என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் - பிரியங்கா விருப்பம்
Byமாலை மலர்14 Feb 2019 9:48 PM GMT (Updated: 14 Feb 2019 9:48 PM GMT)
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #Priyanka #Congress #UttarPradesh
லக்னோ:
உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, தனது பொறுப்பில் உள்ள நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். லக்னோவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று 3-வது நாளாக இந்த நிகழ்ச்சி நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள் உத்தரபிரதேசத்தில் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி அதற்கான காரணங்களை பட்டியலிட்டனர். மேலும் அங்குள்ள சிறிய கட்சியான மகான் தளத்துடனும் கூட்டணி வைக்கக்கூடாது என அவர்கள் பிரியங்காவிடம் தெரிவித்தனர்.
நிர்வாகிகளின் இந்த கருத்துக்களை அறிந்து கொண்ட பிரியங்காவும், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைப்போல உத்தரபிரதேசத்தின் பதேப்பூர், லக்னோ, கோரக்பூர், வாரணாசி ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் பிரியங்கா போட்டியிட வேண்டும் எனவும் காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பிரியங்கா, தான் அவ்வாறு போட்டியிட்டால் பிற தொகுதிகள் மீதான கவனம் சிதறி விடும் என கூறியதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். #Priyanka #Congress #UttarPradesh
உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, தனது பொறுப்பில் உள்ள நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். லக்னோவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று 3-வது நாளாக இந்த நிகழ்ச்சி நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள் உத்தரபிரதேசத்தில் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி அதற்கான காரணங்களை பட்டியலிட்டனர். மேலும் அங்குள்ள சிறிய கட்சியான மகான் தளத்துடனும் கூட்டணி வைக்கக்கூடாது என அவர்கள் பிரியங்காவிடம் தெரிவித்தனர்.
நிர்வாகிகளின் இந்த கருத்துக்களை அறிந்து கொண்ட பிரியங்காவும், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைப்போல உத்தரபிரதேசத்தின் பதேப்பூர், லக்னோ, கோரக்பூர், வாரணாசி ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் பிரியங்கா போட்டியிட வேண்டும் எனவும் காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பிரியங்கா, தான் அவ்வாறு போட்டியிட்டால் பிற தொகுதிகள் மீதான கவனம் சிதறி விடும் என கூறியதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். #Priyanka #Congress #UttarPradesh
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X