search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிப்படை"

    • கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி முசிறி சொக்கம்பட்டி துறையூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 49). விவசாயியான இவர் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார்.

    இவரது பண்ணையில் 200 ஆடுகள் உள்ளன. வழக்கமாக கணவன் மனைவி இருவரும் காலை சமையல் பணிகளை முடித்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வேளாண் தோட்டங்களுக்கு கொண்டு செல்வார்கள்.

    நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு வடிவேல் தனது மனைவியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அங்குள்ள வேளாண் தோட்டத்துக்கு சென்றார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் வடிவேல் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கொள்ளையடிக்கபட்ட நகையின் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து உடனடியாக வடிவேல் தா.பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இதில் 4 பேரின் ரேகைகள் பதிவாகியுள்ளது. மோப்பநாய் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
    • இல்லத்தின் பணியாளர் ராஜேஷ் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    திருச்சி:

    திருச்சி கீழபுலிவார்டு ரோடு, வி.என்.நகரில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்கள், சிறுமிகள் தங்க வைக்கப்படுகிறார்கள்.

    இந்நிலையில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த, ஒடிசா மாநிலம் ரய்டா காந்தி நகரை சேர்ந்த மனோஜ்(வயது 16), ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி காந்தி நகரை சேர்ந்த சிவக்குமார்(16), காஞ்சிபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த மோனீஸ் கார்த்திக்(16), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த பாண்டி(16) ஆகியோர் இரவு நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

    காப்பக வார்டன் இரவு சாப்பிட்டு கொண்டிருக்கும்போது அவரது கையில் இருந்த சாவியை பிடுங்கி கொண்டு கேட் பூட்டை திறந்து ஓடியுள்ளனர். கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து இல்லத்தின் பணியாளர் ராஜேஷ் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய சிறுவர்களை தேடி வருகின்றனர்.

    • தனிப்படை போலீசார் வெளிப்பாளையம் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • மது விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் வெளிப்பாளையம் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் ஏழை பிள்ளையார் கோவில் அருகில் சட்டத்திற்கு புறம்பாக புதுச்சேரி மாநில மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த பாண்டித்துரை (வயது 28) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில 570 மது பாட்டில்கள் மற்றும் 140 சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    அதே போல புதிய பஸ் நிலையம் அருகே புதுச்சேரி மாநில மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த சிவன்காளை என்பவரது மனைவி மகேஷ்வரி (40), விஜயகுமார் என்பவரது மனைவி திவ்யா (40) ஆகிய இரண்டு பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்த 300 புதுச்சேரி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    நாகையில் புதுச்சேரி மாநில மது பாட்டில்களை கடத்தி வைத்திருந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிறப்பாக செயல்பட்டு சட்டவிரோதமாக மது விற்பனை ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    • பயணி ஒருவரி டம் மொபைல் போன் மற்றும் பையை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றார்.
    • போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து அனந்தபுரி ெரயில் கடந்த 17-ந் தேதி திண்டிவனம் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பயணி ஒருவரி டம் மொபைல் போன் மற்றும் பையை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றார். அதே ெரயிலில் தூங்கி கொண்டிருந்த பயணிகளி டம் கடந்த 19-ந் தேதி 28 பவுன் தங்க நகை, 3 செல்போ ன்கள் மற்றும் ரூ.3500 பறித்துக் கொண்டு மர்ம நபர் ஒருவர் தப்பி சென்றார்.இது குறித்து திண்டிவனம் ெரயில்வே போலீசாரிடம் சம்பந்தப்பட்ட நபர்கள் புகார் அளித்தனர். ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகன், மோகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தேசி மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் திண்டி வனம் கிடங்கல் - 1 பகுதி யைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி அஜய், அதே பகுதியை சேர்ந்த செல்வ மணி ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 17 பவுன் தங்க நகை, செல்போன்கள், பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
    • இதனை திருப்பி அளிக்காத அந்த நபர் தலைமறைவாகியுள்ளார் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே வளவனூர் கே.எம்.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 68), இவரது மனைவி உமாதேவி (61). இருவரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களின் மகன், மகள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். ராஜன், உமாதேவி தம்பதியினர் நேற்று மாலை முதல் வீட்டை விட்டு வெளியில் வரவி ல்லை. இவர்களை தேடி அக்கம்ப க்கத்தினர் வீட்டிற்கு சென்றனர். அப்போது ராஜன், உமாதேவி ஆகியோர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.இது குறித்து தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மர்மமான முறையில் இறந்து கிடந்தவர்களின் உடலில் காயங்கள் ஏதுமில்லை. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். விழுப்புரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதில் இவர்களுக்கு சொந்தமான நகைகள், பணம் அனைத்தும் வங்கி லாக்கரிலும், கணக்கிலும் உள்ளது தெரியவந்தது.

