search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்காபிஷேகம்"

    • சித்திரை பெருவிழா வருகிற 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்.
    • தினமும் மாலை 6 மணிக்கு திருமுறை சொற்பொழிவு.

    காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவையொட்டி தினமும் காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் கச்சபேஸ்வரர் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் உலா வருகிறார். 20-ந்தேதி காலையில் அதிகார நந்தியும், இரவில் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. 22-ந்தேதி ரதம், 28-ந் தேதி தீர்த்தவாரி உற்சவம், 29-ம் தேதி சங்காபிஷேகம், 63 நாயன்மார்கள் வழிபாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    30-ந் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு திருமுறை சொற்பொழிவு, இசை நடன நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நடராஜன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • புனிதநீர் 1008 சங்குகளில் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
    • வண்ண மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதார ண்யேஸ்வர சுவாமி திருக்கோவில் மூர்த்தி தளம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி தந்த இடம்.

    வேதங்கள் பூஜை செய்து மூடி கிடந்த கோவில் திருக்கதவை அப்பரும் சம்பந்தரும் தேவாரப் பதிகங்கள் பாடி கதவு திறந்த வரலாற்று சிறப்பு பெற்ற இடம் இந்த கோவிலில் கார்த்திகை 2-வது சோம வார்த்தை முன்னிட்டு நேற்று மாலை புனித நீர் அடங்கிய கலசங்கள் மற்றும் 1008 சங்குகள் புனித நீரால் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது பின்பு புனித நீர் அடங்கிய குடங்கள் சங்குகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    வேதாரண்யம் விளக்கு அழகு என்ற பெருமைக்கேற்ப சாமி சன்னதியில் உள்ள தோரண விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமாக காட்சியளித்தது பின்பு வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை உபயதாரர் மற்றும் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.

    • மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி மாற்றுரை வரதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவா ரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடை பெற்றது.
    • அர்ச்சகர்கள் கணபதி ஹோ மம் செய்து சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வேத மந்திரம் ஓதி பூஜைகள் செய்தனர்.

    மண்ணச்சநல்லூர்

    மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி மாற்றுரை வரதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவா ரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடை பெற்றது.

    முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள வெளிநடராஜர் மண்ட பத்தில் 108 வலம்புரி சங்கு கள் லிங்க வடிவம் மற்றும் வட்டப்பாதையில் சுற்றி வைக்கப்பட்டது. அதன் மை யத்தில் வலம்புரி சங்கு வைக்கப்ப ட்டு அனைத்து சங்குகளிலும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுத்து வ ரப்பட்ட புனிதநீர் நிரப்ப ப்பட்டு பின்னர் அந்த சங்கு களில் மாவிலைகள் மற்றும் பூக்கள் வைக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் கணபதி ஹோ மம் செய்து சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வேத மந்திரம் ஓதி பூஜைகள் செய்தனர். இதில் ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சங்கில் உள்ள புனித நீர் முதல் பிரகாரம் வழியாக அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அம்ம னுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதே போல் மீதமுள்ள சங்கில் உள்ள புனிதநீர் எடுத்து செல்லப்பட்டு மாற்று ரைவரதீஸ்வரருக்கு சங்கா பிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபாராதனை நடை பெற்றது. பின் அர்த்த ஜாம பூஜை நடைபெற்றது.

    • கார்த்திகை மாதம் சிவாலயங்கள் தோறும் சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும்.
    • சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தந்து அருள்வதாக ஐதீகம்.

    சோமவார விரதம் மேற்கொள்ளும் அதேநாளில் சிவாலயங்கள் தோறும் சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும். எனவே சோமவார விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் கோவிலுக்கு சென்று சங்காபிஷேகத்தை பார்த்து சிவனை தரிசிக்க வேண்டும். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியுடன் கார்த்திகை நட்சத்திரம் கூடும் நேரம் `திருக்கார்த்திகை' திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினம் சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தந்து அருள்வதாக ஐதீகம். இதன் காரணமாகவே ஆலயங்களிலும், வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம்.

    இந்நாளில் சிவனின் உடல் அதிக வெப்பத்தை தாங்கும் விதமாக, அதற்கு முன்னதாக வரும் திங்கட்கிழமைகளில் (சோம வாரம்) சிவனுக்கு, சங்காபிஷேக பூஜை நடத்தி குளிர்விக்கப்படுகிறது. சங்காபிஷேகம் பார்த்தால் கஷ்டங்கள் விலகும்.

