search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வீஸ் சாலை"

    • இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சாலையின் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
    • சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து செல்லும் வாகனங்கள் தச்சூர் கூட்டு சாலையில் இருந்து பஞ்செட்டி சர்வீஸ் சாலை வழியாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இணையும். இந்த சர்வீஸ் சாலையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இது சென்னை, செங்குன்றம், வண்டலூர், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஆரணி, தடா, மாதர்பாக்கம், ஊத்துக்கோட்டை, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பொன்னேரி- தச்சூர் கூட்டு சாலை அருகில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் உள்ள சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    மழைநீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் காணப்படுவதால் சாலைகள் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி உள்ளது. இதனால் இந்த சர்வீஸ் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சாலையின் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    சுமார் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு சர்வீஸ்சாலை படுமோசமாக உள்ளது. மேலும் இந்த சாலையில் செல்வதற்கு செங்குன்றம் சுங்கச்சாவடி மூலம் வரி வசூலும் செய்யப்படுகிறது. போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது தொடர்பாக வாகன ஓட்டிகள் கூறும்போது, இந்த சாலையை சீரமைக்ககோரி தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதனை கண்டித்து விரைவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். சாலையில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றவும், மழைநீர் கால்வாயை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மணலி புதுநகர் வழியாக வரும் கனரக வாகனங்கள் சர்வீஸ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன.
    • சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டு உள்ள தடுப்பு கற்களை அகற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    திருெவாற்றியூர்-மீஞ்சூர் இடையே மணலி புதுநகர் வழியாக வரும் கனரக வாகனங்கள் சர்வீஸ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.

    இதனை தடுக்க சர்வீஸ்சாலை பிரியும் இடங்களான கொண்டக்கரை, நாபாளையம், வல்லூர், மணலி புதுநகர், ஆண்டார் மடம் உள்ளிட்ட இடங்களில் சிமெண்டு தடுப்பு கற்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படுவது தடுக்கப்பட்டது.

    எனினும் அந்த தடுப்பு கற்களை சிலர் நகர்த்தி விட்டு கனரக வாகனங்களை தற்போது நிறுத்தி வருகின்றனர். இதையடுத்து செங்குன்றம் போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி போக்குவரத்து ஆய்வாளர் சோபிராஜ் ஆகியோர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டு உள்ள தடுப்பு கற்களை அகற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக திருவொற்றியூர் முதல் மீஞ்சூர் வரை நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பாக விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • கிராம சாலையை விட நெடுஞ்சாலைகள் பல அடி உயரம் உள்ளதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
    • 6 வழி சாலை பணி முடிவடைந்து 6 ஆண்டுகளாகியும் சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக உள்ள சிங்கப்பெருமாள் கோவில் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை செல்லும் சாலை 6 வழி சாலையாக விரிவு படுத்தும் பணி 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி முடிவடைந்த நிலையில் ஒரகடம்- சென்னகுப்பம் பகுதியில் சர்வீஸ் சாலை பணி இது நாள் வரை தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    கிராம சாலையை விட நெடுஞ்சாலைகள் பல அடி உயரம் உள்ளதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் லேசான மழை பெய்தாலே ஊராட்சியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது.

    இதனால் அந்த பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் செல்லும் 6 வழி நெடுஞ்சாலை பணி தொடங்கி 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரகடம் சென்னகுப்பம், பகுதியில் சர்வீஸ் சாலை மற்றும் கால்வாய் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

    24 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த 6 வழி சாலையில் பல்வேறு பகுதிகளில் சர்வீஸ் சாலை முடிவு அடைந்த நிலையில் ஒரகடம், சென்னகுப்பம் பகுதியில் மட்டும் ஏன் சர்வீஸ் சாலை பணி தொடங்கப்படாமல் உள்ளது. உடனடியாக தொடங்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரகடம் சென்னகுப்பம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×