search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speaker"

    • மிர்சாபூர் கம்பளம், நாகபுரி தேக்கு, திரிபுரா மூங்கில், ராஜஸ்தான் கல் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    • அசோகர் சின்னத்துக்கான பொருட்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் இருந்து பெறப்பட்டன.

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது. அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:-

    * புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1250 கோடி.

    * குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த எச்.பி.சி. நிறுவனத்தை சேர்ந்த பிமல் படேல் என்பவர் இந்த பாராளுமன்ற கட்டிடத்துக்கான வடிவமைப்பை செய்து கொடுத்து உள்ளார்.

    * டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி உள்ளது.

    * 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

    * பாராளுமன்ற மக்களவையில் ஒரு மேஜையின் முன் உள்ள இருக்கைகளில் 2 எம்.பி.க்கள் அமர முடியும்.

    * எம்.பி.க்கள் தங்களின் முன்பு உள்ள டிஜிட்டல் தொடுதிரை மூலம் பார்த்து வாசிக்கலாம். தேவையான வற்றை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

    * அரசியல் சாசன காட்சியகம், கூட்டரங்கம், 6 கமிட்டி அறைகளுக்கான 92 அறைகள் இடம்பெற்று உள்ளன.

    * ஆடியோ, வீடியோ சார்ந்த உபகரணங்கள் மேம்பட்டதாக உள்ளன.

    * அலுவலக அறையில் மத்திய மந்திரிகளுக்காக 92 அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    * மின்சக்தி பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சில அம்சங்கள் உள்ளன.

    * மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.

    * ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து மறுபடியும் பயன்படுத்தும் அம்சங்களும் உள்ளன.

    * மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், அதிகாரிகள் இளைப்பாறுவதற்காக இளைப்பாறும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இது உணவோடு சேர்ந்து உரையாடக்கூடிய இடமாக உள்ளது.

    * பசுமை நாடாளுமன்றம் என்ற முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது.

    * 23 லட்சத்து 4 ஆயிரத்து 95 மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

    * இந்த கட்டிடத்தின் ஆயுள் காலம் 150 ஆண்டுகள்.

    * கட்டிடக் கலையில் இந்தியாவின் அனைத்து மாநில அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

    * 75 ரூபாய் நாணயம் மற்றும் தபால்தலை வெளியிடப்பட்டது.

    * மக்களவையில் 888 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்கள் என மொத்தம் 1272 எம்.பி.க்கள் அமர முடியும்.

    * மிர்சாபூர் கம்பளம், நாகபுரி தேக்கு, திரிபுரா மூங்கில், ராஜஸ்தான் கல் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    * சிவப்பு-வெள்ளை மார்பிள் ராஜஸ்தானில் இருந்தும், கேஷரியா பச்சை நிற கற்கள் உதய்பூரில் இருந்தும், சிவப்பு நிற கிரானைட் கற்கள் அஜ்மீரில் இருந்தும், வெள்ளை நிற மார்பிள் கற்கள் ராஜஸ்தானில் இருந்தும், ஜல்லிக் கற்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் இருந்தும் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * மேற்கூரைக்கான எக்கு டாமன் டையூவில் இருந்து வரவழைக்கப்பட்டது.

    * பித்தளை வேலைகள் குஜராத்திலும், மேசை, இருக்கைகள் செய்யும் பணி மும்பையிலும் நடந்தது.

    * அசோகர் சின்னத்துக்கான பொருட்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் இருந்து பெறப்பட்டன.

    * அரியானாவில் தயாரிக் கப்பட்ட எம்-சானட் மணல் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டது. சிமெண்ட் கற்கள் அரியானா, உத்தர பிரதேசத்தில் இருந்து வர வழைக்கப்பட்டன.

    * 2020 டிசம்பர் 10-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 2½ ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது.

    * மக்களவை மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தாமரை வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

    * செங்கோல் நிறுவிய நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை உள்ளிட்ட 20 ஆதீனங்கள் பங்கேற்றனர்.

    * செங்கோலை பூஜையில் வைத்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வழிபட்டனர்.

    * மத்திய மந்திரிகள், மாநில முதல்-மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    * பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    * வந்தே மாதரம் பாடலை நாதஸ்வரத்தில் இசைத்த கலைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.