    மேலும், குடும்ப செலவுக்கு தேவையான பணத்தை மட்டும் வங்கியில் இருந்து எடுத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அதேநேரத்தில் இவர்களது வீட்டில் வாடகைக்கு இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த நபர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியிடமிருந்து ரூ.21 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனை திருப்பி அளிக்காத அந்த நபர் தலைமறைவாகியுள்ளார் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் தம்பதி யினர் தாங்களாகவே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என மருத்துவர்கள் போலீ சாரிடம் கூறி யுள்ளனர். அதே நேரத்தில் பிரேத பரி சோதனை அறிக்கை வந்த பின்னரே உறுதியாக கூற முடியுமெனவும் மருத்துவர்கள் கூறினர். இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த ராஜன், உமாதேவி தம்பதியினரை பணத்திற்காக யாரேனும் கொலை செய்து, தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்ற கோணத்திலும், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட பகையால் கூட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற மற்றொரு கோணத்தி லும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பேரை கொலை செய்து தூக்கில் தொங்க விட ஒருவரால் மட்டும் முடியாது. எனவே, 3 அல்லது 4 நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டி ருக்கலாம் என்று கணித்த போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்கள், செல்போன் சிக்னல்கள் போன்றவைகளை ஆய்வு செய்து வருகின்றனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் கொலை செய்யப்பட்டு மர்மமான முறையில் தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சண்முகத்தை இரும்பு கம்பியால் பலமாக தாக்கியும், நல்லம்மாளை கழுத்தை கத்தியால் அறுத்தும் கொலை செய்தனர்.
    • மர்ம கும்பலை பிடிக்க கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம் குச்சிக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி நல்லம்மாள் என்கிற சின்னப்பிள்ளை.

    கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சண்முகத்தை இரும்பு கம்பியால் பலமாக தாக்கியும், நல்லம்மாளை கழுத்தை கத்தியால் அறுத்தும் கொலை செய்தனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வீட்டுக்குள் மிளகாய் பொடிகளை தூவி விட்டு சென்றனர்.

    மர்ம நபர்கள் தாக்கியதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகத்தை நேற்று காலை அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுதொடர்பாக பரமத்திவேலூர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் வந்தனர்.

    பின்னர் சண்முகத்தை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த நல்லம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டிற்குள் பல்வேறு பகுதிகளில் கைரேகை பதிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை பிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா உத்தரவின் பேரில் கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படையினர் சம்பவம் நடந்த சண்முகத்தின் வீடு உள்ள பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மற்றும் சம்பவ நடைபெற்ற நேரத்தில் அப்பகுதி உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான எண்களை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தொடர்ந்து பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பு நீடித்து வருகிறது.

