என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "protests"
- சீனாவில் அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
- மக்கள் நடத்தும் அமைதி வழி போராட்டத்திற்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என ஐ.நா. அறிவுறுத்தியது.
நியூயார்க்:
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக 40 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாகாணங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருகிறது.
ஜிங்ஜங்க் மாகாணத்தில் 100 நாட்களுக்கு மேலாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த மாகாணத்தின் உரும்யூ நகரில் கடந்த 24-ம் தேதி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். இதனால் அங்கு தீ பற்றியபோது வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதற்கிடையே, சீன அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சீன அரசுக்கு எதிராகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் சீனா முழுவதும் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி வழியில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு சீன ஆட்சியாளர்கள் உரிய மதிப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
- கோவை செழியன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருப்பூர் :
கொங்கு தமிழர் எழுச்சி பேரவையினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை கதிர்வேல் தலைமை தாங்கினார்.மாநகர பொருளாளர் மூர்த்தி, மாநில துணைச் பொதுச்செயலாளர் கே.கே. ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனத் தலைவர் கொங்கு சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுகோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலைக்கு திருப்பூர் மாநகரத்தில் சிலை அமைக்க வேண்டும், கோவை செழியன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், சுதந்திர போராட்ட தியாகியும் காந்தியவாதியுமான கோவை கதர் அய்யா முத்து கவுண்டருக்கு திருப்பூர் மாவட்டத்தின் மையப்பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், அதேபோல் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு சுதந்திரத்திற்காக போராடிய தியாகி வீரபாண்டி சுந்தரம்மாளின் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் குணா ,காங்கேயம் ஒன்றிய செயலாளர் சிவநாதன் ,நகர செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மண்ணிற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய ராயல்டி தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும்.
- ஓய்வூதிய பலன்களை வழங்க அரசு தனியாக நிதி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் ராஜகோ பால்ராஜா தலைமை தாங்கினார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன், துணை தலைவர்கள் சுப்புராஜ், உலகநாதன், சந்தனசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், நீர் நிலைகளிலிருந்து எடுத்த மண்ணிற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய ராயல்டி தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும். நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 6 மாத ஊதியம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க அரசு தனியாக நிதி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊழியர்களின் ஊதிய த்திற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை காலதாமதமின்றி உடனே வழங்கவேண்டும்.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசு துறைகளில் வழங்கப்படுவது போல் உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க ஏதுவாக ஒரு கமிட்டி அமைக்கப்படும் என, முதலமைச்சர் ரங்கசாமியின் சட்டமன்ற வாக்கு றுதிபடி, உடனே கமிட்டி அமைக்கவேண்டும். பொதுவான பணிநிலை அரசா ணைப்படி உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் ஒருமுறை நிகழ்வாக பதிவு உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. முடிவில் பொருளாளர் சாமிநாதன் நன்றி கூறினார்.
- திருமங்கலம் விரிவாக்கப் பகுதியில் சாலை வசதி கேட்டு நாற்று நடும் போராட்டம்- சாலை மறியல் நடந்தது.
- இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலம் மற்றும் மறவன்குளம், வடகரை ஊராட்சி விரிவாக்க பகுதிகளான மதுரா சிட்டி, முத்தமிழ்நகர், பிரபாகரன்நகர், கலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2500-க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
20 ஆண்டுகளாக இந்த பகுதியில் சாலை, மின்விளக்கு, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தற்போது வரை செய்து தரப்படவில்லை. இதன் ஒரு பகுதி விரிவாக்க பகுதியாகவும், மீதி மறவன்குளம் மற்றும் வடகரை விரிவாக்க பகுதியாகவும் இருப்பதால் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சாலை அமைக்க வில்லை. ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இருந்தும் சாலை அமைக்கப்படவில்லை.
மழை காலங்களில் பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு நுழைவுப் பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கியதால் தெருக்களில் நடந்து செல்ல முடியவில்லை.
