search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new year"

    • புத்தாண்டு தினத்தில் காலையில் முருகப் பெருமானை தரிசிக்க முதல் நாளே ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர்.
    • சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரும்பாலான மக்கள் இறைவழிபாட்டுடன் புத்தாண்டை தொடங்குவது வழக்கம். அதன்படி அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அதிகரித்து காணப்பட்டது.

    புத்தாண்டை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து கால சந்தி, சிறுகாலசந்தி, விழா பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப் பெருமான் அருள்பாலித்தார்.

    புத்தாண்டு தினத்தில் காலையில் முருகப் பெருமானை தரிசிக்க முதல் நாளே ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர். அவர்கள் அதிகாலையில் படிப்பாதை, யானைப்பாதை வழியாக கொட்டும் பனியிலும் நடந்து சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

    கடந்த சில நாட்களாகவே பழனியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாட்டு பாடியும் குழுவாக வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

    சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக காணப்பட்டது. இதனால் மலைக்கோவில், ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், அபிராமியம்மன், வெள்ளை விநாயகர், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அனைத்து கோவில்களிலும் மார்கழி மாத திருவிளக்கு வழிபாடு நடைபெற்று வரும் நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

    • புத்தாண்டை வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியாக மக்கள் வரவேற்றனர்.
    • வழிபாட்டு தலங்களில் சிறப்பு பூஜை, மக்கள் தரிசனம். கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.

    உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் புத்தாண்டு பிறந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இனிமேல்தான் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. அந்நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

    புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்தில் "2024-ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டு தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    புத்தாண்டையொட்டி நேற்றிரவு கிறிஸ்தவ தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • புத்தாண்டு கொண்டாட மகள்களை அழைத்துக்கொண்டு நேற்று பகல் 12 மணியளவில் மீனாட்சி கடற்கரைக்கு வந்தார்.
    • கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி மோகனா, லேகா, நவீன், கிஷோர் ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மீனாட்சி. இந்த தம்பதியின் மகள்கள் மோகனா (வயது 17), லேகா (15). புதுவையில் உள்ள அரசு பள்ளியில் இவர்கள் 12 மற்றும் 10-ம் வகுப்பு படித்தனர்.

    புத்தாண்டு கொண்டாட மகள்களை அழைத்துக்கொண்டு நேற்று பகல் 12 மணியளவில் மீனாட்சி கடற்கரைக்கு வந்தார். ஏற்கனவே அங்கு மோகனா, லேகா ஆகியோரது நண்பர்களான கதிர்காமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் நவீன் (16), நடேசன் நகரை சேர்ந்த கேட்டரிங் மாணவர் கிஷோர் (17) ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் 4 பேரும் டூப்ளக்ஸ் சிலை அருகே கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர்.

    அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி மோகனா, லேகா, நவீன், கிஷோர் ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப்பார்த்ததும் கரையில் இருந்து மீனாட்சி அதிர்ச்சியடைந்து 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என கூக்குரலிட்டு கதறினார்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மீனவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து கடலில் இறங்கி அக்காள், தங்கை உள்பட 4 பேரையும் தேடினார்கள். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், கடலோர காவல்படை, தீயணைப்புத்துறையினர் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீனவர்களுடன் படகில் கடலுக்குள் சென்று மாயமான 4 பேரையும் தேடினர். மேலும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான படகில் சென்று கடலோர காவல்படை போலீசாரும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் தற்காலிகமாக தேடும் பணி கைவிடப்பட்டது.

    கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட அக்காள்-தங்கை உள்பட 4 பேரின் கதி என்ன? என்பது தெரியாதநிலையில் இதுபற்றிய தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு பதறிப்போன அவர்கள் கடற்கரைக்கு வந்து அழுது புரண்டனர். இந்த காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    • வேளாங்கண்ணி, சாந்தோம் தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை.
    • வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜை.

    2024 ஆங்கிலப்புதாண்டு பிறந்துள்ளது. ஆங்கில புத்தாண்டை வரவேற்க சென்னையில் பொதுமக்கள் நள்ளிரவு பொது இடங்களில் கூடினர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். அதேபோல் புதுச்சேரியிலும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

    நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்றனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். பல்வேறு இடங்களில் வாணவேடிக்கை நிகழ்த்தி புத்தாண்டை வரவேற்றனர். Happy New Year என கோசமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    புத்தாண்டையொட்டி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி, சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தேவாலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஈரோட்டில் தேவாலயத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து புத்தாண்டை வரவேற்றனர்.

