search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motorists"

    • சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பயங்கர இரைச்சல் சத்தத்துடன் கியாஸ் வெளியேறத் தொடங்கியது.
    • கியாஸ் தீப்பற்றாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரையில் தனியார் கியாஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து பைப் மூலம் கியாஸ் கொண்டுவரப்பட்டு சேமிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு டேங்கரில் கியாஸ் நிரப்பிய லாரி ஒன்று மீஞ்சூர்-மணலி நெடுஞ்சாலையில் வெள்ளிவாயில் சாவடி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரியில் உள்ள டேங்கரில்இருந்து திடீரென கியாஸ் கசிந்து வெளியேறத் தொடங்கியது.

    சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பயங்கர இரைச்சல் சத்தத்துடன் கியாஸ் வெளியேறத் தொடங்கியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை சாலையின் நடுவிலேயே நிறுத்திவிட்டு இறங்கினார். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.

    மேலும் வாகனங்கள் திரும்பி செல்ல முடியாததால் அதில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் சோபிதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். மேலும் லாரியில் இருந்து வெளியேறிய கியாசை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.மேலும் அத்திப்பட்டு, மணலி புதுநகர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து சுமார் 2 மணிநேரத்திற்கு பிறகு கேஸ் நிறுவனத்தில் இருந்து வந்த ஊழியர்கள் டேங்கரில் இருந்து கியாஸ்கசிவு ஏற்பட்ட பகுதியை சரிசெய்தனர். இதன்பின்னர் கியாஸ் ஏற்றிய லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இதனால் மீஞ்சூர்- திருவொற்றியூர் சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கியாஸ் தீப்பற்றாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குப்பையுடன் வந்த டிராக்டர்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
    • மழைவெள்ளத்தில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நிலங்களில் சேர்ந்ததால் அந்த இடமும் பாழாகும் அபாயம் உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் சேறும் குப்பைகளை துப்புரவுப் பணியாளர்கள் மணவாளன் நகர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் கொட்டிவந்தனர்.

    ஆனால் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவது நிறுத்தப்பட்டு பின்னர் வெங்கத்தூர், கன்னிமாநகர் பகுதியில் பள்ளி அங்கன்வாடி குடியிருப்புகள் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டது.

    இதில் தினம்தோறும் 5 டன் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் மலை போல் சேர்ந்து துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குப்பையுடன் வந்த டிராக்டர்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் சேரும் குப்பைகளை தற்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தடுப்புகள் அமைத்து கொட்டப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான டிராக்டர்கள் மூலம் கொட்டப்படும் கழிவுகள் சாலையோரம் குவிந்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனம் மற்றும் பொது மக்கள் சென்று வரும் நிலையில் குப்பை கழிவுகளால் தொற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கழிவுகளில் பிளாஸ்டிக், தெர்மாகோல், மெத்தை, முட்டை கழிவுகள், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் கால் நடைகள், நாய்கள் அதனை இழுத்து சாலையில் போட்டு சென்று விடுகின்றன. தற்போது மழை பெய்து வரும் நிலையில் குப்பை கழிவுகளில் தண்ணீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழைவெள்ளத்தில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நிலங்களில் சேர்ந்ததால் அந்த இடமும் பாழாகும் அபாயம் உள்ளது.

    எனவே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் தெரு நாய்கள் நின்று கொண்டு இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தூரத்துகிறது.
    • சிறுவர், சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேருராட்சி பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக அங்குள்ள சாலையில் சுற்றி திரிந்து வருகிறது. சில நேரம் சாலையின் நடுவே சண்டையிட்டு அவ்வழியாக செல்லும் இருசகக்கர வாகனத்தில் விழுந்து அதில் வருபவர்களை பயமுறுத்துகிறது. மேலும் தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் தெரு நாய்கள் நின்று கொண்டு இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தூரத்துகிறது. இதில் சிலர் தவறி விழுந்து காயம் அடையும் நிலையும் ஏற்படுகிறது.

    சிறுவர், சிறுமிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அதிகாரிகள் தெருவில் திரியும் நாய்களை கட்டுப்படுத்திட நடவடிக்கை வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • .வாகனங்கள் மிதமான வேகத்தில் சென்றதால் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
    • பிரதான சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடித்தால் இது போன்ற விபத்துக்கள் நிகழாது என்று தெரிவித்தனர்.

