search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "priyanka"

    பிரியங்காவின் வருகை பா.ஜனதாவை பாதிக் காது என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் கூறினார். #YogiAdityanath #BJP #Priyanka
    லக்னோ:

    காங்கிரஸ் கட்சி பிரியங்காவை இந்த முறை பொதுச்செயலாளராகவும், கிழக்கு உத்தரபிரதேச பொறுப்பாளராகவும் நியமித்துள்ளது. அவரது சேவையை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பான இது ஒரு உட்கட்சி பிரச்சினை. காங்கிரஸ் கட்சிக்காக அவர் இதற்கு முன்னரும் பிரசாரம் செய்திருக்கிறார், இந்த முறையும் பிரசாரம் செய்கிறார். அவரது வருகை தேர்தலில் பா.ஜனதாவை எந்தவகையிலும் பாதிக்காது.

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி ஏற்கனவே ஒரு பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. குறிப்பிட்ட தொகுதிகளுக்காக இரண்டு கட்சிகளும் போட்டிபோடுகிறது. இந்த கூட்டணி முயற்சி தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு ‘பொய் அலாரம்’ தவிர வேறு ஒன்றுமில்லை.

    நாடு யாருடைய கைகளில் இருந்தால் பாதுகாப்பாகவும், வளமாகவும் இருக்குமோ அவருக்கே, அந்த கட்சிக்கே மக்கள் ஓட்டு போடுவார்கள். பாகிஸ்தான் பாலகோட் தாக்குதலுக்கு பின்னர் பிரதமர் மோடியின் வலிமையான தலைமையின் கீழ் இந்தியா உலகில் சக்திமிக்க நாடாக உருவாகியுள்ளது.

    ராமர் பற்றி ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். அவரை தங்கள் முன்மாதிரியாகவும் கருதுகிறார்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியும், பாதுகாப்பும் தேவை. முன்பு எதிர்க்கட்சிகளால் சாத்தியம் இல்லாதது, இப்போது மோடியின் தலைமையில் பா.ஜனதாவால் சாத்தியமாகி உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 74 இடங்களில் பா.ஜனதா வெற்றிபெறும்.
    பிரதமர் மோடியின் தலைமையுடன் ராகுல் காந்தியையோ, பிரியங்காவையோ ஒப்பிட முடியாது என சிவசேனா கூறுகிறது. #ShivSena #PMModi
    மும்பை :

    மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்த போதிலும் எதிர்க்கட்சிகளையும் மிஞ்சி, பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் சிவசேனா வசைபாடி வந்தது. பா.ஜனதாவுடன் இனி தேர்தல் கூட்டணி கிடையாது என்று சிவசேனா தலைவர் அறிவித்தார்.

    ஆனால் திடீர் திருப்பமாக கடந்த திங்கட்கிழமை பா.ஜனதாவுடன் சிவசேனா தேர்தல் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டது. பாராளுமன்ற தேர்தலுக்கு மட்டுமின்றி, மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கும் இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    கூட்டணி உருவான நிலையில் நீண்ட காலத்துக்கு பிறகு பிரதமர் மோடியை சிவசேனா கட்சி புகழ்ந்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் சிவசேனாவுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணி உருவானதில் மக்கள் மத்தியில் எழும் கேள்விகள் குறைவுதான். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு இடையேதான் அதிக கேள்விகள் எழுந்து இருக்கின்றன. எங்கள் கூட்டணியால் பூச்சிகள் போன்ற எதிர்க்கட்சிகள் நசுக்கப்படும்.



    2014-ம் ஆண்டுக்குப் பின் ராகுல்காந்தியின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறது. பிரியங்காவும் உதவியாக இருக்கிறார். ஆனால், இருவரையும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையோடு ஒப்பிடமுடியாது.

    கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே கருத்துவேறுபாடுகள் எழுந்த நிலையில் ஏன் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள்? ராமர் கோவில் கட்டப்படுமா?, சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி தரப்படுமா? என்பவை உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஆனால், இந்த கேள்விக்கான பதில், மராட்டியத்தின் நலனுக்காகவே கூட்டணி முடிவை சிவசேனா எடுத்து உள்ளது.

