search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new year"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது.
    • பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    சென்னை:

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை மற்றும் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வெளியூர் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

    பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. அதேபோல தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது.

    சென்னையில் இருந்து திருச்சி, கோவை, நாகை, நெல்லை செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    ஆம்னி பேருந்துகளில் விழாக்கால கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல அதிகபட்ச கட்டணம் - ரூ.3700 என்றும் தற்போது ரூ.4100 வரை வசூலிக்கப்படுகிறது.

    பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஒரு நிலையான கட்டணத்தை வசூலிக்காமல் பண்டிகை காலத்தை மையமாக வைத்து கட்டணத்தை உயர்த்தி வருவதை அரசு தடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • மிஷின் வீதியில் உள்ள காசாபிலங்கா வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடந்தது.
    • ஆரோவில் பகுதி வாசிகளும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் கிராமப்புற பெண்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் முயற்சியால் விதவிதமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

    இந்த நவீன ஆடைகளை அறிமுகப்படுத்தும் விதமாக புதுவை மிஷின் வீதியில் உள்ள காசாபிலங்கா வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடந்தது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட இளம் பெண்களும், இளைஞர்களும் விதவிதமான ஆடை மற்றும் அணி கலன்களை அணிந்து ஸ்டைலாக நடந்து வந்தனர்.

    இதனை ஆரோவில் பகுதி வாசிகளும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் கிறிஸ்துமஸ் கேக்காக தயாரிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் பீச் ரிசார்ட் ஓட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் செய்யும் திருவிழா நடந்தது.

    40 கிலோ அளவில் முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் பல்வேறு உலர் பழங்கள், ஒயின் வகைகள் மற்றும் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்களை கொண்டு கலவையாக கேக் தயாரிக்க ஊற வைக்கப்பட்டது.

    இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். ரிசார்ட் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

    ஊறவைத்த கலவை 40 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் கிறிஸ்துமஸ் கேக்காக தயாரிக்கப்படும்.

    அந்த கேக் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு வரை பரிமாறப்பட உள்ளது.

    • வைகாசி பவுர்ணமியன்று வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உற்சவம்.
    • மாதந்தோறும் பிரதோஷ கால பூசையும் நடைபெறும்.

    சித்திரை மாதம் :- புதுவை மரவாடி நடேச குப்புசாமி பிள்ளை குடும்பத்தார் 1909-ம் ஆண்டு முதல் தமிழ் வருடப்பிறப்பன்று காலை முதல் அபிஷேக ஆராதனை செய்து வருகின்றனர். வருடப்பிறப்பு வீதி உற்சவம், சித்ரா பவுர்ணமி வீதி உற்சவம், கும்பாபிஷேக ஆண்டு விழா, சங்காபிஷேகம் வீதி உற்சவம், சுக்ல சதுர்த்தி அன்று ஆலயத்தினுள் உற்சவம்.

    வைகாசி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் ஆலயத்தில் உற்சவம், வைகாசி பவுர்ணமியன்று வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உற்சவம். (அன்று ஏழைகளுக்கு அன்னமளித்தல்)

    ஆனி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் ஆலயத்தில் உற்சவம். ஆனித்திருமஞ்சனம், நர்த்தன கணபதி அபிஷேகம், ஆலய உற்சவம்.

    ஆடி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் ஆலயத்தில் உற்சவம், ஆடி அமாவாசை அன்று காலை கடல் தீர்த்த வாரி, வீதி உற்சவம்.

    ஆவணி மாதம்:- விநாயக சதுர்த்தி அன்று இரவு வெள்ளி மூஷிக வாகன வீதி உற்சவம், பிரம்ம உற்சவம், பவுர்ணமியை அனுசரித்துக் கொடியேற்றம்.

    புரட்டாசி மாதம்:- சதுர்த்தியை அனுசரித்துப் பவித்ர உற்சவம் ஐந்து நாட்களுக்கு நடைபெறும். ஆறாவது நாள் வீதி உற்சவம்.

    ஐப்பசி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்க ளில் உற்சவம், பவுணர்மியை அனுசரித்த அன்னாபிஷேகம், கந்தசஷ்டி உற்சவம் 9 நாட்கள்.

    கார்த்திகை மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் தீப உற்சவம்.

    மார்கழி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் உற்சவம். ஆருத்ரா தரிசனம்.

    தை மாதம்:- முதல் தேதி சங்கராந்தி உற்சவம், மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் உற்சவம், தை அமாவாசை நாளில் காலை மூஷிக வாகனத்தில் கடல் தீர்த்தவாரி வீதி உற்சவம், தைப்பூச உற்சவம்.

