search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mental illness"

    • மனம் விசித்திரமான குணம் கொண்டது.
    • கவலையும், சிந்தனையும் மனதை துவண்டுபோகச் செய்து விடும்.

    மனம் கஷ்டப்படும்படியான சம்பவம் ஏதாவது நடந்துவிட்டால் அதை பற்றியே சிந்தித்து புலம்பிக்கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பிறர் சாதாரணமாக கருதும் விஷயத்தை கூட இவர்கள் மனதில் போட்டு குழப்பிக்கொண்டே இருப்பார்கள். அதில் இருந்து மீள்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள்.

    அதுவரை நடந்த சம்பவத்தை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். `நாம் இப்படி செய்திருக்கலாமோ? அப்படி செய்திருந்தால் இந்த அளவுக்கு பிரச்சினை வந்திருக்காதோ? அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமோ?' என்று சிந்தித்து மனதை ரணமாக்கிவிடுவார்கள்.

    மனம் விசித்திரமான குணம் கொண்டது. மனதை உலுக்கும் ஏதாவதொரு சம்பவம் நடந்துவிட்டால் உடனே சிந்திக்க ஆரம்பித்துவிடும். அந்த சமயத்தில் மனதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கவலையும், சிந்தனையும் மனதை துவண்டுபோகச் செய்து விடும்.

    மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கு கூடுமானவரை மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகள்தான் மனச்சோர்வுக்கோ, மன நோய்க்கோ காரணமாக அமைந்துவிடும். மூளையின் செயல்பாடுகளையும் முடங்க செய்து விடும். அதனால்தான் மன நலன் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    அதிகம் சிந்திப்பது மன நலனுக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும். மன அழுத்தமும், பதற்றமும் உடல் செயல்பாடுகளில் தாக்கத்தை உண்டாக்கும். மனம் கட்டுக்குள் இல்லாமல் போனால் சிந்தனையை கட்டுப்படுத்த வேண்டும்.

    மனம் கட்டுப்பாட்டை இழப்பதாக உணரும் சமயங்களில் சிந் தனைகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது. மூச்சை ஆழமாக உள் இழுத்து வெளியே விட வேண்டும். அது மனதை சாந்தப்படுத்த உதவும். தியானம் செய்யலாம். அமைதியான சூழல் கொண்ட இடத்தில் அமர்ந்து ஓய்வும் எடுக்கலாம்.

    அந்த சமயத்தில் கூட தேவையற்ற சிந்தனை எழுந்தால் வேறு ஏதாவதொரு விஷயத்தில் கவனம் செலுத்தலாம். மற்றவர்களுக்கு ஏதாவதொரு நல்ல விஷயத்தை செய்து கொடுக்கலாம். அதனால் அவர் மகிழ்ச்சி அடைந்தால் அது உங்களுக்கும் மன நிறைவை கொடுக்கும். விசித்திரமான ஆற்றலையும் தரும். எல்லாம் நன்றாக நடக்கிறது என்பதை புரிந்துகொள்வீர்கள். கவலைப்பட ஒன்றுமில்லை என்பதையும் உணருவீர்கள்.

    சாதாரணமாக கடந்து போகக்கூடிய விஷயத்திற்கெல்லாம் சிலர் சட்டென்று பதற்றமடைந்து விடுவார்கள். நடந்ததையே மிகையாக சிந்திப்பதுதான் அதற்கு காரணம். சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். மனதை ஆழ்ந்த சிந்தனையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.

    ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் மனம் வேதனைக்குள்ளாகும். அந்த சமயத்தில் ஏதாவதொரு வேலையில் கவனம் செலுத்தலாம். சைக்கிள் ஓட்டலாம். நடக்கலாம். மனதை திசைதிருப்பக்கூடிய ஏதாவதொரு செயலில் ஈடுபடலாம். அது மூளை தசைகளை தளர்த்த உதவும்.

