search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டப்பிடாரம் அருகே  2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
    X

    ஓட்டப்பிடாரம் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

    • அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன் உள்ளே சென்று பார்த்த போது 8 பவுன் தங்க நகை மற்றும் ரூ 10 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.
    • சவாலாப்பேரி ரத்தின- பேச்சியம்மாள் வீட்டிலும் பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் நகை மற்றும் ரூ. 60 ஆயிரம் பணம் கொள்ளை போனது.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது62).

    இவர் நேற்று தனது மனைவியுன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். பின்னர் மாலையில் மீண்டும் வீட்டிற்கு வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.


    இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் ரூ 10 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

    சவாலாப்பேரி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி பேச்சியம்மாள். கூலி தொழிலாளர்கள்.

    நேற்று இவர்கள் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இது தொடர்பான புகாரின் மணியாச்சி மற்றும் புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×