search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people"

    • தஞ்சாவூா் பதிவு மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 21 -ந் தேதி நடைபெற உள்ளது.
    • கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பொதுமக்கள் ஆவண ங்கள் பதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் செய்வதற்கு ஏதுவாக தஞ்சாவூா் மாவட்டத்துக்கு உள்பட்ட பட்டுக்கோட்டை, கும்பகோணம் பதிவு மாவட்டங்களில் உள்ள சாா் பதிவாளா் அலுவ லகங்களின் எல்லைகள் சீரமைக்கப்படவுள்ளன.

    இதுதொடா்பாக பொதுமக்கள் கருத்துகே ட்புக் கூட்டம் கும்பகோணம் பதிவு மாவட்டத்துக்கு கும்பகோணம் வட்டார வளா்ச்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நாளை (வியாழக்கிழமை ) நண்பகல் 12 மணியளவிலும், பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்துக்கு பட்டுக்கோ ட்டை வட்டார வளா்ச்சி அலுவலகக் கூட்ட அரங்கில் வரும் 21 -ம் தேதி ( வெள்ளிக்கிழமை ) நண்பகல் 12 மணியளவிலும், தஞ்சாவூா் பதிவு மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் 21 -ம் தேதி பிற்பகல் 3 மணியளவிலும் நடைபெற வுள்ளன.

    இக்கூட்டங்களில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு சாா் -பதிவாளா் அலுவலக எல்லைகளை சீரமைப்பு தொடா்பாக தங்களது கரு த்துகளைத் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிள்ளையார்புரத்தில் இருந்து மேடு பள்ளம் நிறைந்த மண் ரோடு வழியாக, 2 கி.மீ. கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது.
    • பிள்ளையார்புரம்-நாகராஜபுரம் ரோட்டில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம் -மதுக்கரை சாலையில், பிள்ளையார்புரம் செல்லும் வழியில் நாகராஜபுரம் உள்ளது. இது கோவை மாநகராட்சி 97-வது வார்டுக்கு உட்பட்டது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    நாகராஜபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. பிள்ளையார்புரத்தில் இருந்து மேடு பள்ளம் நிறைந்த மண் ரோடு வழியாக, 2 கி.மீ. கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது. அங்கு வழிநெடுகிலும் மின்சாரம் இல்லை. எனவே அந்த பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காட்சியளிக்கிறது.

    இதனால் அங்கு குடிமகன்களின் தொல்லை மட்டுமின்றி கூடவே வழிப்பறி, மிரட்டல் ஆகிய சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளது.

    எனவே பள்ளி, கல்லூரி முடிந்து வரும் மாணவ, மாணவிகள், வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே பிள்ளையார்புரம்-நாகராஜபுரம் ரோட்டில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இங்கு 30 நாட்களுக்கு ஒரு முறை தான் போர்வெல் தண்ணீர் வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, நாகராஜபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • களிமேடு பகுதியில் அதிகளவில் வணிக நிறுவனங்களும் உள்ளன.
    • சாலையை அகலப்படுத்தவும், சாக்கடையை சீரமைக்கவும் பணிகள் நடப்பதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

    காங்கேயம் :

    காங்கேயம் தாராபுரம் ரோட்டில் உள்ள களிமேடு பகுதியில் அதிகளவில் மக்கள் வசித்து வருகிறார்கள்.வணிக நிறுவனங்களும் உள்ளன. காங்கேயம் நகராட்சியின் 8 வது வார்டு ஆகும்.

    சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இங்கு சி. எஸ் தேவாலயம் எதிரே செல்லும் கே. எஸ். ஆர் சந்து பகுதி கடந்த 4 மாதங்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையை அகலப்படுத்தவும், சாக்கடையை சீரமைக்கவும் பணிகள் நடப்பதால் இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பணிகள் தொடங்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும் சரிவர பணிகள் நடக்கவில்லை. ஆமை வேகத்தில் பணிகள் நடக்கின்றன. இந்த பகுதியில் இருந்து தினந்தோறும் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி, பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் அவதி அடைந்து வருகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க கோரி இந்த பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறை, மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் மனுவும் அளித்துள்ளனர்.

    அதன் பிறகும் கூட எந்த நடவடிக்கையும் இல்லை. விரைந்து பணிகளை முடிக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    • மாரியம்மன் சுயம்புவாக எழுந்தருளி நீண்ட காலமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
    • செவ்வாய், வியாழன், ஞாயிறு மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    உடுமலை :

    உடுமலை அடுத்த ஆனைமலை காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகு தியில் சின்னாற்றின் கரையில் பிரசித்தி பெற்ற கட்டளை மாரியம்மன் கோயில் உள்ளது.

