என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "1008 sankus"
- கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி வழிபாடு நடந்தது.
- இம்மையிலும் நன்மை தருவார் கோவிலிலும் நடந்தது.
மதுரை
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமைகளில் கார்த்திகை சோமவார வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கார்த்திகை முதல் சோம வார தினமான இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சுந்தரேசு வரர் சன்னதி முன்பு 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பி சிவலிங்க வடிவில் வைத்து சிறப்பு ஹோமம் நடந்தது.
இதைத்தொடர்ந்து இன்று மாலை சுந்தரேசுவர ருக்கு 1,008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரை கொண்டு சிறப்பு அபி ஷேகம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இதேபோல் மதுரை இம்மையிலும் நன்மை தருவார்- கோவிலில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் சோம வார வழிபாடுகள் நடைபெற்றது.
இைதயொட்டி 1,008 வலம்புரி சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவில் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மாலை சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரை சிவலிங்கத்திற்கு சிறப்பு அபி ஷேகம் நடைபெறுகிறது. அதன்பின் அலங்காரம், மகாதீபாராதனை நடக்கிறது.
அபிஷேக பிரியரான சிவபெருமானை கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருந்து வழிபடுவதும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. எனவே இன்று பல பக்தர்கள் விரதம் கடைபிடித்து சோம வார வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்.
இேதபோல் கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், உத்தர கோசமங்கை சிவன் கோவில், திருவாதவூர் சிவன் கோவில், மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சோம வார சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்