search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewel"

    • திருச்சியில் பரபரப்பு இரும்பு லாக்கரில் வைத்த 107 பவுன் நகை மாயமானது
    • அந்த லாக்கரை முழுமையாக திறக்க வேண்டும் என்றால் 12 சாவிகளை பயன்படுத்த வேண்டும்.

    திருச்சி:

    திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 64) தொழிலதிபரான இவர், தனது வீட்டின் அறையில் இரும்பு லாக்கரில் 107 பவுன் நகையை கடந்த மாதத்துக்கு முன்பு வைத்து பூட்டி உள்ளார். பின்னர் இருத்தனங்களுக்கு முன்பு அந்த லாக்கரை திறந்து பார்த்தபோது நகைகள் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அந்த லாக்கர் பழங்கால லாக்கர் ஆகும். இதனை முழுமையாக திறக்க வேண்டும் என்றால் 12 சாவிகளை பயன்படுத்த வேண்டும். இந்த நிலையில் லாக்கர் எப்படி திறக்கப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. வீட்டில் தொழிலதிபரின் மனைவி, மகன், மருமகன் உள்ளிட்டோர் உள்ளனர். வீட்டிலிருந்து யாரும் வெளியூரும் செல்லவில்லை. அதே போன்று வீட்டின் பூட்டு எதுவும் உடைக்கப்படவில்லை. லாக்கரை இரும்பு ராடால் கூட உடைக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து மேகநாதன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 107 பவுன் நகை மாயமானது எப்படி? யார் திருடியது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருச்சி பாலக்கரை அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55)இவர்உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டின் அருகில் வெளி பகுதியில் வீட்டு தெய்வதற்கு சிறிய அளவில் மேடை அமைத்து இருந்த பூஜை அறையில் இருந்த பூஜை பொருட்கள் திருட்டுப் போய் இருப்பத்தை கண்டு ரவிசந்திரன்அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ரவிச்சந்திரன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூஜை பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.





    • தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 95 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கைவரிசை காட்டிய வடமாநில கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் குமார் நகரை சேர்ந்தவர் பிரபுசங்கர் (வயது 45). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

    மேலூரில் உள்ள அவரது வீட்டில் மாடிப்பகுதியை மட்டும் வாடகைக்கு விட்டுள்ளார். பிரபு சங்கரின் வீட்டை அவரது மாமனார் பாலகிருஷ்ணன் அடிக்கடி வந்து பார்த்து செல்வார். அதே போல் நேற்று வந்து பார்த்த போது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து அவர் மேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது அவரது வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைந்திருந்தன. மேலும் பீரோவில் இருந்த 95 பவுன் தங்கநகைகள்,45 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளைய டிக்கப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் பிரபு சங்கரின் வீட்டிற்குள் ஜன்னலை உடைத்து அதன் வழியாக புகுந்து வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர். பிரபு சங்கரின் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை அடையாளம் காண அந்த பகுதியில் வைக்கப்பட்டி ருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் முகத்தை மறைத்தபடி துணியை சுற்றி கொண்டு 6 பேர் கும்பல் பிரபு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர்கள் அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் போல் உள்ளனர். இதனால் பிரபு சங்கர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கும்பல் என்பதை உறுதி செய்துள்ளனர்.

    அவர்களை பிடிக்க துணை சூப்பிரண்டு தலைமையில் 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • பாளை மகாராஜாநகர் செய்யது காலனியை சேர்ந்தவர் பால்வண்ணன். இவரது மனைவி ராமு (வயது 77).
    • பழக்கடைக்கு சென்று ஜூஸ் குடித்துவிட்டு பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு சென்றுள்ளார்.

    நெல்லை:

    பாளை மகாராஜாநகர் செய்யது காலனியை சேர்ந்தவர் பால்வண்ணன். இவரது மனைவி ராமு (வயது 77). இவர் நேற்று கிருஷ்ணாபுரம் சுகன்யாநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வண்ணார்பேட்டை வந்துள்ளார்.

    பின்னர் அருகில் இருந்த பழக்கடைக்கு சென்று ஜூஸ் குடித்துவிட்டு பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு சென்றுள்ளார்.

    அப்போது கழுத்தில் அணிந்து இருந்த 9 பவுன் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாளை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்தார்.
    • மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் முத்துலட்சுமி பிணமாக கிடந்தார்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 70). இவரது மனைவி முத்துலட்சுமி (62). இவர்களது மகன்கள் அருண்குமார், ஜீவானந்தம். இதில் அருண்குமார் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். ஜீவானந்தம் குடும்பத்துடன் கோவையில் குடியிருந்து வருகிறார். கோபால் தனது மகன் அருண்குமாருடன் சேர்ந்து கதர் துண்டு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மேலும் கோபால் தனக்கு சொந்தமான கட்டிடத்தில் முதல் தளத்தில் 6 வீடுகள் மற்றும் கீழ் தளத்தில் 3 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். கீழ்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் கோபால் தனது மனைவி முத்துலட்சுமியுடன் வசித்து வந்தார்.

