search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சன்னிதானம்"

    பாதுகாப்புக்காக திருநங்கைகளுடன் சபரிமலைக்கு சென்ற போலீசார், ‘ஷூ’வை கழற்றாமல் சன்னிதானத்தில் நின்றதால் சன்னிதானத்தில் நேற்று பரிகார சுத்தி கிரியை பூஜைகள் நடந்தது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் நேற்று முன்தினம் 4 திருநங்கைகள் சாமி தரிசனம் செய்தனர். இதற்காக பம்பையில் இருந்து இருமுடி கட்டுடன் சென்ற அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

    பாதுகாப்புக்காக திருநங்கைகளுடன் சபரிமலைக்கு சென்ற போலீசார், ‘ஷூ’வை கழற்றாமல் சன்னிதானத்தில் நின்றனர். இந்த சம்பவத்துக்கு பக்தர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் போலீசார் இதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து போலீசாருக்கு எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து, அவர்கள் ‘ஷூ’வை கழற்றிவிட்டு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் சபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீசாரின் இந்த அவமரியாதைக்குரிய சம்பவம் சன்னிதானத்தை அசுத்தம் செய்து உள்ளதால், சபரிமலையில் பரிகார சுத்திகிரியை பூஜைகள் நடத்த தந்திரி கண்டரரு ராஜீவரு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, சன்னிதானத்தில் நேற்று பரிகார சுத்தி கிரியை பூஜைகள் நடந்தது.
    சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் சரண கோஷம் எழுப்புவதை நிறுத்துமாறு சொல்லக்கூடாது என்று போலீசுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 144 தடை உத்தரவு பிறப்பித்ததற்கு விளக்கம் கேட்டுள்ளது. #KeralaHC #SabarimalaTemple
    கொச்சி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், ஐயப்பன் கோவில் போராட்ட களமாக மாறியது. அதை தடுக்க கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள மாநில அரசு, 144 தடை உத்தரவு பிறப்பித்தது.

    இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று அந்தமனுக்கள், நீதிபதிகள் ராமச்சந்திர மேனன், அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது, கோவிலில் பக்தர்களுக்கு வசதி செய்து தருமாறு தாங்கள் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல், தடை உத்தரவு பிறப்பித்த கேரள அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில் கூறியதாவது:-

    ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று சரண கோஷம் எழுப்புவதில் தவறு இல்லை. சரண கோஷம் எழுப்புவதை நிறுத்துமாறு போலீசார் சொல்லக்கூடாது. கோவிலுக்கு குழுவாக செல்லலாம்.



    கோவிலுக்கு வருபவர்களில் உண்மையான பக்தர்களையும், போராட்டக்காரர்களையும் போலீசார் எப்படி வேறுபடுத்தி பார்க்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.

    சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததற்கான சூழ்நிலை பற்றி கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். கோவிலை சுற்றி உள்ள பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது பற்றி பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். சன்னிதானத்தில் கட்டுப்பாடுகள் விதித்தது பற்றி கேரள அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

    நடைப்பந்தலில் என்ன நடந்தது என்பது பற்றிய வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும். அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த எத்தனை போலீசார் பணி அமர்த்தப்பட்டனர் என்ற விவரத்தை வெளியிட வேண்டும்.

    கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணிக்கு, குற்றப்பின்னணி கொண்ட போலீஸ் ஐ.ஜி.யையும், சூப்பிரண்டையும் அனுப்பியது யார்? அவர்களுக்கு மலையாளம் தெரியுமா? ‘சரணம் ஐயப்பா’ என்ற கோஷத்தை அவர்கள் ஏன் குற்றமாக கருதுகிறார்கள்?

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர். #KeralaHC #SabarimalaTemple

    கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோவிலை நெருங்கிய பெண்களை உள்ளே செல்ல அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி பக்தர்கள் சன்னிதானம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். #Sabarimala #SabarimalaProtests
    பத்தனம்திட்டா:

    சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பைக் கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

    தீர்ப்பை சுட்டிக் காட்டி குறிப்பிட்ட வயது பெண்களும் கோவிலுக்கு செல்வதற்கு முயற்சித்தனர். ஆனால், கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர். பெண்களின் காலில் விழுந்து முறையிட்டு திருப்பி அனுப்புகின்றனர்.  செய்தி  சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளரும், எதிர்ப்பு காரணமாக தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு திரும்பினார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆகியோர் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து சபரிமலைக்கு சென்றனர். பம்பையில் இருந்து நடந்து சென்ற அவர்களை சுற்றி பாதுகாப்பு கவசங்களுடன் சுமார் 200 போலீசார் பாதுகாப்புக்குச் சென்றனர். பெண்கள் இருவருக்கும் பாதுகாப்புக்காக தலைக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது.

    போலீஸ் புடைசூழ சென்ற பெண்கள் இருவரும் இன்று 9 மணியளவில் சன்னிதானத்தை நெருங்கினர். அப்போது பெண்கள் சன்னிதானத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் முழக்கங்கள் எழுப்பினர். சரண கோஷம் எழுப்பிய அவர்கள், பெண்களை உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், அவர்களின் முழக்கங்களை காதில் வாங்கிக் கொள்ளாத போலீசார், தொடர்ந்து அந்த பெண்களை சன்னிதானம் நோக்கி அழைத்துச் சென்றனர்.



    இதையடுத்து சன்னிதானம் அருகே உள்ள நடைபந்தலில் ஐயப்ப பக்தர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பெண்களை உள்ளே செல்ல ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், தங்கள் பாரம்பரிய நடைமுறைகளை மாற்றக்கூடாது என பக்தர்கள் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டனர்.

    இதையடுத்து போலீஸ் ஐஜி பத்மகுமார், அங்கு வந்து பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்திற்கான காரணம் குறித்து கேட்ட அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதனால் பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கூறினார். எனினும் பக்தர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து மேற்கொண்டு என்ன செய்யலாம்? என காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. #Sabarimala #SabarimalaVerdict #SabarimalaProtests #DevaswomBoard #DevoteesDharna 
    ×