search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bridges"

    • மாநகராட்சி சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறுபாலங்களை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
    • ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் லேக் ஏரியாவி லும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 2 பாகங்கள் கட்டப்பட்டன.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள டி.எம்.நகர், லேக் ஏரியா பகுதிகளில் மழை காலத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் அமைச்சர் மூர்த்தியிடம் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து அமைச்ச ரின் உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அலுவ லர்கள் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் இங்கு சிறு பாலம் அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். எங்கள் பகுதிக்கு பாலம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அமைச்சர் மூர்த்தியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் பாலம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கும்படி அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

    அதன்படி ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் டி.எம். நகரி லும், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் லேக் ஏரியாவி லும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 2 பாகங்கள் கட்டப் பட்டன. இந்த நிலையில் இந்த பாலங்களின் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பாலங்களை திறந்து வைத்தார்.

    பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு உடனடியாக அதில் கவனம் செலுத்தி நிறைவேற்றி தந்துள்ளது.

    மேலும் வண்டியூரில் இருந்து ரிங் ரோடு வரை சாலை விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற சட்டமன்ற கூட்ட தொடரில் பத்திர பதிவுத்துறையில் மக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த், பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், நகர் நல அலுவலர் அரசு, முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன், தி.மு.க. பகுதி செயலாளர் சசிகுமார், மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளங்கோ, இந்து சமய மண்டல அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன், குடியிருப் போர் நல சங்க நிர்வாகிகள் பிரகலாதன், பிரேம்சந்த், தினகரன், வக்கீல் இளங்கோ வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ரிங் ரோட்டில் இருந்து கல்மேடு வரை அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையையும் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.

    • ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளது.
    • இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும், பாசன ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது. மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லைக்கோடு போல இந்த ஆறு அமைந்துள்ளது. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ஆற்றின் மேல் பழமையான உயர் மட்டப் பாலம் அமைந்துள்ளது.

    தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கடந்து செல்லும் இந்த ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பக்கவாட்டு சுவர்களில் மரங்கள் முளைத்தும், தரைத்தளத்தில் புற்கள் வளர்ந்தும் உள்ளதால் பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பல மாதங்களுக்கு முன் நடந்த வாகன விபத்தால் பாலத்தின் ஒரு பகுதியில் பக்கவாட்டு சுவர் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த பக்கவாட்டு சுவர்களில் சாய்ந்து நின்று சில நேரங்களில் சற்று தொலைவில் செல்லும் ரெயில், சலசலத்து ஓடும் ஆறு என இயற்கையை பலரும் ரசிக்கின்றனர்.

    அதுபோன்ற சமயங்களில் பக்கவாட்டு சுவர் முழுமையாக உடைந்தால் பொதுமக்கள் ஆற்றில் விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் சேதமடைந்த பக்கவாட்டு சுவரை சீரமைக்கவும், பாலத்தை முழுமையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த பாலத்தில் மின் விளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரத்தில் பணி முடிந்து திரும்பும் தொழிலாளர்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

    எனவே பாலத்தின் மீது மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    தடுப்பு சுவர்

    குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே உப்பாறு ஓடைசெல்கிறது. உப்பாறு ஓடடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணை மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.உப்பாறு ஓடையின் குறுக்கே பல இடங்களில் தரை பாலமும் உயர் மட்ட பாலமும் கட்டப்பட்டுள்ளன.

    உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தடுப்பு சுவர் உடைந்து காணப்படுகிறது. மேலும் பாலத்துக்கு அருகில் எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் பாலத்தின் இரு புறங்களிலும் கரைப்பகுதியில் மழை நீர் தேங்கி விடுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாலத்தின் அடிப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் தேங்கி கிடக்கிறது.எனவே நீர் வழித்தடத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    கான்கிரீட் பாலம்

    குண்டடம் அடுத்துள்ள மேட்டுக்கடையிலிருந்து கோவை மாவட்டம் ஜல்லிபட்டி செல்லும் மெயின் ரோட்டில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூரிலிருந்து பொங்கலூர், மேட்டுக்கடை வழியாக மருதூர், பொன்னாபுரம் பகுதிக்கு செல்லவும் இந்த ரோடுதான் முக்கியமாக விளங்கி வருகிறது. இதில் தும்பலப்பட்டியை ஒட்டி பாயும் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. தரைப்பாலத்தில் வேறெங்கும்இல்லாதவிதமாக 2 ஓடைகள் இணைகின்றன. மழைக்காலங்களில் ஓடைகளில் தண்ணீர் பாயும்போது, தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து செல்வதால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கின்றனர். மேலும் குறைந்த அளவு தண்ணீர் செல்லும்போது பாலத்தில் பாசி பிடித்து இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து செல்லும் நிலையும் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலத்தின் மீது தார்ஜல்லி போட்டுள்ளனர். மேலும் பாலத்தின் வடக்கு பகுதியில் குறுகிய வளைவு இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் மேற்கண்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து ரோட்டின் வளைவுகளை சரிசெய்து, உயர்மட்ட கான்கிரீட் பாலம் அமைத்து தரவேண்டும் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 20-ந் தேதி காலை 9.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும்.
    • சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    சேலம் ரெயில் நிலையத்துக்கும் மேக்னசைட் சந்திப்புக்கும் இடையே பாலப்பணிகள் நடைபெறுவதால் நாளை 20-ந் தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ஆழப்புலாதன் பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.13352)நாளை 20-ந் தேதி காலை 6 மணிக்கு ஆலப்புழாவில் புறப்படும். இது வழக்கமான நேரத்தை விட 3 மணி நேரம் தாமதம் ஆகும்.

