search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகங்கை"

    • சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது
    • இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

    சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு 'தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இதனிடையே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், முதலீட்டாளர்களின் ₹525 கோடி மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள புகாரால், அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.

    அந்த புகாரில், "சென்னை, மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் நிதி நிறுவனத்தின் வைப்புத்தொகையின் மீது திரட்டப்பட்ட வட்டியை முதலீட்டாளர்களுக்கு செலுத்த மறுப்பதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் நிறுவனம் வழங்கிய கிட்டத்தட்ட 150 காசோலைகள் திரும்ப வந்துள்ளது.

    அந்த நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், டி.தேவநாதன் சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஆவார். பிரதமர் அவருக்காக பிரச்சாரம் செய்கிறார்.

    ஆகவே அவர் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றச் சாட்டுக்களில் இருந்து தப்பித்து விடுவாரோ என்ற அச்சம் முதலீட்டர்களுக்கு எழுந்துள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது தேர்தல் ஆணையம் தகுந்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

    • கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது.
    • கடந்த காலங்களை விட தற்போது அதிகமாக மீனவர்கள் பாதிப்படைகிறார்கள்.

    காரைக்குடி:

    சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை அடக்குமுறை மூலமே தீர்க்க பா.ஜனதா முயற்சிக்கிறது. விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை என்பது வெறும் கனவுதான். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். எனது தொகுதி மக்களுக்கு ஒரு எம்.பி.யாக என்னால் முடிந்ததை செய்துள்ளேன்.

    பெண்களுக்கான திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதாவாக கோரினேன். அதேபோல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படு வதை முற்றிலுமாக நிறுத்துவோம்.

    கடந்த காலங்களை விட தற்போது அதிகமாக மீனவர்கள் பாதிப்படைகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. பா.ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தமிழக மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாங்குடி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, நகர தலைவர் பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர செயலாளர் குமரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • நூல் வெளியீட்டு விழா நடந்தது.
    • வந்தேறும் குடிகள் நூல் குறித்து மன்னர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் நடந்த 56-வது தேசிய நூலக வார விழாவில் வந்தேறும் குடிகள் என்ற நூலை முன்னாள் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்பையா வெளியிட சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் பெற்றுக் கொண்டார்.

    மாவட்ட நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் தலைமை வகித்தார். நூலகர் முத்துக்குமார் வரவேற்றார். தமிழ்ச் செம்மல் பகிரத நாச்சியப்பன் வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார்.

    வந்தேறும் குடிகள் நூல் குறித்து மன்னர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பேசினார்.

    நூலகத் தன்னார்வ லர்கள் ரமேஷ் கண்ணன், தொழிலதிபர் பாண்டிவேல், நல்லாசிரியர் கண்ணப்பன், புலவர் மெய் ஆண்டவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஆசிரியர் ஈஸ்வரன் ஏற்புரை வழங்கினார். நூலகர் கனக ராஜன் நன்றி கூறினார்.

    விழாவில் நூலகர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் வாசகர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மருது பாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
    • நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நாளை (27-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மாமன்னர் மருது பாண்டியர் களின் 222-வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகை யில் நாளை 27-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் சிவ கங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படு கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பொது விநியோக குறைதீர் முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் நாளை (14-ந் தேதி) அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். தாங்கள் குடியிருக்கும் வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் மனுக்களை அளிக்கலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • திருப்பத்தூரில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற து.கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், வருகிற மக்களவை தேர்த லில் 2 லட்சம் ஒட்டு வித்தி யாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றும், கட்சி தொண்டர்கள் சோர்வின்றி பணியாற்ற வேண்டும் என்று கூறினார். பின்னர் ஏழை மாணவர் கள் 3 பேருக்கு கல்வி நிதி ரூ.15 ஆயிரம் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் முன் னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், மாநில பேச்சாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் கணேசன், வட்டார தலை வர்கள் பன்னீர்செல்வம், பிரசாந்த், பேரூராட்சி உறுப்பினர் சீனிவாசன், வட்டார செயலாளர் ஜெயராஜ், இளைஞர் காங்கிரஸ் கார்த்தி, முகேஷ், தங்கராஜ், அருள்பிரகாஷ், செல்வம், ஹக்கீம், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் ரூ.1,216 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • ரூ.1.50 கோடி வரை வழங்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கையில் மாவட்ட அளவிலான தொழில் கடன் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு 1 லட்சத்து 20 ஆயிரத்து 791 பயனாளி களுக்கு ரூ.1216.63 கோடி மதிப்பிலான வங்கி கடன் அனுமதி மற்றும் வங்கி கடன் பட்டுவாடாவுக்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதா வது:-

    தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறந்த விளங்க வேண்டும் என்ற அடிப்படை யில் முதல்-அமைச்சர் பல்வேறு சிறப்பு திட்டங் களை செயல்படுத்தி வரு கிறார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத் திடும் வகையில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு களை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2022-2023 முதல் 143 பயனாளிகளுக்கு 13.10 கோடி அளவில் வங்கி மூலம் கடனுதவி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டிற்கு (2023-24) 210 பயனாளி களுக்கு 20.13 கோடி கடனுதவி செய்து தருவ தற்கும் இலக்கு நிர்ண யிக்கப்பட்டது.