    இங்கு மாரியம்மன் சுயம்புவாக எழுந்தருளி நீண்ட காலமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தக் கோவிலில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் காலங்காலமாக கோவிலில் பூஜைகளை செய்து வருகின்றனர். கோவிலுக்கு உடுமலை பகுதியில் மட்டுமின்றி வெளி மாவட்ட ங்கள் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமையை யொட்டி பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். பின்னர் அவர்கள் கோடந்தூர் சுற்றுச்சூழல்குழு மற்றும் வனத்துறை இணைந்து செயல்படுத்தி வரும் வாகனங்களில் ஏறிச்சென்று கோவிலை அடைந்தனர்.அதைத் தொடர்ந்து ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வந்து மாரியம்மனை சாமி தரிசனம் செய்தனர்.மேலும் மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் இயற்கையாக விளைந்த நெல்லிக்காய், கடுக்காய், ஜாதிக்காய், சாம்பிராணி, வடுமாங்காய், எலுமிச்சை மற்றும் தேன், தைலம் உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இயற்கையில் விளைந்த பொருட்கள் என்பதால் அவற்றை பொதுமக்களும் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர்.

    கோடை காலத்தில் வருமானத்தை இழந்து தவித்து வருகின்ற மலைவாழ் மக்களுக்கு இந்த பொருட்கள் கைகொடுத்து உதவுகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது. இதனால் சாகுபடி பணிகளுக்கு மழைவாழ் மக்கள் விளை நிலங்களை தயார் செய்து வருகின்றனர்.

    • ஊரில் இருந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊரை விட்டு புறப்பட்டனர்.
    • ஊர் எல்லையில் சிலரை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தனர்.

    கிருஷ்ணகிரி :

    கிருஷ்ணகிரி அருகே உள்ள கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒம்பலகட்டு கிராமத்தில் தொடர்ந்து பல்வேறு மரணங்கள் நிகழ்ந்து வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு வனப்பகுதியில் குடியேறி ஊரில் புகுந்துள்ள பேயை விரட்ட முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று அதிகாலையில் ஊரில் இருந்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஊரை விட்டு புறப்பட்டனர். அப்போது தாங்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு, கோழிகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளையும் உடன் அழைத்து சென்றனர். ஊர் எல்லையில் சிலரை பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதிக்கு சென்ற கிராம மக்கள் நாள் முழுவதும் அங்கேயே தங்கி வன தேவதைகளை வழிபட்டு சமைத்து சாப்பிட்டனர். பின்னர் மாலை சூரியன் மறைந்த பின் கிராம தெய்வங்களுடன் கரகம் எடுத்து கொண்டு முன்னால் செல்ல, அந்த கரகத்தின் பின்னால் கிராம மக்கள் அணிவகுத்து சென்றனர்.

    பின்னர் தங்கள் ஊர் எல்லையை சென்றடைந்ததும் ஆடுகளை பலியிட்டு வழிபட்டதுடன் தங்கள் வீடுகளுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

    • கடந்த 2 ஆண்டுகளாக 20,25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.
    • தண்ணீர் வரி மிக அதிக அளவு வசூலிக்கின்றனர்.

    அவினாசி :

    அவினாசி ஊராட்சி ஒன்றியம் பழங்கரை, சின்னேரி பாளையம், நடுவச்சேரி ஆகிய 3 ஊராட்சி பகுதியில் 20, 25 நாட்களுககு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருவதாக குற்றம் சாட்டி அப்பகுதியை சேர்ந்த 80 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், பழங்கரை ஊராட்சி துணைத்த லைவர் மிலிட் டரி நடராசன் உள்ளிட்டோர் கூறுகையில் , எங்கள் பகுதியில் கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள்தொகை தற்போது பல மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் குடிநீர் 5 ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட அதே அளவு கொடுப்பதுடன் வாரம் ஒருமுறை வழங்கப்பட்ட தண்ணீர் கடந்த 2 ஆண்டுகளாக 20,25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிவிட்டு பழங்கரை, சின்னேரி பாளையம், நடுவச்சேரி ,பொங்குபாளையம் ஆகிய ஊராட்சி பகுதி மட்டும் புறக்கணிக்கப்படுகிறது. எங்கள் ஊராட்சி பகுதிக்கு தண்ணீர் மிக குறைந்த அளவு 20,25 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தந்துவிட்டு தண்ணீர் வரி மிக அதிக அளவு வசூலிக்கின்றனர். குடிநீர் அனைத்துப்பகுதிகளுக்கும் வழங்குவது போல் எங்களுக்கும் வழங்க வேண்டும் என்று பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் பகுதி குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை இநத இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கன்னிமாா், கருப்பராயன், வேட்டைக்காரன் முனியப்பன் சுவாமி கோயில் பொங்கல் திருவிழாக்கள் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றன.
    • வேட்டைக்கு செல்பவா்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றனா்.