    மனதில் எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்கும் போது சந்தோஷமான தருணங்களை பற்றி நினைத்து பார்ப்பது சாத்தியமில்லாததுதான். ஆனால் குறைந்தபட்சம் முயற்சி செய்தாவது பார்க்கலாம். மன அழுத்தத்திலோ, கவலையிலோ இருக்கும்போது பலவீனங்களை அடையாளம் கண்டு அதனை சரி செய்வதற்கான முயற்சியில் கவனம் செலுத்த முடியும்.

    கடந்த காலத்தில் செய்த தவறுகளை நினைவில் வைத்திருந்தால், ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாது. அது தொடர்ந்து துயரத்தில் மூழ்க வைத்துவிடும். மன நலனையும் பாதிக்கும்.

    பழைய விஷயங்களை மனதை விட்டு விரட்டி, எதிர்காலத்தை பற்றி சிந்திக்க பழக வேண்டும். அந்த சிந்தனையும் கூட அதிக நேரம் நீடிக்க கூடாது. எப்போதும் இயல்பாக இருப்பதுதான் மன ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

    • நலமாக உள்ள குழந்தை உடல்நலம் சரியில்லை எனக்கூறி மருத்துவம் பார்க்க வற்புறுத்தல்
    • ஒருவகை நோயால் மனநோய்க்கு உள்ளாகி இவ்வாறு செய்திருக்கக் கூடும்

    பல அரிய மனநல குறைபாடுகளில் ஒன்றாக கருதப்படுவது முன்சாஸன் சிண்ட்ரோம் (Munchausen's syndrome) மற்றும் அதன் ஒரு வகையான முன்சாஸன் சிண்ட்ரோம் பை பிராக்ஸி (Munchausen Syndrome by proxy).

    இது ஒரு அரிய உளவியல் நடத்தை நிலை.

    முதல் வகையில் ஒருவர், இல்லாத நோய் அறிகுறிகளை தனக்குள்ளேயே கற்பனையாக உருவாக்கிக் கொண்டு, தான் நோய்வாய்பட்டதாக தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பார்.

    இரண்டாவது வகை "முன்சாஸன் சிண்ட்ரோம் பை பிராக்ஸி" என்பது ஒரு குழந்தை துஷ்பிரயோக குற்றமாக கருதப்படுகிறது. இதில் ஒரு குழந்தையின் பராமரிப்பாளர் (பெரும்பாலும் தாய்) போலியான நோய் அறிகுறிகளை தன் குழந்தைக்கு இருப்பதாக கூறி அக்குழந்தை உண்மையிலேயே நோய்வாய்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆட்படுத்துவார்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசிப்பவர் 27 வயதான ஜெசிகா கேஸர். இவர் சமூக ஊடக பிரபலமானவர். இவர் தற்போது முன்சாஸன் பை பிராக்ஸி என மனநோய்க்கு உள்ளாகியிருக்கிறார்.

    டெக்சாஸ் மாநில சட்ட அமலாக்க மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி, கேஸர் தனது 3 வயது மகளுக்கு இல்லாத அரிய நோய்களை இருப்பதாக கூறி தேவையற்ற மருத்துவ நடைமுறைக்கு உட்படுத்தும்படி கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

    டார்ரன்ட் கவுன்டி ஷெரீப் அலுவலகம் தனது முகநூல் பதிவில், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜெசிகாவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

    டார்ரன்ட் கவுன்டி ஷெரீப் அலுவலகம் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

    இந்த வழக்கு இந்த அரிய மனநோய்க்கான ஒரு நல்ல உதாரணம். இது தொடர்பாக நீங்கள் ஜெசிகாவுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்தால், மைக்கேல் வெபர் எனும் காவல்துறை அதிகாரியை தொடர்பு கொள்ளவும் எனத் தெரிவித்துள்ளது.

