search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சாளர்"

    • மத்திய, மாநில அரசுகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
    • தலைமை நிலைய பேச்சாளர் கனல் கண்ணன் சிறப்புரையாற்றினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மத்திய மாநில அரசுகள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கா.அண்ணாதுரை வரவேற்றார்.

    கலைச்செல்வன், பாபு, தமிழரசன்,சுயம்பு கஜேந்திரன், அய்யா மணிக ண்டன், சத்திய மூர்த்தி, அன்பு ஆரோக்கியராஜ், ரமேஷ், மணிமாறன், மாதவன், சைவராஜ் கவிதாசன், ராஜா, சாம்யோஷ்வா, பழனிவேல், சிவக்குமார், முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை நிலைய பேச்சாளர் கனல் கண்ணன் சிறப்புரையாற்றினார். ஆலக்குடி பன்னீர் செல்வம், ஜெயக்குமார் ஆகியோர் பேசினர்.

    இதில்மத்திய மாவட்ட பொறு ப்பாளர்கள்அரவிந்த், சரவணன், நார்முகமது, நியான், உசேன்பாட்சா, நெல்சன், வெங்கடேஷ், கலியமூர்த்தி, குணசேகரன், கல்யானபுரம் கார்த்தி, பிரபு, வெற்றிச்செல்வன், கணேசன், புஷ்பநாத மணிகண்டன்,பாலா, மணிமாறன் புண்ணிய மூர்த்தி, மணி, ராஜா, அப்பு, முருகேசன், சுதாகர், பாக்கியராஜ், கலையரசன், சுந்தரமூர்த்தி, சந்திரசேகர், பாலமுருகன், ஆனந்த், மதியழகன், முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஜெய் பிராகாஷ் நன்றி கூறினார்.

    ×