    புத்தாண்டையொட்டி இந்து கோவில்களில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. உற்சவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதல் அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

    கோவை புளியங்குடி முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

    புதுச்சேரி மணக்குள விநாயர் கோவிலில் விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். புதுச்சேரியில் கடற்கரையில் நள்ளிரவு 1.30 மணிக்குப் பிறகும் சுற்றுலா பயணிகள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆங்கில புத்தாண்டு 2024 நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ந்தனர்.

    இதை முன்னிட்டு சென்னையில் புத்தாண்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நட்சத்திர ஹோட்டல்கள், மால்களில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

    2024 புத்தாண்டு பிறந்ததையொட்டி கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
    • 2023ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகளை நிகழ்த்தியது.

    இந்தியாவில் 2024 புத்தாண்டு இன்னும் சற்று நேரத்தில் பிறக்க இருக்கிறது. இதை முன்னிட்டு, நாட்டின் முக்கிய தலைவர்கள் பொது மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2024 புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    2023ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகளை நிகழ்த்தியது. ஜி20 தலைமையில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியது. விளையாட்டுத் துறையில் நமது வீரர், வீராங்கனைகள் சிறப்பாக பரிணமித்தது என சுயசார்புபாரதத்தின் வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கான நமது தேசிய உறுதிப்பாட்டின் சான்றாக விளங்கியது.

    சட்டசீர்திருத்தங்கள் காலனித்துவ பாரம்பரியத்தை நிராகரித்ததுடன், நமது தேசத்தின் ஜனநாயக நெறிமுறைகளை மேலும் ஆழப்படுத்தியுள்ளன.

    உச்சநீதிமன்றம், ஜம்மு & காஷ்மீரின் முழுமையான ஒருங்கிணைப்பு தொடர்பாக வழங்கிய தனது வரலாற்றுபூர்வ தீர்ப்பின் மூலம் "ஒரேபாரதம் உன்னதபாரதம்" என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தியது.

    நமது இளையசக்தி அனைத்து துறைகளிலும் தங்கள் திறமை மற்றும் தொழில்முனைவு மேதைத்துவத்தை நிரூபித்து வருகிறது. நமது புராதன சனாதன தரிசனத்தில் ஆழமாக வேரூன்றிய நமது தெளிவான கலாசாரஆன்மிகம், உலகை ஒரே குடும்பம் ஆக ஒருங்கிணைத்துள்ளது. நாம் நமது சமூக ஒற்றுமையை வலுப்படுத்தி, 'ஒரேதேசம்' ஆக கடுமையான சவால்களை முறியடித்து முன்னேறினோம்.

    அதே நம்பிக்கை, அர்ப்பணிப்பு, கூட்டுறுதி மற்றும் ஆற்றலுடனும் நாம் 2024-ல் நுழைகிறோம். நமது முயற்சிகளில் சிறந்து விளங்கவும், நமது தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு வேகம் சேர்ப்பதற்காகவும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இணைந்து செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம்.

    'புத்தாண்டு 2024' நம் அனைவருக்கும் மேலும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொடுக்கட்டும்- ஆளுநர் ரவி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • நீங்கள் அடைய விரும்பும் இலக்குகளைச் சாதிக்க புத்தாண்டு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.
    • தீர்மானங்கள் நமக்கு தகுந்தபடி உண்மையாகவும், சாதிக்க முடிந்த அளவில் இருக்க வேண்டும்.

    புத்தாண்டு 2024க்கு இன்னும் சில நாட்களே உள்ளது. புத்தாண்டு நெருங்கும்போது, உங்கள் சக நண்பர்கள் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கும் போது, "உங்கள் புத்தாண்டு உறுதிமொழி என்ன?" எப்பொழுதும் உறுதிமொழி அல்லது தீர்மானங்களைக் கடைப்பிடிக்கத் தவறிய நம்மில் சிலருக்கு இது எவ்வளவு மோசமாகத் தோன்றினாலும், நீங்கள் அடைய விரும்பும் இலக்குகளைச் சாதிக்க புத்தாண்டு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

    அனைவரும் புதிய ஒரு தொடக்கத்தை நோக்கியே இருக்கிறோம் என்பதற்கு புத்தாண்டு தீர்மானங்கள் சரியான எடுத்துக்காட்டு. தீர்மானங்கள் நமக்கு தகுந்தபடி உண்மையாகவும், சாதிக்க முடிந்த அளவில் இருக்க வேண்டும். அவற்றை சாதிக்க தனியான நேரங்களை ஒதுக்கவும் வேண்டும்.