    * திருவாவடுதுறை, தருமபுரி, மதுரை உள்ளிட்ட 20 ஆதீனங்களிடம் பிரதமர் மோடி தனித்தனியாக ஆசி பெற்றார்.

    * பாராளுமன்ற திறப்பையொட்டி இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம் உள்ளிட்ட அனைத்து மத பிரார்த்தனை நடந்தது. இதில் சங்கராச்சாரியார்கள், பாதிரியார்கள், மதகுருமார்கள் பங்கேற்ற னர்.

    * பாராளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்ட கட்டுமான பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார்.

    * செங்கோலை உருவாக்கிய உம்மிடி ஜுவல்லர்ஸ் அதிபர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார்.

    * புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கான கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    * சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடிபெட்டிக் குள் சோழர் காலத்து செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். அதன்பிறகு குத்துவிளக்கு ஏற்றினார்.

    * அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்னும் தேவார பாடல் ஒலிக்கப்பட்டது.

    • சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புது வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர் ஏராளமான அம்சங்களுடன் பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    சோனி இந்தியா நிறுவனம் SRS-XV900 ப்ளூடூத் பார்டி ஸ்பீக்கரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது X சீரிசில் அதிக சக்திவாய்ந்த மற்றும் சத்தமான ஸ்பீக்கர் ஆகும். சோனி நிறுவனத்தின் "Live Life Loud" எனும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உலகளாவிய இசை பிரியர்களுக்கு தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய சோனி SRS-XV900 ஸ்பீக்கர் ஆம்னிடைரக்‌ஷனல் பார்டி சவுணஅட் வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள X-பேலன்ஸ்டு ஸ்பீக்கர் யூனிட்டின் வட்ட வடிவமில்லா ஸ்பீக்கர் பகுதி அதிக சவுண்ட் பிரெஷர் மற்றும் குறைந்த டிஸ்டார்ஷன் வழங்குகிறது. மேலும் இதில் உள்ள ஜெட் பாஸ் பூஸ்டர் ஆழமான மற்றும் சக்திவாய்ந்த பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. மேலும் சவுண்ட் பூஸ்டர் அம்சம் டிவி சவுண்ட்-ஐ மேம்படுத்துகிறது.

    SRS-25 மணி நேர SRS-XV900 பேட்டரி நீண்ட நேர பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றி இருக்கிறது. மேலும் இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். மேலும் பேட்டரி கேர் மோட் மூலம் ஓவர்சார்ஜிங் தவிர்க்கப்படும். இதன் மூலம் ஸ்பீக்கர் அதிக தரமுள்ளதாக நீடித்து உழைக்கும். மெகா பேஸ் அம்சம் ஸ்பீக்கரின் பேஸ்-ஐ பூஸ்ட் செய்து சக்திவாய்ந்த சவுண்ட் வழங்குகிறது.

    புதிய சோனி ஸ்பீக்கரில் மைக் மற்றும் கிட்டார் இன்புட் போன்ற வசதிகள் உள்ளன. இதை கொண்டு ஸ்பீக்கரை ஆம்ப் போன்றும் பயன்படுத்தலாம். ஸ்பீக்கரின் டாப் டச் பேனலில் அனைத்து அம்சங்களையும் இயக்கும் வசதியை வழங்குகிறது. இதில் செட்டிங்ஸ் மற்றும் லைட் என எல்லாவற்றையும் இயக்க முடியும்.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    சோனி SRS-XV900 ஸ்பீக்கரின் விலை ரூ. 79 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அனைத்து சோனி செண்டர்கள், முன்னணி மின்சாதன விற்பனையகங்கள், முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அரசு பொருட்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.
    • தொடக்க விழா நிகழ்ச்சி மாநகராட்சி திடல் அருகில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்ப டும் அரசு பொருட்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் இந்த ஆண்டு அரசு பொருட் காட்சி வ.உ.சிதம்ப ரனார் மணி மண்டபத்தின் அருகே நாளை நாளை (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது.

    தொடக்க விழா நிகழ்ச்சி மாநகராட்சி திடல் அருகில் உள்ள அண்ணா கலையரங் கத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    சபாநாயகர் அப்பாவு பொருட்காட்சியை தொடங்கி வைக்கிறார். விழாவில் செய்தித்துறை அமைச்சர்கள் சாமிநாதன், ராஜகண்ணப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். விழாவில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு வரவேற்று பேசுகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ெஜயசீலன், மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    பொருட்காட்சியில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்படுகிறது.