    நேற்று மதியம் கோபால் வழக்கம் போல் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு, மீண்டும் அருகில் உள்ள தனது நிறுவனத்திற்கு சென்றார். வீட்டில் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். மாலை 6 மணிக்கு கோபால் வீட்டிற்கு வந்தபோது வீடு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் முத்துலட்சுமி பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார்.

    இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் துணை கமிஷனர் அபினவ்குமார், உதவி கமிஷனர்கள் அனில்குமார், நல்லசிவம், இன்ஸ்பெக்டர்கள் தாமோதரன், ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று முத்துலட்சுமியின் உடலை பார்வையிட்டனர். அப்போது முத்துலட்சுமியின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன. முத்துலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து அவரை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

    பின்னர் முத்துலட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.25லட்சம் இருக்கும். அதன் பின்னர் முத்துலட்சுமியின் உடலை துக்கில் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர்.

    இதையடுத்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் ஹண்டர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் கொலை நடந்த வீட்டின் வளாகம் மற்றும் அங்கிருந்து வெளியே சென்று சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதன் பின்னர் போலீசார் முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலையாளிகள் தாங்கள் வந்து சென்ற தடயங்களை கண்டுபிடிக்க முடியாத வகையில் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். முத்துலட்சுமிக்கு நன்றாக தெரிந்த நபர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். 2 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. எனவே அந்த கட்டிடத்தின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த கட்டிடத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    அவர்கள் அப்பகுதியில் உள்ளகண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் முத்துலட்சுமி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் யார், வடமாநில கொள்ளையர்கள் இந்த செயலில் ஈடுபட்டனரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கொலை நடந்த வீட்டின் அருகே கட்டிட வேலை செய்த கொடுமுடி பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் 42 பவுன் நகை மற்றும் ரூ.9.82 லட்சம் பணம் இருந்தது. அது பற்றி கேட்ட போது அவர்கள் முன்னுக்குபின் முரணான பதில்களை தெரிவித்தனர். இதனால் அவர்கள் முத்துலட்சுமியை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள்அச்சத்தில் உள்ளனர். இந்தநிலையில் மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருப்பூர் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலீசார் கொள்ளை சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • இவர் இன்று காலை இறைச்சி வாங்க கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் அளித்தார்.

    கும்பகோணம் :

    கும்பகோணம் ஆரோக்கியா சாமி நகரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர். இவருடைய மனைவி சந்திரா (வயது 68). இவர் இன்று காலை இறைச்சி வாங்க கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் .

    அப்போது கும்பகோணம் ஸ்ரீதர் காலனியில் சென்று கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் 2பேர் சந்திரா கழுத்தில் கிடந்த 10 பவுன் சங்கிலியை அறுத்து சென்றனர்.

    இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு மீண்டும் வெளிநாடு செல்ல புறப்பட்டார்.
    • பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 3Ñ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பாதரக்குடி புறவழிச்சாலை லட்சுமணன் நகரை சேர்ந்தவர் வெற்றிவளவன் (வயது 45). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் .

    இந்நிலையில் தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு மீண்டும் வெளிநாடு செல்ல புறப்பட்டார். அவரை சென்னை விமான நிலையத்திற்கு வழி அனுப்ப அவரது மனைவி சூரியகாந்தி (40) மற்றும் மருமகள் ஆகியோர் சென்றிருந்தனர். வெளிநாடு அனுப்பி விட்டு சென்னையில் இருந்து மீண்டும்நள்ளிரவு சூரியகாந்தி வீடு திரும்பியு ள்ளார். அப்பொழுதுவீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்றுபார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 3Ñ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சூரியகாந்தி சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் மணி மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு 10 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
    • நள்ளிரவு அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் லோகம்மாளின் கம்மலை பிடிங்கி சென்றனர்.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருேக உள்ள குமரெட்டியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன்.

    இவரது மனைவி மாரியம்மாள் (வயது45). இவர் எப்போதும்வென்றான் அரசு பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இன்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதேபோல் பக்கத்து வீட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பையா (74) என்பவர் வீட்டை பூட்டிவிட்டு கடந்த மாதம் மகனை பார்க்க சென்றார். அவரது வீட்டின் பூட்டும் இன்று உடைக்கப்பட்டு கிடந்தது.

