search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Service road"

    • போக்குவரத்து நிறைந்த சாலையாக மாறியுள்ளது.
    • மறைமலை அடிகள் சாலையின் குறுக்காக எதிர்ப்புறத்தில் செல்கின்றனர்.

    புதுச்சேரி

    புதுவை உருளையன்பேட்டை தொகுதி மறைமலை அடிகள் சாலை மிகுந்த போக்குவரத்து நிறைந்த சாலையாக மாறியுள்ளது.

    மறைமலை அடிகள் சாலை புதிய பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள தென்னஞ்சாலை ரோடு, கென்னடி நகர், திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் கடலூர் சாலையிலிருந்து மறைமலை அடிகள் சாலையின் குறுக்காக எதிர்ப்புறத்தில் செல்கின்றனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து குழப்பம் ஏற்படுகிறது. மறுபுறத்தில் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தை ஒட்டியுள்ள ஒத்தவாடை வீதி, முல்லை நகர் பகுதியை சேர்ந்த மக்கள் போலீஸ் நிலையத்தை ஒட்டி எதிர்புறம் வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

    இதை தவிர்க்க இப்பகுதியில் சர்வீஸ் சாலை அமைப்பது குறித்து ஆலோ சனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வீஸ் சாலை அமைப்பது குறித்து தொகுதி எம்.எல்.ஏ. நேரு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். முதல்கட்டமாக தென்னஞ்சாலை வரை சுமார் 15 அடி அகலத்தில் சர்வீஸ் சாலை அமைப்பது என்றும், அதில் எதிர்ப்புறமாக வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்ய முடிவு செய்தனர்.

    மறுபுறத்தில் வாய்க்கால் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்தவுடன் 10 அடி அகலத்தில் சர்வீஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் உமாபதி, திருஞானம், போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் மாறன், மின்துறை செயற்பொறியாளர் கனியமுது, நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், அரசு துறை உதவி பொறியாளர்கள் இளநிலை பொறியாளர்கள், மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தினர் பலர் உடனிருந்தனர். 

    • இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சாலையின் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
    • சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து செல்லும் வாகனங்கள் தச்சூர் கூட்டு சாலையில் இருந்து பஞ்செட்டி சர்வீஸ் சாலை வழியாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இணையும். இந்த சர்வீஸ் சாலையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இது சென்னை, செங்குன்றம், வண்டலூர், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஆரணி, தடா, மாதர்பாக்கம், ஊத்துக்கோட்டை, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பொன்னேரி- தச்சூர் கூட்டு சாலை அருகில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் உள்ள சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    மழைநீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் காணப்படுவதால் சாலைகள் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி உள்ளது. இதனால் இந்த சர்வீஸ் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சாலையின் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    சுமார் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு சர்வீஸ்சாலை படுமோசமாக உள்ளது. மேலும் இந்த சாலையில் செல்வதற்கு செங்குன்றம் சுங்கச்சாவடி மூலம் வரி வசூலும் செய்யப்படுகிறது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது தொடர்பாக வாகன ஓட்டிகள் கூறும்போது, இந்த சாலையை சீரமைக்ககோரி தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதனை கண்டித்து விரைவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். சாலையில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றவும், மழைநீர் கால்வாயை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மணலி புதுநகர் வழியாக வரும் கனரக வாகனங்கள் சர்வீஸ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன.
    • சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டு உள்ள தடுப்பு கற்களை அகற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    திருெவாற்றியூர்-மீஞ்சூர் இடையே மணலி புதுநகர் வழியாக வரும் கனரக வாகனங்கள் சர்வீஸ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.

    இதனை தடுக்க சர்வீஸ்சாலை பிரியும் இடங்களான கொண்டக்கரை, நாபாளையம், வல்லூர், மணலி புதுநகர், ஆண்டார் மடம் உள்ளிட்ட இடங்களில் சிமெண்டு தடுப்பு கற்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படுவது தடுக்கப்பட்டது.

