search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivagangai"

    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் 93.62 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • சிவகங்கை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.

    சிவகங்கை

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.

    சிவகங்கை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இதில் 16 ஆயிரத்து 537 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.62 சதவீதம் ஆகும்.

    • தேவகோட்டை பகுதியில் 22-ந்தேதி மின்தடை ஏற்படும்.
    • மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட பூசலாக்குடி துணை மின் நிலையத்தில் வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்ற உள்ளது.

    இதன் காரணமாக கண்ணங்குடி, கப்பலுார், சிறுவாச்சி, அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்களம், மு.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களுர், மன்னன்வயல், தாழையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.

    • கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகத்தின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிங்கம்புணரியில் உள்ள ஆர். 75 திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செய்திருந்தது.

    சிங்கம்புணரி

    கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை சிங்கம்புணரி, கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

    சிங்கம்புணரி தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை கழகத்தின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு களப்பயிற்சி கூட்டம் நடத்தப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள ஆர்- 75 திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகப் பகுதியில் சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகத்தில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு களப்பயிற்சி கூட்டம் நடத்தப் பட்டது.

    கூட்டத்திற்கு வந்த அனைவரையும் திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பொதுமேலாளர் குமரகுருபரன் வரவேற்றார். சங்கத்தின் துணைத் தலைவர் இந்தியன் செந்தில்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

    பயிற்சியாளர் சோமசுந்தரம் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். சிவகங்கை கூட்டுறவு மேளாண்மை பயிற்சி கழகத்தில் படிக்கும் சுமார் 60 மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர்களுக்கான 10 மாதம் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் நகை மதிப்பீட்டாளர் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

    மாணவ-மாணவிகளுக்கு கூட்டுறவு சங்கத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த செயல்விளக்க முறைகள் மற்றும் பயிற்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து மாணவ-மாணவிகள் சிவகங்கை தென்னை உற்பத்தியாளர் கம்பெனியை பார்வையிட்டனர். கம்பெனி இயக்குனர் மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிங்கம்புணரியில் உள்ள ஆர். 75 திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செய்திருந்தது.

    • காளையார்கோவிலில் இன்று சோமேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தேரை வடம் பிடித்து இழுத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் நகர் மையபகுதியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற சவுந்தரநாயகி அம்மன் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இங்கு 3 பிரதான சிவபெரு மான் சன்னதிகளும், அம்மன் சன்னதிகளும், 2 பெரிய ராஜகோபுரங்க ளும் அமைந்துள்ளளன. இந்த கோவிலில் சுவாமி-அம்மனுக்கும் பங்குனி, வைகாசி, ஆடி மாதங்களில் திருவிழா நடைபெறுகிறது.

    வைகாசி மாதத்தில் சோமேஸ்வருக்கும், சவுந்தர நாயகி அம்ம னுக்கும் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 9-வது நாள் நிகழ்வாக இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

    விழாவில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தேரை வடம் பிடித்து இழுத்தார். பா.ஜ.க. முன்னாள் தேசிய பொது குழு உறுப்பினர் எச். ராஜா, மாவட்ட தலைவர் சக்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    மத்தியில் தற்போது இருக்கும் மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்தும் நேரம் வந்து விட்டது என சிவகங்கை பிரசாரப் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    சிவகங்கை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கையில் உள்ள அரண்மனை வாசலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:

    இந்த சிவகங்கை தொகுதியில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடவிருக்கும் கார்த்தி சிதம்பரத்திற்கு வாரிசு அடிப்படையில் வாய்ப்பளிக்கப்படவில்லை, தகுதி  அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டார்.

    ஆளுங்கட்சியின் துணையோடு பாஜக சார்பில் நிற்கும் எச். ராஜாவை பற்றி நான் சொல்லி மக்களுக்கு தெரிய வேண்டியதில்லை. தமிழகத்திலேயே, ஏன் இந்தியாவிலே இது போன்ற கடைந்தெடுத்தவரை பார்த்ததில்லை. வாய்க்கு வந்ததையெல்லாம் கூறுவது. பொய்களையே பேசுவது இது தான் ராஜாவின் பணி.  மத்தியில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. எச். ராஜா பாராளுமன்றத்திற்கு போனால் சிவகங்கை தொகுதிக்கே அவமானம். அவர் மோசமான அரசியல்வாதி.



