search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "guide board"

    • திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் வழியில் நேற்று சாகுபுரம் பாலம் அருகே கார் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
    • குறுகிய வளைவில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் காரணமாக வேக சமன்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்தை சந்திக்க நேரிடுவதாக கூறப்படுகிறது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலை யில் ஆத்தூரை அடுத்து சாகுபுரம் அருகே முக்கிய வளைவில் அமைந்துள்ள பாலத்தால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி பெரிய பாளை யத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவி (45) உள்ளிட்ட 9 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் வழியில் நேற்று சாகுபுரம் பாலம் அருகே கார் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளது.

    இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 8 பேர் காயமடைந்தனர். குறிப்பிட்ட இந்த இடத்தில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதற்கு அங்கு நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி போர்டுதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த இடத்தில் குறுகிய வளைவில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் காரணமாக வேக சமன்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்தை சந்திக்க நேரிடுவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அங்கே வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி போர்டு வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி நிலைகுலைய செய்வதாக கூறப்படுகிறது.

    சாலையின் நேரே சென்றால் கன்னியா குமரிக்கு செல்லும் பாதை என்றும் இடது புறம் சென்றால் காயல்பட்டினம் பாதை என்றும் வலது புறம் சென்றால் அது குரும்பூர் செல்லும் பாதை என்றும் அந்த வழிகாட்டி போர்டு தெரிவிக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் அந்த போர்டு தெரிவிக்கும்படி கன்னியாகுமரி செல்லும் நேர்பாதையை தேர்ந்தெடுத்து வேகமாக பயணித்தால் அங்கே உயிர்களை காவு வாங்கு வதற்கு என்று 15 அடி பள்ளம் உள்ளது. எனவேதான் குறிப்பிட்ட அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.

    எனவே நெடுஞ் சாலைத்துறை உடனடி யாக செயல்பட்டு அங்கு தவறுதலாக வைக்கப் பட்டுள்ள வழி காட்டும் போர்டை அகற்றி அதனை சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி அருகே பொருத்தமான இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் குறுகிய வளைவில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் உள்ள குறைபாடுகளை களையவும் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.

    • உசிலம்பட்டி அருகே வழிகாட்டி பலகை திறப்பு விழா நடந்தது.
    • பலகையை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்து வைத்தார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள நல்லதேவன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா தொடக்க விழாவினை முன்னிட்டு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு கண்ட பள்ளி வழிகாட்டு பலகையை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்து வைத்தார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவி சித்ரா துணைத் தலைவர் சதீஷ்குமார், வழக்கறிஞர் செல்லம், கட்சி நிர்வாகிகள், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு, நகரச் செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர் ஜான்சன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், அழகுமாரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை குருநாதன் செய்திருந்தார்.

    • நெடுஞ்சாலைத்துறை சார்பில் பன்னம்பாறை விலக்கில், நெல்லைக்கு செல்ல வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது.
    • அதில், 55 கிலோமீட்டர் தொலைவு கொண்டதை 40 கிலோமீட்டர் தூரம் உள்ளதாக தவறுதலாக பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் சென்று வருகின்றன. நெடுஞ்சாலைத்துறை சார்பில் பன்னம் பாறை விலக்கில், நெல்லைக்கு செல்ல வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதில், 55 கிலோமீட்டர் தொலைவு கொண்டதை 40 கிலோமீட்டர் தூரம் உள்ளதாக தவறுதலாக பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. நெடுஞ்சாலைதுறையினரின் கவனகுறைவான செயலால் வெளியிடங்களில் இருந்து கூகுள் மேப்பை பயன்படுத்தி இங்கு வருபவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும், எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    ஊட்டியில் சுற்றுலா தலங்கள் குறித்த புதிய வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஊட்டி:

    ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப் படுகிறது. ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், தேயிலை பூங்கா உள்ளிட்டவை இருக்கின்றன. சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கடந்த ஆண்டு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து கொண்டே செல்கிறது.

    ஆனால் புதிதாக வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் எந்தெந்த இடங்களில் சுற்றுலா தலங்கள் இருக்கின்றன என்பது தெரியாமல் வாகனங்களில் தேடி அலையும் நிலை இருந்தது. இதனால் சிலர் திட்டமிட்டபடி சுற்றுலா தலங்களை காண முடியாமல் தவித்தனர். மேலும் சிலர் சுற்றுலா வழிகாட்டிகளின் உதவியோடு சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சுற்றுலா பயணிகள் எளிதில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில் புகைப்படங்களுடன் கூடிய வழிகாட்டி பலகைகள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டன.

    அவை வைக்கப்பட்டு பல மாதங்களை கடந்ததாலும், முறையாக பராமரிக்காததாலும் வழிகாட்டி பலகைகளில் குறிப்பிடப்பட்டு இருந்த சுற்றுலா தலங்கள், அவற்றுக்கு செல்லும் தூரம்(கிலோ மீட்டரில்) குறித்த விவரங்கள் அழிய தொடங்கி விட்டன. மேலும் இரும்பு பலகைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் துருப்பிடித்தன. இதையடுத்து வழிகாட்டு பலகைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நீலகிரி மாவட்ட வரைபடத்துடன் சுற்றுலா தலங்கள் குறித்த புதிய வழிகாட்டி பலகைகள் ஊட்டியில் வைக்கப்பட்டு உள்ளன. ஊட்டி மத்திய பஸ் நிலையம் எதிரில், சேரிங்கிராஸ், ஊட்டி படகு இல்லம், பிங்கர்போஸ்ட், தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி ஏரி, ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, கர்நாடகா பூங்கா, அரசு அருங்காட்சியகம், வேலிவியூ, தொட்டபெட்டா மலைச்சிகரம், காமராஜ் சாகர் அணை, கல்லட்டி நீர்வீழ்ச்சி, பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், அவலாஞ்சி, அப்பர்பவானி, கூடலூர் பஸ் நிலையத்தில் இருந்து தொரப்பள்ளி தொங்கு பாலம், ஊசிமலை காட்சிமுனை, தவளைமலை காட்சிமுனை, தெப்பக்காடு, சேரம்பாடி, கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து நேரு பூங்கா, கேத்ரின் நீர்வீழ்ச்சி, கோடநாடு காட்சிமுனை, குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து சிம்ஸ் பார்க், லேம்ஸ் ராக், காட்டேரி நீர்வீழ்ச்சி, காட்டேரி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல எத்தனை கிலோ மீட்டர் தூரம் உள்ளது என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சுற்றுலா வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    ஊட்டியின் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க உதவியாக புதிய வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அவற்றில் சில சுற்றுலா தலங்களுக்கு செல்லும் கிலோ மீட்டர் தூரம் குறைவாகவும், கூடுதலாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பாக பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு 23 கிலோ மீட்டர் எனவும், பைக்காரா படகு இல்லத்துக்கு 21 கிலோ மீட்டர் எனவும் இருக்கிறது. பைக்காரா நீர்வீழ்ச்சியை அடுத்து தான் பைக்காரா படகு இல்லம் இருக்கிறது. எனவே குழப்பம் அடைய வேண்டிய நிலை உள்ளது. எனவே தவறாக இடம்பெற்றுள்ள தூர விவரத்தை சரியாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    ×