    அரசு பொருட்காட்சி தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். அரசுத்துறை அரங்குகளில் தமிழக அரசின் சாதனைகளை பற்றியும், அரசின் நலத்திட்ட உதவிகளை எப்படி பெறுவது என்பது பற்றியும் துறை அலுவலர்கள் பொது மக்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்.

    பொதுமக்களின் வசதிக்காக நாளை முதல் நிறைவு நாள் வரை தினமும் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த, பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர் கள் வரை கண்டுகளித்திடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள், ராட்டினங்கள் உள்ளன. பெண்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களின் அரங்குகள் மற்றும் சிற்றுண்டிகள் உள்ளன. 

    • நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 19 லட்சத்தில் 15ஆயிரம் செலவில் காத்திருப்போர் அறை மற்றும் ஆக்சிசன்லைன் அமைப்பதற்கான திட்டபணிகள் தொடக்கவிழா நடந்தது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வசதிகள் கடைகோடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கிடைக்க வேண்டும்

    திசையன்விளை:

    நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 19 லட்சத்தில் 15ஆயிரம் செலவில் காத்திருப்போர் அறை மற்றும் ஆக்சிசன்லைன் அமைப்பதற்கான திட்டபணிகள் தொடக்கவிழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி திட்டபணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகர பகுதி களில் உள்ள மருத்துவமனை களில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வசதிகள் கடைகோடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட மருத்துவமனைகளுக்கு இணையாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்சிசன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார், ராதாபுரம் யூனியன் ஆணையாளர் பிளாரன்ஸ் விமலா சமுக சேவகர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய, மாநில அரசுகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
    • தலைமை நிலைய பேச்சாளர் கனல் கண்ணன் சிறப்புரையாற்றினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மத்திய மாநில அரசுகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கா.அண்ணாதுரை வரவேற்றார்.

    கலைச்செல்வன், பாபு, தமிழரசன்,சுயம்பு கஜேந்திரன், அய்யா மணிக ண்டன், சத்திய மூர்த்தி, அன்பு ஆரோக்கியராஜ், ரமேஷ், மணிமாறன், மாதவன், சைவராஜ் கவிதாசன், ராஜா, சாம்யோஷ்வா, பழனிவேல், சிவக்குமார், முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை நிலைய பேச்சாளர் கனல் கண்ணன் சிறப்புரையாற்றினார். ஆலக்குடி பன்னீர் செல்வம், ஜெயக்குமார் ஆகியோர் பேசினர்.

    இதில்மத்திய மாவட்ட பொறு ப்பாளர்கள்அரவிந்த், சரவணன், நார்முகமது, நியான், உசேன்பாட்சா, நெல்சன், வெங்கடேஷ், கலியமூர்த்தி, குணசேகரன், கல்யானபுரம் கார்த்தி, பிரபு, வெற்றிச்செல்வன், கணேசன், புஷ்பநாத மணிகண்டன்,பாலா, மணிமாறன் புண்ணிய மூர்த்தி, மணி, ராஜா, அப்பு, முருகேசன், சுதாகர், பாக்கியராஜ், கலையரசன், சுந்தரமூர்த்தி, சந்திரசேகர், பாலமுருகன், ஆனந்த், மதியழகன், முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஜெய் பிராகாஷ் நன்றி கூறினார்.

    • பீகாரில் ஆட்சி மாறியும் சபாநாயகர் விஜயகுமார் சின்கா ராஜினாமா செய்யவில்லை.
    • அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 24ம் தேதி ஓட்டெடுப்பு நடைபெறுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. பா.ஜ.க.வுடன் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் நிலவிய நிலையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார். ஆளுநர் பஹு சவுகானை நேரில் சந்தித்து தமது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார்.

    இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஆதரவு அளித்தது. பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கூட்டணியின் தலைவராகவும் மாநில முதல் மந்திரியாகவும் நிதிஷ்குமார் தேர்வானார். இதன்பின், மீண்டும் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரி, தமது கூட்டணியின் 164 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.

    இதற்கிடையே, பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர்.