    • போதை அதிகமாகி தலைக்கேறியதால் நாராயணசாமி 5 பேரிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • மற்ற 4 பேருடன் சேர்ந்து ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகேயுள்ள கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், இவர் மீது புகார் கொடுப்பவர்களை மிரட்டி வாபஸ் பெறச் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். எப்போது ம்மதுபோதை யில் கத்தியுடன் வலம் வரும் நாராயணசாமி, நேற்று கண்டம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு படுத்து உறங்கி கொண்டிருந்த 5 பேரை எழுப்பினார். போதை அதிகமாகி தலைக்கேறியதால் நாராயணசாமி 5 பேரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது நாட்டு வெடிகுண்டை எடுத்து 5 பேர் மீது வீசினார். பலத்த சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பரணிதரன் (வயது 22) படுகாயமடைந்தார். மற்ற 4 பேருடன் சேர்ந்து ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

    நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி நாராய ணசாமி அங்கிருந்து தப்பி யோடிவிட்டார். சிறிது நேரம் கழித்து ரெயில் நிலையத்திற்குள் பீதியில் வந்த பயணிகள் ஒரு சிலர் படுகாயமடைந்த பரணிதரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ரெயில் நிலைய த்திற்கு விரைந்து வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார், அங்கு பரணிதரனிடம் விசாரணை நடத்தினர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பிரபல ரவுடி நாராயண சாமியுடன் தொடர்பில் இருந்த கூட்டாளிகள் 3 பேரை நேற்று இரவு மடக்கி பிடித்தனர். அவர்களை விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையம் அழைத்து வந்து நாராயணசாமி பதுங்கியுள்ள இடம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நாட்டு வெடிகுண்டு வீசி தப்பியோடிய பிரபல ரவுடி நாராயணசாமியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். சமீபகாலமாக விழுப்புரம் நகரப் பகுதியில் ரவுடிகளின் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • படுகாயம் அடைந்த இளையராஜா தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • திட்டமிட்டபடி ஆடலரசு தரப்பினர் இளைய ராஜாவை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரை சேர்ந்தவர் தியாகராஜன், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவரது மகனான இளையராஜா. தி.மு.க பிரமுகர். நேற்று முன்தினம் மாலை இவர் மணவாளநல்லூர் அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் இவரை துப்பாக்கியால் சுட்டது. துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த இளையராஜா தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்ப ட்டது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் உத்தரவின் பேரில் விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் தலைமை யிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் தே.கோபுராபுரம் அருகே பதுங்கி இருந்த மணவா ளநல்லூரை ஆடலரசு, புகழேந்தி, சரவணன், வெங்கடேசன், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த விஜயகுமார், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சூர்யா, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த அருண்குமார் மற்றும் வெங்கடா ம்பேட்டையை சேர்ந்த சதீஸ்வரன் ஆகிய 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்படட்டவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், 2 இரும்பு ராடுகள், 1 கத்தி, 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணைக்கு பின் விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்ப ட்டவர்கள் பின்னர் கோ ர்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்க ப்பட்டனர்.

    இதுகுறித்து விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் கூறிய தாவது:- இளையராஜாவின் அண்ணன் நீதிராஜன் மணவாள நல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்த லின்போது ஆடலரசு வின் தாய் மங்கையர்கரசி தேர்தலில் போட்டியிட்டார் அப்போது இளையராஜா தரப்பினருக்கும் ஆடலரசு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இளையராஜா ஆடலரசுவை தாக்கி உள்ளார். இந்த தாக்குதல் அடிக்கடி நடந்துள்ளது. இந்த விளைவின் காரணமாக ஆடலரசு சென்னையில் உணவு டெலிவரி வேலை செய்யும் பாளைய ங்கோட்டை நண்பரான விஜயகுமாரிடம் உதவி கேட்டுள்ளார். அதன்படி விஜயகுமார் சென்னையில் சலீம் என்பவர் மூலம் பீகாரில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கு 2 துப்பாக்கிகள் மற்றும் 3 புல்லட்டுகளை கடந்த 2 மாதத்திற்கு முன்பு வாங்கியு ள்ளார். திட்டமிட்டபடி ஆடலரசு தரப்பினர் இளைய ராஜாவை துப்பா க்கியால் சுட்டுள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி, புல்லட் வாங்கி கொடுத்த சென்னையை சேர்ந்த சலீமை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் சென்னை விரைந்து ள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்

    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை
    • நாகரில் ஓடும் பஸ்சில் 9 ½ பவுன் நகைஅபஸே்

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் நகை திருட்டு சம்ப வங்கள் தொடர்கதையாக அரங்கேறி வருகிறது. கடந்த வாரம் ஒரே நாளில் 4 பேரிடம் 26 பவுன் நகை பறிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். பெண் கொள்ளையர்கள் சிலரின் புகைப்படங்களை வெளி யிட்டும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது டிப்-டாப் உடைஅணிந்து வந்து பெண்கள் கைவரிசை காட்டி செல்வது தெரிய வந்துள்ளது.