    சிவசேனாவுக்கும், பா.ஜனதாவுக்கும் எந்தவிதமான பகைமையும் இல்லை. பீகார் முதல்-மந்திரி நிதி‌ஷ் குமாருக்கு பிரதமர் மோடியுடன் கருத்துவேறுபாடு இருந்தாலும்கூட, அதையெல்லாம் மறந்து அவர் பாரதீய ஜனதா கூட்டணியில் சேர முடியும், காங்கிரஸ் கட்சி மெகா கூட்டணி அமைக்க முடியும் என்கிறபோது, சிவசேனா எப்போதும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் அங்கமாக இருக்கும்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பலையும், மோடிக்கு ஆதரவான அலையும் காணப்பட்டது. ஆனால், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அலையின் அடிப்படையில் போட்டி இருக்காது. ஆனால் கொள்கைகள், வளர்ச்சிப்பணிகள், நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டி இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #ShivSena #PMModi
    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #Priyanka #Congress #UttarPradesh
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, தனது பொறுப்பில் உள்ள நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். லக்னோவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று 3-வது நாளாக இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள் உத்தரபிரதேசத்தில் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி அதற்கான காரணங்களை பட்டியலிட்டனர். மேலும் அங்குள்ள சிறிய கட்சியான மகான் தளத்துடனும் கூட்டணி வைக்கக்கூடாது என அவர்கள் பிரியங்காவிடம் தெரிவித்தனர்.

    நிர்வாகிகளின் இந்த கருத்துக்களை அறிந்து கொண்ட பிரியங்காவும், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதைப்போல உத்தரபிரதேசத்தின் பதேப்பூர், லக்னோ, கோரக்பூர், வாரணாசி ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் பிரியங்கா போட்டியிட வேண்டும் எனவும் காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பிரியங்கா, தான் அவ்வாறு போட்டியிட்டால் பிற தொகுதிகள் மீதான கவனம் சிதறி விடும் என கூறியதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். #Priyanka #Congress #UttarPradesh

    2019 பாராளுமன்ற தேர்தல் பிரதமர் மோடிக்கும், எனது சகோதரர் ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி என்று பிரியங்கா கருத்து தெரிவித்துள்ளார். #priyanka #pmmodi #rahulgandhi #parliamentelection

    லக்னோ:

    காங்கிரசில் பிரியங்காவுக்கு அகில இந்திய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரியங்காவும் நேரடியாக அரசியலில் குதித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் உத்தரபிரசேத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளராகவும் பிரியங்கா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான பணிகளை தொடங்கும் வகையில் பிரியங்கா தற்போது உத்தர பிரதேசத்தில் முகாமிட்டுள்ளார்.

    நேற்று காலையில் இருந்து அவர் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அவருக்காக லக்னோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்தார்.

    தேர்தல் பணிகளை எவ்வாறெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையின் மூலம் பல்வேறு கருத்துக்களை அறிந்து கொண்டேன். அடிப்படை ரீதியாக தேர்தல் பணிகளை எவ்வாறு செய்வது, என்னென்ன மாற்றங்களை கொண்டுவந்து பணிகளை தீவிரமாக்குவது என்பதை ஆலோசித்திருக்கிறோம்.

    நான் காங்கிரஸ் கட்சியின் மூலம் பல்வேறு வி‌ஷயங்களை தெரிந்து கொண்டேன். எவ்வாறு தேர்தல் வியூகங்களை வகுப்பது என்பதிலும், கட்சி அமைப்பை எவ்வாறு வழிநடத்துவது என்பதிலும் ஒரு தெளிவான நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம்.


    2019 பாராளுமன்ற தேர்தல் என்பது எனக்கும் மோடிக்குமான போட்டி அல்ல. இது பிரதமர் மோடிக்கும், எனது சகோதரர் ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி. மோடியுடன் ராகுல் போரிட்டு வருகிறார்.

    அமலாக்க பிரிவினர் எனது கணவரின் தாயாருக்கு சம்மன் அனுப்பியது போன்ற விவகாரங்கள் எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கும். ஆனாலும் எனது பணியை நான் தொடர்ந்து செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரியங்காவுடன் ஆலோசனை நடத்திய காங்கிரஸ் பிரமுகர் அபிஷேக்ராஜ் என்பவர் கூறும்போது, பிரியங்காவின் ஆலோசனை எங்களை மிகவும் ஊக்கப்படுத்துவதாக இருந்தது. வித்தியாசமான தேர்தல் பிரசார திட்டங்களை வகுத்து இருக்கிறோம்.