    இந்த அபிஷேகத்தால் உலகில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். தேவையான அளவுக்கு மழை பொழியும் என்பதும் சங்காபிஷேகத்தின் நோக்க மாகும். சங்கு செல்வத்தின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் செல்வ அபிவிருத்திக்காகவும் சங்காபிஷேகம் செய்வார்கள். அப்படி தரிசிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட வலம்புரி சங்கில் பாலை நிரப்பி, இறை வனை நீராடினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். அதில் கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால், பிறவி பிணியை அறுக்கலாம் என்று பத்ம புராணம் கூறுகிறது.

    ஏழு பிறவிகளில் செய்த வினைகளில் இருந்து மீளலாம் என்று கந்த புராணமும் சொல்கிறது. இதன் காரணமாகவே சங்கை கொண்டு சங்காபிஷேகம் பெரிய பெரிய சிவாலயங்களில் நடத்தப்படுகிறது.

    கார்த்திகை சோம வார நாட்களில் 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கைகள் கொண்ட சங்குகளில் புனித நீரை நிரப்பி புஷ்பங்கள் வைப்பார்கள். ஒரு கும்பத்தில் சிவபெருமானை ஆவாகணம் செய்து வேத பாராயணங்கள் செய்து, பின்பு அந்த நீரைக் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்வார்கள்.

    1008 சங்குகளை வைத்து அதற்குரிய தேவதைகளை ஆவாகணம் செய்து, மந்திரங்களை உச்சரித்து செய்யப்படும் சங்காபிஷேகத்திற்கு 'சகஸ்தர சங்காபிஷேகம்' என்று பெயர். 108 சங்குகளை கொண்டு அதற்குரிய தேவதைகளை ஆவாகணம் செய்து, மந்திரங்களை உச்சரித்து செய்யப்படும் சங்காபிஷேகத்திற்கு `அஷ்டோத்ர சங்காபிஷேகம்' என்று பெயர்.

    ஓம்கார சொரூபமான சங்கில் நாம் எந்த வேதா மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்த வேதா மூர்த்தம் தனது அருள் நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடியதாகும்.

    இதன் அடிப்படையிலேயே கோவில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. சங்காபிஷேகத்தை பார்ப்பவர்களின் வாழ்வில் அவ்வப்போது எதிர்படும் கஷ்டங்கள் வந்த சுவடு தெரியாமல் விலகிச் செல்லும்.

    • 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனிதநீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • 4, 11-ந் தேதிகளில் சோமவார சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    காா்த்திகை மாத திங்கள்கிழமைகளில் சோம வார விரதம் கடைப்பிடித்து சிவபெருமானை வழிபடுவது வழக்கம்.

    இதையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் காா்த்திகை மாத முதல் சோம வாரமான நேற்று மாலை பெருவுடையாா் சன்னதி முன் 1008 சங்குகளில் புனித நீா் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    இதைத்தொடா்ந்து, 1008 சங்குகளில் நிரப்பப்ப ட்ட புனித நீரால் பெருவு டையாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

    இதேபோல, பெரிய கோயிலில் வரும் 27-ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 4, 11 ஆம் தேதிகளில் சோம வார சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது.

    • காலை மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.
    • நவ.18-ஆம் தேதி சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் முருகனின் நான்காம் படை கோவில் அமைந்துள்ளது.

    கட்டுமலையால் ஆன இந்த தலம் நக்கீரரால் திருமுருகா ற்றுப்படையிலும், அருணகிரி நாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமாகும்.

    மேலும் பிரபவ முதல் அட்சய முடிய அறுபது தமிழ் வருட தேவதைகளும் இந்த கோயிலில் திருப்படிகளாக அமையப்பெற்று முருகனுக்கு சேவை செய்து வருகின்றன.

    இத்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமிக்கு கந்தசஷ்டி விழா நேற்று திங்கள்கிழமை காலை தொடங்கியது.

    இதில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து படி இறங்கி உற்சவ மண்ட பத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு மலர் அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து விழா நாள்களில் காலை மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான நவ.18-ஆம் தேதி சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகமும், அன்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள், உபயதாரர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • இந்நாளில் சிவ தலங்களில் 1008 சங்காபிஷேகங்கள் நடைபெறும்.
    • சோம என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும் சந்திரன் என்றும் பொருளாகும்.

    கார்த்திகை மாதம் சோமவாரம் மிகவும் சிறந்ததாகும்.

    இந்நாளில் சிவ தலங்களில் 1008 சங்காபிஷேகங்கள் நடைபெறும்.

    திருக்கடவூர் தலத்தில் இச்சங்காபிஷேகம் மிகவும் விசேஷமானதாகும்.

    கார்த்திகை சோமவாரத்தில் விரதமிருந்து சிவபெருமானைத் துதித்து சங்காபிஷேகம் கண்டு

    தரிசனம் செய்பவர்கள் மங்களம் யாவும் பெறுவார்கள்.

    சோம என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும் சந்திரன் என்றும் பொருளாகும்.

