search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "English New Year"

    • இந்தியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் இதுவரை இல்லாத வகையில் புத்தாண்டை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    2024 புத்தாண்டு தினம் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் புத்தாண்டு கலைகட்டியுள்ளது. மியூசிக் நிகழ்ச்சி அமைத்து கொண்டாடியுள்ளனர். இதுவரை இதுபோன்று புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்த்தது இல்லை என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலாத்துறை சார்பில் மியூசிக் நிகழ்ச்சி ஸ்ரீநகரின் காந்தா கர் (மணிக்கூண்டு) பகுதியில் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கூண்டு பகுதியில் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீநகரின் மணிக்கூண்டு பகுதியில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா வந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    முகமது யாசீன் என்பவர் "புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்க்க நான் இங்கே வந்தேன். இதுபோன்ற கொண்டாட்டத்தை இதற்கு முன்னதாக நான் பார்த்ததே இல்லை. அதுவும் லால் சவுக் பகுதியில் இதுபோன்று பார்த்தது கிடையாது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்" என்றார்.

    ஜம்மு-காஷ்மீரில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், லால் சவுக் பகுதியில் நடைபெறுவது இதுதான் முதல் முறை. காஷ்மீர் அமைதியாக இருக்க வேண்டும். அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள். இதெல்லாம் அங்குள்ள மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை சார்ந்துதான் உள்ளது. லால் சவுக் பகுதிகள் மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சுற்றுலா பயணிகள் கூட ஸ்ரீநகர் மணிக்கூண்டு பகுதியில் இதுபோன்று நிகழ்ச்சி நடைபெறுகிறதா... என ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அங்குள்ள மக்களின் அமைதிக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    • ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக பிறந்துள்ளது.
    • நள்ளிரவு முதலே கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.

    சென்னை:

    2023-ம் ஆண்டு முடிந்து 2024-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக பிறந்துள்ளது. இதை யொட்டி கோவில்களில் மக்கள் புத்தாண்டு சிறப்பு தரிசனத்துக்காக அலை மோதினார்கள்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. புத்தாண்டில் இன்று சாமி தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு முதலே கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.

    பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அதிக அள வில் காணப்பட்டனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசைக்கும் ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. அதன்வழியாக சென்று பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து புத்தாண்டில் தங்கள் எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேற மனமுருகி வேண்டிக் கொண்டனர்.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இந்த கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. தி.நக ரில் உள்ள திருப்பதி தேவஸ் தான கோவிலில் தரிசனம் செய்ய நள்ளிரவு முதலே பக்தர்கள் திரண்டிருந்தனர். பெருமாளை தரிசித்து செல்வசெழிப்பான வாழ்க்கையை தருமாறு மனமுருகி பக்தர்கள் வேண்டிக் கொண்டனர்.

    கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக கோவிலின் முன்பு உள்ள திருமலைபிள்ளை சாலையில் தடுப்புகள் அமைத்து நீண்ட வரிசை ஏற்படுத்தப் பட்டிருந்தது. அதன் வழியாக சென்று பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.

    வடபழனி முருகன் கோவிலில் புத்தாண்டை யொட்டி சாமி தரிசனத்துக்காக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரமாக முருகப்பெருமானுக்கு தங்க நாணய அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதனை பார்த்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முருகா... முருகா... என்று உச்சரித்தப்படியே மன முருகி வழிபட்டனர்.

    இதன் பின்னர் சந்தன காப்பு அலங்காரத்திலும் முருகன் காட்சி அளித்தார். அதிகாலை 4 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையில் தங்க நாணய அலங்காரத்துடன் காட்சி அளித்த முருகனுக்கு பின்னர் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.

    புத்தாண்டையொட்டி இன்று இரவு 9 மணிக்கு நடையை சாத்தாமல், பக்தர்கள் இருக்கும் வரையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக நிழல் தரும் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன. கோயம்பேட்டில் உள்ள குருங்காலீஸ்வரர் கோவிலிலும் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னை பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோவிலிலும் நள்ளிரவில் இருந்தே திரண்டனர். பக்தர்கள் அதிகாலையில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். டிசம்பர் 31-ந்தேதியான நேற்று கந்தகோட்டம் முருகன் கோவில் திறக்கப்பட்ட நாளாகும். இதையொட்டி நேற்று மாலையில் கோவிலில் 108 காங்காபிஷேகம் செய்யப்பட்டது.

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வடிவுடையம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பாடி சிவன் கோவில், திருமுல்லை வாயலில் உள்ள பச்சையம்மன் மன்னாதி ஈஸ்வரர் கோவில் ஆகியவற்றிலும் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு தரிசனம் செய்தார்கள்.

    பச்சையம்மன் மன்னாதி ஈஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பிரம்மமுகூர்த்த நேர மான அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றது.

    பூப்பந்தல் அமைத்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலில் திருவல்லீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. திருவேற்காடு தேவி கருமா ரியம்மன் கோவிலுக்கு செல்ல சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னையை அடுத்த ரங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், மடிப்பாக்கம் பாதாள விநாயகர் கோவில், கீழ்க்கட்டளை சக்திமுருகன் கோவில், லட்சுமிநாராயணா கோவில் ஆகிய ஆலயங்களில் இன்று புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கீழ்க்கட்டளை லட்சுமி நாராயணா கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்க ளுக்கு புதிய 5 ரூபாய் நாணயம் வழங்கப்பட்டது.

    புரசவைாக்கம் கங்காதீஸ்வரர் ஆலயம் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டு தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    • புத்தாண்டை வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியாக மக்கள் வரவேற்றனர்.
    • வழிபாட்டு தலங்களில் சிறப்பு பூஜை, மக்கள் தரிசனம். கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.

    உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் புத்தாண்டு பிறந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இனிமேல்தான் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. அந்நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

    புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்தில் "2024-ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டு தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    புத்தாண்டையொட்டி நேற்றிரவு கிறிஸ்தவ தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வேளாங்கண்ணி, சாந்தோம் தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை.
    • வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜை.

    2024 ஆங்கிலப்புதாண்டு பிறந்துள்ளது. ஆங்கில புத்தாண்டை வரவேற்க சென்னையில் பொதுமக்கள் நள்ளிரவு பொது இடங்களில் கூடினர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். அதேபோல் புதுச்சேரியிலும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

    நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்றனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். பல்வேறு இடங்களில் வாணவேடிக்கை நிகழ்த்தி புத்தாண்டை வரவேற்றனர். Happy New Year என கோசமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    புத்தாண்டையொட்டி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி, சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தேவாலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஈரோட்டில் தேவாலயத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து புத்தாண்டை வரவேற்றனர்.

    புத்தாண்டையொட்டி இந்து கோவில்களில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. உற்சவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதல் அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

    கோவை புளியங்குடி முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

    புதுச்சேரி மணக்குள விநாயர் கோவிலில் விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். புதுச்சேரியில் கடற்கரையில் நள்ளிரவு 1.30 மணிக்குப் பிறகும் சுற்றுலா பயணிகள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆங்கில புத்தாண்டு 2024 நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ந்தனர்.

    இதை முன்னிட்டு சென்னையில் புத்தாண்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நட்சத்திர ஹோட்டல்கள், மால்களில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

    2024 புத்தாண்டு பிறந்ததையொட்டி கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    ×