search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Without competition"

    • ஊரக உள்ளாட்சிபதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
    • தா.பேட்டை ஒன்றியம் சிட்டிலரை ஊராட்சியை சேர்ந்த 9-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் ரமேஷ் என்பவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் சிட்டிலரை ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினராக இருந்த ஆண்டியப்பன் இறந்து விட்டார். இதையடுத்து ஊரக உள்ளாட்சிபதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதில் தா.பேட்டை ஒன்றியம் சிட்டிலரை ஊராட்சியை சேர்ந்த 9-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் ரமேஷ் என்பவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து 9-வது வார்டு உறுப்பினராக ரமேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    பின்னர் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை ரமேஷிடம் வழங்கினர். ஒன்றிய திட்ட ஆணையர் குணசேகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • சேலம் மாவட்ட, ஊரக உள்ளாட்சியில், கடந்த ஏப்ரல் 30-ந் தேதி வரை காலியான 12 உறுப்பினர் பதவிக்கு, வருகிற 9-ந் தேதியில் தேர்தல் நடைபெறுகிறது.
    • 47 பேர் மனுதாக்கல் செய்தனர். நேற்று மனு பரீசிலனை நடந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்ட, ஊரக உள்ளாட்சியில், கடந்த ஏப்ரல் 30-ந் தேதி வரை காலியான 12 உறுப்பினர் பதவிக்கு, வருகிற 9-ந் தேதியில் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான, வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கி, 27-ந் தேதி வரை நடந்தது.

    மொத்தம், 47 பேர் மனுதாக்கல் செய்தனர். நேற்று மனு பரீசிலனை நடந்தது. சேலம் ஒன்றிய, 8-வது வார்டுக்கு, மனுதாக்கல் செய்த, 21 பேரில் தங்கப்பொண்ணு, மணிகண்டன் ஆகியோர் மனுக்கள் சரிவர பூர்த்தியாகாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு 19 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னாம்பள்ளி ஊராட்சி 8-வது வார்டில் தாக்கலான 2 மனுவில் ஒரு மனு தள்ளுபடி ஆகி, ஒரு மனு ஏற்கப்பட்டது.

    அதேபோல, பூவனூர் ஊராட்சி, 3-வது வார்டில் தாக்கலான 2-ல் ஒரு மனு ஏற்கப்பட்டது. புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி 7-வது வார்டில் ஒரு மனு, இளவம்பட்டி ஊராட்சி 5-வது வார்டில் ஒரு மனு, நீர்முள்ளிக்குட்டை ஊராட்சி 6-வது வார்டில் ஒரு மனு மட்டுமே தாக்கல் ஆனதால், மேற்கண்ட 5 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

    மொத்தம், தாக்கலான 47 மனுவில் 6 மனு தள்ளுபடி போக 41 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நாளை மனுவாபஸ் பெற கடைசி நாள் என்பதால், அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல், தேர்தல் நடக்கும் ஊராட்சி வார்டு விபரம் அறிவிக்கப்படும், மேலும் 12 வார்டுகளில் 5 வார்டுகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் மீதம் உள்ள 7 வார்டுகளுக்கும் வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

    ×