search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆங்கில புத்தாண்டு"

    • இந்தியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் இதுவரை இல்லாத வகையில் புத்தாண்டை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    2024 புத்தாண்டு தினம் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் புத்தாண்டு கலைகட்டியுள்ளது. மியூசிக் நிகழ்ச்சி அமைத்து கொண்டாடியுள்ளனர். இதுவரை இதுபோன்று புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்த்தது இல்லை என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலாத்துறை சார்பில் மியூசிக் நிகழ்ச்சி ஸ்ரீநகரின் காந்தா கர் (மணிக்கூண்டு) பகுதியில் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கூண்டு பகுதியில் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீநகரின் மணிக்கூண்டு பகுதியில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா வந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    முகமது யாசீன் என்பவர் "புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்க்க நான் இங்கே வந்தேன். இதுபோன்ற கொண்டாட்டத்தை இதற்கு முன்னதாக நான் பார்த்ததே இல்லை. அதுவும் லால் சவுக் பகுதியில் இதுபோன்று பார்த்தது கிடையாது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்" என்றார்.

    ஜம்மு-காஷ்மீரில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், லால் சவுக் பகுதியில் நடைபெறுவது இதுதான் முதல் முறை. காஷ்மீர் அமைதியாக இருக்க வேண்டும். அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள். இதெல்லாம் அங்குள்ள மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை சார்ந்துதான் உள்ளது. லால் சவுக் பகுதிகள் மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சுற்றுலா பயணிகள் கூட ஸ்ரீநகர் மணிக்கூண்டு பகுதியில் இதுபோன்று நிகழ்ச்சி நடைபெறுகிறதா... என ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அங்குள்ள மக்களின் அமைதிக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    • புத்தாண்டை வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியாக மக்கள் வரவேற்றனர்.
    • வழிபாட்டு தலங்களில் சிறப்பு பூஜை, மக்கள் தரிசனம். கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.

    உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் புத்தாண்டு பிறந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இனிமேல்தான் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. அந்நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

    புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்தில் "2024-ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டு தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    புத்தாண்டையொட்டி நேற்றிரவு கிறிஸ்தவ தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வேளாங்கண்ணி, சாந்தோம் தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை.
    • வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜை.

    2024 ஆங்கிலப்புதாண்டு பிறந்துள்ளது. ஆங்கில புத்தாண்டை வரவேற்க சென்னையில் பொதுமக்கள் நள்ளிரவு பொது இடங்களில் கூடினர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். அதேபோல் புதுச்சேரியிலும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

    நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்றனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். பல்வேறு இடங்களில் வாணவேடிக்கை நிகழ்த்தி புத்தாண்டை வரவேற்றனர். Happy New Year என கோசமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    புத்தாண்டையொட்டி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி, சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தேவாலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஈரோட்டில் தேவாலயத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து புத்தாண்டை வரவேற்றனர்.

    புத்தாண்டையொட்டி இந்து கோவில்களில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. உற்சவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதல் அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

    கோவை புளியங்குடி முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

    புதுச்சேரி மணக்குள விநாயர் கோவிலில் விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். புதுச்சேரியில் கடற்கரையில் நள்ளிரவு 1.30 மணிக்குப் பிறகும் சுற்றுலா பயணிகள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆங்கில புத்தாண்டு 2024 நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ந்தனர்.

    இதை முன்னிட்டு சென்னையில் புத்தாண்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நட்சத்திர ஹோட்டல்கள், மால்களில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

    2024 புத்தாண்டு பிறந்ததையொட்டி கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருடத்தின் ஆங்கில புத்தாண்டு பிறந்தது.
    • நியூசிலாந்ததில் புத்தாண்டு களைகட்டி வருகிறது.

    நியூசிலாந்தில், இந்திய நேரப்படி சரியாக இன்று மாலை 4.30 மணியளவில் புத்தாண்டு பிறந்தது.

    உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருட ஆங்கில புத்தாண்டு பிறந்தது.

    இந்நிலையில், வாணவேடிக்கையுடன் நியூசிலாந்து மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மேலும், பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டி, ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதனால், நியூசிலாந்ததில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.

    • சென்னையில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    • முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    2023 ஆண்டின் கடைசி நாள் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னைவாசிகளுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். நாளை (டிசம்பர் 31) உலகம் முழுக்க புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

    ஆங்கில புத்தாண்டு பிறப்பை மக்கள் கோலாகலமாக கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், புத்தாண்டை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடும் வகையில் சென்னையில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் சென்னை வார் மெமோரியல் சாலை முதல் லைட் ஹவுஸ் வரை இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

     


    பெசன்ட் நகர் கடற்கரையில், 6-வது அவென்யூ சாலைகள் மூடப்படுகின்றன. கடற்கரை பகுதிகளில் மது அருந்த தடை. கடற்கரையில் மணற்பகுதிகளில் மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும். கடலில் இறங்க அனுமதி கிடையாது. கடற்கரையிலும் மது அருந்த தடை. பெண்கள் மீதான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வாகனங்களில் வேகமாக செல்வது, ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டுவது, சாகசம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நகர் முழுக்க 6 ஆயிரத்திற்கும் அதிக கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    நாளை (டிசம்பர் 31) இரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். கேளிக்கை விடுதிகள், ரெசார்ட், ஓட்டல்கள் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். பாதுகாப்பு கருதி சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் இரவு நேரத்தில் மூடப்படும். புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

    • ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
    • பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடினர்.

    ராமேசுவரம்:

    உலகம் முழுவதும் 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

    இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலும் புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை முதல் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இவ்வாறு வந்த பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடினர். தொடர்ந்து கோவிலில் உள்ள சாமியை தரிசனம் செய்வதற்காக கோவிலின் முதல் பிரகாரத்தில் இருந்து மூன்றாம் பிரகாரம் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்து சென்றனர்.

    அதுபோல் அரையாண்டு தேர்வு தொடர் விடுமுறை மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடற்கரை பகுதி இரண்டு கடல் சேரும் இடமான தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை சாலை பகுதியிலும் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அரிச்சல் முனை கம்பிப்பாடு இடைப்பட்ட பகுதியில் சாலையின் இரு புறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஆகவும் இருந்தது.

    • புத்தாண்டு கொண்டாட்டத்தின் முதற்கட்ட விழாவாக கிறிஸ்துமஸ் மரம் விளக்கு விழா தொடங்கியது
    • 2021-2022 ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தடைவிதித்திருந்தன

    மாமல்லபுரம்:

    சென்னை-மாமல்லபுரம் இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் 2023 ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாட முன்பதிவு துவங்கியது. இதற்கான முதற்கட்ட விழாவாக கிறிஸ்துமஸ் மரம் விளக்கு விழாவை, மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள, "ரேடிசன்புளு டெம்பிள்பே" ஹோட்டலில் அதன் மேலாளர்கள் ஷபின் சர்வேத்தம், அமித்ராஜ் குண்டு உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

    கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 2021-2022 ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தடைவிதித்தது. தற்போது கட்டுப்பாடு இல்லாததால், 2023ம் ஆண்டுக்கான புத்தாண்டு வர இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் கேளிக்கை விழாக்களை நடத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து வகை ஹோட்டல்களும் முன்பதிவை துவங்கி உள்ளன.

    ×