search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new roads"

    • தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    யூனியன் சேர்மன் வசுமதிஅம்பாசங்கர் தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ்,துணை சேர்மன் ஆஸ்கர்,முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தூத்துக்குடி யூனியன் கோரம்பள்ளம் வடக்கு காலாங்கரை ஊராட்சி ஒன்றிய பள்ளி சாலை அமைத்தல்,டிவி ரூம் தெரு உட்பட இரு இடங்களில் சிமெண்ட் ரோடு அமைத்தல்,

    குமாரகிரி ஊராட்சி கூட்டாம்புளி அம்மன் கோவில் கீழ் பகுதி தெரு வரை பேவர் பிளாக் சாலை அமைத்தல், மேலத்தெரு பொன்ராஜ் நகர் முதல் வாட்டர் டேங் வரை தார்சாலை அமைத்தல், ராமசந்திரபுரம் வடக்கு தெருவில் தார்சாலை அமைத்தல்,கூட்டாம்பளி சர்ச் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், மாப்பிள்ளையூரணி ஊராட்சி வண்ணாரப்பேட்டை ஸ்ரீமுனியசாமி கோவில் தெரு உட்பட இரு இடங்களில் சாலை அமைத்தல்,கிழக்கு காமராஜ்நகர் தெருக்களில் பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல்,கோரம்பள்ளம் பக்கிள் ஓடையில் அருகே சிறு பாலம் அமைத்தல், முடிவைத்தானேந்தல் ஊராட்சி யில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், கூட்டுடன்காடு ஊராட்சி மேலக்கூட்டுடன்காடு மெயின் தெருவில் தார்சாலை அமைத்தல்,

    மாப்பிள்ளையூரணி ஊராட்சி

    காமராஜ்நகர் ரேசன் கடைதெருவில் தார்சாலை அமைத்தல், ஏ.பி.சி.காலேஜ் ரோடு தார்சாலை அமைத்தல், சமீர்வியாஸ்நகர்,சேசுநகர் சந்திப்பில் பல்நோக்கு கட்டிடங்கள் கட்டுதல்,

    கூட்டுடன்காடு ஊராட்சி அய்யனார் காலனி கிழக்கு பகுதிகளில் 1,2,3 தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், தாளமுத்து நகர் கடற்கரையில் தொழில்புரியும் மீனவர்களின் டூ வீலர் நிறுத்தம் ஷெட் அமைத்தல், டி.சவேரியார்புரம் புதிய ரேசன் கடைக்கு அருகில் அடிபம்ப் அமைத்தல்,தாய்நகர் ஊர் பொது இடத்தில் அடிபம்ப் அமைத்தல், கூட்டுடன்காடு ஊராட்சி நடுக்கூட்டுடன்காடு கிராமத்தில் தெற்கு தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், குமாரகிரி ஊராட்சி சிறுப்பாடு சவேரியார்புரத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், கூட்டுடன்காடு ஊராட்சி நடுக்கூட்டுடன்காடு ஸ்ரீநாராயண சுவாமி கோவில் தார்சாலை அமைத்தல், அல்லிகுளம் ஊராட்சியில் அல்லிகுளம் கிராமத்தில் வடக்கு தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்பட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கவுன்சி லர் அந்தோணி தனுஸ்பாலன் பேசுகையில், மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில் அரசு சார்பில் 1 முதல் 5 வரை மாணவ-மாணவியர் படிக்கும் பள்ளி மட்டுமே உள்ளது.அது உயர்நிலைப்பள்ளியாக மாற்றித்தர வேண்டும்,

    தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் இருசக்கர வாகனம் ஒழுங்குமுறை இல்லாமல் இருந்ததை வாகன நிறுத்த காப்பகம் அமைக்கப்படும் என்று ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்த ஒன்றியக்குழு தலைவருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்று பேசினார்.

    கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுதர்சன், ஆனந்தி, முத்து மாலை,தொம்மை சேவியர், ஜெயகணபதி, மரிய செல்வி, முத்துக்குமார், முத்து லட்சுமி, செல்வபார்வதி, நர்மதா, உதவி பொறியாளர் செந்தில்குமார், மேற்பார்வை யாளர்கள் முத்துராமன், சுப்பிர மணியன், யூனியன் மேலாளர் பாலமுருகன் கலந்து கொண்டனர்.முன்னதாக, சாலை விபத்தில் இறந்த முள்ளக்காடு ஊராட்சி செயலர் வர்த்தகரெட்டிப்பட்டி சுப்பையாவிற்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • வடக்கு சொட்டையன் தோப்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • தீர்மானங்களை ஊராட்சி செயலர் ஜெயக்குமார் வாசித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணகுமார் தலைமையில் குடியரசு தின விழா கிராம சபை கூட்டம் வடக்கு சொட்டையன் தோப்பில் நடைபெற்றது. துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் மகேஸ்வரி, ஜீனத்பீவி, பாரதிராஜா, அந்தோணி பாலம்மாள், தங்கப்பாண்டி, சக்திவேல், ராணி, வசந்தகுமாரி, பாண்டியம்மாள், மிக்கேல்அருள்ஸ்டாலின், உமா மகேஸ்வரி,தங்கமாரிமுத்து, ஜேசுராஜா,ஜேசுஅந்தோணி பெலிக்ஸ் மற்றும் அரசு துறையினர் உட்பட பல்வேறு துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலர் ஜெயக்குமார் ஊராட்சி தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் புதிய சாலைகள் அமைத்த ஊராட்சி தலைவர் சரவணக்குமாருக்கு பாராட்டு தெரிவித்த பொதுமக்கள் மேலும் புதிய சாலைகள் அமைக்க கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சரவணகுமார் பேசும்போது, பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்,அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முறையான போக்குவரத்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.


    எட்டையபுரம், நாங்குநேரி மற்றும் திருச்சியில் புதிதாக கட்டப்பட்ட சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் ஆற்றுப்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம், நடுவப்பட்டி, கோவில் பட்டி, திட்டங்குளம் மற்றும் எட்டையாபுரம் நகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் 167 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 31.65 கிலோ மீட்டர் நீள பருவக்குடி கோவில்பட்டி எட்டையாபுரம் விளாத்திக்குளம் வேம்பார் சாலைப் பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    நாங்குநேரி பரதர் உவரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை 154 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 35.20 கிலோ மீட்டர் நீள சாலைப்பகுதி; சீதைக்குறிச்சி வாள்வீச்சு ரஸ்தா சாலையில் 4 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம்; கடலூர் சித்தூர் சாலையில் 117 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 28.45 கிலோ மீட்டர் நீள மேம்படுத்தப்பட்ட சாலைப்பகுதி; விழுப்புரம் மற்றும் வெங்கடேசபுரம் இரயில்வே நிலையங்களுக்கு இடையில் 34 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே கடவுக்கு பதிலாக கட்டப்பட்ட சாலை மேம்பாலம்; சென்னை திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் சாலையில் கோரையார் ஆற்றின் குறுக்கே 5 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம்; என மொத்தம், 484 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 மேம்படுத்தப்பட்ட சாலைகள், 2 ஆற்றுப்பாலங்கள் மற்றும் 1 சாலை மேம்பாலம் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், நெடுஞ்சாலைத் துறைக்காக தமிழ்நாடு பொறியியல் பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 164 உதவிப் பொறியாளர்கள் மற்றும் தமிழ்நாடு அமைச்சுப் பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 222 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 உதவி பொறியாளர்கள் மற்றும் 3 உதவியாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். #TNCM #Edappadipalaniswami
    ×