search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதுகுளத்தூர் யூனியன் தலைவர் தேர்வு
    X

    முதுகுளத்தூர் யூனியன் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சண்முகபிரியா ராஜேசுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அருகில் காதர்பாட்ஷா, முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளார்.

    முதுகுளத்தூர் யூனியன் தலைவர் தேர்வு

    • முதுகுளத்தூர் யூனியன் தலைவராக சண்முகபிரியா ராஜேஷ் (தி.மு.க.) தேர்வு செய்யப்பட்டார்.
    • ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்தவர் எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்த தர்மர் எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதற்காக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து காலியாக இருந்த தலைவர் பதவிக்கு தேர்தல் அலுவலர் மாடசாமி சுந்தர்ராஜ் முன்னிலையில் தேர்தல் நடந்தது. இதில் 14 ஒன்றிய கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.

    போலீஸ் டி.எஸ்.பி. சின்ன கன்னு தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தி.மு.க. சார்பில் வேட்பாளராக 2-வது வார்டு விக்கிரபாண்டி யபுரம் கவுன்சிலர் சண்முகபிரியா ராஜேஷ் போட்டியிட்டார்.

    இவரை எதிர்த்து 3-வது வார்டு மணலூர் தி.மு.க.கவுன்சிலர் நாகஜோதி ராமர் போட்டியிட்டார். 14 கவுன்சிலர்களில் 8 வாக்குகள் பெற்ற தி.மு.க. வேட்பாளர் சண்முகம் பிரியா ராஜேஷ் வெற்று பெற்றார்.

    நாகஜோதி ராமர் 5 வாக்குகள் பெற்றார். 1 வாக்கு செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்துவதில் காலதாமதம் செய்வதாகக் கூறி. தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்ஷா, முத்துராமலிங்கத்திடம் யூனியன் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சண்முகபிரியா ராஜேஷ் வாழ்த்து பெற்றார்.

    தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தலைவர் சண்முகபிரியா ராஜேசை வாழ்த்தினர்.பின்னர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், இதுவரை முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் அ.தி.மு.க. வசம் இருந்தது. இப்போது யூனியன் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சண்முகப்பிரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுகிறார் என்றார்.

    Next Story
    ×