    அவர் வருகை காங்கிரசுக்கு புதிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் 40 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறினார்.  #priyanka #pmmodi #rahulgandhi #parliamentelection

    உ.பி.யில் பிரியங்காவுக்கு 41 தொகுதி, ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு 39 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார். #RahulGandhi #PriyankaGandhi

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.

    அரசியல் களத்தில் கால் பதித்துள்ள பிரியங்கா காந்தி வருகை காங்கிரசாரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

    பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் கட்சி தொண்டர்களை சந்திப்பது, சுற்றுப் பயணம் என மும்முரமாக உள்ளார். கடந்த 11-ந்தேதி ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் லக்னோவில் கூட்டாக ரோடு ஷோ நடத்தினர்.

    இந்த நிலையில் பிரியங்கா காந்தி பொறுப்பில் உ.பி.யில் 41 பாராளுமன்ற தொகுதிகளை ராகுல்காந்தி ஒதுக்கி உள்ளார். லக்னோ, அமேதி, ரேபரேலி, சுல்தான்பூர், கோரக்பூர், வாரணாசி, பூல்பூர், அலாகாபாத் உள்ளிட்ட 41 தொகுதிக்கு பிரியங்கா காந்தி பொறுப்பு வகிப்பார்.

    இதேபோல் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு சஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், மொராதாபாத், காஜியாபாத், மதுரா, பிலிபித், கான்பூர் உள்ளிட்ட 39 தொகுதிகளின் பொறுப்புகளை ராகுல் வழங்கி உள்ளார்.

    பிரதமர் மோடி வென்ற வாரணாசி தொகுதி பிரியங்கா காந்தி பொறுப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi #PriyankaGandhi

    பிரியங்கா காந்தி டெல்லியில் ஜீன்சும், கிராம பகுதிகளில் சேலையும் அணிகிறார் என்ற பாரதீய ஜனதா எம்.பி.யின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் எழுந்துள்ளது. #Priyanka #bjpmp #congress #rahulgandhi
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளராக பிரியங்கா காந்தி கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து உத்தரபிரதேச மேற்கு பகுதி பொது செயலாளராக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்பட்டார். அதன்பின் உத்தர பிரதேசத்திற்கு முதன்முறையாக பிரியங்கா காந்தி இன்று சென்றார்.  அவருடன் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் சென்றார்.

    இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. ஹரீஷ் திவிவேதி தனது பஸ்தி தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, பிரியங்கா காந்தி டெல்லியில் ஜீன்ஸ் மற்றும் டாப் அணிகிறார்.  ஆனால் கிராமப்புற பகுதிகளுக்கு அவர் வரும்பொழுது சேலை கட்டி கொண்டு, பொட்டு வைத்து கொள்கிறார் என கூறினார்.

    எங்களது கட்சிக்கோ அல்லது எனக்கோ பிரியங்கா ஒரு விசயமே இல்லை.  ராகுல் காந்தி ஏற்கனவே தோல்வி அடைந்து விட்டார்.  பிரியங்காவும் தோல்வியை மிக விரைவில் நிரூபித்திடுவார் என்றும் கூறினார்.

    அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம். வீரப்பமொய்லி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்து விமர்சனம் செய்துள்ளனர்.

    கடந்த மாதம், பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் கூறும்பொழுது, பிரியங்காவை சூர்ப்பனகை என்றும் அவரது சகோதரர் ராகுலை ராவணன் என்றும் கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். #Priyanka #bjpmp #congress #rahulgandhi
    பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி இந்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். #Congress #KSAlagiri

    புதுடெல்லி:

    ராகுல்காந்தி தலைமையில் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

    அங்கு கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா ஆகியோரை தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய அழைத்திருக்கிறேன். பிரியங்கா இந்த மாதம் வருகிறார்.

