search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother"

    • அன்னக்கிளி நேராக தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
    • மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அழகரை அரியானம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ். இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (வயது 35) இவர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியருக்கு ஹேமேஸ் (வயது4) என்ற மகன் உள்ளார்.

    இந்த மகன் பிறந்த பின்னர் மஞ்சுளாவுக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லால்குடி தாளக்குடியில் வசிக்கும் தனது தாய் வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கி இருந்தார்.

    பின்னர் நேற்று தமிழக அரசின் கலைஞர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பம் கொடுப்பதற்காக மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார். அவருடன் தாய் அன்னக்கிளியும் வந்துள்ளார்.

    அப்போது சென்னையில் இருந்து ஊருக்கு வந்திருந்த கணவர், மனைவி மஞ்சு ளாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்தார். ஆனால் அதற்கு மஞ்சுளா ஒப்புக் கொள்ள மறுத்தார். தாய் சொல்லியும் கேட்கவில்லை.

    இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரவு அவர்கள் படுத்து தூங்கிவிட்டனர்.

    இந்நிலையில் அன்னக்கிளிக்கு மகளின் மீது தீராத வெறுப்பு, கோபம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்லாமல் இப்படி மருமகன் மற்றும் தன்னிடம் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறாரே என ஆத்திர மடைந்த அவர் மஞ்சுளா தூங்கிக் கொண்டிருந்த போது அவரது தலையில் இன்று அதிகாலை பாறாங் கல்லை எடுத்து போட்டுள்ளார்.

    இதில் அவர் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    பின்னர் அன்னக்கிளி நேராக தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

    உடனே தகவல் அறிந்த முசிறி துணை போலி சூப்பிரண்டு யாஸ்மின், தொட்டி யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆசை தம்பி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் கொலை செய்யப்பட்ட மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனைக்கு செல்ல மறுத்து அடம்பிடித்த மகளை தாய் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நலமாக உள்ள குழந்தை உடல்நலம் சரியில்லை எனக்கூறி மருத்துவம் பார்க்க வற்புறுத்தல்
    • ஒருவகை நோயால் மனநோய்க்கு உள்ளாகி இவ்வாறு செய்திருக்கக் கூடும்

    பல அரிய மனநல குறைபாடுகளில் ஒன்றாக கருதப்படுவது முன்சாஸன் சிண்ட்ரோம் (Munchausen's syndrome) மற்றும் அதன் ஒரு வகையான முன்சாஸன் சிண்ட்ரோம் பை பிராக்ஸி (Munchausen Syndrome by proxy).

    இது ஒரு அரிய உளவியல் நடத்தை நிலை.

    முதல் வகையில் ஒருவர், இல்லாத நோய் அறிகுறிகளை தனக்குள்ளேயே கற்பனையாக உருவாக்கிக் கொண்டு, தான் நோய்வாய்பட்டதாக தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பார்.

    இரண்டாவது வகை "முன்சாஸன் சிண்ட்ரோம் பை பிராக்ஸி" என்பது ஒரு குழந்தை துஷ்பிரயோக குற்றமாக கருதப்படுகிறது. இதில் ஒரு குழந்தையின் பராமரிப்பாளர் (பெரும்பாலும் தாய்) போலியான நோய் அறிகுறிகளை தன் குழந்தைக்கு இருப்பதாக கூறி அக்குழந்தை உண்மையிலேயே நோய்வாய்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆட்படுத்துவார்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசிப்பவர் 27 வயதான ஜெசிகா கேஸர். இவர் சமூக ஊடக பிரபலமானவர். இவர் தற்போது முன்சாஸன் பை பிராக்ஸி என மனநோய்க்கு உள்ளாகியிருக்கிறார்.

    டெக்சாஸ் மாநில சட்ட அமலாக்க மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி, கேஸர் தனது 3 வயது மகளுக்கு இல்லாத அரிய நோய்களை இருப்பதாக கூறி தேவையற்ற மருத்துவ நடைமுறைக்கு உட்படுத்தும்படி கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

    டார்ரன்ட் கவுன்டி ஷெரீப் அலுவலகம் தனது முகநூல் பதிவில், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜெசிகாவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

    டார்ரன்ட் கவுன்டி ஷெரீப் அலுவலகம் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

    இந்த வழக்கு இந்த அரிய மனநோய்க்கான ஒரு நல்ல உதாரணம். இது தொடர்பாக நீங்கள் ஜெசிகாவுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்தால், மைக்கேல் வெபர் எனும் காவல்துறை அதிகாரியை தொடர்பு கொள்ளவும் எனத் தெரிவித்துள்ளது.

