search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய்க்கு ெகாலை மிரட்டல்
    X

    தாய்க்கு ெகாலை மிரட்டல்

    • தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தாயை தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ். ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் வெயில் முத்து. இவரது மனைவி சுந்தரவல்லி (வயது 42). நெசவு வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களது மகன் பூமாலை ராஜா வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையானார். அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தாயை தொந்தரவு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இது தொடர்பாக சுந்தரவல்லியிடம் பூமாலை ராஜா பிரச்சினை செய்துள்ளார்.

    அப்போது ஆத்திரத்தில் தாயை அடித்து உதைத்த பூமாலை ராஜா கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் காயமடைந்த சுந்தரவல்லி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×