என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி திடீர் தற்கொலை
- தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி திடீர் தற்கொலை செய்தார்.
- கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திரு–மங்கலம் அருகேயுள்ள கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட் சின்ன உலகானி கிராமத்தை சேர்ந் த–வர் வேலுச்சாமி. இவரது மனைவி பாண்டி–யம்மாள். இந்த தம்பதிக்கு 3 மகள்க–ளும், ஒரு மகனும் உள்ளனர்.
இதில் மூத்த மகளான அன்புச்செல்வி (20) மது–ரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இதற்கிடையே விடுமுறை தினமான நேற்று அவரது தாய் துணிகளை துவைத்து தருமாறு மகள் அன்புச் செல்வியிடம் கூறியுள்ளார்.
ஆனால் துணிகளை அவர் துவைக்காமல் இருந் துள்ளார். இதனால் ஆத்தி–ரம் அடைந்த தாய் பாண்டி–யம்மாள் மகளை கண்டித் துள்ளார். இதில் மனம் உடைந்த அன்புச்செல்வி மல்லிகை செடிக்கு தெளிக் கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.
இதைப்பார்த்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக் கத்தினர் அன்புச்செல் வியை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் அன்புச் செல்வி பரிதாபமாக இறந் தார். இதுகுறித்து அவரது தந்தை வேலுச்சாமி கொடுத்த புகாரின்பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள். தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள் ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்