    ஜெசிகா தனது குழந்தைக்கு பல தேவையற்ற சிகிச்சைகளை அளிக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். இந்த துஷ்பிரயோகம் எவ்வளவு காலம் தொடர்ந்தது என்பது இன்னும் உறுதியாகவில்லை.

    கேஸர் தனது குழந்தையின் உடல்நலம் குறித்த தனிப்பட்ட செய்திகள் உட்பட முகநூலில் உள்ள தனது அனைத்து தரவுகளையும் நீக்கப்போவதாக தனது நண்பருக்கு செய்திகள் அனுப்பியுள்ளார்.

    காவல்துறையினர் கடந்த வாரம் ரஸ்க் கவுண்டியில் ஜெசிகாவை கைது செய்து டாரன்ட் கவுண்டி சிறையில் அடைத்தனர்.

    • இரவு வீட்டிற்கு வந்த கணவர் கீதா ஸ்ரீ குறித்து கேட்டபோது குழந்தை திடீரென காணாமல் போனதாக தெரிவித்தார்.
    • குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சடலம் மேலே வந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துவாடாவை சேர்ந்தவர் சினேகா (வயது 18). இவரது 2 வயது குழந்தை கீதா ஸ்ரீ.

    கடந்த 17-ந் தேதி மதியம் சினேகா குழந்தைக்கு உணவு ஊட்டினார். கீதா ஸ்ரீ உணவு சாப்பிட மறுத்து அடம் பிடித்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சினேகா வீட்டிலிருந்த கரண்டியை எடுத்து வந்து குழந்தையின் தலையில் அடித்தார்.

    தலையில் பலத்த காயம் அடைந்த கீதா ஸ்ரீ ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து பரிதாபமாக இறந்தது. ஆத்திரத்தில் அடித்ததில் மகள் இறந்ததை நினைத்து சினேகா கதறி துடித்தார்.

    மகளை கொலை செய்தது தெரிந்தால் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவார் என எண்ணிய சினேகா மகளை வீட்டின் முன்புறம் குழி தோண்டி புதைத்துவிட்டார்.

    இரவு வீட்டிற்கு வந்த கணவர் கீதா ஸ்ரீ குறித்து கேட்டபோது குழந்தை திடீரென காணாமல் போனதாக தெரிவித்தார்.

    கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பிணம் மேலே வந்தது.

    அங்கிருந்த நாய்கள் குழந்தை பிணத்தை இழுத்துச் சென்றன. இதனைக் கண்ட பொது மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். குழந்தை உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பிணமாக இருந்தது சினேகாவின் குழந்தை கீதா ஸ்ரீ என தெரியவந்தது.

    சந்தேகத்தின் பேரில் போலீசார் சினேகாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

    போலீசாரின் விசாரணையில் கீதா ஸ்ரீ சாப்பிட மறுத்ததால் ஆத்திரத்தில் கரண்டியில் அடித்ததாகவும் எதிர்பாராத விதமாக குழந்தை இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சினேகாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி திடீர் தற்கொலை செய்தார்.
    • கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு–மங்கலம் அருகேயுள்ள கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட் சின்ன உலகானி கிராமத்தை சேர்ந் த–வர் வேலுச்சாமி. இவரது மனைவி பாண்டி–யம்மாள். இந்த தம்பதிக்கு 3 மகள்க–ளும், ஒரு மகனும் உள்ளனர்.

    இதில் மூத்த மகளான அன்புச்செல்வி (20) மது–ரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இதற்கிடையே விடுமுறை தினமான நேற்று அவரது தாய் துணிகளை துவைத்து தருமாறு மகள் அன்புச் செல்வியிடம் கூறியுள்ளார்.

    ஆனால் துணிகளை அவர் துவைக்காமல் இருந் துள்ளார். இதனால் ஆத்தி–ரம் அடைந்த தாய் பாண்டி–யம்மாள் மகளை கண்டித் துள்ளார். இதில் மனம் உடைந்த அன்புச்செல்வி மல்லிகை செடிக்கு தெளிக் கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.

    இதைப்பார்த்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக் கத்தினர் அன்புச்செல் வியை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    தீவிர சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் அன்புச் செல்வி பரிதாபமாக இறந் தார். இதுகுறித்து அவரது தந்தை வேலுச்சாமி கொடுத்த புகாரின்பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள். தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள் ளது.