    ராகுல்காந்தியும், இந்த மாதம் 2 முறை தமிழகம் வர இருக்கிறார். பிரசார பயண திட்டம் தயாராகி வருகிறது. விரைவில் தேதி அறிவிக்கப்படும்.

    தமிழ்நாட்டில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கூட்டணி வேட்பாளர்கள் அனைவருடைய வெற்றிக்காகவும் காங்கிரஸ் முழுமையாக பாடுபடும்.

    இதன் அடிப்படையில், காங்கிரஸ் பிரசார வியூகம் அமைக்கப்படும். ராகுல், பிரியங்கா பிரசாரம் அனைத்து மக்களையும் சந்திக்கும் வகையில் இருக்கும்.

    கமல்ஹாசன் மதசார்பற்ற கருத்துடையவர். அவருடைய கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றாக உள்ளது. எனவே அவர் தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் எங்களுடன் வந்தால் பா.ஜனதா, அ.தி.மு.க.வுக்கு எதிரான ஓட்டுகள் சிதராமல் கிடைக்கும்.

    கமல் வந்தால் எங்கள் கூட்டணி இன்னும் பலமாகும். எனவே அவர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.

    இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார். #Congress #KSAlagiri

    ராகுலை விட பிரியங்கா சிறப்பாக செயல்படுவார் என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவருமான தேவேகவுடா கூறியுள்ளார். #DeveGowda #RahulGandhi

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவருமான தேவேகவுடா ஈடுபட்டு வருகிறார்.

    இது சம்பந்தமாக அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:-

    கேள்வி:- எதிர்க்கட்சி கூட்டணி சம்பந்தமாக விமர்சித்துள்ள பிரதமர் மோடி, வலுவான ஆட்சி வேண்டுமா? பலவீனமான அரசு வேண்டுமா? என்று கேட்டு இருக்கிறார். மேலும் எதிர்க்கட்சி அணியை சந்தர்ப்பவாத, நகைப்புக்குரிய அணி என்று கூறி இருக்கிறாரே?

    பதில்:- எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சினைகள் என்ன என்பதை உணர்ந்து தீர்வு ஏற்படுத்திக்கொண்டால் மோடி போன்றவர்கள் இது போன்ற விமர்சனங்களை செய்யும் நிலை ஏற்படாது.

    இந்த நாட்டின் மக்கள் நிலையான அரசைத்தான் எதிர்பார்க்கிறார்கள். எதிர்க் கட்சியினர் தங்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு நிலையான அரசை ஏற்படுத்துவது சம்பந்தமாக ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்க வேண்டும்.

    எப்படி அந்த அரசை 5 ஆண்டுகள் நீடிக்க செய்வோம் என்ற வி‌ஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மதசார்பற்ற நிலைக்கும், ஜனநாயகத்துக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றாக அமர்ந்து விவாதித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

    தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து வி‌ஷயங்களுக்கும் இதில் தீர்வுகாண வேண்டும். அதை காங்கிரஸ் முன்னின்று செய்ய வேண்டும். ஆனால், காங்கிரசுக்கும், பிராந்திய கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் மோடி விமர்சிக்கிறார்.

    நாட்டின் பாதுகாப்பு, அனைத்து அரசியல் சாசன அமைப்புகள் ஆகியவற்றை அழிக்கும் முயற்சியில் மோடி ஈடுபட்டு வருகிறார். அதை தடுப்பதற்கு எதிர்க் கட்சிகளின் ஒருங்கிணைப்பு அவசியம்.

    கே:- எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் எது தடையாக உள்ளது?

    ப:- மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் மாயாவதி 10 இடங்களை தான் கேட்டார். ஆனால், அதைக்கூட காங்கிரஸ் விட்டு கொடுக்கவில்லை. பின்னர் அவர் தனித்து நின்று 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். ராஜஸ்தானில் 6 இடங்களில் வென்றுள்ளார்.

     


     

    அப்போதே காங்கிரஸ் விட்டு கொடுத்து இருந்தால் அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருக்காது. இதன் காரணமாகத்தான் மாயாவதி உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியுடன் சேர்ந்து தனி கூட்டணியை ஏற்படுத்தி விட்டார்.

    காங்கிரஸ் அங்கு தனியாக போட்டியிடும் நிலை உருவாகி இருக்கிறது. அதுபோன்ற சூழ்நிலை உருவாகாமல் பார்த்து இருக்கலாம்.

