search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் போலீஸ் நிலையத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி
    X

    கோப்புபடம்.

    பல்லடம் போலீஸ் நிலையத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி

    • பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவிக்க அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து நின்று உள்ளனர்.
    • போலீசார் அவர்களை தடுத்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரும், அவரது 17 வயது மகளும், அவர்களுக்கு 2 நபர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவிக்க நேற்று மாலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து நின்று உள்ளனர்.

    அவர்கள் புகாரை நீண்ட நேரமாக விசாரிக்காததால், போலீஸ் நிலைய வளாகத்திலேயே திடீரென தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்குள் போலீசார் அவர்களை தடுத்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் தற்போது இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸ் நிலைய வளாகத்தில் தாயும் மகளும் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×