    ஜெசிகா தனது குழந்தைக்கு பல தேவையற்ற சிகிச்சைகளை அளிக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். இந்த துஷ்பிரயோகம் எவ்வளவு காலம் தொடர்ந்தது என்பது இன்னும் உறுதியாகவில்லை.

    கேஸர் தனது குழந்தையின் உடல்நலம் குறித்த தனிப்பட்ட செய்திகள் உட்பட முகநூலில் உள்ள தனது அனைத்து தரவுகளையும் நீக்கப்போவதாக தனது நண்பருக்கு செய்திகள் அனுப்பியுள்ளார்.

    காவல்துறையினர் கடந்த வாரம் ரஸ்க் கவுண்டியில் ஜெசிகாவை கைது செய்து டாரன்ட் கவுண்டி சிறையில் அடைத்தனர்.

    மனநலம் குன்றியோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் அமைப்பது பற்றி தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்கள் மறுவாழ்வு இல்லங்கள் அமைப்பது பற்றிய தங்களது பதிலை தாக்கல் செய்தன. #SupremeCourt #RehabilitationHome #MentalIllness
    புதுடெல்லி:

    மனநலம் பாதித்தவர்கள், குணமான பிறகும் ஆதரிப்பதற்கு யாரும் இல்லாததால், மனநல மருத்துவமனைகளிலேயே தங்க வைக்கப்படுவதாகவும், ஆகவே, அவர்களுக்காக மறுவாழ்வு இல்லங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் கவுரவ் பன்சால் என்ற வக்கீல் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    அதற்கு கடந்த ஆண்டு ஜூலை 10-ந் தேதி, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி, ஓராண்டுக்குள் மறுவாழ்வு இல்லங்களை அமைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில், இந்த மனு, நீதிபதிகள் யு.யு.லலித், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் மறுவாழ்வு இல்லங்கள் அமைப்பது பற்றிய தங்களது பதிலை தாக்கல் செய்தன.

    இதுபோல், மற்ற மாநிலங்கள் 2 வாரங்களுக்குள் பதிலை தெரிவிக்க வேண்டும் என்றும், அதன்பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர். #SupremeCourt #RehabilitationHome #MentalIllness
    மருத்துவ காப்பீடு பெற்றுள்ள தனிநபர்களுக்கு இனி மனநோய்க்கும் சிகிச்சை அளிக்கும் புதிய நடைமுறையை இந்திய காப்பீட்டுத்துறை கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு முகமை வலியுறுத்தியுள்ளது. #HealthPolicy #IRDAI
    பெங்களூரு:

    மனிதர்களை தாக்கும் நோய்களை காட்டிலும், அதற்கு ஆகும் செலவுகள் குறித்த அச்சம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையை மாற்ற அரசு சார்பிலும், வங்கிகள் சார்பிலும் காப்பீடு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த காப்பீடு திட்டங்களை ஒழுங்குமுறை படுத்தும் முகமையான காப்பீட்டுத்துறை கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு முகமை சமீபத்தில் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

    அதில், உடலில் ஏற்படும் சாதாரண நோய்களுக்கு அளிக்கப்படும் காப்பீடு உதவியை போல், மனநோயையும் காப்பீடு திட்டத்துக்குள் அனைத்து வங்கிகளும் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்மூலம், மனநோயாளிகளும் தங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை காப்பீடு மூலம் பெற இயலும். இதுகுறித்து பேசிய டிடிகே நிறுவனத்தின் சி.ஓ.ஓ, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விழிப்புணர்வையும், அவர்களை ஏற்கும் மனநிலையையும் அளிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். #HealthPolicy #IRDAI
    குடும்பத்தினர் கொஞ்சம் அக்கறையோடு செயல்பட்டால், பலரை மனநோயில் இருந்து மீட்டெடுக்க முடியும். நாம் எவ்வளவு பொறுமையோடு செயல்படுகிறோம் என்பதில்தான் பலன் இருக்கிறது.
    மனநோய் என்பது பேய் பிடித்தல், முற்பிறவியில் செய்த பாவங்களின் பலன், பில்லிசூனியம் போன்றவற்றால் வருவது என இந்தியாவின் பல பகுதிகளில் பாரம்பரிய நம்பிக்கைகள் பல நிலவுகின்றன. வேரூன்றியிருக்கும் பரவலான மூடநம்பிக்கைகள், தவறான தகவல்கள் ஆகியவற்றால் மக்கள் இத்தகைய உளவியல் பிரச்சினைகளுக்கு பணம் பறிக்கும் சாமியார்கள், மந்திரவாதிகள், பேயோட்டிகள் இவர்களின் உதவியைத்தான் முதலில் நாடுகிறார்கள்.

