search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை அருகே இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படைவீரர்களின் பயிற்சி நிறைவு விழா
    X

    சிவகங்கை அருகே இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படைவீரர்களின் பயிற்சி நிறைவு விழா

    சிவகங்கை அருகே இலுப்பகுடி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு பயிற்சி மையத்தில் வீரர்களின் பயிற்சி நிறைவு விழா மற்றும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கை அருகே இலுப்பகுடியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் எல்லை பாதுகாப்பு படைக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் ஓராண்டு பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம்.



    இதேபோன்று கடந்த(2017-18) ஓராண்டு பயிற்சி நிறைவு செய்த 242 வீரர்களை நாட்டின் எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கும் விழா, பயிற்சி நிறைவு விழா மற்றும் வீரர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பயிற்சி மைய மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு இலுப்பகுடி பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி. ஆஸ்டின் ஈபன் தலைமை தாங்கினார். அப்போது வீரர்களின் அணி வகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். மேலும் பயிற்சியில் சிறந்து விளங்கிய அஜய்குமார், அங்குஷ் சவுத்ரி, யாசின், சகில்சிங், மன்ஜீத் தாகூர், அமித் ஆகிய வீரர்களை பாராட்டி பரிசு கோப்பைகளை வழங்கினார்.

    முன்னதாக நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வீரர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து தேசிய கொடியை முன்னிறுத்தி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வீரர்களின் சாகச நிகழ்ச்சியாக கராத்தே, கயிறு ஏறுதல், தீ வளையத்திற்குள் தாவுதல், துப்பாக்கிகளை கையாளும் விதம், நடனம் போன்றவை நடைபெற்றன.

    தற்போது பயிற்சி நிறைவு செய்து செல்லும் 242 வீரர்களும் தமிழகம், ஜம்முகாஷ்மீர், ஜார்கண்ட், குஜராத், ஆந்திரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, அரியானா, சத்தீஸ்கர், தெலுங்கானா, புதுடெல்லி ஆகிய 11 மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 
    Next Story
    ×