    இப்போதுகூட ஒன்றும் பிரச்சினை இல்லை. நினைத்தால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையலாம். குமாரசாமி பதவி ஏற்பு விழாவின்போது அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்தேன். கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைவது நல்லது.

    கே:- கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு ஒன்றிணைவதற்கு இப்போது வாய்ப்பு இருக்கிறதா?

    ப:- நிச்சயமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிதான் இதை முன்னெடுத்து செல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் அணுகி ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். காங்கிரஸ் அதை முன்னெடுத்து சென்றால் அவர்களும் இறங்கி வருவார்கள். ஒரு சரியான உருவகத்தை ஏற்படுத்த முடியும்.

    கே:- எதிர்க்கட்சி அணியில் யார் பிரதமர்? என்று பாரதிய ஜனதா கேள்வி விடுக்கிறது.

    ப:- ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பது இயற்கையான ஒன்று. எங்களில் யாரும் அவருக்கு போட்டியாக இல்லை. அந்த வகையில் காங்கிரஸ் தனது செயல்பாட்டை முழுமையாக்கி கொள்ள வேண்டும்.

    கே:- பிரியங்கா வருகையால் காங்கிரஸ் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும் என்று கருதுகிறீர்களா?

    ப:- ராகுல்காந்தியை விட பிரியங்கா சிறப்பாக செயல்படுவார் என நான் கருதுகிறேன். அவருடைய தோற்றம், சில வகை நடவடிக்கைகள் அவரது பாட்டி இந்திராகாந்தி போலவே இருப்பதாக பொதுமக்கள் நினைக்கிறார்கள்.

    பிரியங்காவின் வருகை நிச்சயம் கட்சிக்கு பெரிய உதவியாக இருக்கும். அவர் அரசியலுக்கு வந்திருப்பது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார். #DeveGowda #RahulGandhi

    பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை சமாஜ்வாடி கட்சி வரவேற்கிறது. சரியான முடிவு எடுத்தமைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வாழ்த்துகிறேன் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். #akhilesh #rahulgandhi #Priyanka

    லக்னோ:

    காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி கடந்த 23-ந்தேதி நியமிக்கப்பட்டார். அவர் கிழக்கு உத்தரபிரதேசத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது அரசியல் பிரவேசத்தை கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர். பிரியங்காவால் உத்தரபிரதேசத்தில் மாயாவதி- அகிலேஷ் யாதவ் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    இதனால் அகிலேஷ் யாதவ் பிரியங்காவின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வந்தார். நேற்று முதல் முறையாக பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், “பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை சமாஜ்வாடி கட்சி வரவேற்கிறது. சரியான முடிவு எடுத்தமைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வாழ்த்துகிறேன்” என்றார்.


    அதே சமயம் ராகுல்காந்தி சமீபத்தில் மாயாவதி- அகிலேஷ் யாதவை மதிக்கிறேன் என்று கூறியிருப்பதால் காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா? என்று அகிலேஷ் யாதவிடம் கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    தொடர்ந்து அகிலேஷ் யாதவ் பதில் அளிக்கையில் பா.ஜனதாவை மட்டுமே விமர்சித்தார். காங்கிரஸ் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்த்தார். #akhilesh #rahulgandhi #Priyanka

    தீவிர அரசியலில் இறங்கியுள்ள பிரியங்காவை கண்டு பா.ஜனதா விமர்சனம் செய்வது ஏன்? என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். #kushboo #bjp #congress #Priyanka

    சென்னை:

    பிரியங்கா காந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தீவிர அரசியலில் இறங்குகிறார்.

    இதையடுத்து பிரியங்கா குறித்து பா.ஜனதாவினர் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அளித்த பதில் வருமாறு:-

    பிரியங்கா காந்தி எத்தனையோ ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியில் ஈடுபட்டு வருகிறார். பல முறை தேர்தல் பிரசாரங்களும் செய்துள்ளார்.

    எங்கள் கட்சியில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பெண் முன்னேறி இருக்கிறார். அவரும் வரட்டுமே. பா.ஜனதாவினர் ஏன் பயப்பட வேண்டும்.

