search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selection"

    • சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்றது.
    • மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினா்.

    திருப்பூர்:

    பல்லடத்தை அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தமிழக அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வாகி பரிசு பெற்றுள்ளது.

    குழந்தைகள் தினத்தையொட்டி அண்மையில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 108 பள்ளிகள் சிறந்தப் பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

    இதில், திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம், சேமலைகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்றது.

    மாணவா்கள் எண்ணிக்கை உயா்வு, பள்ளி வளா்ச்சிக்கு பெற்றோா்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவா்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாவட்டத்தில் முதன்மைப் பள்ளியாக தோ்வுபெற்று மாநில அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வாகியுள்ளது.இதற்கான கேடயத்தை அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சேகா்பாபு ஆகியோா் வழங்கினா்.

    தமிழக அரசின் சிறந்தப் பள்ளியாக தோ்வு பெற்ற்காக பள்ளித் தலைமையாசிரியா் ராஜ்குமாா் மற்றும் ஆசிரியா்களை அலகுமலை ஊராட்சித் தலைவா் தூயமணி, மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டினா்.

    • அரசுப்பள்ளி மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்த பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் கலைத்திருவிழா பள்ளிகல்வித்துறையால் நடத்தப்பட்டது.
    • உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    திருப்பூர்:

    அரசுப்பள்ளி மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்த பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் கலைத்திருவிழா பள்ளிகல்வித்துறையால் நடத்தப்பட்டது.மாவட்ட அளவிலான தனிநபர், குழு போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் மாநில அளவில் நடக்கவுள்ள போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவர் குழுவினர் விபரங்களை மாவட்ட கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தனிநபர் பிரிவில் 120 பேரும் குழுபிரிவில் 316 பேரும் தேர்வாகியுள்ளனர். அதில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    குறிப்பாக காற்றுக்கருவி - இஜிரா (அரசு உயர்நிலைப்பள்ளி, சோழமாதேவி), ஓவியம் - ஸ்ரீசபரிஆகாஷ் (அரசு மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம்), இயற்கை காட்சி வரைதல் -- ஸ்ரீகிருஷ்ணாகுமார், ரூபன் (அரசு மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம்) ஆகியோர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.இவர்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

    • தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக “பசுமை தொழில் முனைவு திட்டம்” உருவாக்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பிக்கும் நிறுவனம் தொடங்கி ஓராண்டிற்கு மேல் தொடர் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

    கடலூர்:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், சுற்றுசூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை உருவாக்கி லாபத்துடன் கூடிய உற்பத்தி, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாக மேம்படுத்திட பசுமை தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக "பசுமை தொழில் முனைவு திட்டம்" உருவாக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினரால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்கள் மட்டுமே தேர்வு செய்யப்படும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை நிறுவனங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் தொழில் குறித்து தொழில் முனைவோர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் நிறுவனம் தொடங்கி ஓராண்டிற்கு மேல் தொடர் செயல்பாட்டில் இருக்க வேண்டும். நிறுவனம் கட்டாயம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அங்கீகாரம் மற்றும் ஜி.எஸ்.டி. பதிவு பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் நிறுவனமானது குறைந்தபட்சம் 3 வேலையாட்களை கொண்டு செயல்படக்கூடிய நிறுவனமாக இருக்க வேண்டும். தொழில் நிறுவனம் இணையதளத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிறுவனத்தின் ஆண்டு வருமானம் குறைந்தது ரூ.4 லட்சமாக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைக்கு உட்படுத்தப்பட்ட வெள்ளை மற்றும் பச்சை தொழில் நிறுவனங்களால் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும். விருப்பமுள்ளோர் வருகிற 15 -ந் தேதிக்குள் கடலூர் புதுப்பாளையம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பெற்று விண்ணப்பிக்கலாம்.

    • 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவுகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றார்.
    • டெல்லியில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பில் அர்ச்சனா பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்

     திருப்பூர்:

    திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி அர்ச்சனா. இவர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருநெல்வேலியில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் ஆண்கள், பெண்களுக்கான நீச்சல் போட்டியில் பங்கேற்றார்.