    உடுமலை:

    உடுமலையில் இருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக திருமூர்த்தி மலைக்கு செல்வதற்கு பிரதான சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இதன் மூலமாக சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள்,வாகன ஓட்டிகள் பயனடைந்து வருகின்றனர். இதில் உடுமலை திருமூர்த்தி மலை சாலையில் யூனியன் ஆபீஸ் பஸ் நிலையத்தின் அருகே பாதாள சாக்கடை தொட்டி சேதம் அடைந்தது. அதைத் தொடர்ந்து அந்த தொட்டி சீரமைக்கப்பட்டது.இதற்காக அதன் இருபுறங்களிலும் சாலையின் பகுதி அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து டிவைடர்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சூழலில் நேற்று அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. டிவைடர் இருந்த காரணத்தினால் வாகன ஓட்டிகளுக்குள் தடுமாற்றம் ஏற்பட்டது. அப்போது உடுமலை நோக்கி சென்ற மூன்று கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.வாகனங்கள் மிதமான வேகத்தில் சென்றதால் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்படவில்லை. ஆனால் கார்கள் சேதம் அடைந்தது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த சாலையில் பாதாள சாக்கடை தொட்டிகள் சேதம் அடைவது தொடர்கதையாக உள்ளது. ஒரு முறை அமைக்கும் போதே அவற்றை தரமானதாக அமைத்தால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாது. கட்டுமானத்திற்காக வைக்கப்பட்ட டிவைடரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.பிரதான சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடித்தால் இது போன்ற விபத்துக்கள் நிகழாது என்று தெரிவித்தனர்.

    • இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சாலையின் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
    • சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து செல்லும் வாகனங்கள் தச்சூர் கூட்டு சாலையில் இருந்து பஞ்செட்டி சர்வீஸ் சாலை வழியாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இணையும். இந்த சர்வீஸ் சாலையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இது சென்னை, செங்குன்றம், வண்டலூர், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஆரணி, தடா, மாதர்பாக்கம், ஊத்துக்கோட்டை, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பொன்னேரி- தச்சூர் கூட்டு சாலை அருகில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் உள்ள சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    மழைநீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் காணப்படுவதால் சாலைகள் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி உள்ளது. இதனால் இந்த சர்வீஸ் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சாலையின் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    சுமார் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு சர்வீஸ்சாலை படுமோசமாக உள்ளது. மேலும் இந்த சாலையில் செல்வதற்கு செங்குன்றம் சுங்கச்சாவடி மூலம் வரி வசூலும் செய்யப்படுகிறது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது தொடர்பாக வாகன ஓட்டிகள் கூறும்போது, இந்த சாலையை சீரமைக்ககோரி தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதனை கண்டித்து விரைவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். சாலையில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றவும், மழைநீர் கால்வாயை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சேறும் சகதியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
    • இனிமேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது.

    மதுரை

    மதுரையில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவுக்கு கோடையை மிஞ்சும் வகை யில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதற்கு முடிவு கட்டும் வகையில் சில நாட்களாக மாலை வேளைகளில் பெய்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    ஆனால் அதே வேளை யில் மழைக்கு தாங்காத மாநகராட்சி சாலைகளால் மக்கள் மறுபுறம் கடும் அவ தியடைந்து வருகிறார்கள். ஆங்காங்கே பல்வேறு கார ணங்களுக்காக தோண்டப் பட்ட குழிகள் சிறிய குளம், குட்டைகளாக மாறியுள்ளன. குறிப்பாக பழங்காநத்தம், செல்லூர் உள்ளிட்ட பகுதிக ளில் பெரும் சேதம் ஏற்பட்டு மக்கள் நடக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர்.

    சேறும், சகதியுமான சாலை

    மதுரை மாநகராட்சி 27-வது வார்டு செல்லூர் 60 அடி சாலை மெயின் ரோட் டில் சேறும் சகதியாக வயல்வெளி போல் காட்சி அளிப்பதால் அந்த வழியாக நடந்து செல்வோர், வாக னங்களில் செல்வோர் சாக சம் செய்வது போல் கடக்க வேண்டியதுள்ளது. சீர மைப்பு மற்றும் மராமத்து பணிகள் மந்த நிலையில் நடப்பதால் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்ற னர்.

    இதுகுறித்து 27-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.மாயத்தேவன் கூறுகை யில், செல்லூர் 60 அடி ரோட்டில் சேரும், சகதியாக உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வரு கின்றனர். நடந்து செல் வோர், வாகனங்களில் செல் வோர் விழுந்து செல்கின்ற னர்.