    சந்திரன் கார்த்திகை மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் தோன்றினான்.

    தன்னுடைய கொடிய நோய் குணமாக சிவபெருமானை ஆராதித்து நவக்கிரகங்களில் ஒருவன் ஆனான்.

    அவன் பெயரால் சோமவாரம் (திங்கள்கிழமை) தோன்றியது.

    சோமனும் தன் பெயரால் தனது வாரத்தில் இந்த விரதம் புகழ்பெற வேண்டும் என்று சிவபெருமானை பிரார்த்தித்தான்.

    அதனால் சோமவார விரதம் சிறப்புடையதாயிற்று.

    சந்திரன் சிவபெருமான் திருமுடியில் அமர்ந்தது கார்த்திகை மாத சோம வாரத்தில்தான்.

    கிருதயுகம் தோன்றியதும் சோம வாரத்தில்தான்.

    பதினான்கு ஆண்டுகள் சோமவாரம் தோறும் பூஜை செய்து இரவு கண்விழித்து சிவபுராணம் படித்து காலையில் ஹோமம் செய்து,

    கலச நீரால் அபிஷேகம் செய்து கணவனும், மனைவியுமாக பூஜை செய்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு வேண்டிய சந்திரனின் அபிலாஷையை நிறைவு செய்தார் சிவபெருமான்.

    சோமவார விரதம் இருப்பவர்களின் பாவங்களைப் போக்கி பகைவரின் பயத்தையும் அகற்றி,

    அவர்களை சிவபெருமான் நற்கதிக்கு ஆளாக்குவார்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • கோவிலை சுற்றி 3 முறை மேளதாளங்கள் முழங்க வலம் வந்த நிகழ்ச்சியும் நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டி உள்ளதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. இங்கு குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக்காரணமாயிற்று.

    குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5½ அடி உயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் தான் அமைந்து உள்ளது. அப்படிப்பட்ட புகழ் பெற்ற இந்த குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.

    இதையொட்டி காலை யில் கணபதி ஹோமமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் 1008 வலம்புரி சங்குகளை சிவலிங்க வடிவத்திலும் ஓம் வடிவத்திலும் வடிவமைத்து வைத்து அதில் புனித நீர் நிரப்பி சங்கு பூஜை நடத்தப்பட்டது. அதன் பிறகு குகநாதீஸ்வர பெருமானுக்கு 1008 சங்காபிஷேகமும் நடந்தது. அதைத் தொடர்ந்து மதியம் அலங்கார தீபாரதனையும் வாகன பவனியும் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளங்கள் முழங்க வலம் வந்த நிகழ்ச்சியும் நடந்தது. அதன்பிறகு பக்தர்களுக்கு அருட்பி ரசாதம் வழங்குதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    • வைகாசி பவுர்ணமியன்று வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உற்சவம்.
    • மாதந்தோறும் பிரதோஷ கால பூசையும் நடைபெறும்.

    சித்திரை மாதம் :- புதுவை மரவாடி நடேச குப்புசாமி பிள்ளை குடும்பத்தார் 1909-ம் ஆண்டு முதல் தமிழ் வருடப்பிறப்பன்று காலை முதல் அபிஷேக ஆராதனை செய்து வருகின்றனர். வருடப்பிறப்பு வீதி உற்சவம், சித்ரா பவுர்ணமி வீதி உற்சவம், கும்பாபிஷேக ஆண்டு விழா, சங்காபிஷேகம் வீதி உற்சவம், சுக்ல சதுர்த்தி அன்று ஆலயத்தினுள் உற்சவம்.

    வைகாசி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் ஆலயத்தில் உற்சவம், வைகாசி பவுர்ணமியன்று வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உற்சவம். (அன்று ஏழைகளுக்கு அன்னமளித்தல்)

    ஆனி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் ஆலயத்தில் உற்சவம். ஆனித்திருமஞ்சனம், நர்த்தன கணபதி அபிஷேகம், ஆலய உற்சவம்.

    ஆடி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் ஆலயத்தில் உற்சவம், ஆடி அமாவாசை அன்று காலை கடல் தீர்த்த வாரி, வீதி உற்சவம்.

    ஆவணி மாதம்:- விநாயக சதுர்த்தி அன்று இரவு வெள்ளி மூஷிக வாகன வீதி உற்சவம், பிரம்ம உற்சவம், பவுர்ணமியை அனுசரித்துக் கொடியேற்றம்.

    புரட்டாசி மாதம்:- சதுர்த்தியை அனுசரித்துப் பவித்ர உற்சவம் ஐந்து நாட்களுக்கு நடைபெறும். ஆறாவது நாள் வீதி உற்சவம்.