    தீர்மானங்களை நிறைவேற்றுவதை மன அழுத்தமாக உணரக்கூடாது, மாறாக உங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் தீர்மானங்கள் சுய வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

    தற்போதைய காலங்களில், ரெசல்யூஷன்கள் பெரும்பாலும் ஒரு நபர் தனக்கு அளிக்கும் வாக்குறுதிகளாகவே உள்ளது. கிறிஸ்தவர்களிடையே பாரம்பரியமாக இந்த நடைமுறை தொடங்கியது. இருப்பினும், உலகெங்கிலும் உள்ள மக்கள் புத்தாண்டு தீர்மானங்களை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, இந்த நேரத்தில் உங்கள் புத்தாண்டு தீர்மானங்களை நீங்கள் கடைப்பிடிக்க விரும்பினால், கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை பார்க்கலாம். 

    யதார்த்தமான தீர்மானங்களை அமைக்கவும்:

    நம்மில் பெரும்பாலோர் 'எடையைக் குறைத்தல் ,புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது' போன்ற பெரிய மற்றும் அடிக்கடி தெளிவற்ற இலக்குகளைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறோம், உங்கள் இலக்குகளைப் பற்றி குறிப்பிட்ட மற்றும் யதார்த்தமாக இருப்பது மிகவும் நல்லது. "அதிக லட்சியம் அல்லது தெளிவற்ற இலக்குகளை அமைப்பதை தவிர்க்கவும்".

    உங்கள் தீர்மானங்களை சிறிய, மேலும் நிர்வகிக்கக்கூடிய பணிகளாகப் பிரிப்பதன் மூலம் இதைச் செய்யலாம், இது குறைவான, மிகப்பெரியதாக அடையக்கூடியதாக இருக்கும். உதாரணமாக, "இந்த ஆண்டு எனது வேலையில் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று வெறுமனே சொல்வதை விட, உங்கள் பணித் திறனைக் கண்காணிக்க ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய பட்டியல்களை உருவாக்குதல் முக்கியம்.

    செயல் திட்டத்தை உருவாக்குங்கள்: 

    செயல்திட்டத்தை உருவாக்குவது உறுதியுடன் இருக்கவும், உங்கள் முன்னேற்றத்தை அளவிடவும் உதவும். மேலும், இலக்கு அமைக்கும் பயன்பாடுகளை வைத்திருக்க வேண்டும். "குறிப்பிட்ட மைல் கற்களை அடைவதற்கான தேதிகளை நிர்ணயிப்பதன் மூலம் நீங்கள் இதைச் செய்யலாம்."நான் 5 கிலோ குறைப்பேன்" என்று கூறுவதற்குப் பதிலாக, "நான் 2 வாரங்களுக்குள் ஐந்து கிலோ குறைப்பேன்" என்று சொல்லுவது அதிக அளவில் வித்தியாசம் தரும். நேரத்தை மிகவும் யதார்த்தமாக அமைக்க வேண்டும், இல்லையென்றால் மிக விரைவில் உங்கள் தீர்மானம் தோல்வியடையும்.

    ஒவ்வொரு தீர்மானத்திற்கும் விரிவான செயல் திட்டத்தை உருவாக்கவும். "உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் எடுக்க வேண்டிய படிகளைத் தீர்மானிக்கவும்." எதிர்காலத் தடைகளை முன்னறிந்து, அவற்றைச் சமாளிப்பதற்கான திட்டங்களை உருவாக்குவதும் முக்கியமானது.

    'ஏன்' என்பதை நினைவில் கொள்ளுங்கள்:

    நீங்கள் உங்கள் தீர்மானங்களைத் தொடரும்போது, நீங்கள் பின்னடைவைச் சந்திக்க நேரிடலாம் மற்றும் உங்களின் உந்துதல் குறைவது போல் உணரலாம். இதுபோன்ற சமயங்களில், இந்த இலக்கை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதையும், நீங்கள் விரும்பும் ஆதாயங்களில் கவனம் செலுத்துவதையும் உங்களுக்கு நினைவூட்டிக் கொள்வது அவசியம். ஒரு இலக்கு முக்கியமானதாக இருப்பதற்கான காரணங்கள், தொடர்ந்து செல்வதும், செல்வதற்கான உந்துதலின் நிலை தான் ஆதாரம். 

