search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரே வினாத்தாளை  பின்பற்றி தோ்வு நடத்தும் முறையை  கைவிட வேண்டும் - தமிழ்நாடு ஆரம்ப  பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    ஒரே வினாத்தாளை பின்பற்றி தோ்வு நடத்தும் முறையை கைவிட வேண்டும் - தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தல்

    • நாள்தோறும் தலைமை ஆசிரியா்கள் அங்கு சென்று அந்நாளுக்குரிய வினாத்தாளைப் பெற்றுச் சென்று தோ்வை நடத்த வேண்டும்.
    • நடப்பு கல்வியாண்டின் முதல் பருவத்தோ்வு தொடங்கி உள்ளது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம் வருமாறு:- நடப்பு கல்வியாண்டின் முதல் பருவத்தோ்வு தொடங்கி உள்ளது. இந்நிலையில் 4, 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாளைப் பின்பற்றி தோ்வு நடத்துமாறு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநா் அலுவலகம் ஆணை வெளியிட்டுள்ளது.

    இந்த வினாத்தாள்கள் வட்டாரக் கல்வி அலுவலகம் மூலம் குறுவள மையத்தை சென்றடைந்து, நாள்தோறும் தலைமை ஆசிரியா்கள் அங்கு சென்று அந்நாளுக்குரிய வினாத்தாளைப் பெற்றுச் சென்று தோ்வை நடத்த வேண்டும்.

    தொடக்க நிலையில் உள்ள மாணவா்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியா்களே அவா்களை மதிப்பீடு செய்யும் நடைமுறையே அறிவியல் பூா்வமாகவும், உளவியல் அடிப்படையிலும் சரியானது என மாவட்ட செயற்குழு தெரிவித்துள்ளது.எனவே மாணவா் நலனைக் கருத்தில் கொண்டு 4, 5 ம் வகுப்புகளுக்கான ஒரே வினாத்தாளைப் பின்பற்றி தோ்வு நடத்தும் பொதுத்தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×