என் மலர்
நீங்கள் தேடியது "Selection"
- நாள்தோறும் தலைமை ஆசிரியா்கள் அங்கு சென்று அந்நாளுக்குரிய வினாத்தாளைப் பெற்றுச் சென்று தோ்வை நடத்த வேண்டும்.
- நடப்பு கல்வியாண்டின் முதல் பருவத்தோ்வு தொடங்கி உள்ளது.
திருப்பூர்:
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம் வருமாறு:- நடப்பு கல்வியாண்டின் முதல் பருவத்தோ்வு தொடங்கி உள்ளது. இந்நிலையில் 4, 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாளைப் பின்பற்றி தோ்வு நடத்துமாறு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநா் அலுவலகம் ஆணை வெளியிட்டுள்ளது.
இந்த வினாத்தாள்கள் வட்டாரக் கல்வி அலுவலகம் மூலம் குறுவள மையத்தை சென்றடைந்து, நாள்தோறும் தலைமை ஆசிரியா்கள் அங்கு சென்று அந்நாளுக்குரிய வினாத்தாளைப் பெற்றுச் சென்று தோ்வை நடத்த வேண்டும்.
தொடக்க நிலையில் உள்ள மாணவா்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியா்களே அவா்களை மதிப்பீடு செய்யும் நடைமுறையே அறிவியல் பூா்வமாகவும், உளவியல் அடிப்படையிலும் சரியானது என மாவட்ட செயற்குழு தெரிவித்துள்ளது.எனவே மாணவா் நலனைக் கருத்தில் கொண்டு 4, 5 ம் வகுப்புகளுக்கான ஒரே வினாத்தாளைப் பின்பற்றி தோ்வு நடத்தும் பொதுத்தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டில் இருந்து முதல் பருவ தேர்வுக்கு பதில், தொகுத்தறியும் திறன் தேர்வு நடத்த உள்ளது.
- 1000-க்கும் மேற்பட்ட தொடக்க, நடு நிலைப்பள்ளிகளில் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.
சேலம்:
அரசு பள்ளிகளில் கல்வி கற்பித்தல், தேர்வு நடத்துதல், ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
இதன்படி அரசு பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டில் இருந்து முதல் பருவ தேர்வுக்கு பதில், தொகுத்தறியும் திறன் தேர்வு நடத்த உள்ளது. மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப் படையில் பொதுத் தேர்வுக்கு இணை யாக நடத்தப்படுகிறது.
இன்று முதல் 3 நாட்க ளுக்கு நடத்தப்பட உள்ள தேர்வு கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தேர்வு தொடங்கியது. குறிப்பாக 1000-க்கும் மேற்பட்ட தொடக்க, நடு நிலைப்பள்ளிகளில் 4, 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிந்த பின், அதன் மதிப்பீடுகள், கல்வி அமைச்சகத்துக்கு தொகுப்பு அறிக்கையாக அனுப்பப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- முதுகுளத்தூர் யூனியன் தலைவராக சண்முகபிரியா ராஜேஷ் (தி.மு.க.) தேர்வு செய்யப்பட்டார்.
- ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்தவர் எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்த தர்மர் எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து காலியாக இருந்த தலைவர் பதவிக்கு தேர்தல் அலுவலர் மாடசாமி சுந்தர்ராஜ் முன்னிலையில் தேர்தல் நடந்தது. இதில் 14 ஒன்றிய கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.
போலீஸ் டி.எஸ்.பி. சின்ன கன்னு தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தி.மு.க. சார்பில் வேட்பாளராக 2-வது வார்டு விக்கிரபாண்டி யபுரம் கவுன்சிலர் சண்முகபிரியா ராஜேஷ் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து 3-வது வார்டு மணலூர் தி.மு.க.கவுன்சிலர் நாகஜோதி ராமர் போட்டியிட்டார். 14 கவுன்சிலர்களில் 8 வாக்குகள் பெற்ற தி.மு.க. வேட்பாளர் சண்முகம் பிரியா ராஜேஷ் வெற்று பெற்றார்.