    ஆனால் அவரது வீட்டில் நகை பணம் இல்லாததால் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டது.

    இது தொடர்பாக பசுவந்தனை போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் தூத்துக்குடியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்நிலையில் தெற்கு தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி லோகம்மாள் (60) என்பவர் காற்றுக்காக வீட்டின் வளாகத்தில் நேற்று இரவு படுத்து தூங்கினார். நள்ளிரவு அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரது கம்மலை பிடிங்கி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

    போலீசார் விசாரணையில் இதே கும்பல் தான் மற்ற 2 வீடுகளிலும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.   

    • அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் உள்ளே சென்று பார்த்த போது 8 பவுன் தங்க நகை மற்றும் ரூ 10 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
    • சவாலாப்பேரி ரத்தின- பேச்சியம்மாள் வீட்டிலும் பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் நகை மற்றும் ரூ. 60 ஆயிரம் பணம் கொள்ளை போனது.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது62).

    இவர் நேற்று தனது மனைவியுன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். பின்னர் மாலையில் மீண்டும் வீட்டிற்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.


    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் ரூ 10 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

    சவாலாப்பேரி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி பேச்சியம்மாள். கூலி தொழிலாளர்கள்.

    நேற்று இவர்கள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இது தொடர்பான புகாரின் மணியாச்சி மற்றும் புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடியில் கார் ஒர்க்‌ஷாப் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
    • மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகரை அடுத்த பால தண்டாயுத நகரை சேர்ந்தவர் இசக்கி (வயது 50). இவர் மடத்தூர் பகுதியில் கார் டிங்கரிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்றார். அதிகாலை 4 மணியளவில் அவர்கள் வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வீட்டு பத்திரங்கள் கொள்ளை யடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து இசக்கி தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    கொள்ளையர்கள் பிரிட்ஜில் இருந்த திண்டபண்டங்களை எடுத்து திண்றுள்ளனர். மேலும் குழந்தைகளின் பள்ளிக்கூட பையில் வைத்திருந்த பாக்கெட் மணி பணம் ரூ.200-ஐயும் எடுத்து சென்றுள்ளனர்.

    மேலும் தங்களின் கைரேகைகளை அழிக்க 4 குடங்களில் இருந்து தண்ணீரை எடுத்து வீட்டின் அனைத்து அறைகளிலும் ஊற்றி, கழுவி சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

    கொள்ளை குறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சபரிமலை கோவிலுக்கு சொந்தமான தங்க நகைகள் மாயமாகி உள்ளதாக தேவசம் போர்டின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்த புகாரையடுத்து, தேவசம் போர்டின் கணக்கு தணிக்கைத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
    திருவனந்தபுரம்:

    பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையின்போது பல ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.

    மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் போதும் பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள்.

    தங்க, வெள்ளி நகைகள் மற்றும் பணமாக காணிக்கை செலுத்தப்படும். சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாகூர் தேவசம் போர்டு இந்த காணிக்கைகளை எண்ணி தேவசம்போர்டுக்கு சொந்தமான பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாத்து வருகிறது. ஆரன்முளா கோவிலையொட்டி உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான இடத்தில் இந்த பாதுகாப்பு அறை உள்ளது.

    தேவசம் போர்டு உதவி கணக்கு அதிகாரியின் தலைமையிலான 3 அதிகாரிகள் கொண்ட குழு இந்த பாதுகாப்பு அறைக்கு பொறுப்பு ஆகும். இந்த அறையை திறந்து காணிக்கை பொருட்களை வைக்கவோ, எடுக்கவோ வேண்டும் என்றால் 3 அதிகாரிகளும் இருந்தால் மட்டுமே முடியும். மேலும் ஆண்டுதோறும் பாதுகாப்பு அறையில் உள்ள காணிக்கை பொருட்களின் விவரங்களும் தணிக்கை செய்யப்படும்.

    இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்கு காணிக்கையாக கிடைத்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மாயமாகி உள்ளதாக தேவசம் போர்டின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் சென்றது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பாதுகாப்பு அறையில் இருந்த பொருட்களையும், அதற்குரிய ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது அது தொடர்பான கணக்குகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.

