search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிப்பூர் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    பரமத்திவேலூரில் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்.

    மணிப்பூர் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டித்தும், அங்குள்ள பா.ஜ.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக் கோரி
    • பல்வேறு ஊர்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    ராசிபுரம்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டித்தும், அங்குள்ள பா.ஜ.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் போராட்டம் நடத்தினர்.

    இந்தப் போராட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் பாச்சல் சீனிவாசன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஸ்ரீ ராமலு முரளி முன்னிலை வகித்தார்.

    இதில் ராசிபுரம் வட்டார தலைவர் கணேசன், வெண்ணந்தூர் வட்டாரத் தலைவர் சொக்கலிங்க மூர்த்தி, பேரூராட்சி தலைவர்கள் நாமகிரிப்பேட்டை இளங்கோ, பிள்ளாநல்லூர் சண்முகசுந்தரம், வெண்ணந்தூர் சிங்காரம், அத்தனூர் பூபதி, நகராட்சி கவுன்சிலர் லலிதா பாலு, குருசாமிபாளையம் பேரூராட்சி கவுன்சிலர் கந்தசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் கோபால், மாநில மகளிர் காங்கிரஸ் நிர்வாகி மகேஸ்வரி, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சண்முகம், ராசிபுரம் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மாணிக்கம், பழனிசாமி, மதுரை வீரன், கோவிந்தராஜ், ஜெயபால் ராஜ், சேக் உசேன் பலர் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்

    இதேபோல் நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொத்தனூர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், காந்தி, மாவட்ட பொருளாளர்கள் மணி, குப்புசாமி, கபிலர்மலை, பரமத்தி மற்றும் மோகனூர் வட்டார தலைவர்கள் நடராஜன், முத்துசாமி, குப்புசாமி, பரமத்தி வட்டாரத் தலைவர் சந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஓமலூர்

    சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையத்தில் ஓமலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜ.க மற்றும் மணிப்பூர் பா.ஜ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காங்கிரஸ் மூத்த நிர்வாகி மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகு தீபம் ஏந்தி மத்திய பா.ஜ.க. அரசையும், மணிப்பூர் பா.ஜ.க அரசையும் கண்டித்து முழக்கமிட்டனர். தொடர்ந்து 1 மணி நேரமாக மெழுகு தீபம் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    Next Story
    ×