    உளவியல் நிறுவனமொன்றில் 198 மனநோயாளிகளிடம் செய்த மதிப்பாய்வில் 45 சதவீதத்தினர் சாமியார்களிடம்தான் முதன்முதலில் போயிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. ஒவ்வொருவரும் ஏறக்குறைய 15 முறை சாமியாரிடம் சென்றிருக்கின்ற னர். மதம் சார்ந்தவர்களின் உதவியை வேறு வழியின்றி அதிகம் நாடுவது ஏழைகளே என்ற விவரமும் இந்த ஆய்வில் தெரியவந்தது.

    நம் நாட்டின் சுகாதார நிதிநிலை அறிக்கையில் 0.006 சதவீதம் நிதி தான் மனநலத்துக்கு ஒதுக்கப்படுகிறது. மனநல மருத்துவ நிலையங்களின் செலவுபற்றிய புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. ஒரு லட்சம் மக்களுக்கு 0.036 சதவீதம் என்ற அளவில்தான் மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள். 2001-ல் செய்யப்பட்ட ஓர் ஆய்வில் உயர்கல்வி பெற்ற குடும்பத்தினர், மனப்பிறழ்வு போன்ற நோய்களுக்கு மரபணு, தலைமுறை இவற்றைக் காரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள் என்று தெரியவந்தது. கல்வியறிவற்றவர்கள், குறைந்த படிப்புள்ளவர்கள் பேய், பிசாசு இவற்றைக் காரணமாகக் காட்டுகிறார்கள். மனநலத்தை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை, என்ன மாதிரியான கவனிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை வறுமை, கல்வியறிவு போன்றவையே தீர்மானிக்கின்றன.



    மனநோயாளிகள் பற்றிய தவறான புரிதல்களுக்கு ஆண்டாண்டு காலமாக நம்முள் பதிந்துள்ள மூட நம்பிக்கைகள், அறியாமை இவையே காரணம். ஆரம்பத்திலேயே அறிகுறிகளைக் கண்டுபிடித்துத் தரமான சிகிச்சை அளிப்பதைத் தடுப்பதும் இவையே. மனநோய் ஓர் அவமானச் சின்னமாகக் கருதப்படுவதால், பல தருணங்களில் மனநோயாளிகள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றனர். அதிலும் பெண் நோயாளிகள் இருந்தால் குடும்பங்கள் அவமானப்பட்டு அவர்களை மறைத்துவைக்கிறார்கள்.

    மனநோய் சிகிச்சையில் முக்கியமான வி‌ஷயம் சில மாதங்கள் கழித்தே பலனை அறிய முடியும் என்பதால், மனநோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து தொடர்ந்து வெகுநாட்களுக்கு, நாள் தவறாமல் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், மிக வேகமாக பலனை எதிர்பார்க்கும் பலர், பாதியிலேயே சிகிச்சையைக் கைவிடுகின்றனர். குடும்பத்தினர் கொஞ்சம் அக்கறையோடு செயல்பட்டால், பலரை மனநோயில் இருந்து மீட்டெடுக்க முடியும். நாம் எவ்வளவு பொறுமையோடு செயல்படுகிறோம் என்பதில்தான் பலன் இருக்கிறது.

    ×