    அவர்களுடைய விமர்சனத்தின் மூலமே, பிரியங்காவை கண்டு அவர்கள் பயந்து நடுங்குவது தெரிகிறது. உத்தரபிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பொறுப்பு மட்டும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில்தான் மோடி தொகுதியும், யோகி ஆதித்யநாத் தொகுதியும் வருகிறது. எங்கே நாம் தோற்று விடுவோமோ என்று பயந்து நடுங்குகிறார்கள். ஒரு மாநிலத்தின் பொறுப்புக்கு வந்ததும், நாடு முழுவதும் பா.ஜனதாவினர் பிரியங்காவை விமர்சிப்பது ஏன்?

    குடும்ப அரசியல் என்கிறார்கள். பா.ஜனதாவில் குடும்ப அரசியல் இல்லையா. 44.4 சதவீதம் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள், ஏதோ ஒரு வகையில் அரசியல் தலைவர்களின் பின்புலத்தில் வந்த வாரிசுகள் தான். எனவே பா.ஜனதாவினருக்கு குடும்ப அரசியல் பற்றி பேச தகுதி இல்லை.


    தமிழக காங்கிரசில் நிலவும் குழப்பம் குறித்து டெல்லி மேலிடத்திடம் புகார் செய்வதற்காக எல்லோரும் சென்றதாக கூறுகிறார்கள். இது தவறு. ஒவ்வொரு வரும் தனிப்பட்ட அரசியல் பணிகளுக்காக எல்லோரும் ஒரே சமயத்தில் டெல்லி சென்று இருந்தோம். தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    காங்கிரசை ராகுல் காந்தி கட்சி என்று சொல்ல மாட்டார். இயக்கம் என்றுதான் கூறுவார். அந்த இயக்கத்தில் இருக்கும் அனைவரும் அவரது பாணியிலேயே செயல்பட வேண்டும். அதை விட்டு விட்டு நானே ராஜா, நானே மந்திரி என்பது போல் நடந்து கொள்ளக் கூடாது.

    இவ்வாறு குஷ்பு கூறினார். #kushboo #bjp #congress #Priyanka

    பிரியங்கா வருகையை பார்த்து மோடி பயப்படுவதாக கூறுவதுதான் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்காக இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #Modi #PriyankaGandhi
    சென்னை:

    காங்கிரஸ் கட்சி பிரியங்காவை களத்தில் இறக்கி இருப்பது பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியை நினைத்தும் அதன் தலைவரை பார்த்தும் அந்த கட்சி தொண்டர்கள்தான் பரிதாபப்பட வேண்டும். பிரியங்கா தேர்தல் களத்துக்கு வருவது இதுபுதிதல்ல. ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் பிரசாரத்துக்கு களம் இறக்கி பரிசோதித்து பார்த்து தோல்வி கண்டவர்கள்தான்.

    பிரியங்கா வருகையை கொண்டாடும் காங்கிரசார் ராகுலின் தோல்வியையும் சேர்த்தே கொண்டாட வேண்டும். ராகுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று பிரதமர் வேட்பாளராகவும் முன் நிறுத்தப்பட்டவர்.

    அவர் மீது அவரது கட்சிக்காரர்களுக்கும் நம்பிக்கை இல்லை. கூட்டணி கட்சியினருக்கும் நம்பிக்கை இல்லை. அவ்வளவு ஏன் ராகுலுக்கே தன் மீது நம்பிக்கை இல்லை. அதனால் தான் பிரியங்காவையாவது இறக்கி பார்ப்போம் என்று முயற்சிக்கிறார்.



    ஆனால் அவர்களின் எந்த முயற்சியும் எடுபடப்போவதில்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குடும்பமே இந்த நாட்டை ஆள முடியும் என்ற நிலை இருந்தது. சாமானியனும் ஆள முடியும் என்ற நம்பிக்கை இப்போதுதான் வந்துள்ளது. மோடியால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் ஒரு குடும்பத்தின் கைகளில் நாட்டை ஒப்படைக்க மக்கள் விரும்புவார்களா? காங்கிரஸ் கட்சியினர் பிரியங்கா வருகையை கொண்டாடலாம். மக்கள் கொண்டாட மாட்டார்கள்.