    இதன் காரணமாகவே காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியிருக்கக்கூடிய கார்த்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கூறுகிறேன். பெரியார், அறிஞர் அண்ணா, மற்றும் திராவிட இயக்கத்தினை மிகவும் கொச்சைப்படுத்தி பேசுகிற ராஜாவை விடுத்து, நீங்கள் அனைவரும் கார்த்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    பிரதமர் மோடியின் இந்த ஆட்சியில்,  பாஜக கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்காத சலுகைகளே இல்லை. எனவே பாரதீய  ஜனதா என அழைக்காமல் கார்ப்பரேட் ஜனதா என்றே கூறுங்கள். வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு இந்திய மக்களின் பேரில் வங்கிகளில் வைப்புத் தொகையாக ரூ.15 லட்சம் போடுவேன் என கூறினார். யாருக்கேனும்  போட்டுள்ளாரா? அப்படி போட்டிருந்தால் சொல்லுங்கள் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

    பிரதமர் மோடி வாக்குறுதிகளை வாரி வாரி வழங்குவார். ஆனால் செயல் ஒன்றும் இருக்காது. பாஜகவிற்கு எதிராக யாரும் பேசினால் தேச துரோகி என கூறுகிறார்களே ,இது முறையா? 5 ஆண்டுகளுக்கு முன் மதச்சார்பற்ற இந்தியா உருவாகும் என கூறினார்களே, அப்படி செய்தார்களா? நாற்காலி தான் இவர்களது நோக்கம்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.  #MKStalin #DMK #LoksabhaElections2019

     
    சிவகங்கையில் தூய்மைப்பணி மேற்கொண்ட கவர்னர், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். #BanwarilalPurohit

    சிவகங்கை:

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

    பின்னர் அவர் சிவகங்கைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அவரை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    பின்னர் சிவகங்கை நகராட்சி பஸ் நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் துப்புரவு பணியை மேற்கொண்டார்.

    இதில் கலெக்டர் ஜெயகாந்தன், அமைச்சர் பாஸ்கரன், தலைமை கூடுதல் செயலாளர் ராஜகோபால், செந்தில்நாதன் எம்.பி., மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து சிவகங்கையில் உள்ள வேலு நாச்சியார் விருந்தினர் மாளிகையில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    சிவகங்கையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று மாலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கவர்னர் செல்கிறார். ராமேசுவரத்திற்கு நாளை (12-ந் தேதி) காலை செல்லும் கவர்னர் அங்கு புனரமைக்கப்பட்ட 30 தீர்த்தங்களை பொது மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.  #BanwarilalPurohit

    பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததை ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளிக்கூட கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்த பிளஸ்-1 மாணவி உயிரிழந்த தற்கொலை செய்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை அம்மன் நகரை சேர்ந்தவர் சிவனேசன். அவருடைய மகள் சுவேதா (வயது 16). சிவகங்கையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இவர் பள்ளிக்கூடத்துக்கு செல்போன் எடுத்து வந்திருந்ததாக கூறப்படுகிறது. இதை ஆசிரியர்கள் கண்டுபிடித்து கண்டித்தனர். இதுகுறித்து ஆசிரியர்கள் அந்த மாணவியின் தந்தையை அழைத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த மாணவி விபரீதமாக பள்ளியின் மாடியில் இருந்து குதித்தார். இந்த சம்பவத்தால் பள்ளிக்கூடத்தில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மாணவியை சிகிச்சைக்காக உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் மாணவியின் உடல்நிலை மோசம் அடைந்தது. எனவே மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவி நேற்று இறந்து போனார்.

    இந்த சம்பவம் அவருடைய குடும்பத்தினரையும், சக மாணவர்கள், ஆசிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை உள்பட 4 மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது.
    ராமநாதபுரம்:

    அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை மழை சற்று ஓய்ந்து இருந்த நிலையில் மாலையில் பல்வேறு இடங்களில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்தது.

    ராமநாதபுரம் நகர், பரமக்குடி, கமுதி, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் இடியுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது.

    ராமேசுவரத்தில் நள்ளிரவு 2 மணி முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது. பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    பலத்த காற்றுடன் கடல் சீற்றம் இருந்ததால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமநாதசுவாமி கோவில் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காலையும் மழை நீடித்ததால் மாணவ -மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.


    சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் கண்மாய், ஏரி, குளங்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காளையார்கோவில், காரைக்குடி, கல்லல், திருப்பத்தூர், தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்று காலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் லேசான சாரல் மழை இருந்தது.

    மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருப்புவனம்- 148.6

    தேவகோட்டை- 2.2

    காளையார்கோவில்- 9.8

    சிங்கம்புணரி- 13.6

    விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாத போதிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் 75 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் நிரம்பி உள்ளது.

    ராஜபாளையத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக அய்யனார்கோவில் ஆறு, முள்ளி ஆறு, பேயனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் லேசான மழை இருந்தது.

    மாவட்டத்தின் உள்பகுதிகளான விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாத நிலையில் நேற்று மதியம் முதல் ஆங்காங்கே லேசான முதல் மிதமான மழை பெய்தது. நேற்று நள்ளிரவு 1 மணி முதல் இடியுடன் பலத்த மழை பெய்தது. வாடிப்பட்டி, சமயநல்லூர், சோழவந்தான், மேலூர், நாகமலை புதுக்கோட்டை, அலங்காநல்லூர், பாலமேடு, குமாரம், ஆண்டிப்பட்டி, திருமங்கலம், விரகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

    மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இன்று காலையில் சில இடங்களில் மழை பெய்தது. வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது.

    மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    உசிலம்பட்டி- 26.20

    மதுரை தெற்கு- 40.30

    விரகனூர்- 110.50

    விமான நிலையம்- 21.20

    இடையபட்டி- 57.20

    புலிப்பட்டி- 8.40

    சோழவந்தான்- 30.10

    கள்ளிக்குடி- 12.20

    மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை 853.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    கருணாநிதி மறைவை முன்னிட்டு விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இன்று பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கியது. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. #Karunanidhideath #Karunanithi #DMK
    விருதுநகர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன.

    பஸ்கள் ஓடாததால் வெளியூரில் இருந்து உள்ளூர் திரும்பியவர்களும் அவதிப்பட்டனர். பஸ் போக்குவரத்து நேற்று இரவு 7 மணி முதல் படிப்படியாக நிறுத்தப்பட்டது. இன்று காலை பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

    சிவகங்கை நகரில் இன்று அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிவகங்கை பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.

    அரண்மனை ரோடு, நேரு பஜார், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வெறிச்சோடியது. இதே போல் காரைக்குடி, திருப்பத்தூர், காளையார் கோவில், தேவகோட்டை, கல்லல், சருகணி, மானாமதுரை, இளையாங் குடி, திருப்புவனம், சிங்கம்புணரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    கருணாநிதி மறைவையொட்டி இன்று மாலை சிவகங்கை நகரில் அனைத்து கட்சி சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெறுகிறது.

    மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ்நிலையம், முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இன்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை.

    இதனால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு இன்று விடுமுறை அறிவித்து விட்டதால் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டமும் காணப்படவில்லை.



    இதேபோல் 3 மாவட்டங்களிலும் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. சிறு சிறு டீக்கடைகள் கூட ஒன்றிரண்டே ஆங்காங்கே திறந்திருந்தன. ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டே இருந்தன.

    இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடை வீதிகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் வீதிகளில் தங்கி இருந்த மக்கள் பெரும் சங்கடத்திற்கு ஆளானார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. ராமநாதபுரம், சிவகங்கை நகர சாலைகளிலும் ஆங்காங்கே கருணாநிதி படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை நடக்கும் சந்தை இன்று ரத்து செய்யப்பட்டது. இன்று வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் நேற்று இரவே ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கு சென்று விட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ்மீனா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். #Karunanidhideath #Karunanithi #DMK
    சிவகங்கை அருகே இலுப்பகுடி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு பயிற்சி மையத்தில் வீரர்களின் பயிற்சி நிறைவு விழா மற்றும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கை அருகே இலுப்பகுடியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் எல்லை பாதுகாப்பு படைக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் ஓராண்டு பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம்.



    இதேபோன்று கடந்த(2017-18) ஓராண்டு பயிற்சி நிறைவு செய்த 242 வீரர்களை நாட்டின் எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கும் விழா, பயிற்சி நிறைவு விழா மற்றும் வீரர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பயிற்சி மைய மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு இலுப்பகுடி பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி. ஆஸ்டின் ஈபன் தலைமை தாங்கினார். அப்போது வீரர்களின் அணி வகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். மேலும் பயிற்சியில் சிறந்து விளங்கிய அஜய்குமார், அங்குஷ் சவுத்ரி, யாசின், சகில்சிங், மன்ஜீத் தாகூர், அமித் ஆகிய வீரர்களை பாராட்டி பரிசு கோப்பைகளை வழங்கினார்.

    முன்னதாக நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வீரர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து தேசிய கொடியை முன்னிறுத்தி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வீரர்களின் சாகச நிகழ்ச்சியாக கராத்தே, கயிறு ஏறுதல், தீ வளையத்திற்குள் தாவுதல், துப்பாக்கிகளை கையாளும் விதம், நடனம் போன்றவை நடைபெற்றன.

    தற்போது பயிற்சி நிறைவு செய்து செல்லும் 242 வீரர்களும் தமிழகம், ஜம்முகாஷ்மீர், ஜார்கண்ட், குஜராத், ஆந்திரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, அரியானா, சத்தீஸ்கர், தெலுங்கானா, புதுடெல்லி ஆகிய 11 மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 
    தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் சிவகங்கையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றுவோருக்கு தினக்கூலியாக ரூ.380 தரப்படும் என்ற அரசின் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் சிவகங்கையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    உண்ணாவிரதத்திற்கு மாவட்ட செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுப்புராம் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் வீரய்யா உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில செயலாளர் உமாநாத், ஓய்வுபெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, மாநில செயலாளர் கோகுலவர்மன், சி.ஐ.டி.யூ மாவட்டக்குழு உறுப்பினர் அய்யம்பாண்டி, கணேசன், மோகனசுந்தரம், ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலியாக உள்ள கணிணி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் (சத்துணவுப்பிரிவு) காலியாக உள்ள கணிணி அறிவுள்ள உதவியாளர் ஒரு பணியிடம் தகுதி உள்ள நபர் மூலம் பகுதி நேர தற்காலிக அடிப்படையில், மாதம் ரூ.12 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளது.

    விண்ணப்பதாரர்கள் smart sivagangaiapp (கைபேசி செயலி) மூலம் 20.6.2018 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய தேதி மற்றும் காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

    இந்த தகவலை சிவகங்கை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. #Tamilnews

    ×