    எர்ணாகுளம் கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 12678) 20-ந் தேதி காலை 9.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும். இது 3 மணி நேரம் தாமதம் ஆகும். கோவை-சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 12244) 20-ந் தேதி மதியம் 3.05 மணிக்கு கோவையில் புறப்படும். இது வழக்கமான நேரத்தை விட 1 மணி நேரம் தாமதம் ஆகும். கோவை-சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.12676) கோவையில் 20-ந் தேதி மதியம் 3.15 மணிக்கு புறப்படும். இது 1 மணி நேரம் தாமதம் ஆகும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 16340) வருகிற 20-ந் தேதி நாகர்கோவிலில் காலை 6 மணிக்கு புறப்படும். இது 2 மணி நேரம் தாமதம் ஆகும். ஜோலார்பேட்டை-ஈரோடு சிறப்பு ரெயில் (எண்.06411) ஜோலார்பேட்டையில் 20-ந் தேதி மதியம் 3.10 மணிக்கு ஜோலார்பேட்டையில் புறப்படும். இது 1 மணி நேரம் தாமதம் ஆகும். ராஜ்கோட்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.16613) கோவைக்கு வருகிற 20-ந்தேதி இரவு 9.30 மணிக்கு வந்து சேரும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எட்டையபுரம், நாங்குநேரி மற்றும் திருச்சியில் புதிதாக கட்டப்பட்ட சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் ஆற்றுப்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம், நடுவப்பட்டி, கோவில் பட்டி, திட்டங்குளம் மற்றும் எட்டையாபுரம் நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் 167 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 31.65 கிலோ மீட்டர் நீள பருவக்குடி கோவில்பட்டி எட்டையாபுரம் விளாத்திக்குளம் வேம்பார் சாலைப் பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    நாங்குநேரி பரதர் உவரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை 154 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 35.20 கிலோ மீட்டர் நீள சாலைப்பகுதி; சீதைக்குறிச்சி வாள்வீச்சு ரஸ்தா சாலையில் 4 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம்; கடலூர் சித்தூர் சாலையில் 117 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 28.45 கிலோ மீட்டர் நீள மேம்படுத்தப்பட்ட சாலைப்பகுதி; விழுப்புரம் மற்றும் வெங்கடேசபுரம் இரயில்வே நிலையங்களுக்கு இடையில் 34 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே கடவுக்கு பதிலாக கட்டப்பட்ட சாலை மேம்பாலம்; சென்னை திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் சாலையில் கோரையார் ஆற்றின் குறுக்கே 5 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம்; என மொத்தம், 484 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 மேம்படுத்தப்பட்ட சாலைகள், 2 ஆற்றுப்பாலங்கள் மற்றும் 1 சாலை மேம்பாலம் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், நெடுஞ்சாலைத் துறைக்காக தமிழ்நாடு பொறியியல் பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 164 உதவிப் பொறியாளர்கள் மற்றும் தமிழ்நாடு அமைச்சுப் பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 222 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 உதவி பொறியாளர்கள் மற்றும் 3 உதவியாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். #TNCM #Edappadipalaniswami
    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பொதுப்பணித்துறை நடத்திய ஆய்வில் 7 மேம்பாலங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Kolkata
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 4-ம் தேதி மேஜெர்ஹட் என்ற மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுப்பணித்துறை முறையாக பராமரிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என பரவலாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதையடுத்து, இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், இதர மேம்பாலங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், பொதுப்பணித்துறை நடத்திய ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, கொல்கத்தாவில் உள்ள 20 மேம்பாலங்களில் 7 மேம்பாலங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பாலங்களில் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்குமாறு காவல்துறைக்கு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    பொதுப்பணித்துறை குறிப்பிட்ட 7 மேம்பாலங்களில் 4 பாலங்களில் கனரக வாகன போக்குவரத்துக்கு காவல்துறை தடை விதித்தனர். இருப்பினும், இரவு நேரங்களில் அந்த மேம்பாலங்களில் சரக்கு வாகனங்கள் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும், இந்த மேம்பாலங்களை சீர்செய்வதற்கு பல கோடி ரூபாய் செலவு ஆகும் என்றும், அதற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், ஏலம் விடப்பட்டு மிக விரைவில் அனைத்து மேம்பாலங்களும் சீர் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Kolkata
    ×