    பிரியங்கா வருகையை பார்த்து மோடி பயப்படுவதாக கூறுவதுதான் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்காக இருக்கும். மோடியை கண்டு பயந்து பிரியங்காவை கொண்டு வந்திருப்பவர்கள் மோடி பயந்துவிட்டார் என்பது வேடிக்கையாக உள்ளது.

    தேர்தல் நேரத்தில் மக்கள் ரசித்து பார்க்கும் சுவாரஸ்யங்களில் இதுவும் ஒன்று. இவர் அதற்கு சரிபட்டு வர மாட்டார் என்று கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டாளியும் ஏற்றுக்காள்ளவில்லை.

    மீண்டும் இந்திரா வந்து விட்டதாக வாழ்த்துப்பாடும் தமிழக அரசியல் தலைவர்கள் மீண்டும் நெருக்கடி நிலை வரவேண்டும் என்று வரவேற்பார்களா? எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று அந்தர் பல்டி அடிக்கும் கட்சிகள் நடத்தும் காட்சிகளை மக்கள் பார்த்து சிரிப்பார்கள் என்பது மட்டும் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #Modi #PriyankaGandhi
    ஆசிப் குரைஷி இயக்கத்தில் உதயா அழகப்பன் - பிரியங்கா நடிப்பில் வெளியாகி இருக்கும் `உத்தரவு மகாராஜா' படத்தின் விமர்சனம். #UtharavuMaharajaReview #Udhaya #Priyanka
    உதயா ஒரு டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். நண்பர்களிடம் பொய்கள் கூறி தன்னை பற்றி பில்டப் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். திடீரென்று காணாமல் போகும் உதயா ஒரு மாதம் கழித்து மீண்டும் திரும்புகிறார். ஆனால் அவருக்கு தான் காணாமல் போனதும், ஒரு மாதம் எங்கே இருந்தோம் என்பதும் தெரியவில்லை.

    அந்த நினைவுகனை முழுமையாக அவரால் கொண்டுவர முடியவில்லை. இதற்கிடையே உதயாவுக்கு திடீரென்று வித்தியாசமான குரல்கள் கேட்க தொடங்குகின்றன. இதனால் நிம்மதியை இழக்கிறார். உதயாவை மனநோயாளியாக மாற்றும் அந்த குரல்கள் யாருடையது? உதயா நல்லவரா? கெட்டவரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    உதயா மன நோயாளி உள்ளிட்ட பல வேடங்களில் நடித்து இருக்கிறார். படம் முழுக்க ஆக்கிரமிக்கும் வேடம் என்பதை உணர்ந்து நடித்து இருக்கிறார். நிம்மதி இழந்து அவர் தவிக்கும் காட்சிகளில் பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். உதயாவை ஆட்டுவிக்கும் டாக்டராக பிரபு. படம் சற்று தொய்வடையும்போது எல்லாம் பிரபு நுழைந்து நிமிர வைக்கிறார். நடிப்பில் வழக்கமான கம்பீரம்.

    கதாநாயகிகள் பிரியங்கா, சேரா இருவரும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்து இருக்கிறார்கள். கோவை சரளா, ஸ்ரீமன், மனோபாலா, ஆடம்ஸ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் சிரிக்க வைத்திருக்கிறார்கள். மனோபாலாவின் அடியாட்களாக மனோஜ்குமார், ஹரிகிருஷ்ணன், கண்ணன் ஆகியோரும் நிறைவான நடிப்பு.



    அறிமுக இயக்குனர் ஆசிப் குரேசி குழப்பமான திரைக்கதையை 2 ஆம் பாதியில் புரிய வைத்ததன் மூலம் கவனிக்க வைக்கிறார். ஒரு சைக்கோ திரில்லரில் எமோ‌ஷனல், காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்து கொடுத்திருக்கிறார்கள். படத்தின் நீளத்தை குறைத்து, வேகத்தை அதிகரித்திருக்கலாம்.

    நரேன் இசையும், பாலாஜி ரங்கா ஒளிப்பதிவும் சைக்கோ திரில்லருக்கு ஏற்றபடி சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `உத்தரவு மகாராஜா' கவனிக்க வைக்கிறான். #UtharavuMaharajaReview #Udhaya #Priyanka

    ×