    மேலும் இந்த கொள்ளை சம்பவங்களில் வெளியூர் கொள்ளையர்கள் ஈடுபடு வதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொள்ளை கும்பலை கைது செய்ய தனிப்படை போலீசார் புது வியூகங்கள் அமைத்து வருகிறார்கள். இதற்கிடையில் நாகர்கோவி லில் ஓடும் பஸ்சில் மேலும் ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. நாகர்கோவில் இருளப்பபுரம் அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த வர் செந்தில்குமார். இவரது மனைவி ரதி (வயது 37). இவர் நேற்று கன்னக் குறிச்சியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்ல ராமன்புதூர் சந்திப்பில் இருந்து அரசு பஸ்சில் ஏறினார்.

    கோணம் தொழில் மையம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது ரதி கழுத்தில் கிடந்த 9½ பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இதையடுத்து பஸ் நடுவழியில் நிறுத்தப் பட்டது. பயணிகள் அனை வரும் சோதனை செய்யப்பட்டனர். ஆனால் நகை சிக்க வில்லை.

    இதுகுறித்து ரதி, ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரதியிடம் பெண் கொள்ளை யர்கள் தான் கைவரிசை காட்டி இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள்.

    நகையை திருடிய கும்பல் உடனடியாக பஸ்சை விட்டு இறங்கி தப்பி சென்று விட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரதி ஏறிய பகுதியிலிருந்து கோணம் பகுதி வரை உள்ள சி.சி.டி.வி. கேமரா வின் காட்சிகளை போலீ சார் ஆய்வு செய்து வருகி றார்கள். கொள்ளை கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.

    நாகர்கோவிலில் அடுத்த டுத்து நடந்து வரும் அனைத்து சம்பவங்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கிறார்கள்.

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர்மோள் (23). சம்பவத்தன்று இவர் ஆசாரிப்பள்ளம் பெரு மாள்நகர் 2-வது தெருவில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர்கள், திடீரென ஜெனிபர்மோள் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். ஆனால் தங்க சங்கிலி கொள்ளை யர்கள் கையில் சிக்க வில்லை. அது அறுந்து கீழே விழுந்தது. ஜெனிபர் மோள் கூச்சலிடவே கொள்ளை யர்கள் மோட்டார் சைக்கி ளில் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து ஆசாரிப் பள்ளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வின் காட்சிகளை போலீ சார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். சி.சி.டி.வி.யில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி இருப்பது தெரிய வந்துள் ளது.

    அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப் பட்டு வருகிறது.

    • கடந்த 2021-ம் ஆண்டு ராஜேஷ்குமார், மற்றும் உகான் சவுத்ரி கும்பலுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • தனிப்படையினர் விசாரணை நடத்தி இந்த வழக்கில் தொடர்புடைய உகான் சவுத்திரி, சங்கர் மாஞ்சி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கோவை,

    பீகார் மாநிலம் நாளந்தா புன்னா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 24). இவரது நண்பர்கள் ரஞ்சித்குமார் சவுத்ரி(22), சந்தோஷ்குமார் சவுத்ரி (17).

    இவர்கள் 3 பேரும் கோவை சூலூர் அருகே உள்ள செங்கோட கவுண்டன்புதூர் பகுதியில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தனர்.அதே பகுதியில் பீகாரை சேர்ந்த உகான் சவுத்ரி, கணேஷ் மாஞ்சி, சந்து மாஞ்சி, சங்கர் மாஞ்சி ஆகியோரும் வசித்து வந்தனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு ராஜேஷ்குமார், மற்றும் உகான் சவுத்ரி கும்பலுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் உகான் சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, ராஜேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கினர். இதில் சந்தோஷ்குமார் என்பவர் உயிரிழந்து விட்டார். மற்ற 2 பேரும் காயம் அடைந்தனர்.