    இதுதவிர மேற்காணும் திட்டங்களில் வியாபார தொழில்கள், உற்பத்தித் தொழில்கள் மற்றும் சேவை தொழில்கள் செய்வதற்கும் மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணப்பித்து வங்கி கடனுதவிகள், அரசின் மானியத்துடன் அதிகபட்சம் ரூ.1.50 கோடி வரை வழங்கப்பட்டு வருகிறது.

    இதுபோன்று சிறு-குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அர சால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களின் வாழ் வாதாரத்தினை மேம் படுத்தி்க் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜுனு மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஆனந்த பைரவர் சூலத்துக்கு பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு.
    • பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பிறகே, சிவன், அம்பாளை வணங்குகிறார்கள்.

    இங்கு பைரவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பின்பே, சிவன், அம்பாளை வணங்குகிறார்கள்.

    இங்கு சிவன், அம்பாளுக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்கள் கண்ணில் தொட்டு வைக்க அனுமதி கிடையாது. பைரவருக்கு ஆரத்தி எடுத்த கற்பூரத்தட்டையே பக்தர்களுக்கு காட்டுகிறார்கள். பைரவருக்கு முக்கியத்துவம் தரும். வகையில் இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்.

    தேய்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு ஹோமம் நடக்கிறது. ஹோமம் முடிந்ததும் சுவாமிக்கு விசேஷ அபிஷேக, அர்ச்சனை நடந்து அதன்பிறகு பைரவர் உற்சவர் பிரகார உலா செல்கிறார்.

    சிவன் கோயில்களில் விழாக்களின் போது, சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன் சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளே பஞ்சமூர்த்திகளாக வீதியுலா செல்வர். ஆனால், இக்கோவிலில் நடக்கும் ஆனி உத்திர விழாவில் சண்டிகேஸ்வரருக்கு பதிவாக பைரவர் வீதியுலா செல்வது விசேஷம்.

    பைரவர் தலம் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோஷ்டத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சிதருகிறார். இவரது தலையில் கிரிடம் அணிந்துள்ளது. முதல்பூஜை சூரியனுக்கு. தினமும் இக்கோவிலில் காலை பூஜையில் முதலில் சூரியனுக்கு யூஜை செய்யப்பட்டு அதன்பிறகே பிற சுவாமிகளுக்கு பூஜை நடக்கிறது. சூரியன் இத்தலத்தில் தவமிருந்தவர் என்பதால், இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்

    சூரியனால் வழிபட்ட தலம் என்பதாலும், சூரியச்செடிகள் நிறைந்த வனமாக இருந்ததாலும் சூரியக்குடி எனப்பட்ட இத்தலம், பிற்காலத்தில் சூரக்குடி என மருவியது.

    நடராஜர், தெற்கு நோக்கி இருக்கிறார். சுவாமி சன்னதி எதிரில் நந்தி, சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் உள்ளது. பைரவர் சன்னதியின் பின்புறம் பிரகாரத்தில் மற்றொரு பைரவர் கையில் கதாயுதத்துடன் காட்சி தருகிறார்..

    பார்வதிதேவியின் தந்தை தட்சன். ஒரு யாகம் நடத்தினான் ஆனால், மருமகன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்கவில்லை. யாகத்தில் அவிர்பாகம் (பலன்) ஏற்பதற்காக சூரியன் கலந்து கொண்டார் அப்போது சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை நிறுத்தச் சொன்னார். வீரபத்திரர், யாகத்தை நிறுத்தியதோடு அதில் கலந்து கொண்ட சூரியன் முதலானவர்களை தண்டித்தார்.

    சிவனின் கோபத்திற்கு ஆளான சூரியன், பூலோகம் வந்து இத்தலத்தில் தங்கி விமோசனம் கேட்டு அவரை வழிபட்டார். சிவனும் அவர் மீது கருணை கொண்டு காட்சிதந்து சாப விமோச்சனம் தந்தார். இதன் அடிப்படையில் இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.

    பொதுவாக பைரவர் கையில் சூலத்துடன் காட்சி தருவார் ஆனால் இங்குள்ள ஆனந்த பைரவர் சூலத்துக்கு பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு.