    தினமும் ஆயிரக்கணக் கானோர் கடந்து செல்லும் இந்த ரோட்டில் உடனடியாக தார்ச்சாலை அமைக்க வேண்டும். பலமுறை இது குறித்து மாமன்ற கூட்டங்க ளில் எடுத்துரைத்தும் ஆணையாளரிடம் மனு வழங்கியும் பணிகள் நடை பெறவில்லை. சம்பந்தழு ழுட்ட மாநகராட்சி அதிகாரி யிடம் சொல்லியும் அவரும் எதுவும் செய்து கொடுப்ப தில்லை.

    நான் கவுன்சிலராக பொறுப்பேற்ற போது செல்லூர் 60 அடி ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கியது. 15 மாதங்கள் ஆகியும் இன்னும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவ டையவில்லை. மேலும் குப்பை அள்ளும் பேட்டரி வண்டிகள் ரிப்பேர் ஆகி உள்ளதால் தூய்மை பணியா ளர்கள் குப்பைகளை சேகரிக்க முடியவில்லை. மேலும் குப்பைத்தொட் டியை எடுத்துச் செல்லும் குப்பை லாரிகளும் சரிவர இந்த வார்டுக்கு வருவ தில்லை.

    எனது வார்டு அ.தி.மு.க. வார்டு என்பதால் மாநக ராட்சி அதிகாரிகள் இந்த வார்டை தொடர்ந்து புறக்க ணித்து வருகின்றனர். பாதாள சாக்கடை கழிவு நீர் தெருக்களில் தேங்கி இருக் கும்போது கழிவுநீர் உறிஞ் சும் வாகனத்தை அனுப்பச் சொன்னால் அனுப்புவ தில்லை. மேலும் இந்த வார்டில் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது. சமீ பத்தில் ஒரு வெறி நாய் எட்டு பேருக்கும் மேல் கடித்தது. உடனடியாக அதி காரிகளுக்கு இதைச் சொல் லியும் நாய் பிடிக்கும் வண்டியை அனுப்பி நாய் களை பிடிப்பதற்கு ஏற்பாடு கள் செய்யவில்லை.

    இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளி யில் செல்ல முடியவில்லை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கிறது. இதனால் பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல பயப்படு கின்றனர். மேலும் இந்த வார்டுக்கு உட்பட்ட பல தெருக்களில் சாலை வசதி கள் இல்லாமல் உள்ளதால் குண்டும், குழியுமாக காணப் படுகிறது. மழை நீர் தேங்கி கொசுத்தொல்லை அதிக மாகி வருகிறது.

    எனவே உடனடியாக அனைத்து தெருக்களிலும் தார்ச் சாலைகளை அமைப் பதற்கு மாநகராட்சி அதிகா ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக் களை திரட்டி சாலை மறிய லில் ஈடுபட போகிறேன் என்றார்.

    • சாலையின் நடுவே குறுக்காக பள்ளம் தோண்டி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
    • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் -நாஞ்சிக்கோட்டை சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கருணாவதி நகர் பஸ் நிறுத்தம் அருகில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி பாதியிலே நிறுத்தப்பட்டு முழுமையாக முடியாத நிலையில் உள்ளது. மேலும் சாலையின் மேற்கு பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலை கிழக்குப் பகுதிக்கு இணைக்கும் வகையில் சாலையின் நடுவே குறுக்காக பள்ளம் தோண்டி கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இதனால் அந்த வழியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பணியை விரைந்து முடிக்க கோரி ஏற்கனவே கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த கோரிக்கை நிறைவேறாததால் இன்று காலை தஞ்சை- நாஞ்சிக்கோட்டை சாலையில் திடீரென பொதுமக்கள் திரண்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தொடர்ந்து நடத்தி உடனடியாக முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இது குறித்து தகவல் அறிந்த தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளது.
    • இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும், பாசன ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது. மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லைக்கோடு போல இந்த ஆறு அமைந்துள்ளது. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ஆற்றின் மேல் பழமையான உயர் மட்டப் பாலம் அமைந்துள்ளது.

    தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கடந்து செல்லும் இந்த ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பக்கவாட்டு சுவர்களில் மரங்கள் முளைத்தும், தரைத்தளத்தில் புற்கள் வளர்ந்தும் உள்ளதால் பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பல மாதங்களுக்கு முன் நடந்த வாகன விபத்தால் பாலத்தின் ஒரு பகுதியில் பக்கவாட்டு சுவர் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த பக்கவாட்டு சுவர்களில் சாய்ந்து நின்று சில நேரங்களில் சற்று தொலைவில் செல்லும் ரெயில், சலசலத்து ஓடும் ஆறு என இயற்கையை பலரும் ரசிக்கின்றனர்.