    சுய நம்பிக்கையை ஊக்குவிக்கவும்:

    தீர்மானங்களை எடுப்பதற்கும் அவற்றைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் ஒருவரின் சொந்தத் திறனை மாற்றுவதற்கான வலுவான நம்பிக்கை தேவை. "உங்களுக்கு நல்ல மற்றும் கெட்ட நாட்கள் இருக்கும், சில சமயங்களில் நீங்கள் பின்தங்கியிருப்பதைப் போல உணருவீர்கள்." இதுபோன்ற சமயங்களில், உங்கள் உத்திகளை மறுமதிப்பீடு செய்து, பயணத்தை மீண்டும் தொடங்க வேண்டும். உங்கள் இலக்குகளை அடைய சிறிது நேரம் ஆகலாம், ஆனால் நீங்கள் நிலையாக இருப்பதும், உங்களை நம்புவதும் மிகவும் முக்கியம்".

    தேவைக்கேற்ப ஆதரவைத் தேடுங்கள்: 

    உதவி தேடுவது தோல்வியின் அடையாளம் அல்ல.நீங்கள் மதிக்கும் மற்றும் அக்கறையுள்ள நபர்களிடமிருந்து உதவி மற்றும் வழிகாட்டுதலைப் பெற தயங்க வேண்டாம். உங்களை ஊக்குவிக்கும், உங்களை நிலைநிறுத்தி வைக்கும் மற்றும் நீங்கள் விட்டுக்கொடுக்க விரும்பும் நாட்களில் உங்களுக்கு பொறுப்புக்கூறும் ஒரு ஆதரவு அமைப்பு இருப்பது மிகவும் முக்கியமானது.

    இந்த உத்திகளை கடைப்பிடித்தல் பயனுள்ளதாகவும் உதவிகரமாக இருக்கும். 

    • கிரிபேட்டியில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
    • நியூசிலாந்தில் 2024 ஆங்கில புத்தாண்டு இந்திய நேரப்படி சரியாக 4.30 மணிக்கு பிறந்தது.

    உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024வது ஆண்டில் ஆங்கில புத்தாண்டு இந்திய நேரப்படி சரியாக 4.30 மணிக்கு பிறந்தது.

    கிரிபேட்டி, நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    இந்நிலையில், வாண வேடிக்கையுடன் ஆஸ்திரேலிய மக்கள் புத்தாண்டை வரவேற்று, பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதனால், ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு களைகட்டி வருகிறது.     

    • கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருடத்தின் ஆங்கில புத்தாண்டு பிறந்தது.
    • நியூசிலாந்ததில் புத்தாண்டு களைகட்டி வருகிறது.

    நியூசிலாந்தில், இந்திய நேரப்படி சரியாக இன்று மாலை 4.30 மணியளவில் புத்தாண்டு பிறந்தது.

    உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருட ஆங்கில புத்தாண்டு பிறந்தது.

    இந்நிலையில், வாணவேடிக்கையுடன் நியூசிலாந்து மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மேலும், பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டி, ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதனால், நியூசிலாந்ததில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.

    • போலீசார் அங்கு ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • 3 கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டும் சுற்றுலா பயணிகள் தங்களின் கொண்டாட்டத்திற்காக குலு மணாலியில் குவிந்தனர்.

    இதனால், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, சுமார் 3 கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றது.

    இதேபோல், தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்திற்கு வாகனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதனால், லஹாவுல் மற்றும் ஸ்பிட்டி போலீசார் அங்கு ட்ரோன் மூலம் தொடர்ந்த கண்காணித்து வருகின்றனர். 

    • புத்தாண்டை கொண்டாடும் விதமாக பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்று இயற்கையின் அழகை ரசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
    • இரவு பிரார்த்தனைகளுக்கும் தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    உலகம் முழுவதும் நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நட்சத்திர விடுதிகள் மட்டுமின்றி பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் சுற்றுலாவை அனுபவிக்கவும் மற்றும் புத்தாண்டை கொண்டாடவும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்று இயற்கையின் அழகை ரசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களை மகிழ்விக்க விதவிதமான உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விதவிதமான சாக்லேட்டுகள், கேக்குகள் போன்றவையும் கொண்டாட்டத்தில் இடம்பெற உள்ளன. இது தவிர புத்தாண்டு தினத்தில் இரவு பிரார்த்தனைகளுக்கும் தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு இடங்களில் சாக்லேட்டுகள் தயார்செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகை சாக்லேட்டுகள் தங்களது சொந்த தயாரிப்பில் தயாரித்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் இந்த ஆண்டு புது புது வண்ணமயமான சாக்லேட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் குறிப்பாக பாதாம் பிஸ்தா உள்ளிட்டவைகளை வைத்து சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் புது விதமாக பிரௌனி வித் சாக்லேட் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் . இதில் எந்தவித ரசாயனமும் கலக்காமல் சுத்தமாக செய்து வருவதால் சுற்றுலா பயணிகளும் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். சாக்லேட் என்றாலே குழந்தைகளை கவரும் என்பார்கள். தற்போது தயாரிக்கப்பட்டு வரும் சாக்லேட்டுகள் வண்ணமயமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. தங்கள் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கும் இந்த வகையான சாக்லேட்களை சுற்றுலா பயணிகள் அன்பளிப்பாகவும் வழங்கி வருகின்றனர்.