    பரிகாரம்

    குடும்பத்தில் ஐஸ்வரியம் பெருக, மனகுழப்பம் நீங்கி அமைதி நிலவ இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி பைரவருக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ வழிபாடு செய்கிறார்கள்.

    திறக்கும் நேரம் காலை 4 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 7.30 மணிவரை.

    விழாக்கள்

    பைரவர் ஜென்மாஷ்டமி, ஆனி உத்திர திருவிழா, மார்கழி ஆருத்ரா தரிசனம், அறுபத்துமூவர் குருபூஜை

    • சிவகங்கையில் கருணாநிதி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கையில் கருணா நிதி 5-ம் ஆண்டு நினைவு தினம் தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. தி.மு.க. நகர செயலாளரு மான துரைஆனந்த் தலை மையில் மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து முன்னிலையில் சிவகங்கை கோர்ட் வாசலில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கருணா நிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது.

    அதனை தொடர்ந்து சிவகங்கை அரண்மனை வாசலில் நகர்மன்ற உறுப்பி னர் அயூப்கான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருணா நிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பனங்காடி சாலையில் உள்ள மாற்றுதிறனாளி களுக்கான தாய் இல்லத்தில் கருணாநிதி படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்கள்.

    இந்நிகழ்ச்சியில்நகர மன்ற உறுப்பினர்கள் ஜெய காந்தன், ராமதாஸ், விஜய குமார் பாக்கியலட்சுமி, சேது நாச்சியார் வீரகாளை, துபாய் கார்த்தி, கீதா கார்த்திகேயன், ராஜபாண்டி மற்றும் நகர்மன்ற துணை தலைவா கார். கண்ணன், இளைஞர் அணி ஹரிஹரன் மற்றும் ஏராளமான தி.மு.க. வினர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • ஆடிப்பூர பிரம்மோற்சவ தேர் திருவிழா

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வைரவன்பட்டியில் வடிவுடையம்மை சமேத வளரொளிநாதர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    இந்த மாட்டுவண்டி பந்தயம் காரைக்குடி-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், நடுமாடு பிரிவில் 28 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 52 ஜோடிகள் என மொத்தம் 91 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 52 வண்டிகள் கலந்து கொண்ட தால் 27 மற்றும் 25 என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    அதேபோன்று மாடு ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு 4 காளைகள் இணைந்து 2 வண்டிகள் ஒன்றாய் சென்றதால் சாலையில் நின்று மாட்டு வண்டியை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்கள் சிதறி அடித்து ஓடினர். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • சிவகங்கையில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்யாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே திருப்பத்தூர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங் களை எழுப்பினர்.

    இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன், மாவட்ட அவைத்தலைவர் நாக ராஜன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாக ராஜன், குணசேகரன், நகர செயலாளர் ராஜா, நகர் மன்ற தலைவர் சுந்தர லிங்கம், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், பாசறை மாவட்ட செயலா ளர் பிரபு, ஒன்றிய செய லாளர்கள் சேவியர்தாஸ், கருணாகரன், பழனிச்சாமி, செல்வமணி, அருள்ஸ்டிபன், கோபி, பாரதிராஜன், ஜெக தீஸ்வரன், மகளிரணி வெண்ணிலா சசிகுமார், பாசறை மாவட்ட துணை செயலாளர் பிரபு, மாவட்ட கலை பிரிவு செயலாளர் செந்தில்முருகன், கூட்டுறவு சங்க தலைவர் சகாய செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொரு ளாளர் சரவணன், பாசறை இணை செயலாளர் மோசஸ், தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செய லாளர் சங்கர்ராமநாதன், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், முடிகரைகருப்பையா, மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • 5-வது அமைப்பு தேர்தல் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் ம.தி.மு.க.உட்கட்சி தேர்தல் நடந்தது. இதில் மாவட்ட செயலாளராக காரைக்குடியை சேர்ந்த பசும்பொன் மனோகரன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வைகோவின் மகன் துரை வைகோ ம.தி.மு.க.வின் செயலாளராக பதவியேற்க அக்கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கட்சியை தாய் கழகமான தி.மு.க.வுடன் இணைக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்த மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ம.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தலான 5-வது அமைப்பு தேர்தல் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ம.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் சிவகங்கையில் உள்ள தனியார் மகாலில் துணை பொது செயலாளரான ராஜேந்திரன் தேர்தல் ஆணையாளராகவும், பொன்முடி, செல்வராஜ் துணை ஆணையாளராகவும் நியமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் முன்னிலையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் பெற்று மாவட்ட செயலாளராக காரைக்குடியை சேர்ந்த பசும்பொன் மனோகரனும், அவைத்தலைவராக திருப்பத்தூர் கருப்பூரை சேர்ந்த சந்திரன், பொருளாளராக காளையார்கோவிலை சேர்ந்த சார்லஸ் மற்றும் துணை செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என 17 பேர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டனர்.

    ×