    இந்த போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவுகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலமாக தமிழக நீச்சல் அணிக்கு அர்ச்சனா தேர்வாகியுள்ளார். டெல்லியில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பில் அர்ச்சனா பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்

    • ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள புனித வியாகுல அன்னை ஆலயம் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயத்திற்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை திருமணம் ஆகாத பெண்கள், கர்ப்பிணி பெண்கள் வந்து குத்துவிளக்கிற்கு எண்ணெய் ஊற்றி சென்றால் கேட்டவரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வழிபட்டு செல்கின்றனர்.

    இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இறுதிவாரத்தில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவநாள் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான வியாகுல அன்னை தேர்பவனி நேற்றுஇரவு நடைபெற்றது. முன்னதாக திருவிழா கூட்டுப்பாடல் திருப்பலி மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. இதில் பேராலய பங்குதந்தை பிரபாகர், உதவி பங்குதந்தை பிரவீன் மற்றும் குருக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தேர்கள் புனிதம் செய்யப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. முதலாவதாக மைக்கேல் சம்மனசு தேரும், தொடர்ந்து புனிதசவேரியார், புனிதசூசையப்பர், புனிதஅந்தோணியார் சொரூபங்களை தாங்கிய தேரும், இறுதியாக வியாகுல அன்னை தேரும் பவனியாக வந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பா டுகளை உதவி பங்குதந்தை பிரவீன் அடிகளார் தலைமையில் பங்கு பேரவை துணைத் தலைவர் வின்சென்ட், செயலாளர் குழந்தைராஜ், பக்த சபைகள், அன்பிய பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

    • உத்திரிய மாதா ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரை மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா கோவில் ஆண்டு திருவிழா கடந்த 6, ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மாதா கோவிலின் முக்கிய திருவிழாவான தேர்பவனி நேற்று விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக பேராலயத்திலிருந்து எழுந்தருளிய புனித உத்திரிய மாதா தேரினை மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.

    தேரானது வேளாங்கண்ணி கடற்கரை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றபொழுது இருபுறமும் நின்றிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித உத்திரியமாதா,செபஸ்தியர், அந்தோணியர் ஆகிய தேர் மீது மலர்களை தூவி தங்க ளுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

    தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    • வருகின்ற 13-ந் தேதி சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    • பயனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் மற்றும் உணவு தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில கூறி இருப்பதாவது:- கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வருகின்ற 13-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இதில் 18 வயது முதல் 26 வயது வரை உள்ளமாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் மற்றும் உணவு தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ முடித்துள்ள மாணவர்கள் இந்த சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் கோப்பை சிறந்த காவல் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டது.
    • சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி வாழ்த்தினார்.

    காரைக்குடி

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிறந்த போலீஸ் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கோப்பையை, சென்னையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையமானது, குற்ற நடவடிக்கைகள் குறைப்பு, பொதுமக்களின் புகார் மீது தீர்வு காண்பது, ேபாலீஸ் நிலைய பராமரிப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வந்தது.

    இதன் அடிப்படையில் 2021-ம் ஆண்டுக்கான சிவகங்கை மாவட்ட அளவிலான சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காரைக்குடி உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு, காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி வாழ்த்தினார்.

    • நாளை காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
    • வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஆட்களை முகாமில் கலந்து கொண்டு நேரடியாகத் தோ்வு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பாக வேலை தேடும் இளைஞா்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே காலை 10 மணியளவில் நடத்தப்படுகின்றன.

    இதன்படி, நாளை ( வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணி யிடங்களுக்கு தகுதியானோ ரைத் தோ்வு செய்யவுள்ளனா்.

    இந்த முகாம் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் இளைஞா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முகாமில் எட்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோா் கலந்து கொள்ளலாம்.

    மேலும் வேலை யளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஆட்களை முகாமில் கலந்து கொண்டு நேரடியாகத் தோ்வு செய்து கொள்ளலாம்.

    முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களது சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றி தழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 04362- 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதத்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை பணி இருக்கும்.
    • எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் தற்காலிக மாவட்ட வள நபர் (பண்ணை சாரா) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதற்கு இளங்கலை பட்டபடிப்பு - ரூரல் டெவலப்மண்ட், சமூக வேலை, பிஸ்னஸ் மேனேஜ்மண்ட் மற்றும் முதுகலை பட்டபடிப்பு- பிஸ்னஸ் மேனேஜ்மண்ட் கல்வி தகுதியாகும்.

    தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதன்மை பணி கிராமப்புறங்களில் இருப்பதால், தமிழில் நல்ல வாய்மொழி மற்றும் எழுத்து தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.

    மேலும் அலுவலக நடைமுறைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆங்கில அறிவு இருத்தல் அவசியம்

    கணினி இயக்குவதில் போதுமான அறிவு இருத்தல் அவசியம். 10 அல்லது அதற்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு தினமும் ரூ.3500 ஊதியமும், 6 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களுக்கு தினமும் ரூ.2500, 2 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.2500 ஊதியமும் வழங்கப்படும்.

    மாதத்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை பணி இருக்கும்.

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 2-ந் தேதி ஆகும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி- இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், எண்.223, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தஞ்சாவூர்-613010.

    மேற்குறிப்பிட்டுள்ள தற்காலிக காலிபணியிடத்திற்கு மாவட்ட தேர்வுக்குழு வாயிலாக எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும்.

    தகுதிவாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியல் சென்னை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்படும்.

    உரிய காலத்திற்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சி.பி.எஸ்.இ. தேர்வில் மாவட்ட அளவில் செல்லப்பன் வித்யா மந்திர் சர்வேதச பள்ளி முதலிடம் பிடித்தது.
    • ஆசிரியர்கள் பாராட்டினர்.

    காரைக்குடி

    மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தது. பிளஸ்-2 மாணவர் லோகேஷ் 483/500 மதிப்பெண்களைப் பெற்று மாவட்ட அளவில் முதல் இடத்தை பெற்றார்.

    ஆங்கிலத்தில் 96, கணிதம் 95, உயிரியல் 97, இயற்பியல் 95, வேதியியல் 100 என மதிப்பெண்களை பெற்றார். 2-ம் இடத்தை மாணவர் கவுரிசங்கர நாராயணன் 482/500 மதிப்பெண் பெற்றார். 3-ம் இடத்தை மாணவர் பிரியதர்ஷன் 481/500 மதிப்பெண் பெற்றார்.

    10-ம் வகுப்பு தேர்வில் மாணவர் தியாகராஜன் 493/500 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அவர் ஆங்கிலம் 99, பிரெஞ்சு 100, கணிதம் 99, அறிவியல் 97, தகவல் தொழில்நுட்பம் 100 என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

    2-ம் இடத்தை விஷால் 487 மதிப்பெண் பெற்றார். 3-ம் இடத்தை மாணவி சுவாதி 485 மதிப்பெண் பெற்றார். சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் நிறுவனர் செல்லப்பன், தாளாளர் செ.சத்தியன், நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன், கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • வீராங்கனை தேர்வு, வரும் 14ம் தேதி பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் நடக்கிறது.
    • 13 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்க தகுதியானவர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டமா வட்ட கிரிக்கெட் சங்க, மேலாளர், வேல்முருகன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருப்பூர் மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கான வீராங்கனை தேர்வு, வரும் 14ம் தேதி, அவிநாசி, பழங்கரை, டீ பப்ளிக் பள்ளியில் நடக்கிறது.

    1999, மே 14ல் அல்லது அதற்கு பின் பிறந்தவர்கள், 2010, மே, 14 அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள்; அதாவது, 13 முதல், 24 வயதுக்கு உட்பட்டவர் விண்ணப்பிக்க தகுதியானவர்.பிறப்புச் சான்றிதழ், ஆதார் அல்லது பாஸ்போர்ட் நகல், போட்டோவுடன் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். நாளை (13ம் தேதி)மாலை, 6:00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். நாளை மறுநாள் (14ம் தேதி) வீராங்கனைகள் தேர்வு நடக்கும்.தேர்வு நடக்கும் நாளில், தங்கள் கிரிக்கெட் உடையில் வர வேண்டும். ஷூ, சீருடை முக்கியம். தேர்வுக்கு குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு முன்னதாக மைதானத்தில் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு பயிற்சி தரப்படும். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

    ×