    நிதிஷ்குமார் ஆட்சியில் இருந்தபோது பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜயகுமார் சின்கா சபாநாயகராக நியமிக்கப்பட்டார். தற்போது ஆட்சி மாற்றத்துக்கு பிறகும் விஜயகுமார் சின்கா ராஜினாமா செய்யவில்லை. இதனால் அவரை நீக்குவதற்காக ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர். அதை சட்டசபை செயலகத்தில் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக 24-ம் தேதி சட்டசபை கூடுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தவுடன் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்கும் என தெரிகிறது. ஆளும் கூட்டணிக்கு 164 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் தீர்மானம் எளிதில் நிறைவேறும் என தெரிகிறது.

    • நெல்லை, செஸ் ஒலிம்பியாட் , விழிப்புணர்வு போட்டி, சபாநாயகர்
    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

    நெல்லை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

    போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்தியாவில் முதன்முறையாக இந்தப் போட்டி நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளிட்ட பகுதியில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி இன்று நடைபெற்றது. அதனை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பதிவுபெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுனர் நலவாரிய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் ஹேமலதா வரவேற்றார்.

    சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார் ஆகியோர் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு கல்வி, இயற்கை மரணம், ஓய்வூதியம், விபத்து மரணம் என 1430 பேருக்கு ரூ. 32 லட்சத்து 57 ஆயிரத்து 400, கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் 2402 பேருக்கு ரூ. 40 லட்சத்து 8,676,

    ஓட்டுநர் தொழி–லாளர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் 3028 பேருக்கு ரூ. 44 லட்சத்து 85,789 என மொத்தம் 6860 பேருக்கு ரூ. 1 கோடியே 17 லட்சத்து 51 ஆயிரத்து 865-க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    முடிவில் தொழிலாளர் உதவி ஆணையர் குலசேகரன் நன்றி கூறினார். 

    • புதுவை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • முதுநிலை துணை கணக்காய்வு தலைவர் வர்ஷினி முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் கே.எஸ்.பி.ரமேஷ், எம்.எல்.ஏ. முதன்மை கணக்காய்வு துறை தலைவர் ஆனந்த், முதுநிலை துணை கணக்காய்வு தலைவர் வர்ஷினி முன்னிலை வகித்தனர். தலைமை செயலர், நிதித்தறை செயலர், கலெக்டர், துறை செயலர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், 2014-15-ம் ஆண்டு தணிக்கை அறிக்கை மீது 112 பத்திகளுக்கு பதிலளிப்பது நிலுவையில் உள்ளது. 1993-94-ல் 497 பத்திகள் நிலுவையில் உள்ளது. அரசு சார்பு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்களில் ஆய்வறிக்கை கணக்குகள் முடிக்கப்படாமல் உள்ளது.

    இதற்கு அரசு துறைகள் பதிலளிக்காமல் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசியதாவது:-

    கணக்காய்வு துறை சுட்டிக்காட்டிய குறைகளை நேர்மையான எண்ணத்தோடு அணுக வேண்டும். அந்த தவறுகள் மீண்டும் நிகழாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரவுக்கு ஏற்ப செலவுகளை கட்டுப்படுத்துவது, தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது குறித்து அரசுக்கு சொல்லும் பொறுப்பு பொது கணக்குழுவுக்கு உண்டு. 

    நிலுவையில் உள்ள பாக்கிகள் குறித்து கால அளவுக்குள் தீர்க்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் ஒரு அதிகாரிக்கு பொறுப்பு வழங்கி நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.சுணக்கமாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் 3-ம் ஆண்டு பதில் தராமல் உள்ள துறைகளுக்கு 4 வார காலஅவகாசம் அளித்து, பதில் தர உத்தரவிடப்பட்டது. பல ஆண்டு நிலுவையில் உள்ளதை 2 மாதத்தில் பதில் தர வேண்டும். மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட்டு பதில் தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரும் முனைவருமான தென்திருப்பேரையை சேர்ந்த சடகோபன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார்.
    தென்திருப்பேரை:

    பா.ஜனதா மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் முன்னிலையில் திருச்செந்தூரில் நடைபெற்ற மகளிர் அணி பேரணியில் அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரும் முனைவருமான தென்திருப்பேரையை சேர்ந்த சடகோபன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டார். சடகோபனை கேசவ விநாயகம் சால்வை அணிவித்து வரவேற்றார். 