நாகஜோதி ராமர் 5 வாக்குகள் பெற்றார். 1 வாக்கு செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்துவதில் காலதாமதம் செய்வதாகக் கூறி. தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்ஷா, முத்துராமலிங்கத்திடம் யூனியன் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சண்முகபிரியா ராஜேஷ் வாழ்த்து பெற்றார்.
தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தலைவர் சண்முகபிரியா ராஜேசை வாழ்த்தினர்.பின்னர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், இதுவரை முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் அ.தி.மு.க. வசம் இருந்தது. இப்போது யூனியன் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சண்முகப்பிரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுகிறார் என்றார்.
- தி.மு.க.வை கடுமையாக எதிர்க்கும் எடப்பாடி தான் அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்குவதற்கு முழு தகுதியுடையவர்.
- ஜனநாயக முறைப்படி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை, ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி கழகம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம் தலைமை தாங்கினார்.
நிக்கல்சன் நகர கூட்டுறவு வங்கி தலைவரும் மருத்துவ கல்லூரி பகுதி முன்னாள் செயலாளருமான சரவணன் வரவேற்றார்.
அம்மா பேரவை இணை செயலாளரும் மாவட்ட பால்வளத் தலைவருமான காந்தி, மாவட்ட அவைத் தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் மேயர் சாவித்திரி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், திராவிடன் நகர கூட்டுறவு சங்க தலைவர் பஞ்சாபிகேசன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சிங். ஜெகதீசன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் நாகராஜன், தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் குடந்தை மண்டல செயலாளர் திருநீலகண்டன், வல்லம் பேரூர் செயலாளர் சசிகுமார், மருத்துவக் கல்லூரி பகுதி அம்மா பேரவை செயலாளர் மனோகர், முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கனகராஜ், முன்னாள் கவுன்சிலர் பூபதி, மகளிர் அணி சித்ரா அங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் பொது கூட்டத்தில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா. காமராஜ் எம்.எல்.ஏ, கொள்கை பரப்பு துணை செயலாளரும் இலக்கிய அணி செயலாளருமான வைகை செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் தான் அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்க வர வேண்டும். அந்த வகையில் தி.மு.க.வை கடுமையாக எதிர்க்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்குவதற்கு முழு தகுதி உடையவர்.
அண்ணா கற்று கொடுத்த ஜனநாயக முறைப்படி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் ஒற்றை தலைமை வேண்டும் என அனைவரும் வலியுறுத்தினர்.
அனைவரின் விருப்பப்படியும் ஜனநாயக முறைப்படியும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.வில் சாதாரணவர்கள் கூட எம்.பி, எம்.எல்.ஏ .ஆகவும், ஆட்சி அதிகாரத்திற்கும் வர முடியும். அதற்கு நானே ஒரு உதாரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன் பேசும்போது:-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு சோதனைகளை எல்லாம் தாங்கி 4 ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி பழனிச்சாமி வழிநடத்தினார்.
விரைவில் அவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்றார்.
இந்த கூட்டத்தில், தலைமை பேச்சாளர் ரத்தினவேல், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் மருதராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பூவை செழியன், சி.வி. சேகர், கோவிந்தராஜன், ரத்தினசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், திருவையாறு வடக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மருத்துவர் அணி தங்க கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் கணபதி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் தம்பிதுரை, விளார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தம்பி என்ற ரெத்தின சோமசுந்தரம், மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் பாலை ரவி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் முருகேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் வீரராஜ், அ.தி.மு.க. பிரதிநிதி மோகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர், மாணவரணி முருகேசன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி வாஞ்சிநாதன், கவுன்சிலர்கள் கோபால், கேசவன், காந்திமதி நவநீதகிருஷ்ணன், கலைவாணி சிவகுமார், தெட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி நன்றி கூறினார்.
- இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் இன்று நள்ளிரவில் இருந்து தொடங்க உள்ளது.
- 17 ½ வயதில் இருந்து 22 வயது வரை உள்ள இளைஞர்கள் அக்னி பத் திட்டம் மூலம் கலந்து கொள்ள உள்ளனர்.
