search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "writing"

    • இந்திய ரிசர்வ் வங்கியில் 291 அதிகாரிகள் பணியிடங்க ளுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப் பட்டது.
    • இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    சேலம்:

    இந்திய ரிசர்வ் வங்கியில் 291 அதிகாரிகள் பணியிடங்க ளுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப் பட்டது. இதில் அதிகாரி கிரேடு பி பொது பிரிவுக்கு 222 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இந்த இடங்களை தவிர்த்து 38 இடங்கள் டி.இ.பி.ஆர். பிரிவுக்குக்கும், டி.எஸ்.ஐ.எம். பிரிவில் 31 இடங்கள் வழங்கப்பட்டள்ளது. இதில் டி.இ.பி.ஆர். பதவிக்கு பொருளியல், நிதி, வணிக பொருளியல், வேளாண்மை பொருளியல், தொழில் பொருளியல், சர்வதேச நிதி, அளவு தொழில் நுட்பங்கள், வங்கி மற்றும் வணிக நிதி ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதுபோல் டி.எஸ்.ஐ.எம். பதவிக்கு புள்ளியல், கணித புள்ளியல், கணித பொருளியல், எக்னோமெட்ரிக்ஸ், புள்ளியல் தகவலியல், பயன்பாடு புள்ளியல் மற்றும் தகவல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் வயது 21- 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு சென்னை, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் வருகிற ஜூலை மாதம் 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 9-ந்தேதி கடைசி நாள் ஆகும். www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    • 2 ஆண்டுகள் என்.சி.சி. பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு ஈரோடு 15-வது பட்டாலியன் சார்பில் எஸ்.எஸ்.எம்.லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
    • எழுத்து தேர்வுக்கு 350 மதிப்பெண்கள், செய்முறை தேர்வுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

    குமாரபாளையம்:

    2 ஆண்டுகள் என்.சி.சி. பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு ஈரோடு 15-வது பட்டாலியன் சார்பில் எஸ்.எஸ்.எம்.லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. எழுத்து தேர்வுக்கு 350 மதிப்பெண்கள், செய்முறை தேர்வுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. செய்முறை தேர்வில் துப்பாக்கியை பிரித்து பூட்டுதல், பாகங்கள் கண்டறிதல், தூரத்தை கணக்கிடுதல், வரைபட பயிற்சி, அணி வகுப்பு பயிற்சி உள்ளிட்டவைகள் செயல்படுத்தி காட்டுவார்கள். ஈரோடு 15-வது பட்டாலியன் சார்பில் கமாண்டிங் அலுவலர் ஜெய்தீப், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, உத்தரவின்படி சுபேதார் அன்பழகன் தலைமை வகிக்க, ஹவில்தார் விக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்வினை நடத்தினர். இந்த தேர்வில் எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளி, ஜே.கே.கே. ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி, சித்தோடு அரசு மேனிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, பர்கூர் பழங்குடியினர் அரசு உண்டு உறைவிடப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 146 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். என்.சி.சி. அலுவலர்கள்

    அந்தோணிசாமி, சிவகுமார், நீலாம்பாள், முருகேசன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • தமிழகம் முழுவதும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு வருகிற 4-ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
    • விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டினை http://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு வருகிற 4-ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.

    சேலம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 119 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதா ரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

    இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண், மின்னஞ்சல் முகவ ரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் அனுமதிச்

    சீட்டினை விண்ணப்ப தாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள

    லாம் அல்லது கிராம உதவியா ளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியான https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணைய தளத்தினுள் சென்று பதிவு எண்ணினையும், கைப்பேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்ப

    தாரர்களுக்கு தபால் மூலம் தேர்வு அனுமதிச் சீட்டு அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    இதே போல நாமக்கல் மாவட்டத்தில், கிராம உதவி யாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக, இணையதளம் வாயி லாக வரப்பெற்ற விண்ணப்பங்களை பரிசீ லனைசெய்து தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் கைபேசி எண்ணிற்கும், மின்னஞ்சல்

    முகவரிக்கும், குறுஞ்செய்தி யாக அனுப்பப்பட்டுள்ளது.

    விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டினை http://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த தேர்வுக்காக கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலகம், நாமக்கல் மோகனூர் சாலை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலம் ரெட்டிபட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி, மோகனூர் அணியாபுரம் எஸ்.ஆர்.ஜி. பொறியியல் கல்லூரி, பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி, வேலூர், குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, கே.எஸ்.ஆர். தொழில்நுட்ப கல்லூரி. கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    தேர்வு அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டவர்கள், 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்குள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு அனுமதி சீட்டுடன் வரவேண்டும். தேர்வு எழுத கருப்புமை கொண்ட பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே விண்ணப்பதாரர்கள் பயன்ப டுத்த வேண்டும். அனுமதி சீட்டு மற்றும் கருப்புமை கொண்ட பால்பாயிண்ட் பேனாவை தவிர வேறு எந்த பொருட்களையும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக்கூடாது. செல்போன், புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்த ஒரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டுவரக் கூடாது என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்து உள்ளார்.

    • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம், காவல்துறையில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு வீரர், சிறைக்கா வலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை நடத்துகிறது.
    • சேலம் மாவட்டத்தில் 19,532 ஆண்கள், 1430 பெண்கள் என 22 மையங்களில் 20,962 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம், காவல்துறையில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு வீரர், சிறைக்கா வலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை நடத்துகிறது. சேலம் மாவட்டத்தில் 19,532 ஆண்கள், 1430 பெண்கள் என 22 மையங்களில் 20,962 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

    இந்த எழுத்து தேர்வில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதா கூறியுள்ளதாவது: -

    நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டினை கொண்டு வராதவர்கள் மையத்திற்குள் அனும திக்கப்பட மாட்டார்கள். அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்ப தார்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் (www.tnusrb.tn.gov.in) இருந்து அழைப்பு கடித நகலை பதிவிறக்கம் செய்து, தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். தேர்வுக் கூட நுழைவு சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படங்கள் இல்லா மல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தங்களது புகைப்படத்தினை ஒட்டி அல்லது பி பிரிவு அதிகாரியிடம் சான்று

    ஒப்பம் பெற்று வரவேண்டும்.

    விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையான ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலை கொண்டு வர வேண்டும். செல்போன், எலக்ட்ரானிக் வாட்ச், கால்குலேட்டர் மற்றும் எந்தவித எலக்ட்ரானிக் உப கரணங்களும் அறைக்குள் எடுத்து வரக்கூடாது. கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனாகொண்டு வரவேண்டும். வேறு எந்த வித சொந்த உடமைகளை கொண்டு வர கூடாது. 22 தேர்வு மையங்களிலும் வீடியோ கேமராக்கள் மூலம் ஒளிப்பதிவு செய்து தேர்வு கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

    • சொல்ல வந்தது ஒன்று, புரிந்துகொள்ளப்பட்டது வேறு என்றாகிவிடக்கூடாது.
    • எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும், ஒருவனுக்கு எழுத்தாற்றல் வந்துவிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

    திருப்பூர் :

    திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசியதாவது:-

    எல்லோராலும் எழுதிவிட முடியாது. எழுத்து மிகப்பெரிய தவம். நாம் உணர்ந்தவற்றை தெளிவாகவும், பிழையின்றியும் சொல்ல வேண்டும். சொல்ல வந்தது ஒன்று, புரிந்துகொள்ளப்பட்டது வேறு என்றாகிவிடக்கூடாது.

    ஒருநாள் பயிற்சி செய்தால் சைக்கிள் பழகிவிடலாம். ஒரு வாரம் முயற்சித்தால் மோட்டார் சைக்கிள் ஓட்டலாம். ஓராண்டு ஒரு துறையில் நிலைத்திருந்தால்அத்துறையில் வல்லுனராகலாம்.ஆனால் எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும், ஒருவனுக்கு எழுத்தாற்றல் வந்துவிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எழுத்தாளரை கவுரவிப்பது என்பது, சமுதாய அக்கறையாளரை கவுரவிப்பதாகும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்திய அரசின் மாநில ஆயுள் காப்பீட்டு கழகத்தில் 151 துணை இயக்குநர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 17-ந்தேதி நடக்கிறது.
    • மதியம் 2.30 மணி அளவில் தேர்வு தொடங்கி மாலை 4.30 மணி என 2 மணி நேரம் வரை நடைபெறும்.