    • ஏற்கனவே திருமணமாகி கார்த்திக் என்ற கணவரும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
    • பச்சிளம் குழந்தையை கல்நெஞ்சம் படைத்த தாயே ஏரியில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேளச்சேரி:

    வேளச்சேரி, சசி நகர் அருகே உள்ள ஏரிப் பகுதியில் நேற்று மாலை பச்சிளம் பெண் குழந்தை உடல் மிதந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேளச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீ சார் நடத்திய விசாரணையில் சசிநகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சங்கீதா (வயது26) என்பவர் கள்ளக்காதலன் மூலம் குழந்தை பிறந்ததால் அதனை ஏரியில் வீசி கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி கார்த்திக் என்ற கணவரும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கார்த்திக் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். மனைவியின் செயலை அறிந்து அவர் அதிர்ச்சியில் உள்ளார்.

    சங்கீதாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இந்த தொடர்பை சங்கீதா தனது கணவருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார். இதனால் அவர் மீது கணவருக்கும் பெரிய அளவில் சந்தேகம் ஏற்படவில்லை.

    இதற்கிடையே சங்கீதா, கள்ளக்காதலன் மூலம் கர்ப்பம் அடைந்தார். அந்த குழந்தையை கலைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர் வயிற்றில் குழந்தை இருப்பதை அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் மறைத்தார்.

    வயிறு பெரிதானதும் கணவர் மற்றும் உறவினர்கள் கேட்டபோது சாப்பிட்டு தூங்குவதால் வயிறு பெரிதாகி விட்டது என்று கூறி சமாளித்து உள்ளார்.

    இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் சங்கீதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

    பின்னர் கணவர் வருவதற்குள் அந்த பச்சிளம் குழந்தையை அருகில் உள்ள ஏரியில் வீசி விட்டு சங்கீதா வீட்டுக்கு வந்து உள்ளார். இதில் ஏரி தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து போனது.

    2 நாட்களுக்கு பிறகு குழந்தையின் உடல் தண்ணீரில் மிதந்து கரை ஒதுங்கியதால் போலீசாரின் விசாரணையில் சங்கீதா சிக்கிக்கொண்டார்.

    தவறான உறவின் மூலம் பிறந்ததால் குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்ததாக சங்கீதா எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்து உள்ளார்.

    குழந்தை பெற்றதும் சங்கீதா ஏரிப்பகுதிக்கு சென்று குழந்தையை தண்ணீரில் வீசி இருக்க முடியாது என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    எனவே குழந்தை கொலையில் சங்கீதாவுக்கு கள்ளக்காதலன் உதவினாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கள்ளக்காதலில் பிறந்ததால் பச்சிளம் குழந்தையை கல்நெஞ்சம் படைத்த தாயே ஏரியில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குழந்தையின் உடலை கையில் வைத்துக்கொண்டு பஸ்நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்த படி அலறினார்.
    • சம்பவத்தால் நள்ளிரவு கோயம்பேடு பஸ்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    போரூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி சிவகன்னி. இவர்களுக்கு ரம்யா என்கிற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.

    குழந்தை ரம்யாவிற்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் பரிசோதித்தபோது குழந்தையின் 2 சிறுநீரகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    சிகிச்சைக்கு பணம் இல்லாமல் வறுமையில் தவித்து வந்த சூர்யா கூலிவேலைக்காக தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னை வந்தார். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் கோயம்பேடு மாநகர பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு குழந்தை ரம்யாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்து போனது.

    இதனை கண்ட தாய் சிவகன்னி கதறி துடித்தார். அவர் இறந்த தனது குழந்தையின் உடலை கையில் வைத்துக்கொண்டு பஸ்நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்த படி அலறினார். அங்கிருந்த அவரது கணவர் சூர்யா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

    இதனை கண்ட பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் குழந்தை ரம்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக சூர்யா மற்றும் அவரது மனைவி சிவகன்னி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் சென்னை வந்ததாகவும் என்ன செய்வது என்று தெரியமால் பஸ்நிலைய பிளாட்பாரத்தில் தங்கி வேலைக்கு சென்று வந்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். இச்சம்பவத்தால் நள்ளிரவு கோயம்பேடு பஸ்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    • பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவிக்க அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து நின்று உள்ளனர்.
    • போலீசார் அவர்களை தடுத்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரும், அவரது 17 வயது மகளும், அவர்களுக்கு 2 நபர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவிக்க நேற்று மாலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து நின்று உள்ளனர்.