அனுப்பர்பாளையம் :
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அணைபுதூர் டீ-பப்ளிக் பள்ளியில் அக்னிபத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் இன்று நள்ளிரவில் இருந்து தொடங்க உள்ளது.
இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில்நுட்ப பணி, கிளர்க்,ஸ்டோர் கீப்பர்உள்ளிட்ட பதவிகளுக்கு 17 ½ வயதில் இருந்து 22 வயது வரை உள்ள இளைஞர்கள் அக்னி பத் திட்டம் மூலம் கலந்து கொள்ள உள்ளனர்.
நாளை தொடங்கி வருகிற 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் கோவை,ஈரோடு,திருப்பூர், திண்டுக்கல்,மதுரை,தேனி ,நீலகிரி,நாமக்கல்,தர்மபுரி கிருஷ்ணகிரி, சேலம் என 11 மாவட்டங்களில் இருந்து தினமும் 3 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அவிநாசி வட்டாட்சியர் ராஜேஷ் முகாம் இறுதி கட்டப்பணிகளை ஆய்வு செய்தார். முகாம் நடைபெறும் இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 12 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- சொட்டு நீர் பாசனம் மானிய விலையில் அமைத்து தரப்படும்.
ராஜபாளையம்
ராஜபாளையம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 12 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலராஜகுல ராமன், சோழபுரம், குறிச்சியா ர்பட்டி, கிருஷ்ணாபுரம், சோலைசேரி, அயன்கொல்ல ங்கொ ண்டான், நக்கனேரி, சுந்தரநாச்சியார்புரம், வடக்கு தேவதானம் ,மேலூர் துரைசாமிபுரம், சொக்கநாதன்புத்தூர், மீனாட்சிபுரம் ஆகியவை ஆகும். வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 80 சதவீத திட்டங்கள் இந்த பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளன, இந்த கிராமங்களில் தரிசு நிலங்களை சீர் செய்ய, சொட்டுநீர் பாசனம் அமைக்க போன்றவற்றுக்கு அரசு மானியம் தருகிறது.
மேலும் 8-க்கும் மே ருக்கு மேல் சீர்த்திருத்தம் செய்யும் போது அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு சொட்டு நீர் பாசனம் மானிய விலையில் அமைத்து தரப்படும்.
இங்குள்ள விவசாயிகளுக்கு தென்னங்கன்று, தெளிப்பான், தார்பாலின், பண்ணை கருவிகள் போன்றவைகளும் மானிய விலையில் கிடைக்க உள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் விவரத்தை அந்தந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலரிடம் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைசாமி தெரிவித்தார்.
- ஊரக உள்ளாட்சிபதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
- தா.பேட்டை ஒன்றியம் சிட்டிலரை ஊராட்சியை சேர்ந்த 9-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் ரமேஷ் என்பவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் சிட்டிலரை ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினராக இருந்த ஆண்டியப்பன் இறந்து விட்டார். இதையடுத்து ஊரக உள்ளாட்சிபதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் தா.பேட்டை ஒன்றியம் சிட்டிலரை ஊராட்சியை சேர்ந்த 9-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் ரமேஷ் என்பவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து 9-வது வார்டு உறுப்பினராக ரமேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை ரமேஷிடம் வழங்கினர். ஒன்றிய திட்ட ஆணையர் குணசேகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- இந்திய அரசின் மாநில ஆயுள் காப்பீட்டு கழகத்தில் 151 துணை இயக்குநர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 17-ந்தேதி நடக்கிறது.
- மதியம் 2.30 மணி அளவில் தேர்வு தொடங்கி மாலை 4.30 மணி என 2 மணி நேரம் வரை நடைபெறும்.