    அதுபோன்ற சமயங்களில் பக்கவாட்டு சுவர் முழுமையாக உடைந்தால் பொதுமக்கள் ஆற்றில் விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் சேதமடைந்த பக்கவாட்டு சுவரை சீரமைக்கவும், பாலத்தை முழுமையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த பாலத்தில் மின் விளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரத்தில் பணி முடிந்து திரும்பும் தொழிலாளர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    எனவே பாலத்தின் மீது மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    தடுப்பு சுவர்

    குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே உப்பாறு ஓடைசெல்கிறது. உப்பாறு ஓடடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணை மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.உப்பாறு ஓடையின் குறுக்கே பல இடங்களில் தரை பாலமும் உயர் மட்ட பாலமும் கட்டப்பட்டுள்ளன.

    உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தடுப்பு சுவர் உடைந்து காணப்படுகிறது. மேலும் பாலத்துக்கு அருகில் எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் பாலத்தின் இரு புறங்களிலும் கரைப்பகுதியில் மழை நீர் தேங்கி விடுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாலத்தின் அடிப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் தேங்கி கிடக்கிறது.எனவே நீர் வழித்தடத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கான்கிரீட் பாலம்

    குண்டடம் அடுத்துள்ள மேட்டுக்கடையிலிருந்து கோவை மாவட்டம் ஜல்லிபட்டி செல்லும் மெயின் ரோட்டில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூரிலிருந்து பொங்கலூர், மேட்டுக்கடை வழியாக மருதூர், பொன்னாபுரம் பகுதிக்கு செல்லவும் இந்த ரோடுதான் முக்கியமாக விளங்கி வருகிறது. இதில் தும்பலப்பட்டியை ஒட்டி பாயும் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. தரைப்பாலத்தில் வேறெங்கும்இல்லாதவிதமாக 2 ஓடைகள் இணைகின்றன. மழைக்காலங்களில் ஓடைகளில் தண்ணீர் பாயும்போது, தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து செல்வதால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கின்றனர். மேலும் குறைந்த அளவு தண்ணீர் செல்லும்போது பாலத்தில் பாசி பிடித்து இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து செல்லும் நிலையும் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலத்தின் மீது தார்ஜல்லி போட்டுள்ளனர். மேலும் பாலத்தின் வடக்கு பகுதியில் குறுகிய வளைவு இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் மேற்கண்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து ரோட்டின் வளைவுகளை சரிசெய்து, உயர்மட்ட கான்கிரீட் பாலம் அமைத்து தரவேண்டும் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தூத்துக்குடி 2-ம் கேட் ஆண்டாள் தெரு பகுதி வழியாக செல்லும் போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பாக்கியலட்சுமி படுகாயம் அடைந்தார்.
    • தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 62). இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருகிறார்.

    மோட்டார் சைக்கிள் மோதி பலி

    இந்நிலையில் பாக்கியலட்சுமி வழக்கம் போல வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி 2-ம் கேட் ஆண்டாள் தெரு பகுதி வழியாக செல்லும் போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனால் பாக்கியலட்சுமி சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் ரத்தின பாண்டி மற்றும் போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வழக்குப்பதிவு

    மேலும் விபத்து ஏற்படுத்திய தூத்துக்குடி யாதவர் 2-வது தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆரி முகமதுகான் மீது வழக்குப்பதிவு செய்து அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மாவட்ட காவல்துறையின் அறிவிப்புகள் மற்றும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் சைலன்ஸர்களை அகற்றிவிட்டு அதி வேகமாக வாகனங்களை ஓட்டி சத்தத்தை எழுப்பி வருகின்றனர். இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் அதிகமான விபத்துகளும் நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடியை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் வலது புறமாக நேர் எதிர் எதிரே வாகனம் ஓட்டுவதும் அதிகரித்து வருகிறது. இது போன்ற வாகன ஓட்டிகள் மீதும், சாலைகளில் அறிவிப்புகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மீதும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரையில் தூசி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.
    • சாலைகளில் அதிகளவில் மண் மற்றும் தூசி சேர்கிறது.