    ஐப்பசி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்க ளில் உற்சவம், பவுணர்மியை அனுசரித்த அன்னாபிஷேகம், கந்தசஷ்டி உற்சவம் 9 நாட்கள்.

    கார்த்திகை மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் தீப உற்சவம்.

    மார்கழி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் உற்சவம். ஆருத்ரா தரிசனம்.

    தை மாதம்:- முதல் தேதி சங்கராந்தி உற்சவம், மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் உற்சவம், தை அமாவாசை நாளில் காலை மூஷிக வாகனத்தில் கடல் தீர்த்தவாரி வீதி உற்சவம், தைப்பூச உற்சவம்.

    மாசி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் உற்சவம். மாசி மகம் அன்று காலை மூஷிக வாகனத்தில் கடல் தீர்த்தவாரியும், மாலையில் திருவீதி உலாவும், சிவராத்திரி நான்கு காலம் பூசை மறுநாள் வீதியுலா.

    பங்குனி மாதம்:- மாத சுக்ல பூர்த்தியில் தமன உற்சவம், பங்குனி உத்திர உற்சவம்.

    ஸ்படிகலிங்கத்திற்கு தினசரி காலை 10 மணியளவில் அபிஷேக ஆராதனையும், மாதந்தோறும் பிரதோஷ கால பூசையும் நடைபெறும்.

    • காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    வடமதுரை காளியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேக பூஜை நேற்று நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மூலவருக்கும், உற்சவருக்கும் 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேக பூஜை நடத்தப்பட்டது. அதன்பின்னர் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடிமாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ராஜாங்க கோலத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, புனித நீராடி நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நத்தம் மாரியம்மன், கைலாசநாதர், பகவதி, காளியம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

    • யாக குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன.
    • மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சேவகப் பெருமாள் கோவிலில் கடந்த 1-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் மண்டபத்தில் 1008 வலம்புரி சங்குகளை கொண்டு நாமம், ஓம், சிவலிங்கம் வடிவிலும் மற்றும் மலர்கள் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு வலம்புரி சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் மண்டல பூஜை நடந்தது. திருப்பணி குழு தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி தலைமையில் கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம் முன்னிலையில் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது.

    இதில் யாக குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பூர்ணா குதி நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து வலம்புரி சங்குகளில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு மூலவர் சேவகப் பெருமாள் அய்யனார், சுயம்பு லிங்கேஸ்வரர், அடைக்கலம் காத்த அய்யனார், பிடாரியம்மன் போன்ற கோவில் சன்னதியில் உள்ள மூலவர்களுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது.

    சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கும்பங்கள் சுமந்து கொண்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து சேவகபெருமாள் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் கும்பத்தில் உள்ள புனித நீர் ஊற்றப்பட்டு மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து கிராமத்தின் சார்பிலும், அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பிலும் அன்னதான விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் திருப்பணி குழு தலைவர் ராம அருணகிரி, , அடைக்கலம் காத்த நாட்டார்கள் சிங்கம்புணரி கிராமத்தார்கள், பரம்பரை ஸ்தானியம் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

    • குருபூஜை விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது.
    • பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது.

    பாம்பன் சுவாமிகளின் 94-வது குருபூஜை விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது. இதையடுத்து திருவான்மி யூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இன்று அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை ஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து பாம்பன் சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், 108 சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    காலை 10.30 மணிக்கு பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் பாராயனம், மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் 6 மணிவரை விசேஷ பூஜை மற்றும் மேளக் கச்சேரி நடைபெற்றது.

    இதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 8 மணிக்கு பாம்பன் சுவாமிகள் மற்றும் 6666 பாடல்கள் அடங்கிய புத்தகம் மேளம், நாதஸ்வர இசையுடன் கோவில் வளாகத்தில் உட்புறப்பாடு நடைபெற்றது. பின்னர் இரவு 11 மணி முதல் அதிகாலை வரை 6 கால பூஜை சண்முக சகச்சிரநாம அர்ச்சனையுடன் ஓதுதல் நடக்கிறது.

    நாளை (9-ந் தேதி) காலை சிறப்பு சோடச உபசார மற்றும் குமாரஸ்தல பூஜையும், மகேஸ்வர பூஜையும் நடைபெற உள்ளது.

    பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு ஆகும்.

    முருகனின் வழிபாடாக இவர் மொத்தம் 6666 பாடல்கள் இயற்றினார். இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

    பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. சிறுவயதில் இவருக்கு கந்தர் சஷ்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் உபய அருணகிரிநாதர் என்ற பெயரும் பெற்றார். பாம்பன் சுவாமிகள் 1929-ம் ஆண்டு மே 30-ந்தேதி முக்தி அடைந்தார்.

    மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அவரது அருளை பெற்று வருகிறார்கள்.

    ×