search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    6000 கேமரா வெச்சிருக்கோம்.. 1 மணி வரை தான் அனுமதி.. New Year-க்கு செக் வைக்கும் போலீஸ்
    X

    6000 கேமரா வெச்சிருக்கோம்.. 1 மணி வரை தான் அனுமதி.. New Year-க்கு செக் வைக்கும் போலீஸ்

    • சென்னையில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    • முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    2023 ஆண்டின் கடைசி நாள் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னைவாசிகளுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். நாளை (டிசம்பர் 31) உலகம் முழுக்க புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

    ஆங்கில புத்தாண்டு பிறப்பை மக்கள் கோலாகலமாக கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், புத்தாண்டை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடும் வகையில் சென்னையில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் சென்னை வார் மெமோரியல் சாலை முதல் லைட் ஹவுஸ் வரை இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.


    பெசன்ட் நகர் கடற்கரையில், 6-வது அவென்யூ சாலைகள் மூடப்படுகின்றன. கடற்கரை பகுதிகளில் மது அருந்த தடை. கடற்கரையில் மணற்பகுதிகளில் மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும். கடலில் இறங்க அனுமதி கிடையாது. கடற்கரையிலும் மது அருந்த தடை. பெண்கள் மீதான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வாகனங்களில் வேகமாக செல்வது, ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டுவது, சாகசம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நகர் முழுக்க 6 ஆயிரத்திற்கும் அதிக கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    நாளை (டிசம்பர் 31) இரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். கேளிக்கை விடுதிகள், ரெசார்ட், ஓட்டல்கள் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். பாதுகாப்பு கருதி சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் இரவு நேரத்தில் மூடப்படும். புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    Next Story
    ×