    சேலம்:

    இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான மாநில ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ.சி) காலியாக உள்ள 151 துணை இயக்குநர் பதவிகளுக்கான அறிவிப்பு யூ.பி.எஸ்.சி. வெளியிட்டது. இதனுடன் கனிமவளத்துறையில் 9 நிர்வாக அதிகாரி, டி.ஆர்.டி.ஓ. துறையில் 8 முதுநிலை நிர்வாக அதிகாரி, மீன்வளத்துறையில் 1 நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

    சேலம், நாமக்கல்

    இதையடுத்து மத்திய அரசு மற்றும் மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள், அனுபவம் வாய்ந்த முதுநிலை பட்டதாரிகள், ஆராய்ச்சியாளர்கள், டாக்டர்கள் பலர் விண்ணப்பித்தனர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் எழுத்துத்தேர்வு நடைபெற உள்ள தேதியை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்த தேர்வு நடைபெற உள்ளது. அன்று மதியம் 2.30 மணி அளவில் தேர்வு தொடங்கி மாலை 4.30 மணி என 2 மணி நேரம் வரை நடைபெறும்.

    மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் பொதுத்திறன் அடிப்படையில் கேட்கப்படும். 'பகுதி - அ' பிரிவில் ஆங்கில அறிவு மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் வேலை தொடர்பாகவும், 'பகுதி - ஆ' பிரிவில் மனித வள மேம்பாடு, மார்க்கெட்டிங் மேலாண்மை, அக்கவுண்ட்டிங் மற்றும் நிதி மேலாண்மை, தகவல் தொடர்பான சட்டம், பொது அறிவியல், கம்ப்யூட்டர் அறிவு உள்ளிட்டவை சம்பந்தமான கேள்விகள் இடம் பெற்றிருக்கும். கருப்பு பால்பாயிண்ட் பேனாவை பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும்.

    ஹால்டிக்கெட்

    முன்னதாக தேர்வர்கள் தேர்வு தொடங்கும் 1 மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும். 2.20 மணிக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 2.20 மணிக்கு தேர்வு மைய நுழைவு வாயில் கேட் பூட்டப்படும். மின்னணு நுழைவு அட்டை பதிவிறக்கம் செய்ய வருகிற 17-ந்தேதி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

    தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, போட்டோ ஆகியவை கொண்டு வர வேண்டும் என தேர்வர்களை யூ.பி.எஸ்.சி. கேட்டுக்கொண்டுள்ளது.

    • அந்தியூரில் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
    • பயிற்சிக்கான ஏற்பாட்டி னை அந்தியூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முருகன், மாதேஸா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் லிங்கப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அந்தியூ ர்ஒன்றி யத்திற்கு ட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

    இதில் 130 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    கொேரானா கால கட்டத்தில் மாணவ ர்களின் கற்றலில் இடை வெளி காரணமாக மாணவர்களின் பள்ளி செயல்பாடுகள் குறைந்தது. இதனை ஈடுகட்டும் வகையில், மாணவர்கள் திறனை மேம்படுத்து வதற்காக பல்வேறு உத்தி களை கையாண்டு ஆசிரிய ர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சியினை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்து ஆசிரிய ர்களுக்கு அறிவுரை வழங்கி னார்.

    மேலும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் லக்குமி நரசிம்மன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் ராதா கிருஷ்ணன், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பானுமதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நந்தினி தேவி மற்றும் சிவராமன் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்பட்டது.

    பயிற்சிக்கான ஏற்பாட்டி னை அந்தியூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முருகன், மாதேஸா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் லிங்கப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 

    ×