    இதுபற்றி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அறிக்கை தயார் செய்து அதை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையை பரிசீலித்த ஐகோர்ட்டு பாதுகாப்பு அறையில் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் பொருட்களின் விவரம் பற்றி உடனடியாக ஆய்வு செய்யும் படி தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து தேவசம் போர்டின் கணக்கு தணிக்கைத்துறை அதிகாரிகள் இன்று தங்கள் ஆய்வை மேற்கொள்கிறார்கள். அவர்கள் ஆய்வை முடித்த பிறகு அது தொடர்பான அறிக்கை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். அப்போது தான் சபரிமலையில் காணிக்கையாக கிடைத்த விலை உயர்ந்த பொருட்கள் எவ்வளவு மாயமாகி உள்ளது என்பது பற்றி தெரிய வரும்.

    இதற்கிடையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமாரிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சபரிமலை கோவில் காணிக்கை பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பு அறைக்கு தேவசம்போர்டு உதவி கணக்கு அதிகாரி தலைமையிலான 3 அதிகாரிகள்தான் பொறுப்பு. அதில் எந்த அதிகாரி மாறிச் சென்றாலும் புதிதாக வரும் அதிகாரியிடம் முறையாக பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். கடந்த 6 வருடங்களாக கணக்குகள் ஒப்படைக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதுபற்றி விசாரிக்கத்தான் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தங்கம், வெள்ளி போன்ற எந்த காணிக்கை பொருட்களும் மாயமாகவில்லை. இது சிலரின் திட்டமிட்ட சதி ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் சுரேந்திரன் கூறும்போது சபரிமலை கோவிலுக்கு 2017-ம் ஆண்டு முதல் காணிக்கையாக வழங்கப்பட்ட 40 கிலோ தங்கம், 100 கிலோ வெள்ளி மாயமானதாக தகவல் கிடைத்து உள்ளது. இதுபற்றி தெரிந்து கொள்ள பக்தர்களுக்கு உரிமை உண்டு. தேவசம் போர்டு மந்திரி இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

    சபரிமலை கோவிலுக்கு காணிக்கையாக கிடைத்த தங்கம், வெள்ளி மாயமானதாக வெளியாகி உள்ள தகவல் பக்தர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொள்ளாச்சியில் வியாபாரியிடம் நகை-பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி திலகர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் .இவர் பொள்ளாச்சி அடுத்துள்ள கெடிமேடு பகுதியில் தர்பூசணி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் பொள்ளாச்சி ரெயில்வே காலனி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் செல்வராஜை தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரூ.620 பணம் கையில் போட்டிருந்த 5 கிராம் மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    நகை, பணத்தை பறிகொடுத்து விட்டு வீட்டுக்கு சென்ற செல்வராஜ் தனது மகன் கண்ணனிடம் நடந்த சம்பவத்தை கூற கண்ணன் தனது நண்பர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்துக் கொண்டு ரெயில்வே காலனி பகுதிக்கு சென்றார். ஆனால் அங்கு வழிப்பறி கொள்ளையர்கள் இல்லை. இதையடுத்து நேதாஜி ரோடு மார்க்கெட் பகுதிக்கு சென்றபோது அங்கு 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். செல்வராஜ் அவர்களை அடையாளம் காட்டவே பொதுமக்கள் அவர்கள் 3 பேரையும் துரத்திப் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது 2 பேர் மட்டும் சிக்கி கொண்டனர். அவர்களை பொள்ளாச்சி மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் பொள்ளாச்சி செரிப் காலனியை சேர்ந்த முகமது ஷேக் பரீத் (23), கண்ணப்பன் நகரை சேர்ந்த சுலைமான் ( 27 )என்பது தெரியவந்தது . அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர் பொள்ளாச்சி அழகாபுரி வீதியை சேர்ந்த ரபிக் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


    கோயம்பேட்டில் ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போரூர்:

    சாலிகிராமம் மதியழகன் நகர் கே.கே. சாலையை சேர்ந்தவர் ஜெயகுமாரி (வயது40). இவர் தனது மகள் பிருந்தாவின் திருமணத்திற்காக நகை வாங்க ரூ. 40 ஆயிரம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை எடுத்து கொண்டு அண்ணா நகரில் உள்ள நகைக்கடைக்கு மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

    கோயம்பேடு 100 அடி சாலை வந்தபோது நகை மற்றும் பணம் இருந்த பையை காணாமல் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்சில் வந்த மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயகுமாரி கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார்.

    மற்றொரு சம்பவம்...

    பெருங்குடி கல்லுக்குட்டை அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (48). இவர் நேற்று நெற்குன்றத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.

    பின்னர் நெற்குன்றம் செல்லும் மினி பஸ்சில் ஏறி அமர்ந்தார். பஸ் கிளம்பி சிறிது தூரம் சென்றதும் தனது கைப்பை கிழிந்து கிடந்ததை நாகலட்சுமி கண்டார்.

    மர்ம நபர்கள் பையை கிழித்து அதிலிருந்த 5 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×