    இதையடுத்து உகான் சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து ராஜேஷ்குமார் சூலூர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சூலூர் போலீசார் உகான் சவுத்திரி, கணேஷ் மாஞ்சி, சந்து மாஞ்சி, சங்கர் மாஞ்சி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

    இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி இந்த வழக்கில் தொடர்புடைய உகான் சவுத்திரி, சங்கர் மாஞ்சி ஆகிய 2 பேரை கைது செய்தனர். சந்து மாஞ்சி, கணேஷ் மாஞ்சி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

    அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் பீகாரில் இருப்பதாக சூலூர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தலைமறைவான குற்றவாளிகளை தேடி கோவயைில் இருந்து பீகாருக்கு விரைந்துள்ளனர். அங்கு உள்ளூர் போலீசார் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

    • ராமு நேற்று காலை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
    • கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே தி.மு.க.பிரமுகர் தந்தை கொலை யில் பஞ்சாயத்து தலைவியின் கணவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்புரம் சென்னை சாலை யைசேர்ந்தவர் கவர்னர் என்ற ராமு (69).இவர் அதே பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடைவைத்திருந்தார். இவருக்கு புருஷோத்தமன், பிரபாகரன், மகாலிங்கம் ஆகிய 3 மகன்மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருடன் இவரது மகன் புருஷோத்தமன், மருமகள் ஆகியோர் வசித்து வந்தனர். புருஷோத்தமன் தி.மு.க ஒன்றிய பிரதிநிதியாக இருந்து வருகிறார் .வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு படுத்திருந்த ராமு நேற்று காலை இவரது வீட்டின் பின்புறம் தோட்டத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இது பற்றி பண்ருட்டிபோலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி கண்ணன்,காடாம்புலியூர் ராஜ தாமரை பாண்டியன், நெல்லிக்குப்பம் சீனிவாசன், புதுப்பேட்டை நந்தகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலையான ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எல்.என்.புரம் பஞ்சாயத்து தலைவியின் கணவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். நேற்று இரவு முழுவதும் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

    ராமு வீடு குட்டை புறம் போக்கு நிலத்தில் உள்ளது. எனவே ராமுவிற்கும் பஞ்சாயத்து தலைவரின் கணவருக்கும் இது தொடர்பாக முன் விரோதம் இருந்து அதன் காரணமாக ராமு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை முடக்கி விட்டுள்ளனர். கொலை நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் அப் பகுதியில் உள்ள பெரும்பாலான கண்காணிப்பு கேமிராக்கள் செயல்படாமல் உள்ளது தெரிய வந்தது. இதனால் போலீசார் கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். 

    • போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் தீவிர விசாரணை
    • பணம் பறிப்பு சம்பவம் திட்டமிட்டு நடந்ததா? அதில் ஈடுபட்டது யார்? என்பது மர்மமாக உள்ளது

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே உள்ள இரும்பிலி பொட்டல் கரையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 53), டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர். இவர் தினமும் இரவில் விற்பனை பணத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று மறுநாள் காலை வங்கியில் செலுத்துவது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு கோபாலகிருஷ்ணன், சக ஊழியர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றார். வீட்டின் அருகே இறங்கிய அவர், அங்கிருந்து நடந்து சென்றார். அப்போது இருளில் அவரை தாக்கி விட்டு யாரோ பணத்தை பறிக்க முயன்றதாக போலீசில் புகார் செய்யப் பட்டது.

    இந்த சம்பவத்தின் போது, கோபாலகிருஷ்ணன் கைவிரல் துண்டானதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிங்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகங்களில் மனுவும் அளிக்கப்பட்டது.

    பணம் பறிப்பு சம்பவம் திட்டமிட்டு நடந்ததா? அதில் ஈடுபட்டது யார்? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது, அவர்கள் பணம் பறிக்க முயன்றவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×