சேலம்:
இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான மாநில ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ.சி) காலியாக உள்ள 151 துணை இயக்குநர் பதவிகளுக்கான அறிவிப்பு யூ.பி.எஸ்.சி. வெளியிட்டது. இதனுடன் கனிமவளத்துறையில் 9 நிர்வாக அதிகாரி, டி.ஆர்.டி.ஓ. துறையில் 8 முதுநிலை நிர்வாக அதிகாரி, மீன்வளத்துறையில் 1 நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
சேலம், நாமக்கல்
இதையடுத்து மத்திய அரசு மற்றும் மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள், அனுபவம் வாய்ந்த முதுநிலை பட்டதாரிகள், ஆராய்ச்சியாளர்கள், டாக்டர்கள் பலர் விண்ணப்பித்தனர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் எழுத்துத்தேர்வு நடைபெற உள்ள தேதியை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்த தேர்வு நடைபெற உள்ளது. அன்று மதியம் 2.30 மணி அளவில் தேர்வு தொடங்கி மாலை 4.30 மணி என 2 மணி நேரம் வரை நடைபெறும்.
மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் பொதுத்திறன் அடிப்படையில் கேட்கப்படும். 'பகுதி - அ' பிரிவில் ஆங்கில அறிவு மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் வேலை தொடர்பாகவும், 'பகுதி - ஆ' பிரிவில் மனித வள மேம்பாடு, மார்க்கெட்டிங் மேலாண்மை, அக்கவுண்ட்டிங் மற்றும் நிதி மேலாண்மை, தகவல் தொடர்பான சட்டம், பொது அறிவியல், கம்ப்யூட்டர் அறிவு உள்ளிட்டவை சம்பந்தமான கேள்விகள் இடம் பெற்றிருக்கும். கருப்பு பால்பாயிண்ட் பேனாவை பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும்.
ஹால்டிக்கெட்
முன்னதாக தேர்வர்கள் தேர்வு தொடங்கும் 1 மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும். 2.20 மணிக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 2.20 மணிக்கு தேர்வு மைய நுழைவு வாயில் கேட் பூட்டப்படும். மின்னணு நுழைவு அட்டை பதிவிறக்கம் செய்ய வருகிற 17-ந்தேதி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, போட்டோ ஆகியவை கொண்டு வர வேண்டும் என தேர்வர்களை யூ.பி.எஸ்.சி. கேட்டுக்கொண்டுள்ளது.
- சேலம் மாவட்ட, ஊரக உள்ளாட்சியில், கடந்த ஏப்ரல் 30-ந் தேதி வரை காலியான 12 உறுப்பினர் பதவிக்கு, வருகிற 9-ந் தேதியில் தேர்தல் நடைபெறுகிறது.
- 47 பேர் மனுதாக்கல் செய்தனர். நேற்று மனு பரீசிலனை நடந்தது.
சேலம்:
சேலம் மாவட்ட, ஊரக உள்ளாட்சியில், கடந்த ஏப்ரல் 30-ந் தேதி வரை காலியான 12 உறுப்பினர் பதவிக்கு, வருகிற 9-ந் தேதியில் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான, வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கி, 27-ந் தேதி வரை நடந்தது.
மொத்தம், 47 பேர் மனுதாக்கல் செய்தனர். நேற்று மனு பரீசிலனை நடந்தது. சேலம் ஒன்றிய, 8-வது வார்டுக்கு, மனுதாக்கல் செய்த, 21 பேரில் தங்கப்பொண்ணு, மணிகண்டன் ஆகியோர் மனுக்கள் சரிவர பூர்த்தியாகாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு 19 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னாம்பள்ளி ஊராட்சி 8-வது வார்டில் தாக்கலான 2 மனுவில் ஒரு மனு தள்ளுபடி ஆகி, ஒரு மனு ஏற்கப்பட்டது.