    எனினும் அந்த தடுப்பு கற்களை சிலர் நகர்த்தி விட்டு கனரக வாகனங்களை தற்போது நிறுத்தி வருகின்றனர். இதையடுத்து செங்குன்றம் போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி போக்குவரத்து ஆய்வாளர் சோபிராஜ் ஆகியோர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டு உள்ள தடுப்பு கற்களை அகற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக திருவொற்றியூர் முதல் மீஞ்சூர் வரை நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பாக விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • சர்வீஸ் ரோடானது தார் சாலையாக அமைக்கப்படாத காரணத்தினால் வாகனங்கள் செல்லும்போது மண்புழுதி அதிக அளவில் பறக்கிறது.
    • பாவூர்சத்திரம் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கும் இடத்தை வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்து சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

     தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகரபாண்டியன் தென்காசி மாவட்ட கலெக்டருக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தென்காசி-நெல்லை நான்கு வழிச்சாலை பணிகள் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாக தொடங்கப்படாமல் இருந்தது. அதனால் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தேன். அதன்படி உயர்நீதிமன்றம் 18 மாதங்களில் சாலை பணிகளை முடிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்திருந்தது. சாலை பணிகள் தற்பொழுது 80 சதவீதம் முடிக்கப்பட்டாலும் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகளும், ரெயில்வே மேம்பால பணிகளும் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றது.

    பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பால பணி நடைபெறும் இடத்திலும், அங்குள்ள பஸ் நிலையம் அருகிலும் சாலை அமைக்க வேண்டிய இடத்தில் நில ஆர்ஜிதம் செய்து எடுக்கப்பட்ட நிலத்தில் உள்ள கட்டிடங்கள் இடித்து அகற்றப்படாத காரணத்தினால் இப்பகுதிகளில் வேலை மந்தமாக நடைபெறுகிறது. மேலும் சர்வீஸ் ரோடானது தார் சாலையாக அமைக்கப்படாத காரணத்தினால் வாகனங்கள் செல்லும்போது மண்புழுதி அதிக அளவில் பறக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், அந்த பகுதியில் கடை வைத்திருப்பவர்களும் கடும் சிரமம் அடைகின்றனர்.

    எனவே பாவூர்சத்திரம் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கும் இடத்தை வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை விரைவாக அளவீடு செய்து ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்து சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பொதுமக்கள் தண்டவாளங்களை எளிதில் கடந்து செல்லும் வகையில், சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.
    • கோவில்பட்டி ரெயில்வே ஸ்டேஷனில் மின்தூக்கி (லிப்ட்) மற்றும் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

    கோவில்பட்டி:

    கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. புதுடெல்லியில் மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    கோவில்பட்டி லட்சுமி மில் ரெயில்வே கேட் முதல் இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதை வரை ரெயில்வே பாதைக்கு இணையாக புதிய சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் பொதுமக்கள் தண்டவாளங்களை எளிதில் கடந்து செல்லும் வகையில், சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.

    தெற்கு ரெயில்வே மதுரை கோட்டத்தில் மதுரை, நெல்லை ரெயில்வே ஸ்டேஷன்களுக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டும் ரெயில்வே ஸ்டேஷனாக கோவில்பட்டி திகழ்ந்து வருகிறது. ஏ கிரேடு அந்தஸ்தில் செயல்பட்டு வரும் கோவில்பட்டி ரெயில்வே ஸ்டேஷனில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, மின்தூக்கி (லிப்ட்) மற்றும் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். 2-ம் நடைமேடையில் மேற்கூரை அமைக்க வேண்டும்.

    வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், பேட்டரி கார் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருக்குறள் எக்ஸ்பிரஸ், ஓகா - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் கோவில்பட்டி ரெயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும், குருவாயூர் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கடம்பூர் ரெயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    எம்.எல்.ஏ., வுக்கு நன்றி

    கோவில்பட்டி லட்சுமி மில் ரெயில்வே கேட் முதல் இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதை வரை புதிய சர்வீஸ் ரோடு மற்றும் சுரங்க நடைபாதை அமைக்க வலியுறுத்தி, மத்திய ரெயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தமைக்காக, சுப்புராயலு தலைமையில், சீனிவாசன் நகர், இந்திரா நகர் பகுதி பொதுமக்கள், எம்.எல்.ஏ., அலுவலகத்தில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., வை சந்தித்து சால்வை அணித்து நன்றி தரெிவித்தனர்.

    ×