இதை கண்டித்து இன்று குண்டும், குழியுமான சாலைகளில் நாற்று நடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். மேலும் விமான நிலைய சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். வடகரை பஞ்சாயத்து தலைவர் தற்காலிகமாக சாலை அமைப்பதாக தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
- திட்டக்குடி அருகே மணல் குவாரி லாரி டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
- விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொடிக்களம் கிராமத்தில் அரியலூர் மாவட்டம் சேந்தமங்கலம் வெள்ளாற்றில் அரசு மணல் குவாரிக்கு மணல் ஏற்ற வெளி மாவட்டங்களிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் கடந்த 3 நாட்களாக கொடிக்களம் கிராமத்தில் காத்திருக்கிறார்கள். அரியலூர் மாவட்ட லாரிகளுக்கு மட்டும் அதிக அளவில் ஒப்புகை சீட்டு வழங்கி அவர்களின் லாரிகளுக்கு மட்டும் அதிக அளவில் மணல்களை ஏற்றி அனுப்புவதாகவும் இதுவரை 3 நாட்களாக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே தங்களுக்கு மணல் ஏற்ற அனுமதிக்காததை கண்டித்து காத்திருக்கும் லாரி டிரைவர்கள் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் 3 நாட்களாக உணவு உட்கொள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதாகவும் கூறி லாரி டிரைவர்கள் விருத்தாசலம் திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரம் திட்டக்குடி, விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆவினங்குடி போலீசார் மற்றும் திட்டக்குடி டி.எஸ்.பி., காவியா லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை செய்து மணல் குவாரி நடத்தும் ஒப்பந்தக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது . இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமிரெட்டிபட்டி கிராமம் மந்தை தோப்பூர் பகுதியில் 50 ஆண்டுக்கு முன்பு மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு ஆழ்துளை கிணறு அமைதது.
- அப்போது காணாமல் போன பொது கிணற்றை மீட்டு தரவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமிரெட்டிபட்டி கிராமம் மந்தை தோப்பூர் பகுதியில் 50 ஆண்டுக்கு முன்பு மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு ஆழ்துளை கிணறு அமைதது. அதனை பொதுமக்கள் நீரை இறைத்து பயன்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில் கிணற்று நீரை பயன்படுத்தாமல் போனதால் கிணறு பயன்பாடு இன்றி இருந்து வந்துள்ளது.
இந்த நிலையை பயன்படுத்திக்கொண்ட அருகில் உள்ள மூர்த்தி என்பவரின் குடும்பத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றை மூடி மறைத்துள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் பல வருடங்களாக கிணற்றை மீட்க அரசு அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்தனர். இந்நிலையில் கிணறு இருந்த இடம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரின் பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது. அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் அந்த இடத்தில் ஊராட்சி ஒன்றிய போது நிதியில் இருந்து 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் மூர்த்தி என்பவரின் மகன்கள் சின்னத்தம்பி, குருநாதசாமி, ராஜி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனால் நேற்று காலை ஊர் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டாபுரம் செல்லும் மெயின்ரோட்டில் மந்தை தோப்பூர் பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காணாமல் போன பொது கிணற்றை மீட்டு தரவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியராஜ், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் 1 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.இதை தொடர்ந்து பொதுக்கிணறு ஆக்கிரமிப்பு செய்து மூடப்பட்ட இடத்தை பொக்லைன் எந்திரம் கொண்டு தோண்டிய போது 30 அடி ஆழம் கொண்ட வட்ட கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து இரு தரப்பினரிடமும் பேச ஓமலூர் தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
இதனிடையே மறியலில் ஈடுபட்டவர்கள் பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அனுராதா கொடுத்த புகாரின் பேரில் ராமிரெட்டிபட்டி ஊராட்சி அ.தி.மு.க கவுன்சிலர் சரவணன் .மணி உட்பட 40 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- சட்டவிரோதமாக கரு முட்டை விற்பனை செய்தவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு:
ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
கருமுட்டை விற்பனை விவகாரத்தில் போலியான ஆவணங்களை தயார் செய்த கும்பல் மீதும், சட்டவிரோதமாக கரு முட்டை விற்பனை செய்தவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட பொது செயலாளர்கள் எஸ்.எம். செந்தில், வேதானந்தம், ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணை தலைவர்கள் சின்னதுரை, குணசேகரன், அய்யாசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார்,
வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ஈஸ்வர மூர்த்தி, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் பாலமுரளி, சக்திசுப்பிரமணி, பி.எஸ்.செல்வமணி, இந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். சிறந்த கல்வியாளராகவும், தத்துவவாதி மற்றும் மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்த இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக போற்றி, மதித்து வருகின்றனர்.