    மதுரை

    மதுரை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாலங்கள் அமைப்பது குறித்தும், மெட்ரோ திட்டம் செயல்படுத்துவது குறித்தும் திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் மதுரை நகரின் முக்கிய சாலைகளில் மண்ணும், தூசியும் பறந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் சேரும் மண்ணை அகற்றும் பணிகளில் ஏற்படும் தாமதம் காரணமாக அதிகளவில் மண் சேர்ந்து காற்று அடிக்கும் போது மண்ணும் தூசியும் பறந்து வாகன ஓட்டிகளை கவனம் சிதற செய்கிறது.

    மதுரை சாலைகளில் கார்கள், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவில் மண் சேர்கிறது. இந்த நிலையில் இவ்வாறு சேரும் மண்ணை அதிகாலை நேரத்திலேயே அகற்றி சாலையை தூய்மையாக பராமரிப்பதற்காக புதிய நவீன மண் அகற்றும் எந்திரங்களை வாங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஆனால் அந்த வாகனங்களை வாங்குவது தாமதமாகி வருகிறது.

    தற்போது மாநகராட்சி வசம் மண் அகற்றும் பணிகளை மேற்கொள்வ தற்காக 5 எந்திரங்கள் உள்ளன. ஆனால் 2 எந்திரங்கள் பழுதடைந்துள்ளன. 3 எந்திரங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இந்த 3 எந்திரங்களை பயன்படுத்தி 5 மண்டல பகுதிகளிலும் உள்ள முக்கிய சாலைகளில் மண் அகற்றும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் சாலைகள் மற்றும் சாலை தடுப்புகளின் ஓரங்களில் சேரும் மண்ணை அகற்றும் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் மண் அகற்றும் பணிகளை விரைவாக செய்து முடிக்க இயலாமல் சில பகுதிகளில் மண் அகற்ற முடியாமல் போகிறது.

    இதனால் அந்தப் பகுதிகளில் மேலும் மண் சேர்ந்து சாலைகள் தூசியாக காணப்படுகின்றன. அந்த சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது தூசி பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில், கண்களில் விழுகிறது. இதனால் அவர்கள் கவனம் சிதறி தடுமாறுகின்றனர்.

    மதுரையில் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள ஆரப்பாளையம் - திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோடு, தேனி ரோடு, புதுஜெயில் ரோடு, சிம்மக்கல், அண்ணா பஸ் நிலையம், மாட்டுத்தாவணி ரோடு, புதூர் ரோடு, கே.கே.நகர், காமராசர் சாலை ஆகிய சாலைகளில் அதிகளவில் மண் மற்றும் தூசி சேர்கிறது.

    சில இடங்களில் குடிநீர் பைப்லைன் உள்ளிட்ட திட்டங்களுக்காக பள்ளம் தோண்டப்பட்டு அவை மூடப்பட்டு சரியாக சாலை அமைக்காமல் விடப்படுகிறது. அந்த சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதுடன் மண், தூசி சேர்ந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்து பவையாக உள்ளன.

    இந்த நிலையில் மதுரை சாலைகளில் மண் அகற்றும் பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு நவீன எந்திரங்களை விரைவாக வாங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், பள்ளம் தோண்டி மூடும் பகுதிகளில் சாலைகளை விரைவாக செப்பனிட வேண்டும் என்றும், மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக அடையாளப் படுத்தும் வகையில் சாலைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெடுஞ்சாலைத்துறை சார்பில் பன்னம்பாறை விலக்கில், நெல்லைக்கு செல்ல வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது.
    • அதில், 55 கிலோமீட்டர் தொலைவு கொண்டதை 40 கிலோமீட்டர் தூரம் உள்ளதாக தவறுதலாக பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் சென்று வருகின்றன. நெடுஞ்சாலைத்துறை சார்பில் பன்னம் பாறை விலக்கில், நெல்லைக்கு செல்ல வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதில், 55 கிலோமீட்டர் தொலைவு கொண்டதை 40 கிலோமீட்டர் தூரம் உள்ளதாக தவறுதலாக பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. நெடுஞ்சாலைதுறையினரின் கவனகுறைவான செயலால் வெளியிடங்களில் இருந்து கூகுள் மேப்பை பயன்படுத்தி இங்கு வருபவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும், எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • அந்த பகுதியில் நாய்-குரங்குகள் தொல்லை அதிகமாக காணப்பட்டது.
    • திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருமங்கலக்குடியில் வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். அந்த பகுதியில் நாய்-குரங்குகள் தொல்லை அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வேகத்தடை அமைக்கக்கோரியும், நாய்-குரங்குகளை கட்டுப்படுத்தக்கோரியும் திருமங்கலக்குடியில் உள்ள கல்லணை பூம்புகார் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

    ×