search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்சியினர்"

    • அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவல கம் அருகே மணிப்பூர் சம்ப வத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத் தில் மணிப்பூரில் நடை பெறும் வன்முறை சம்ப வங்களை கண்டித்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சேலம்:

    அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவல கம் அருகே மணிப்பூர் சம்ப வத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கட்சியின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஐசக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத் தில் மணிப்பூரில் நடை பெறும் வன்முறை சம்ப வங்களை கண்டித்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து ஐசக் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    மணிப்பூரில் மிகப்பெரிய வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பெண் கள் நிர்வாணப்ப டுத்தி கொடுமைப்ப டுத்தப்படு கிறார்கள். 500 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் எடுக்கப்பட்டுள் ளன. பாதிரியார்கள் தாக்கப்பட் டுள்ளனர்.இதற்கு காரணமான வர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாநில அரசை, மத்திய அரசு கலைக்க வேண்டும்.

    இந்தியாவில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவ டிக்கை இல்லை. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய அரசில் மாற்றம் தேவை. தமிழக அரசு சிறுபான்மை யினருக்கு பாதுகாப்பாக உள்ளது. தமிழ கத்தில் தி.மு.க.வுக்கும், தேசிய அளவில் காங்கிரசுக்கும் எப்போ தும் ஆதரவாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மண்டல பேராயர் ஹெரால்டு டி.டேவிட், கிழக்கு மாவட்ட பேராயர் ஜோசப் மோகன்,மேற்கு மண்டல பேராயர் டேனியல், வடக்கு மண்டல பேராயர் டேவிட் குட்டி,கிழக்கு மண்டல பேராயர் பர்ண பாஸ், நாமக்கல் மாவட்ட பேராயர் சாமுவேல், முதன்மை பொது செயலா ளர் சரவணன், சேலம் மாவட்ட செயலாளர் ஜான் ஐசக் ,சேலம் மாவட்ட தலை வர் ராமு செல்வராஜ்,சேலம் மாவட்ட பொருளாளர் பீட்டர், மேற்கு தொகுதி செயலாளர் மார்டின் செந்தில் குமார் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

    • மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டித்தும், அங்குள்ள பா.ஜ.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக் கோரி
    • பல்வேறு ஊர்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    ராசிபுரம்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டித்தும், அங்குள்ள பா.ஜ.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் போராட்டம் நடத்தினர்.

    இந்தப் போராட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் பாச்சல் சீனிவாசன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஸ்ரீ ராமலு முரளி முன்னிலை வகித்தார்.

    இதில் ராசிபுரம் வட்டார தலைவர் கணேசன், வெண்ணந்தூர் வட்டாரத் தலைவர் சொக்கலிங்க மூர்த்தி, பேரூராட்சி தலைவர்கள் நாமகிரிப்பேட்டை இளங்கோ, பிள்ளாநல்லூர் சண்முகசுந்தரம், வெண்ணந்தூர் சிங்காரம், அத்தனூர் பூபதி, நகராட்சி கவுன்சிலர் லலிதா பாலு, குருசாமிபாளையம் பேரூராட்சி கவுன்சிலர் கந்தசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் கோபால், மாநில மகளிர் காங்கிரஸ் நிர்வாகி மகேஸ்வரி, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சண்முகம், ராசிபுரம் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மாணிக்கம், பழனிசாமி, மதுரை வீரன், கோவிந்தராஜ், ஜெயபால் ராஜ், சேக் உசேன் பலர் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்

    இதேபோல் நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொத்தனூர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், காந்தி, மாவட்ட பொருளாளர்கள் மணி, குப்புசாமி, கபிலர்மலை, பரமத்தி மற்றும் மோகனூர் வட்டார தலைவர்கள் நடராஜன், முத்துசாமி, குப்புசாமி, பரமத்தி வட்டாரத் தலைவர் சந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஓமலூர்

    சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையத்தில் ஓமலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜ.க மற்றும் மணிப்பூர் பா.ஜ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காங்கிரஸ் மூத்த நிர்வாகி மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகு தீபம் ஏந்தி மத்திய பா.ஜ.க. அரசையும், மணிப்பூர் பா.ஜ.க அரசையும் கண்டித்து முழக்கமிட்டனர். தொடர்ந்து 1 மணி நேரமாக மெழுகு தீபம் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    • திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ம.தி.மு.க. தலைமை அறிவிப்பின்படி, திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் பணி துணைச் செயலாளர் சேதுபதி தேர்தல் ஆணையாளராக செயல்பட உள்ளார். தொடர்ந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் காலை 11 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள பெரியார், அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    எனவே இந்த இரு நிகழ்ச்சிகளிலும் வட்டக்கழக நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், மாநகர் மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக வருகை தந்து சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • 100-க்கும் மேற்பட்டோர் சேர்ந்தனர்
    • நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

    திருப்பத்தூர்:

    பாரதிய ஜனதா கட்சி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்களை கட்சியில் சேர்க்கும் நிகழ்ச்சி ஏலகிரி மலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பொதுச்செயலாளர் கவியரசு தலைமை வகித்தார். 100-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி மாவட்ட தலைவர் சி.வாசுதேவன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

    மாவட்ட பொது செயலாளர் தண்டாயுதபாணி, ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் திலகராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • சட்டவிரோதமாக கரு முட்டை விற்பனை செய்தவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

    கருமுட்டை விற்பனை விவகாரத்தில் போலியான ஆவணங்களை தயார் செய்த கும்பல் மீதும், சட்டவிரோதமாக கரு முட்டை விற்பனை செய்தவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் மாவட்ட பொது செயலாளர்கள் எஸ்.எம். செந்தில், வேதானந்தம், ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணை தலைவர்கள் சின்னதுரை, குணசேகரன், அய்யாசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார்,

    வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ஈஸ்வர மூர்த்தி, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் பாலமுரளி, சக்திசுப்பிரமணி, பி.எஸ்.செல்வமணி, இந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×