search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் நிலையம்"

    • தோவாளை உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது
    • தகவலை பூதப்பாண்டி உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    நாகர்கோவில் :

    செண்பகராமன்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனங்கோப்பு, சீதப்பால், தாழக்குடி, ஈசாந்திமங்கலம், நாவல்காடு, ஆண்டித்தோப்பு, தோவாளை, வெள்ளமடம், செண்பகராமன்புதூர், லாயம், நாக்கால் மண்டபம் போன்ற பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை செண்பகராமன்புதூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    இதுபோல் தோவாளை உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கட்டர்குளம், மரப்பாலம், பொய்கை ரோடு, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை பூதப்பாண்டி உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • குட்டை தெருவில் ஒரு மின்கம்பம் தாழ்வாகவும், ஒரு மின்கம்பம் ஆறு தடவைக்கு மேல் அறுந்தும் விழுந்து உள்ளது
    • இந்த மின் கம்பம் மற்றும் மின்கம்பிகளில் மோதி உரசி விபத்துகளும் உயிரிழப்பு ஏற்படும்

    விழுப்புரம்:

    திருவெண்ணெநல்லூர் அருகே உள்ள அரசூர் ஊராட்சியில் குட்டை தெருவில் ஒரு மின்கம்பம் தாழ்வாகவும், ஒரு மின்கம்பம் ஆறு தடவைக்கு மேல் அறுந்தும் விழுந்து உள்ளது. இதனை சீரமைக்க வேண்டி பொதுமக்கள் பல தடவை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்க ளுக்கு அச்சம் ஏற்படுவதா கவும் திரௌ பதியம்மன் கோவில் திருவிழா நடைபெ றுவதால் சாமி வீதி உலா தேர் வீதி உலா வரும்பொழுது இந்த மின் கம்பம் மற்றும் மின்கம்பிகளில் மோதி உரசி விபத்துகளும் உயிரிழப்பு ஏற்படும் எனக்கூறி அரசூர் மின்வாரிய அலுவலகத்தை அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அப்போது திருவெ ண்ணெநல்லூர் உதவி செயற் பொறியாளர் பாக்கியராஜ், உதவி மின் பொறியாளர் மீனலோச்சனி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாழ்வாக உள்ள மின்கம்பத்தினை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதாகவும் அடிக்கடி அறுந்து விடும் மின்கம்பிகளை மாற்றி புதிய மின்கம்பி அமைத்து தருவதாகவும் கூறினார்

    அதன் பேரில் போரா ட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். அதன் பிறகு உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்

    • எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்
    • ஜவ்வாது மலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு அமைகிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலையில்10, ஆயிரம் வீடுகள் மற்றும் விவசாய பம்பு செட்டுகளுக்கு சீரான மின்சாரம் கிடைக்கவில்லை என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனை ஒட்டி திருப்பத்தூர் நல்லதம்பி எம்.எல்.ஏ., கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் ரூ.8.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்து புதிய துணை மின் நிலையத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பேலூர் கிராமத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மின்சார வாரிய செயற்பொறியாளர் சி.அருள் பாண்டியன் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் (பொது) எம்.சம்பத் முன்னிலை வகித்தார்.

    அனைவரையும் உதவி செய்ய பொறியாளர் எம்.கண்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்.பி. திருப்பத்தூர் நல்லதம்பி

    எம்.எல்.ஏ., கலந்துகொண்டு ரூ.8.46 கோடியில் கட்டப்பட்ட புதிய துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றிகளை தொடங்கி வைத்தும் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் நல்லதம்பி எம்எல்ஏ பேசியதாவது:-

    ஜவ்வாது மலையில் 15 ஆண்டுகளாக துணை மின் நிலையம் கேட்டு போராடி இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மின் நிலையம் அமைக்க திருப்பத்தூர் கங்கலாபுரம் மின் நிலையத்திலிருந்து 578 மின்கம்பங்கள் நடப்பட்டு உள்ளது. வனத்துறையில் மின்கம்பங்களை எடுத்துச் செல்ல ரூ 1,கோடியே 25 லட்சம் கட்டப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையம் சீரான மின்சாரம் ஜவ்வாது மலை முழுவதும் கிடைக்கும், 15 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு இந்த துணை மின் நிலையம் பெற்றுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சி. என். அண்ணாதுரை எம்பி பேசியதாவது:-

    50 ஆண்டு காலத்தில் முதல் முறையாக திருப்பத்தூர் அடிவாரத்தில் இருந்து புதூர் நாடு வரை உள்ள 15 கிலோமீட்டர் தூரம் அகலப்படுத்தி தார் சாலை அமைக்க ப்பட்டுள்ளது. மேலும் ஜவ்வாது மலை பிரதம மந்திரி கிராம சாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் பல்வேறு சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஜவ்வாது மழையில் செல்போன் டவர் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள் என பாராளுமன்றத்தில் பேசியதற்காக திருவண்ணாமலை, ஜவ்வாது மலை ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில்32, இடங்களில் 4-ஜி செல்போன் அவர்கள் அமைக்க மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் நான்கு இடங்களில் ஜவ்வாது மலையில் அமைக்கப்பட உள்ளது மேலும் புதிய வங்கி கிளை திறக்கப்பட உள்ளது என அவர் பேசினார்.

    • தேவகோட்டை பகுதியில் 22-ந்தேதி மின்தடை ஏற்படும்.
    • மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட பூசலாக்குடி துணை மின் நிலையத்தில் வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்ற உள்ளது.

    இதன் காரணமாக கண்ணங்குடி, கப்பலுார், சிறுவாச்சி, அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்களம், மு.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களுர், மன்னன்வயல், தாழையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.

    ×