search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shops blocking"

    திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்தததை அடுத்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டது. பஸ் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    தருமபுரி:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த தகவல் நேற்று மாலை அறிவிப்பு வெளியானது.

    இதையடுத்து தருமபுரி பஸ் நிலையம், 4 ரோடு, கடைவீதி தெரு, கந்தசாமி வாத்தியார் தெரு, எஸ்.வி.சாலை, முகம்மது அலி கிளப் ரோடு, சின்னசாமி நாயுடு தெரு, ராஜகோபால் கவுண்டர் தெரு, ஆர்.பி.சுந்தரம் தெரு, நேதாஜி பைபாஸ்ரோடு, பென்னாகரம் மெயின்ரோடு, கிருஷ்ணகிரி மெயின் ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு, பாரதிபுரம், ஒட்ப்பட்டி ஆகிய பகுதிகளில் இரவு 7 மணிமுதல் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன.

    இதேபோன்று பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்ட புறநகர் மற்றும் நகர அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் நேற்று இரவு முதல் ரத்து செய்யப்பட்டது. வெளியூர்களுக்கு சென்ற பஸ்கள் மீண்டும் தருமபுரி மாவட்டத்துக்கு திரும்பவில்லை. இதனால் பயணிகள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். வெளியூர் மற்றும் நகர பஸ்கள் அனைத்தும் போக்குவரத்து பணி மனையில் நிறுத்தப்பட்டன.

    பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் ஷேர் ஆட்டோக்கள் மூலம் அதிக கட்டணம் செலுத்தி பயணிகள் சென்றனர்.

    இதேபோன்று தருமபுரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கும், ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கும் நேற்று இரவு முதல் பஸ்கள் ரத்து செய்யப்பட்டது. வெளிமாநிலத்துக்கு செல்ல கூடிய பஸ்கள் அனைத்தும் போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    தொண்டர்கள் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க பஸ் நிலையம், ஒட்டப்பட்டி முதல் 4 ரோடு வரை ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று அதியமான்கோட்டை, காரிமங்கலம், மதிகோண் பாளையம், தொப்பூர், கிருஷ்ணாபுரம், பழைய தருமபுரி ஆகிய பகுதிகளிலும் இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோன்று ஒகேனக்கல் பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், கடைகள் முழுவதம் அடைக்கப்பட்டன.

    பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர், கம்பை நல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களில் பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்தந்த பகுதிகள் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, போஸ் பஜார், பாகலூர் சாலை, தாலுகா அலுவலகம் சாலை, பழைய பெங்களூரு ரோடு, ஏரிரோடு ஆகிய பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.

    ஓசூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் மற்றும் கர்நாடக போன்ற வெளி மாநிலங்களுக்கு செல்லக் கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் இரவு 7 மணி முதல் நிறுத்தப்பட்டன.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு தினசரி ஆயிரக்கணக்கனோர் வேலைக்கு சென்று வருகின்றனர். இதேபோன்று கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்வார்கள்.

    இதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

    தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ஓசூருக்கு வந்த தமிழக பஸ்கள் பணிமனைக்கு திருப்பி விடப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் தினமும் 800 கர்நாடக அரசு பஸ்கள் இன்றும் இயக்கப்படவில்லை.

    இருமாநிலத்தை சேர்ந்தவர்களும் ஓசூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய பயணிகள் கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை ஆட்டோக்களில் சென்று அங்கிருந்து கர்நாடக மாநில அரசு பஸ்களில் புறப்பட்டு சென்றனர். இதேபோன்று அங்கிருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் ஆட்டோ மூலம் அத்திப்பள்ளி வரை வந்தனர்.

    ஊத்தங்கரை பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் மற்றும் அரசு பஸ்கள் அனைத்தும் இயக்கப்படவில்லை. இதேபோன்று மத்தூர், சிங்காரபேட்டை, கல்லாவி ஆகிய பகுதி களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஏதும் இயக்கப்படாத தால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப் பட்டன.

    போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு முதல் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. போச்சம்பள்ளி பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும், 4ரோடு, திருப்பத்தூர்-தருமபுரி மெயின்ரோட்டில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. பாரூர், அரசம்பட்டி, புலியூர், நாகரசம்பட்டி, இருமத்தூர், சந்தூர், மஞ்சமேடு, கண்ணத்தூர் ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. கிராமங்கள் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன.

    காவேரிப்பட்டணம் பஸ் நிலையத்தில் நேற்று இரவு முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் இயக்கவில்லை. இரவு 7 மணிக்கு பஸ் நிலையம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடைகள் அனைத்தும் கடைகளும் அடைக்கப்பட்டன.

    சூளகிரி தாலுகா சூளகிரி, பேரிகை, வேப்பனஅள்ளி, உத்தனபள்ளி பகுதிகளில் நேற்று மாலை கருணாநிதி இறந்த தகவலை அறிந்த வுடன் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. வாகன போக்குவரத்துகள் குறைந்தது, கடைகள் அடைக்கப்பட்டன. சூளகிரி யில் இன்று காலை முழுவதும் கடை அடைக்கப்பட்டது.

    ஓசூர்-கிருஷ்ணகிரி சாலை, சூளகிரி பேரிகை சாலை, பஸ நிலைய சாலை, கீழ் தெரு சாலை, நெஞ்சாலையில் உள்ள உள்ள பெரிய அளவில் உள்ள ஓட்டல்கள் போன்ற கடைகள் மூடப் பட்டன. சூளகிரியில் பஸ் நிலையத்தில் எந்த பஸ்கள் ஒடாததால் வெறிச்சோடி காணப்பட்டன. வீடுகள் முக்கிய வீதிகளில் கருணா நிதி உருவபட பேனருக்கு அணிவித்து அஞ்சலி செலுத்தினர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    கருணாநிதி மறைவை முன்னிட்டு விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இன்று பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கியது. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. #Karunanidhideath #Karunanithi #DMK
    விருதுநகர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன.

    பஸ்கள் ஓடாததால் வெளியூரில் இருந்து உள்ளூர் திரும்பியவர்களும் அவதிப்பட்டனர். பஸ் போக்குவரத்து நேற்று இரவு 7 மணி முதல் படிப்படியாக நிறுத்தப்பட்டது. இன்று காலை பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

    சிவகங்கை நகரில் இன்று அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிவகங்கை பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.

    அரண்மனை ரோடு, நேரு பஜார், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வெறிச்சோடியது. இதே போல் காரைக்குடி, திருப்பத்தூர், காளையார் கோவில், தேவகோட்டை, கல்லல், சருகணி, மானாமதுரை, இளையாங் குடி, திருப்புவனம், சிங்கம்புணரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    கருணாநிதி மறைவையொட்டி இன்று மாலை சிவகங்கை நகரில் அனைத்து கட்சி சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெறுகிறது.

    மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ்நிலையம், முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இன்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை.

    இதனால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு இன்று விடுமுறை அறிவித்து விட்டதால் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டமும் காணப்படவில்லை.



    இதேபோல் 3 மாவட்டங்களிலும் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. சிறு சிறு டீக்கடைகள் கூட ஒன்றிரண்டே ஆங்காங்கே திறந்திருந்தன. ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டே இருந்தன.

    இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடை வீதிகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் வீதிகளில் தங்கி இருந்த மக்கள் பெரும் சங்கடத்திற்கு ஆளானார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. ராமநாதபுரம், சிவகங்கை நகர சாலைகளிலும் ஆங்காங்கே கருணாநிதி படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை நடக்கும் சந்தை இன்று ரத்து செய்யப்பட்டது. இன்று வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் நேற்று இரவே ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கு சென்று விட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ்மீனா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். #Karunanidhideath #Karunanithi #DMK
    ×