என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தாய்க்கு ெகாலை மிரட்டல்
Byமாலை மலர்14 Jun 2022 7:58 AM GMT
- தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தாயை தொந்தரவு செய்து வந்துள்ளார்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ். ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் வெயில் முத்து. இவரது மனைவி சுந்தரவல்லி (வயது 42). நெசவு வேலை பார்த்து வருகிறார்.
இவர்களது மகன் பூமாலை ராஜா வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையானார். அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தாயை தொந்தரவு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இது தொடர்பாக சுந்தரவல்லியிடம் பூமாலை ராஜா பிரச்சினை செய்துள்ளார்.
அப்போது ஆத்திரத்தில் தாயை அடித்து உதைத்த பூமாலை ராஜா கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் காயமடைந்த சுந்தரவல்லி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X