என் மலர்tooltip icon

    வழிபாடு

    புத்தாண்டு தரிசனம்: கோவில்களில் பக்தர்கள் கூட்டம்- 3 மணிநேரம் காத்திருந்து வழிபாடு
    X

    புத்தாண்டு தரிசனம்: கோவில்களில் பக்தர்கள் கூட்டம்- 3 மணிநேரம் காத்திருந்து வழிபாடு

    • அதிகாலை முதலே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
    • சிறுவாபுரி முருகன் கோவில், பெரிய பாளையம் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    திருவள்ளூர்:

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து சாமியை வழிபட்டு சென்றனர்.

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் இருந்த வீரராகவரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர். அதிகாலையிலயே திரளாள பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக இருந்தது.

    தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஜெயா நகரில் அமைந்துள்ள மகாவல்லப கணபதி ஆலயத்தில் புத்தாண்டையொட்டடி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில், காக்களூர், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், பூங்காநகரில் உள்ள யோக ஞான தட்சிணாமூர்த்தி, மற்றும் ஞான மங்கள சனீஸ்வர பகவானுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.

    சத்திய மூர்த்தி தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடந்தது. பொது மக்கள், இளைஞர்கள் நள்ளிரவில் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் புத்தாண்டை வரவேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய இன்றுஅதிகாலை முதலே குவிந்தனர். மலைக் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    கோவிலை சுற்றி நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து வழிபட்டு சென்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பர நாதர் கோயில், கைலாசநாதர் கோயில் மற்றும் சங்கர மடத்தில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

    அதிகாலை முதலே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

    உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் காலை முதலே கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருப்பதால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக தொடர்ந்து காணப்படுகிறது.

    இதேபோல் சிறுவாபுரி முருகன்கோவில், பெரிய பாளையம் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    Next Story
    ×