    அவர்கள் புகாரை நீண்ட நேரமாக விசாரிக்காததால், போலீஸ் நிலைய வளாகத்திலேயே திடீரென தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்குள் போலீசார் அவர்களை தடுத்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் தற்போது இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸ் நிலைய வளாகத்தில் தாயும் மகளும் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ராஜேஸ்வரியின் மூத்த மகன் திட்டி வெளியே செல்லுமாறு கூறினார்.
    • மகன் என்றும் பாராமல் அவரை இரும்பு கம்பியால் தாக்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு திருமணமாகி மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 17 வயது ஆகிறது.

    இந்நிலையில் ராஜேஸ்வரிக்கும் வயநாட்டை சேர்ந்த சுனீஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் சுனீஸ், அடிக்கடி ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்து சென்றார்.

    இதுபற்றி அக்கம்பக்கத்தினர், ராஜேஸ்வரியின் மூத்த மகனிடம் கூறினர். அவர் தாயாரிடம் இதுபற்றி கேட்டார். இதில் தாய்க்கும், மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    சம்பவதன்றும் சுனீஸ் ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்தார். அவரை ராஜேஸ்வரியின் மூத்த மகன் திட்டி வெளியே செல்லுமாறு கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜேஸ்வரி, மகன் என்றும் பாராமல் அவரை இரும்பு கம்பியால் தாக்கினார். அவருடன் சேர்ந்து சுனீசும், தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சிறுவன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தாக்கியதாக அவரது தாயார் ராஜேஸ்வரி, கள்ளக்காதலன் சுனீஸ் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
    • தாய்-மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    விருதுநகர்

    சாத்தூர் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணபிரபு. இவர் சம்பவத்தன்று தனது தாய் மகாலட்சுமியிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார்.

    ஆனால் அவர் பணம் தர மறுத்தார். இதனால் தாய்-மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அவரது சகோதரர் கண்டித்தார். அப்போது லட்சுமணபிரபு கொலை மிரட்டல் விடுத்து தப்பினார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அக்கா தேவி வீட்டிற்கு தனது 2 மகன்களுடன் சென்றுள்ளார்.
    • பல இடங்களில் தேடியுள்ளனர்.

    பல்லடம் :

    கோவை மாவட்டம், சூலூர் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 36). இவரது மனைவி கவிதா ( 29 ). இவர்களது மகன்கள் ரத்தீஷ்( 8 ), மிஜின்( 6 ) இந்த நிலையில் கடந்த 29- ந்தேதி பொங்கலூர் அருகே உள்ள வேலம்பட்டியில் வசிக்கும் கவிதாவின் அக்கா தேவி வீட்டிற்கு தனது 2 மகன்களுடன் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை தேவி மற்றும் அவரது கணவர் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கவிதா மற்றும் அவரது 2 மகன்களுடன் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து அவர்கள் பெருமாளுக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக வேலம்பட்டி வந்த பெருமாள் இது குறித்து அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் எங்கு சென்றனர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தாயை தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ். ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் வெயில் முத்து. இவரது மனைவி சுந்தரவல்லி (வயது 42). நெசவு வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களது மகன் பூமாலை ராஜா வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையானார். அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தாயை தொந்தரவு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இது தொடர்பாக சுந்தரவல்லியிடம் பூமாலை ராஜா பிரச்சினை செய்துள்ளார்.

    அப்போது ஆத்திரத்தில் தாயை அடித்து உதைத்த பூமாலை ராஜா கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் காயமடைந்த சுந்தரவல்லி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆழ்வார்குறிச்சி அருகே தாய், மகள் மாயமாகினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
    நெல்லை:

    அம்பை கவுதமபுரியை சேர்ந்தவர் மருதுபாண்டி. இவரது மனைவி சண்முகத்தாய். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த 18-ந்தேதி சண்முகத்தாய், தனது 8 வயது மகளை அழைத்துக்கொண்டு ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தபிள்ளையூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். 

    அங்கிருந்து அம்பை ஆஸ்பத்திரிக்கு செல்வதாக சண்முகத்தாய் கூறிவிட்டு தனது மகளையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதுதொடர்பாக மருதுபாண்டி, ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×