search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேறும் சகதியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

    • சேறும் சகதியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
    • இனிமேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது.

    மதுரை

    மதுரையில் கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவுக்கு கோடையை மிஞ்சும் வகை யில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதற்கு முடிவு கட்டும் வகையில் சில நாட்களாக மாலை வேளைகளில் பெய்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    ஆனால் அதே வேளை யில் மழைக்கு தாங்காத மாநகராட்சி சாலைகளால் மக்கள் மறுபுறம் கடும் அவ தியடைந்து வருகிறார்கள். ஆங்காங்கே பல்வேறு கார ணங்களுக்காக தோண்டப் பட்ட குழிகள் சிறிய குளம், குட்டைகளாக மாறியுள்ளன. குறிப்பாக பழங்காநத்தம், செல்லூர் உள்ளிட்ட பகுதிக ளில் பெரும் சேதம் ஏற்பட்டு மக்கள் நடக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர்.

    சேறும், சகதியுமான சாலை

    மதுரை மாநகராட்சி 27-வது வார்டு செல்லூர் 60 அடி சாலை மெயின் ரோட் டில் சேறும் சகதியாக வயல்வெளி போல் காட்சி அளிப்பதால் அந்த வழியாக நடந்து செல்வோர், வாக னங்களில் செல்வோர் சாக சம் செய்வது போல் கடக்க வேண்டியதுள்ளது. சீர மைப்பு மற்றும் மராமத்து பணிகள் மந்த நிலையில் நடப்பதால் அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்ற னர்.

    இதுகுறித்து 27-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.மாயத்தேவன் கூறுகை யில், செல்லூர் 60 அடி ரோட்டில் சேரும், சகதியாக உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வரு கின்றனர். நடந்து செல் வோர், வாகனங்களில் செல் வோர் விழுந்து செல்கின்ற னர்.

    தினமும் ஆயிரக்கணக் கானோர் கடந்து செல்லும் இந்த ரோட்டில் உடனடியாக தார்ச்சாலை அமைக்க வேண்டும். பலமுறை இது குறித்து மாமன்ற கூட்டங்க ளில் எடுத்துரைத்தும் ஆணையாளரிடம் மனு வழங்கியும் பணிகள் நடை பெறவில்லை. சம்பந்தழு ழுட்ட மாநகராட்சி அதிகாரி யிடம் சொல்லியும் அவரும் எதுவும் செய்து கொடுப்ப தில்லை.

    நான் கவுன்சிலராக பொறுப்பேற்ற போது செல்லூர் 60 அடி ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கியது. 15 மாதங்கள் ஆகியும் இன்னும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவ டையவில்லை. மேலும் குப்பை அள்ளும் பேட்டரி வண்டிகள் ரிப்பேர் ஆகி உள்ளதால் தூய்மை பணியா ளர்கள் குப்பைகளை சேகரிக்க முடியவில்லை. மேலும் குப்பைத்தொட் டியை எடுத்துச் செல்லும் குப்பை லாரிகளும் சரிவர இந்த வார்டுக்கு வருவ தில்லை.

    எனது வார்டு அ.தி.மு.க. வார்டு என்பதால் மாநக ராட்சி அதிகாரிகள் இந்த வார்டை தொடர்ந்து புறக்க ணித்து வருகின்றனர். பாதாள சாக்கடை கழிவு நீர் தெருக்களில் தேங்கி இருக் கும்போது கழிவுநீர் உறிஞ் சும் வாகனத்தை அனுப்பச் சொன்னால் அனுப்புவ தில்லை. மேலும் இந்த வார்டில் நாய் தொல்லைகள் அதிகமாக உள்ளது. சமீ பத்தில் ஒரு வெறி நாய் எட்டு பேருக்கும் மேல் கடித்தது. உடனடியாக அதி காரிகளுக்கு இதைச் சொல் லியும் நாய் பிடிக்கும் வண்டியை அனுப்பி நாய் களை பிடிப்பதற்கு ஏற்பாடு கள் செய்யவில்லை.

    இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளி யில் செல்ல முடியவில்லை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கிறது. இதனால் பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல பயப்படு கின்றனர். மேலும் இந்த வார்டுக்கு உட்பட்ட பல தெருக்களில் சாலை வசதி கள் இல்லாமல் உள்ளதால் குண்டும், குழியுமாக காணப் படுகிறது. மழை நீர் தேங்கி கொசுத்தொல்லை அதிக மாகி வருகிறது.

    எனவே உடனடியாக அனைத்து தெருக்களிலும் தார்ச் சாலைகளை அமைப் பதற்கு மாநகராட்சி அதிகா ரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக் களை திரட்டி சாலை மறிய லில் ஈடுபட போகிறேன் என்றார்.

    Next Story
    ×