search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வெளிநாட்டில் இருந்து வந்த காதலனை தேடி சென்ற இளம்பெண்
    X

    கோவையில் வெளிநாட்டில் இருந்து வந்த காதலனை தேடி சென்ற இளம்பெண்

    • காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • பெற்ேறார் மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெகமம் போலீசில் புகார் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். பட்டதாரியான இவர் பொள்ளாச்சியில் கணினி பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் இளம் பெண்ணுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் நாமக்கல்லை சேர்ந்தவரும் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருபவருமான 27 வயது டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தார். பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் செல்போன் மூலமாக பேசி அவர்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் இளம் பெண்ணுக்கு மணமகனை தேடி வந்தனர். இது குறித்து அவர் தனது காதலனிடம் தெரிவித்தார்.

    கடந்த 27-ந் தேதி இளம் பெண்ணின் காதலன் விடுமுறையில் நாமக்கல்லுக்கு வந்தார்.

    இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய இளம்பெண் தனது பெற்றோரிடம் பயிற்சி வகுப்பிற்கு செல்வதாக கூறி விட்டு நாமக்கல்லுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த காதலனை பார்க்க சென்றார். வெளியே சென்ற இளம்பெண் நீண்ட நேரம் ஆகியும திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    பின்னர் இதுகுறித்து அவர்கள் மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெகமம் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம் பெண் வெளிநாட்டில் இருந்து வந்த காதலனை தேடி நாமக்கல்லுக்கு சென்றது தெரியவந்தது. போலீசார் இளம் பெண்ணை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×