இந்த மோதலின்போது வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மற்றும் மாணவர் அணி அமைப்பினர் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் சாரதாநிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மேற்கு வங்காளம் மாநில போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நாளை விசாரிக்கப்படவுள்ளது.
மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படும் சி.பி.ஐ.யை வைத்து எதிர்க்கட்சிகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மிரட்டி வருவதற்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் நேற்றிரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காளம் மாநில அரசை கண்டிக்கும் வகையில் பேசினார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2 மணிக்கு மேல் பாராளுமன்றம் கூடியபோதும் இந்த பிரச்சனையை மையப்படுத்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
மாநிலங்களவையிலும் இதே நிலை நீடித்ததால் நாளைவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. #LokSabhaadjourned #RajyaSabhaadjourned #TMCmembers #CBIissue
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் தெலுங்குதேசம் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பிற கட்சி எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
12 மணிக்கு அவை கூடியபோதும் அதிமுக, தெலுங்குதேசம் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். இந்த அமளிக்கு மத்தியிலும் ஜீரோ அவர் பணிகள் நடைபெற்றன. இதில் 5 உறுப்பினர்கள் பங்கேற்று பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினர். இதுதுவிர பொது கணக்கு குழு மற்றும் இரண்டு நிலைக் குழு அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன.
இக்கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய நாட்கள் மாநிலங்களவைக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார்.
அதன்பின்னர் உறுப்பினர்களின் அமளி நீடித்ததால், நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். வார இறுதி நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை நாட்கள் என தொடர்ந்து 5 நாட்கள் மக்களவை செயல்படாது. இனி டிசம்பர் 27-ம் தேதி மக்களவை கூடும். இதேபோல் மாநிலங்களவைக்கும் நாளை முதல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaAdjourned #ChristmasHolidays
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பைக் கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
தீர்ப்பை சுட்டிக் காட்டி குறிப்பிட்ட வயது பெண்களும் கோவிலுக்கு செல்வதற்கு முயற்சித்தனர். ஆனால், கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். பெண்களின் காலில் விழுந்து முறையிட்டு திருப்பி அனுப்புகின்றனர். செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளரும், எதிர்ப்பு காரணமாக தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு திரும்பினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆகியோர் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து சபரிமலைக்கு சென்றனர். பம்பையில் இருந்து நடந்து சென்ற அவர்களை சுற்றி பாதுகாப்பு கவசங்களுடன் சுமார் 200 போலீசார் பாதுகாப்புக்குச் சென்றனர். பெண்கள் இருவருக்கும் பாதுகாப்புக்காக தலைக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சன்னிதானம் அருகே உள்ள நடைபந்தலில் ஐயப்ப பக்தர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பெண்களை உள்ளே செல்ல ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், தங்கள் பாரம்பரிய நடைமுறைகளை மாற்றக்கூடாது என பக்தர்கள் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து போலீஸ் ஐஜி பத்மகுமார், அங்கு வந்து பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்திற்கான காரணம் குறித்து கேட்ட அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதனால் பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கூறினார். எனினும் பக்தர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து மேற்கொண்டு என்ன செய்யலாம்? என காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. #Sabarimala #SabarimalaVerdict #SabarimalaProtests #DevaswomBoard #DevoteesDharna
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு இயக்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு. சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
அதனால், மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மெரினா கடற்கரையில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதி வழங்க முடியாது. அங்கு கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, 90 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது. அதே நேரம், ஒரு நாள் மட்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று போலீசாருக்கு உத்தர விட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை முதலில் விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், ‘தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினால், தேவையில்லாத சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டதை ஏற்றுக் கொள்கிறோம்.
மேலும், வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி வழங்க தயாராக இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனவே, மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர். #ProtestsInMarina #MadrasHighCourt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்