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்தராங்கதன், மாநில வர்த்தக பிரிவு தலைவர் ராஜாங்கண்ணன், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் நெல்லையம்மாள், மாவட்ட துணை தலைவி ரேவதி, மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், மாவட்ட வணிக பிரிவு செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் குமரேசன், மாவட்ட அரசு தொடர்பு தலைவர் பாலசுப்பிரமணியன், ஆழ்வை ஒன்றிய பிரசார பிரிவு செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிதாக ஜெப் ஸ்பேஸ் என்ற பெயரில் புதிய ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. #Zebronics



    ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடட், இந்தியாவில் புதிதாக ஜெப்-ஸ்பேஸ் கார் என்ற பெயரில் ஸ்பீக்கர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சலிப்பில்லாத நீண்டநேர இசை அனுபவத்தை பெற்றிடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு மடிக்கணினியில் பிடித்த நிகழ்ச்சியை நீண்டநேரம் கண்டுகளித்திடவும் கூடுதலாக விளக்குகள் பொருத்தப்பட்டும் உள்ளது.

    இந்த பூம்பாக்ஸ் வடிவமைப்பானது பழைய நினைவுகளை தூண்டுவதோடு அல்லாமல் அதன் பிரத்யேக வடிவமைப்பு இடப்பற்றாக்குறையில் இருந்து விடுதலையளிக்கிறது. மிக குறைந்த இடத்தையே மட்டுமே எடுத்துக்கொண்டு வயர்களில்லாத புதிய அனுபவத்தை இது தருகிறது.

    2.1 ஸ்பீக்கர் வடிவமைப்புகளிலேயே ஒரு புதிய ரகமாக ஜெப்-ஸ்பேஸ் கார் விளங்குகிறது. மிகச்சிறிய இடத்தில் கனகச்சிதமாக பொருந்தக்கூடிய ஒரு சிறிய ரக ஸ்பீக்கர்கள் உங்களுக்கு 2.1 ஸ்பீக்கர்களுக்கு இணையான அனுபவத்தை வழங்குகிறது.



    இசையின் பாஸ் அனுபவத்தை இதற்கு முன் எப்போதுமில்லாத வகையில் ஜெப்-ஸ்பேஸ் கார் ஸ்பீக்கர்கள் கொடுப்பதோடு மிக திறம்வாய்ந்த 10.12 செமி அளவேயுள்ள குறைந்த ஃப்ரீக்குவன்சியை கொடுத்து, டூயல் செமி பாஸ் மற்றும் ஒளியதிர்வை தருகிறது.

    பூம்பாக்ஸ் வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள அதிநவீனமும் வருங்கால டிசைனும் உடைய இந்த ஸ்பீக்கர்கள், முன்புறத்தில் LED விளக்குகளுடனும் LED திரையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பீக்கரின் தலைப்புறத்தில் கன்ட்ரோல் மற்றும் ஒலி/ஒளி பட்டன்களுடனும் உள்ளது.

    இந்த ஸ்பீக்கர்களை தங்களது ப்ளூடூத் அல்லது USB ஆகியவற்றுடன் வயர்கள் இணைக்கப்பெறாமலே கனெக்‌ஷன் கொடுத்துக்கொள்ள இயலும். பிரத்யேக AUX துணையுடன் எளிதாக துரிதமாக எஃப்.எம். ரேடியோ பன்பலையையும் கேட்டுக்கொள்ள இயலும்.

    இதனை அறிமுகப்படுத்திய திரு.பிரதீப் தோஷி, இதுபற்றி கூறுகையில் "இந்த பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். ஜெப்-ஸ்பேஸ் கார் 2.1 வயர்களில்லாத மிக எளிதாக இடமாற்றக்கூடிய வகையிலும் குறைந்த இடத்தில் இருந்து மிக வலுவான சத்தத்தை எழுப்பக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
    உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தோல்வி பயத்தால் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க சபாநாயகர் முயற்சி செய்வதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். #ThangaTamilSelvan
    சென்னை:

    நடந்து முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காது என்று உளவுத்துறை ரிபோர்ட் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்ல வருகிற 19-ந்தேதி நடைபெறும் 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் பணம் பாதாளம் வரை பாய்ந்தாலும் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைப்பது சிரமம்தான்.