    • தங்கும் விடுதிகள் குறிப்பாக லாட்ஜ்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகிறது.
    • சட்டம்-ஒழுங்கை குலைக்கும் வகையில், பட்டாசு வெடிப்பது, பெண்களை கேலி கிண்டல் செய்வது கூடாது.

    சேலம்:

    ஜனவரி மாதம் 1-ந் தேதி வந்துவிட்டால் போதும். கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. சமூக வலைதளங்கள் அதிகரித்து விட்ட சூழலில் போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். அப்படித் தான் இன்றைய தினமும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

    ஆங்கிலப் புத்தாண்டு-2024 இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கிறது. இதனால் மலைப் பகுதியில் நிலவும் பனி மூட்டம் மற்றும் சிலு சிலு காற்றின் மத்தியில் புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.

    கோவில்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மால்களில் குவிவது ஒரு ரகம். சுற்றுலா தலங்களை தேடி தேடி சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பது மற்றொரு ரகம்.

    அந்த வகையில் "ஏழைகளின் ஊட்டி" என்று பாசமாக அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம், கூட்டமாக படையெடுக்க தொடங்கி உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி , ஆந்திரா உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஏற்காட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    தற்போது தமிழத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் ஏராளமான பேர் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர். ஏற்காட்டில் ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று கொண்டாடுகிறார்கள். இதையொட்டி இளைஞர்கள், சுற்றுலா பயணிகள் விடுதிகளை முன்பதிவு செய்துள்ளதால், அங்குள்ள தங்கும் விடுதிகள் குறிப்பாக லாட்ஜ்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகிறது.

    ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்ததால் திருவிழா கோலம் போல் காட்சியளிக்கிறது. அங்குள்ள பூங்காக்கள், ஏரி, நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

    இதற்காக முன்கூட்டியே அதாவது நேற்று இரவு முதலே பக்காவாக திட்டம் தீட்டி வைத்து பஸ்கள், மோட்டார்சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் சாரை, சாரையாக ஏற்காட்டிற்கு வருகின்றனர்.

    இன்று ஒருநாள் ஏற்காட்டில் தான் என்று. ஏற்காட்டின் மையப் பகுதியான ஏரியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், அதன் இயற்கை அழகை ரசித்தும் வருகின்றனர். ஆங்காங்கே உள்ள திடீர் கடைகளில் கிடைக்கும் சுட சுட சோளக்கதிர், நிலக்கடலை, மிளகாய் பஜ்ஜி போன்றவற்றை ரசித்து ருசித்து சாப்பிடுகின்றனர்.

    சேலம் மாவட்டத்தின் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை காலநிலை குளிர்ச்சியாக இருக்கும். இது டிசம்பர் மாதத்தில் குறைந்தபட்சம் 16.7 செல்சியஸ் வரை தொடும். அந்த வகையில் 4,969 அடி உயர்த்தில் உள்ள ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. பனி படர்ந்து காணப்படுகிறது. அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், மற்றும் சேர்வராயன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஏற்காட்டில் வெப்பநிலை மனதிற்கு இதமாகவும், சில்லென்ற காற்றோடு அம்மண்ணின் வாசத்தையும் அள்ளித் தருவதால் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.

    இந்த புத்தாண்டையொட்டி ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கார்கள் அனைத்தும் சோதிக்கப்பட்டு, மதுபாட்டில்கள் இருந்தால், அவை பறிமுதல் செய்யப்படும். ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளின் நிர்வாகங்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மது அருந்திவிட்டு வரும் சுற்றுலாப் பயணிகளை விடுதிகளில் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் கூறியுள்ளோம்.

    விடுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படால் இருக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். மது அருந்திவிட்டு எவரும் வாகனங்களை இயக்கக் கூடாது.

    சட்டம்-ஒழுங்கை குலைக்கும் வகையில், பட்டாசு வெடிப்பது, பெண்களை கேலி கிண்டல் செய்வது கூடாது. நிகழ்ச்சியாளர்கள், நிகழ்ச்சிகளை கண்டிப்பாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்காட்டில் உள்ள பூங்காக்கள், காட்சி முனைப்பகுதிகள் உள்பட அனைத்து சுற்றுலா இடங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ×