search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா, ராகுல் காந்தி இந்த மாதம் தமிழகம் வருகை - கே.எஸ்.அழகிரி
    X

    பிரியங்கா, ராகுல் காந்தி இந்த மாதம் தமிழகம் வருகை - கே.எஸ்.அழகிரி

    பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி இந்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். #Congress #KSAlagiri

    புதுடெல்லி:

    ராகுல்காந்தி தலைமையில் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

    இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

    அங்கு கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா ஆகியோரை தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய அழைத்திருக்கிறேன். பிரியங்கா இந்த மாதம் வருகிறார்.

    ராகுல்காந்தியும், இந்த மாதம் 2 முறை தமிழகம் வர இருக்கிறார். பிரசார பயண திட்டம் தயாராகி வருகிறது. விரைவில் தேதி அறிவிக்கப்படும்.

    தமிழ்நாட்டில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். கூட்டணி வேட்பாளர்கள் அனைவருடைய வெற்றிக்காகவும் காங்கிரஸ் முழுமையாக பாடுபடும்.

    இதன் அடிப்படையில், காங்கிரஸ் பிரசார வியூகம் அமைக்கப்படும். ராகுல், பிரியங்கா பிரசாரம் அனைத்து மக்களையும் சந்திக்கும் வகையில் இருக்கும்.

    கமல்ஹாசன் மதசார்பற்ற கருத்துடையவர். அவருடைய கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றாக உள்ளது. எனவே அவர் தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் எங்களுடன் வந்தால் பா.ஜனதா, அ.தி.மு.க.வுக்கு எதிரான ஓட்டுகள் சிதராமல் கிடைக்கும்.

    கமல் வந்தால் எங்கள் கூட்டணி இன்னும் பலமாகும். எனவே அவர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.

    இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார். #Congress #KSAlagiri

    Next Story
    ×