என் மலர்
நீங்கள் தேடியது "Special Hill Rail service"
- ஊட்டி சிறப்பு மலை ரெயில் சேவை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஜூலை 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ெரயில்வே அறிவி த்துள்ளது.
- ஆன்லைனில் முன்பதிவு செய்து பதிவு செய்து பயணம் செய்யலாம்.
ஊட்டி,
ஊட்டி சிறப்பு மலை ரெயில் சேவை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஜூலை 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ெரயில்வே அறிவி த்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
உலக புகழ்பெற்ற ஊட்டி மலை ரெயில் தினந்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு ஊட்டி சென்ற டையும். ஊட்டி கோடை சீசனையொட்டி சுற்றுலா ப்பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் கடந்த ஒரு மாதமாக சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் சேவை ஜூன் 30-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில், கோடை சீசன் முடிவடைந்த நிலையிலும், சுற்றுலா ப்பயணிகள் தொடர்ந்து மலை ரெயிலில் பயணி ப்பதால் அவர்களின் வசதி க்காக சிறப்பு மலை ரெயில் சேவை ஜூலை 30-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கி ழமைகளில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி, ஜூலை 1-ந் தேதி முதல் சனிக்கிழமை களில் மேட்டுப்பாளை யத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் மலை ரெயில் பகல் 2.45 மணிக்கு ஊட்டி சென்றடையும். இதேபோல் ஜூலை 2-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கி ழமைகளில் ஊட்டியில் இருந்து முற்பகல் 11.25 மணிக்குப் புறப்படும் மலை ரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
தினசரி இயக்கப்படும் ஊட்டி மலை ரெயிலுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதுபோல, இந்த சிறப்பு ரெயிலுக்கும் (வண்டி எண். 06171, 06172) ஆன்லைனில் முன்பதிவு செய்து பதிவு செய்து பயணம் செய்யலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- சிறப்பு மலை ரெயில் 6 நாட்கள் இயக்கப்படும்.
- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து தினசரி ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயிலில் உள்ளூர் மட்டுமல்லாமல், வெளிமாவட்டம், வெளிமாநில, மாவட்ட மக்களும் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து கேத்திக்கும் தினசரி 3 முறையும் மலை ரெயில் இயக்க சேலம் கோட்ட ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து வரும் டிசம்பர் மாதம் 25, 27, 29, 31 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரெயில் புறப்பட்டு ஊட்டிக்கு மதியம் 2.25 மணிக்கு செல்லும்.
இதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வரும் டிசம்பர் மாதம் 26, 28, 30 மற்றும் வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி வரை சிறப்பு மலைரெயில் இயக்கப்படும்.
ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு ரெயில் புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.20 மணிக்கு வந்தடையும். இதனிடையே மேட்டுப்பாளையம்-குன்னூர் வரை முதல் வகுப்பில் 40 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள் இருக்கும்.
இதேபோல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வரும் டிசம்பர் 28-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 2-ந் தேதி வரை சிறப்பு மலை ரெயில் 6 நாட்கள் இயக்கப்படும்.
குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு ஊட்டிக்கு 9.40 மணிக்கு சென்றடையும். இதேபோல் ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு மாலை 5.55 மணிக்கு வந்தடையும். இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
மேலும் ஊட்டியில் இருந்து கேத்திக்கு வரும் டிசம்பர் 28-ந் தேதியில் இருந்து ஜனவரி 2-ந் தேதி வரை 6 நாட்களுக்கு தினசரி 3 முறை மலை ரெயில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- 28-ந்தேதி ஜனவரி 2-ந் தேதி வரை 6 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படும்.
- ரெயிலில் பயணிக்க 180 பயணிகள் வந்திருந்தனர்.
மேட்டுப்பாளையம்:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு இன்று முதல் வருகிற 1-ந் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து கேத்திக்கு தினமும் 3 முறை மலை ரெயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட ரெயில் நிர்வாகம் அறிவித்தது.
மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து இன்று, வருகிற 27, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளிலும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நாளை, 28, 30 மற்றும் வரும் ஜனவரி 1-ந் தேதிகளிலும் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
மேட்டுப்பாளையம்-குன்னூர் வரை முதல் வகுப்பில் 40 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள் இருக்கும்.
இதேபோல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வருகிற 28-ந் தேதி ஜனவரி 2-ந் தேதி வரை 6 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படும். இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
மேலும் ஊட்டியில் இருந்து கேத்திக்கு வருகிற 28-ந் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 2-ந் தேதி வரை 6 நாட்களுக்கு தினசரி 3 முறை மலை ரெயில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
அதன்படி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு சிறப்பு மலைரெயில் ஊட்டி நோக்கி புறப்பட்டது. இந்த ரெயிலில் பயணிக்க 180 பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள் ரெயிலில் ஏறி உற்சாகத்துடன் பயணித்தனர். சிறப்பு மலைரெயில் இயக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






