமாறு கார்த்திகேயன் கூறியுள்ளார். இதற்கும் மறுத்ததால் துன்புறுத்தி னார்.

    இது தொடர்பான பிரச்சினையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மோகன்-கிருஷ்ணவேணி ஆகியோர் தகராறு செய்து எனக்கும் , என் குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை விசாரித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கு மாறு போலீசாருக்கு உத்த ரவிட்டது. அதன் அடிப்படையில் ராஜ பாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசா ரணை நடத்தி கார்த்திகேயன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×