    அவிநாசி :

    அவிநாசி வட்டம், ஈட்டிவீரம்பாளையம் புதுக்காலனி பகுதியில் உள்ள கன்னிமாா், கருப்பராயன், வேட்டைக்காரன் முனியப்பன் சுவாமி கோயில் பொங்கல் திருவிழாக்கள் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றன. திருவிழாவின் நிறைவாக முயல் வேட்டைக்கு செல்வதை இப்பகுதி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை வழக்கம்போல் 50க்கும் மேற்பட்டவா்கள் முயல் வேட்டைக்கு புறப்பட்டனா்.

    இதையடுத்து தகவல் அறிந்து வந்த வன அலுவலா் ம.சுரேஷ் கிருஷ்ணன் தலைமையிலான அலுவலா்கள் முயல் வேட்டைக்கு புறப்பட்ட மக்களை தடுத்து நிறுத்தினா். மேலும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி முயல்களை வேட்டையாடுவது குற்றம் என்றும், வேட்டைக்கு செல்பவா்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றனா். 

    • பல்வேறு கோரிக்கைகள் குறித்த 240 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
    • 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 240 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

    பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளு மாறு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, மாவட்ட பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுப்பான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும், 1 பயனாளிக்கு இலவச சலவை பெட்டியினையும் மற்றும் திட கழிவு மேலாண்மையில் சிறந்த பங்களிப்பு கொண்டவர்களுக்கும், தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தில் பங்குபெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பாராட்டு சான்றிதழினையும், உலக சுற்றுச்சுழல் தினத்தினை முன்னிட்டு பசுமை சாம்பியின் விருதினை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் உலக சுற்றுச்சுழல் தினத்தினை முன்னிட்டு உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்துதுறை அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

    இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டம் தனிதுணை ஆட்சியர் அழகர்சாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 3 தலைமுறை களாக வசித்து வருகின்றனர்.
    • அய்யம்பெரு மான்பட்டியல் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதனை மீட்டு தர வேண்டும் என பலமுறை போராட்டம் நடத்தினர்.

    சேலம்:

    சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 3 தலைமுறை களாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அய்யம்பெரு மான்பட்டியல் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதனை மீட்டு தர வேண்டும் என பலமுறை போராட்டம் நடத்தினர்.

    ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், திராவிட புலிகள் இயக்க தலைவர் சுப்பிர மணி தலைமையில் கிராம மக்கள் சுமார் 20 பேர், கலெக்டர் அலுவலக வாசல் அருகே அமர்ந்து பட்டா வழங்க கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்த போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறுகையில், மாவட்ட வருவாய் அதிகாரி 3 மாதத்தில் பட்டா வழங்குவதாக கூறினார். ஆனால் இன்னும் பட்டா வழங்கப்படவில்லை. இதனால் எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். எனினும் அவர்கள் கலைந்து செல்ல வில்லை. இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • 30 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • 16 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது, 15 முதல் 18 வயது மற்றும் 18 வயதுக்குட்பட்டோா் என மொத்தம் 21 லட்சத்து 83 ஆயிரத்து 700 போ் உள்ளனா். இதில் தற்போது வரையில் 21 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு முதல் தவணையும், 16 லட்சத்து 20 ஆயிரத்து 103 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 2, 681 மையங்களில் 30 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், 18, 831 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    பேளூர் பேரூராட்சியில் தூய்மை மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பேளூர் பேரூராட்சியில் தமிழக முதல்-அமைச்சரின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்   நடைபெற்றது. 

    இந்த முகாமை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்வி  பேளூர் பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி  தொடங்கி வைத்தார். 

    துணைத் தலைவர் பேபி, செயல் அலுவலர் ராமு மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் தீவிர தூய்மைப்பணி மேற்கொண்டு குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்தினர்.
    கல்லணையில் மக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
    பூதலூர்:

    தமிழகத்தில் கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்தது என்று சொன்னாலும் நேற்று வெயில் கொளுத்தியது. தஞ்சை மாவட்டத்தில் 100 டிகிரி வெயில் அடித்தது. இதனால் மக்கள் நீர்நிலைகள் நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

    தஞ்சை மாவட்டத்தின் சுற்றுலாத் தலமான கல்லணையில் நேற்று காலை முதல் திருச்சி, தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஏராளமான மக்கள் கூடினர். கல்லணை பாலத்திலிருந்து காவிரியில் தண்ணீர் வெளியேறும் அழகையும், கரிகாலன் பூங்கா, கரிகாலன் மணி மண்டபம் ஆகியவற்றை சுற்றி பார்த்தனர்.

    சிறுவர் பூங்காவில் ஏராளமான குழந்தைகள் பல்வேறு விளையாட்டு அரங்கு களிலும், ராட்டினங்களிலும் ஏறி விளையாடினர். கல்லணை காவிரியில் தண்ணீர் குறைந்த அளவில் திறக்கப்பட்டிருந்ததால், கல்லணைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் வயது வித்தியாசமின்றி அனைவரும் ஆற்றில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். கல்லணை பொதுப்பணித் துறையினரும், தோகூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    ×