சேலத்தில் மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு

இந்திய ரிசர்வ் வங்கியில் 291 அதிகாரிகள் பணியிடங்க ளுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப் பட்டது.இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேலத்தில் மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு
Published on

சேலம்:

இந்திய ரிசர்வ் வங்கியில் 291 அதிகாரிகள் பணியிடங்க ளுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப் பட்டது. இதில் அதிகாரி கிரேடு பி பொது பிரிவுக்கு 222 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவதொரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த இடங்களை தவிர்த்து 38 இடங்கள் டி.இ.பி.ஆர். பிரிவுக்குக்கும், டி.எஸ்.ஐ.எம். பிரிவில் 31 இடங்கள் வழங்கப்பட்டள்ளது. இதில் டி.இ.பி.ஆர். பதவிக்கு பொருளியல், நிதி, வணிக பொருளியல், வேளாண்மை பொருளியல், தொழில் பொருளியல், சர்வதேச நிதி, அளவு தொழில் நுட்பங்கள், வங்கி மற்றும் வணிக நிதி ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதுபோல் டி.எஸ்.ஐ.எம். பதவிக்கு புள்ளியல், கணித புள்ளியல், கணித பொருளியல், எக்னோமெட்ரிக்ஸ், புள்ளியல் தகவலியல், பயன்பாடு புள்ளியல் மற்றும் தகவல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் வயது 21- 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு சென்னை, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் வருகிற ஜூலை மாதம் 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 9-ந்தேதி கடைசி நாள் ஆகும். www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com