    மாசி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் உற்சவம். மாசி மகம் அன்று காலை மூஷிக வாகனத்தில் கடல் தீர்த்தவாரியும், மாலையில் திருவீதி உலாவும், சிவராத்திரி நான்கு காலம் பூசை மறுநாள் வீதியுலா.

    பங்குனி மாதம்:- மாத சுக்ல பூர்த்தியில் தமன உற்சவம், பங்குனி உத்திர உற்சவம்.

    ஸ்படிகலிங்கத்திற்கு தினசரி காலை 10 மணியளவில் அபிஷேக ஆராதனையும், மாதந்தோறும் பிரதோஷ கால பூசையும் நடைபெறும்.

    • சிங்கம்புணரியில் தமிழ் புத்தாண்டு புதுமழையை தொடர்ந்து பொன் ஏர் பூட்டும் திருவிழாவில் விவசாயிகள் பங்கேற்றனர்.
    • புதுமழை பெய்த பிறகே விவசாய பணிகளை தொடங்குவர்கள்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல் தேதிக்கு பிறகு பெய்யும் முதல் மழை அந்த ஆண்டின் புதுமழை மற்றும் உத்தமழை என்று அழைக்கப்படுகிறது.

    இப்பகுதி விவசாயிகள் புதுமழை பெய்த பிறகே விவசாய பணிகளை தொடங்குவர்கள்.

    அதன்படி தமிழ் புத்தாண்டுக்கு பிறகு கடந்த 23, 24-ந் தேதிகளில் சிங்கம்புணரி பகுதியில் புது மழை பரவலாக பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுமழை பெய்ததை தொடர்ந்து சிங்கம்புணரி கிராமத்தார்கள் பொன்-ஏர் பூட்டும் நிகழ்ச்சியை நடத்தினர்.

    இதற்காக சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்ய னார் கோவிலுக்கு சொந்த மான விளை நிலத்தில் கோவில் மாடுகளை கொண்டு வழிபாடு செய்து விவசாய பணிகளை தொடங்கினர்.

    சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான செயல் அலுவலர் தன்னாயிரம் முன்னிலையில் கிராமத்தார்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் கோவில் நிலத்தில் ஏர் பிடித்து பொன் ஏர் விழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து குல தெய்வ வழிபாடு நடந்தது.

    சித்திரையில் புது மழைக்கு பிறகு நல்ல நாள் பார்த்து ஏர் உழுவது சமூக ஒற்றுமைக்கும் , நல்ல மழை பொழிந்து நல்ல விளைச்சலுக்கும் வழி வகுக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.

    • வாழப்பாடி பகுதி கோவில்க ளில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபா டுகல் நடைபெற்றன.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கோவில்க ளில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபா டுகல் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர், வாழப்பாடி அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர், சென்றா யப்பெருமாள், பிங்கள விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிர மணியர், செல்வமுத்து மாரி யம்மன், திரெளதியம்மன், வன்னிமரத்து விநாயகர், வேப்பிலைக்குட்டை ஓம்சக்தி சித்தர் பீடம், ஓம்மலை சாய்பாபா கோயில் மற்றும் வாசவி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    • மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
    • காரைக்குடி நகர்மன்ற தலைவர் வழங்கினார்.

    காரைக்குடி

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    அதனை முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் காரைக்குடி நகர்மன்ற தலைவர் சே.முத்துத்துரை வழங்கினார்.

    இதில் நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜன், உதவி பொறியாளர் சீமா, நகர் நல அலுவலர் மாலதி, சுகாதார ஆய்வாளர் சுந்தர், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், துரை.நாகராஜன், அனனை மைக்கேல், தெய்வானை இளமாறன், சாந்தி நாச்சியப்பன், மங்கையற்கரசி அடைக்கலம், கலா காசி நாதன், நாச்சம்மை சிவாஜி, மெய்யர், ராதா பாண்டியராஜன், முகமது சித்திக், பசும்பொன் மனோகரன், பிலோமினாள், ராணி சேட், ஹரிதாஸ், அஞ்சலிதேவி, ஹேமாதா செந்தில், அமுதா சண்முகம், கனகவல்லி, மலர்விழி பழனியப்பன், பூமிநாதன், திவ்யா சக்தி, அமுதா, மஞ்சுளா, சத்தியா கார்த்திகேயன், லில்லி தெரசு, தனம் சிங்கமுத்து, ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆலங்குடி யார் நகர்மன்ற நடுநிலை பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை நகர்மன்ற தலைவர் முத்துதுரை தொடங்கி வைத்தார். நகரின் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டது.

    • புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    சீன நாட்காட்டியின்படி இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் இன்று சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச்சூடில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புத்தாண்டு அன்று பிறக்கும் குழந்தைகள் பற்றிய விவரங்களை யுனிசெப் வெளியிடும்.
    • தனியார் ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளின் விவரம் வெளியிடப்படவில்லை.

    சென்னை :

    ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று உலகம் முழுவதிலும் பிறக்கும் குழந்தைகள் பற்றிய விவரங்களை யுனிசெப் வெளியிடும். அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 90 குழந்தைகள் பிறந்துள்ளன.

    அதன்படி, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 25 குழந்தைகளும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு ஆஸ்பத்திரியில் 19 குழந்தைகளும் பிறந்துள்ளன.

    இதேபோல் ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 28 குழந்தைகளும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 18 குழந்தைகளும் பிறந்துள்ளன. இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் குழந்தைகள் பிறந்துள்ளன. அதன் விவரம் வெளியிடப்படவில்லை.

    குழந்தைகளை பெற்றெடுத்த பெண்கள், புத்தாண்டு பரிசாக தங்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • டோனியின் மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகியுள்ளது.
    • வாண வேடிக்கைகளைப் பார்த்தவாறே தனது மகள் ஜிவாவை கொஞ்சி மகிழ்கிறார் டோனி.

    உலகம் முழுவதும் 2023 புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் நேற்று இரவு முதலே பொது இடங்கள், குடியிருப்புகளில் குவிந்த மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.

    இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி துபாயில் தனது மகள் ஜிவாவுடன் புத்தாண்டை வரவேற்று குதூகலமாக கொண்டாடியுள்ளார்.

    இதுதொடர்பாக அவரது மனைவி சாக்ஷி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ வைரலாகியுள்ளது. வாண வேடிக்கைகளைப் பார்த்தவாறே வீடியோவில் தனது மகள் ஜிவாவை கொஞ்சி மகிழ்கிறார் டோனி. இந்த வீடியோவுக்கு ஹேப்பி நியூ இயர் 2023 என்று தலைப்பிட்டு சாக்ஷி டோனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • அதிகாலை முதலே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
    • சிறுவாபுரி முருகன் கோவில், பெரிய பாளையம் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    திருவள்ளூர்:

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து சாமியை வழிபட்டு சென்றனர்.

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் இருந்த வீரராகவரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர். அதிகாலையிலயே திரளாள பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக இருந்தது.

    தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஜெயா நகரில் அமைந்துள்ள மகாவல்லப கணபதி ஆலயத்தில் புத்தாண்டையொட்டடி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில், காக்களூர், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், பூங்காநகரில் உள்ள யோக ஞான தட்சிணாமூர்த்தி, மற்றும் ஞான மங்கள சனீஸ்வர பகவானுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.

    சத்திய மூர்த்தி தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடந்தது. பொது மக்கள், இளைஞர்கள் நள்ளிரவில் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் புத்தாண்டை வரவேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய இன்றுஅதிகாலை முதலே குவிந்தனர். மலைக் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    கோவிலை சுற்றி நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து வழிபட்டு சென்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பர நாதர் கோயில், கைலாசநாதர் கோயில் மற்றும் சங்கர மடத்தில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

    அதிகாலை முதலே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

    உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் காலை முதலே கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருப்பதால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக தொடர்ந்து காணப்படுகிறது.

    இதேபோல் சிறுவாபுரி முருகன்கோவில், பெரிய பாளையம் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    • புத்தாண்டு கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார்.
    • ரயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    திருவாரூர்:

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் பொதுமக்கள் தங்களது இல்லங்களில் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்து கொள்வர்.மேலும் தேவாலயங்கள் போன்றவற்றில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருவாரூர் அருகிலுள்ள ரயில்வே காலணி பகுதியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவரின் மகன் விக்கி என்கிற கணேசன் வயது 20.

    ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் திருவாரூர் ெரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடந்து ெரயில்வே காலணி பகுதிக்கு செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ெரயில் மோதியதில் சிறிதுரம் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கணேசன் உடல் சிதறி தண்டவாளத்திலேயே உயிரிழந்து கடந்துள்ளார்.

    அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ெரயிலின் டிரைவர் ெரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இளைஞர் எந்த ெரயில் மோதி உயிரிழந்தார் விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    புத்தாண்டு தினத்தன்று ெரயில் மோதி இளைஞர் உடல் சிதறி பலியான சம்பவம் என்பது ெரயில்வே காலணி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×