    அதனால்தான் ஆட்சியை தக்க வைப்பதற்காக குறுக்கு வழியில் முயல்கின்றனர். அதற்கு சபாநாயகர் துணை போகிறார்.



    நோட்டீசு அனுப்பப்பட்டுள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச் செல்வன், இருவரும் இதற்கு முன்பு அ.தி.மு.க. அம்மா அணியில் இருந்தனர். சசிகலா தலைமையில் ஒரு அணியாக செயல்படுவதற்கு 20 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் கையெழுத்து போட்டு கொடுத்ததில் இவர்கள் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

    எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தான் இரு எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டனர். இப்போது இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் அ.ம.மு.க.வில் உறுப்பினராக இல்லை. அ.தி.மு.க.வில் தான் உள்ளனர். எனவே இதற்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து இப்போது சபாநாயகர் சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய முடியாது.அதையும் மீறி தகுதிநீக்கம் செய்தால் 6 மாதத்தில் தேர்தலை சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilSelvan
    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுத்தால், சபாநாயகர் மீது தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK
    சென்னை:

    தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மே 23-ந் தேதி 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்நோக்கி இருக்கும் நிலையில், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூவர் மீதும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருப்பதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டது. அந்த வழக்கை முடிந்த வரை காலதாமதம் செய்து, 18 மாதங்களுக்கு மேல் தேர்தலே நடத்தாமல் அ.தி.மு.க. ஆட்சி தொடர மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள கவர்னரும் சட்டவிரோதமாக அனுமதித்தனர். அதன் பலன் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. வுடன் தேர்தல் கூட்டணி அமைந்தது. ஆனால் தமிழக மக்கள் ஒரு மோசமான அரசின் நிர்வாக சீரழிவுகளை தினந்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு பல சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அ.தி.மு.க. ஆட்சி முற்றிலும் ஒரு மைனாரிட்டி ஆட்சியாகவே இந்த மக்களவைத் தேர்தலை சந்தித்தது.

    இந்நிலையில் 17-வது மக்களவை தேர்தலுடன் முதலில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுற்று, பிறகு சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டதால் வருகின்ற மே 19-ந் தேதி மீதியுள்ள 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடையும் என்பதை தெரிந்து கொண்டதால் சட்ட அமைச்சரும், அரசு கொறடாவும் தங்களது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து சபாநாயகரை சந்தித்து இந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார்கள். 22 தொகுதிகளிலும் தோல்வி அடையும் அ.தி.மு.க. அரசுக்கு இருக்கின்ற மைனாரிட்டி அந்தஸ்தும் பறிபோய், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பீதியில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த நிகழ்வு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துச் சொல்ல துணை முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் வாரணாசி சென்று சந்தித்த தினத்தில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு ஊழல் ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துவிட வேண்டும் என்பதில் அ.தி.மு.க.வை விட பிரதமர் நரேந்திரமோடியும், மாநிலத்தில் இருக்கும் கவர்னரும் தொடர்ந்து செயல்படுவது “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை” என்பதை வெளிப்படுத்துகிறது.

    சட்டமன்றத்தின் பேரவைத் தலைவரை பொறுத்தவரை கட்சி சார்பற்றவர். அந்த பதவிக்கு வந்த பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவராக இருப்பவர். “பாரபட்சமற்ற முறையில் சபாநாயகரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடாது” என்று பல்வேறு தீர்ப்புகள் வாயிலாக சுப்ரீம் கோர்ட்டு சபாநாயகர்களை எச்சரித்துள்ளது.

    கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ள மனு மீது சபாநாயகர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.



    ஓ.பன்னீர்செல்வமும், அவருடன் முதல்-அமைச்சருடன் ஐக்கியமான சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக வாக்களித்துவிட்டு பதவியில் தொடருவதை அனுமதித்திருக்கும் சபாநாயகர் இதில் அவசரம் காட்டி மைனாரிட்டி அரசுக்கு “கொல்லைப்புற வழியாக” மெஜாரிட்டி தேடித்தர முயலக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ஒருவேளை நடுநிலைமை தவறி, அரசியல் சட்டத்தின் கடமைகளை மறந்து, சபாநாயகர் அந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர் மீது தி.மு.க. சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK
    ×