search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாப்பிள்ளையூரணியில் கிராம சபை கூட்டம்- புதிய சாலைகள் அமைத்த ஊராட்சி தலைவருக்கு பாராட்டு
    X

    மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணகுமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்ற காட்சி.


    மாப்பிள்ளையூரணியில் கிராம சபை கூட்டம்- புதிய சாலைகள் அமைத்த ஊராட்சி தலைவருக்கு பாராட்டு

    • வடக்கு சொட்டையன் தோப்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • தீர்மானங்களை ஊராட்சி செயலர் ஜெயக்குமார் வாசித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணகுமார் தலைமையில் குடியரசு தின விழா கிராம சபை கூட்டம் வடக்கு சொட்டையன் தோப்பில் நடைபெற்றது. துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் மகேஸ்வரி, ஜீனத்பீவி, பாரதிராஜா, அந்தோணி பாலம்மாள், தங்கப்பாண்டி, சக்திவேல், ராணி, வசந்தகுமாரி, பாண்டியம்மாள், மிக்கேல்அருள்ஸ்டாலின், உமா மகேஸ்வரி,தங்கமாரிமுத்து, ஜேசுராஜா,ஜேசுஅந்தோணி பெலிக்ஸ் மற்றும் அரசு துறையினர் உட்பட பல்வேறு துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலர் ஜெயக்குமார் ஊராட்சி தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் புதிய சாலைகள் அமைத்த ஊராட்சி தலைவர் சரவணக்குமாருக்கு பாராட்டு தெரிவித்த பொதுமக்கள் மேலும் புதிய சாலைகள் அமைக்க கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சரவணகுமார் பேசும்போது, பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்,அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முறையான போக்குவரத்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.


    Next Story
    ×