அதேபோல, பூவனூர் ஊராட்சி, 3-வது வார்டில் தாக்கலான 2-ல் ஒரு மனு ஏற்கப்பட்டது. புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி 7-வது வார்டில் ஒரு மனு, இளவம்பட்டி ஊராட்சி 5-வது வார்டில் ஒரு மனு, நீர்முள்ளிக்குட்டை ஊராட்சி 6-வது வார்டில் ஒரு மனு மட்டுமே தாக்கல் ஆனதால், மேற்கண்ட 5 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
மொத்தம், தாக்கலான 47 மனுவில் 6 மனு தள்ளுபடி போக 41 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நாளை மனுவாபஸ் பெற கடைசி நாள் என்பதால், அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல், தேர்தல் நடக்கும் ஊராட்சி வார்டு விபரம் அறிவிக்கப்படும், மேலும் 12 வார்டுகளில் 5 வார்டுகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் மீதம் உள்ள 7 வார்டுகளுக்கும் வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
- பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியீடு சேலம் மாவட்டத்தில் 88.62 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
- 34 ஆயிரத்து 988 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சேலம்:
தமிழகம் முழுவதும் 2021-2022 கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைந்தது. இதில் சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 325 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 19 ஆயிரத்து 254 பேரும், மாணவிகள் 20 ஆயிரத்து 227 பேரும் என மொத்தம் 39 ஆயிரத்து 481 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள்.
தேர்வு முடிவு வெளியீடு
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இன்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிட்டது. சேலம் மாவட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பிளஸ்-1 தேர்வு முடிவை வெளியிட்டனர். அதில், 34 ஆயிரத்து 988 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கமாக மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 15 ஆயிரத்து 879 பேர் மாணவர்களும், 19 ஆயிரத்து 109 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
88.62 சதவீதம் தேர்ச்சி
அதன்படி பிளஸ்- 1 தேர்ச்சி சதவீதம் 88.62 சதவீதம் ஆகும். அதில் மாணவர்கள் 82.47 சதவீதமும், மாணவிகள் 94.47 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 12 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளில் எண்ணிக்கை 114 ஆகும். 2020-ம் ஆண்டு 105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது. ஆனால் 2021-2022 கல்வி ஆண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொண்டாட்டம்
முன்னதாக இன்று காலை 9.30 மணி அளவில் 325 பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவு மதிப்பெண் விபரங்களுடன் ஒட்டப்பட்டது. தற்போது பிளஸ்-2 படித்து வரும் மாணவ- மாணவிகள் தங்களுடைய பிளஸ்-1 மதிப்பெண் விபரங்களை அறிந்து கொண்டனர்.
பள்ளிக்கல்வித் துறையின் அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்திலும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் மாணவ- மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ். வாயிலாகவும் தேர்வு முடிவு தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி ெசலுத்தி மாணவ- மாணவிகள் தாங்கள் எடுத்த மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொண்டனர். மேலும் மதிப்பெண் பட்டியலை பிரிண்ட் எடுத்துக்கொண்டனர்.
பிளஸ்-1 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் தங்கள் வகுப்பறைகளில் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பெற்றோர் மற்றும் ஆசிரியர், ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
- சேலத்தில் 8 மையங்களில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு நடக்கிறது.
- முதல் கட்ட தேர்வு இன்று தொடக்கம் சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 699 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
சேலம்:
தமிழக போலீசில் காலியாக உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப முதல் கட்ட தேர்வு இன்று தொடங்குகிறது.
இதையொட்டி ேசலத்தில் 8 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்க 10 ஆயிரத்து 699 பேர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலானோர் பங்கேற்றனர்.
இன்று காலை பொது தேர்வு நடந்தது. மதியம் தமிழ் தனி திறன் தேர்வும் நடக்கிறது. இதில் ஆர்வத்துடன் பங்கேற்று தேர்வை எழுதினர். அதே போல நாளை போலீஸ் ஒதுக்கீட்டிற்கான தேர்வு நடக்க உள்ளது. அதில் 253 பேர் பங்கேற்க உள்ளனர்.
இதையொட்டி தேர்வு மையங்களில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை விஜிலென்ஸ் ஐ.ஜி. லெட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் மற்றும் அதிகாரிகள் செய்துள்ளனர்.
- பிளஸ்-2 தேர்வில் சிவகங்கை மாவட்டம் 96.58 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 660 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.
சிவகங்கை
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 660 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 15 ஆயிரத்து 125 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.58 சதவீதம் ஆகும்.






