என் மலர்
நீங்கள் தேடியது "மேம்பாலங்கள்"
- மேட்லி சாலை சந்திப்புக்கு அருகே கட்டப்பட்ட புதிய மேம்பாலம், உஸ்மான் சாலை மேம்பாலத்தை விட உயரமாக இருந்தது.
- தி.நகர் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதும், சி.ஐ.டி. நகரில் உள்ள அண்ணாசாலை பகுதியில் இருந்து பனகல் பூங்காவிற்கு நேரடியாக செல்ல முடியும்
சென்னை:
சென்னை தி.நகர் மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மேம்பாலங்கள் கடந்த 2 வருடங்களாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த 2 மேம்பாலங்களும் மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை சி.ஐ.டி. நகரில் தற்போது 1.2 கி.மீ நீளமுள்ள புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் தி.நகர் ரங்கநாதன் தெரு அருகே உஸ்மான் சாலையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் சி.ஐ.டி. நகர் மேம்பாலத்தை, உஸ்மான் சாலை மேம்பாலத்துடன் இணைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக உஸ்மான் சாலையின் வடக்கு பகுதியும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 2 மேம்பாலங்களும் ஒரே அகலத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பணி நடைபெற்று வருகிறது.
இந்த மேம்பாலத்தை கடந்த டிசம்பர் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் பணிகள் தாமதம் ஆனது. மேட்லி சாலை சந்திப்புக்கு அருகே கட்டப்பட்ட புதிய மேம்பாலம், உஸ்மான் சாலை மேம்பாலத்தை விட உயரமாக இருந்தது. இதை சரி செய்ய சி.ஐ.டி. நகர் மேம்பாலம், ரங்கநாதன் தெருவுக்கு முன்பே முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வாகனங்கள் தரை மட்டத்தில் 100 மீட்டர் தூரம் சென்று, பிறகு புதிய மேம்பாலத்தில் ஏற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பனகல் பூங்கா நோக்கி செல்லும் பொதுமக்களுக்கு ரங்கநாதன் தெருவுக்கு அருகில் ஒரு வெளியேறும் வழியும் இருக்கும். மேலும் சர்வீஸ் சாலையை உருவாக்க அருகில் உள்ள நிலத்தை கையகப்படுத்தும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தி.நகர் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதும், சி.ஐ.டி. நகரில் உள்ள அண்ணா
சாலை பகுதியில் இருந்து பனகல் பூங்காவிற்கு நேரடியாக செல்ல முடியும்.
இதேபோல் சென்னை ஆர்.கே.நகரில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. எனவே தி.நகர் மற்றும் ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் மே மாதம் திறக்கப்பட உள்ளன. இதை அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையிலும் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம், நடுவப்பட்டி, கோவில் பட்டி, திட்டங்குளம் மற்றும் எட்டையாபுரம் நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் 167 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 31.65 கிலோ மீட்டர் நீள பருவக்குடி கோவில்பட்டி எட்டையாபுரம் விளாத்திக்குளம் வேம்பார் சாலைப் பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
நாங்குநேரி பரதர் உவரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை 154 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 35.20 கிலோ மீட்டர் நீள சாலைப்பகுதி; சீதைக்குறிச்சி வாள்வீச்சு ரஸ்தா சாலையில் 4 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம்; கடலூர் சித்தூர் சாலையில் 117 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 28.45 கிலோ மீட்டர் நீள மேம்படுத்தப்பட்ட சாலைப்பகுதி; விழுப்புரம் மற்றும் வெங்கடேசபுரம் இரயில்வே நிலையங்களுக்கு இடையில் 34 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே கடவுக்கு பதிலாக கட்டப்பட்ட சாலை மேம்பாலம்; சென்னை திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் சாலையில் கோரையார் ஆற்றின் குறுக்கே 5 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம்; என மொத்தம், 484 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 மேம்படுத்தப்பட்ட சாலைகள், 2 ஆற்றுப்பாலங்கள் மற்றும் 1 சாலை மேம்பாலம் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், நெடுஞ்சாலைத் துறைக்காக தமிழ்நாடு பொறியியல் பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 164 உதவிப் பொறியாளர்கள் மற்றும் தமிழ்நாடு அமைச்சுப் பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 222 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 உதவி பொறியாளர்கள் மற்றும் 3 உதவியாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். #TNCM #Edappadipalaniswami